Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 22

தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன் 

 

ஒட்டடைக்குச்சியால்

உங்கள் தலையில் படிந்துள்ள

பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்

 

துடைப்பத்தால் பெருக்கி

மனசின் குப்பைகளை

வெளியே தள்ளுங்கள்

 

ரத்த வாடை போகும்வரை

கைகளை நன்றாகக்

கழுவிக்கொள்ளுங்கள்

 

ரத்தக்கறை படிந்த ஆடைகளை

சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு

ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்

 

 

(பின்குறிப்பு : இந்தியாவில் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் பின்புலத்தில் வாசிக்கவும்)

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 23

விளிம்பின் தாகம்

 

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறையும் வரை

விளிம்பு குடிப்பதற்குள்

பானம் வழிந்துவிடுகிறது.

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறைய

இருக்கும் பானம்

தன்னைக் கடந்து செல்லுகையில்

ருசித்து விட.

விளிம்பைத்

தொடும் கணத்திலேயே

பானம் உறிஞ்சப்பட்டுவிடுகிறது

விளிம்பு

காத்திருக்கிறது

கடைசிச். சொட்டு வரை

கடைசிச் சொட்டையும்

ஒரு நாக்கு

நீண்டு ருசித்துவிடுகிறது

விளிம்பின்றி

எதுவுமில்லாதபோதும்

விளிம்புக்கு எதுவுமில்லை

விளிம்பு நிலை

வாழ்க்கை

ஒவ்வொரு கோப்பைக்குமிருக்கிறது

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 24

அவன்

 

 

அவன் இதயம்

எப்போதும்

முகத்திற்கு

இடம் பெயர்ந்திருக்கும்

நீங்கள் அதை

அறிய முடியாதபடி

தாடி மயிர்

மறைத்திருக்கும்

 

அவன் நெஞ்சிலிருக்கும்

கனல்

சில நேரம்

விரலிடுக்கு வரை

இறங்கி வந்துவிடும்

 

அவனைச் சிலர்

கவிஞன் என்று

அழைப்பதுண்டு

 

உங்களைப் பெரும்பாலும்

தாமதமாகவே

அடையாளம் கண்டுகொள்ளும்

அவன் மேல்

வருத்தப்பட  வேண்டாம்

 

காகிதம் தேடிக்

கிடைப்பதற்குள்

தன்  கவிதைகளையே

மறந்து விடுபவன் அவன்

 

ஏதாவது

பூங்கா  மரத்தடியில்

எழுதிக்கொண்டிருப்பவனைப்

பார்க்க நேர்ந்தால்

சாப்பிட்டாயா

என்று கேட்பது தப்பில்லை

 

நீங்கள் உண்பதைக்

கொஞ்சம்

அவனுக்கும் கொடுத்தால்

தன்மானம் பார்க்காமல்

வாங்கித் தின்றுவிட்டு

இன்னும் கொஞ்சம் -

எழுதுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 25

முதலும் கடைசியும்

 

கடைசி ஆசை

என்னவென்று கேட்டனர்

வாழணும் என்றான்.

முதலும் முடிவுமான

ஆசையென்னவோ

அது மட்டும் தானே?

ஒருவன் மட்டுமே

உயிர் பிழைக்க

வாய்ப்பென்றதும்

பல லட்சம் பேரை

முந்திக்கொண்டு

முன் வந்து

அண்டத்துக்குள்

நுழைந்ததும்

அதனால்தானே?

முந்நூறு நாளுக்குப் பக்கம்

மூச்சடக்கி உள்ளிருந்து

பின் உதிரம் சொட்டச் சொட்ட

முட்டி மோதி தலைகுப்புற

மண்ணில் விழுந்ததும்

அதற்குத்தானே?

எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற

தத்துவங்களையெல்லாம்

ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு

வாழ்வை ருசிப்பதும்

அதனால்தானே?

இது என்ன தனிப்பட்ட

இவன் ஒருவனின் ஆசையா என்ன,

இவனுக்குள் இருக்கும்

கோடான கோடி செல்களுக்கும்

இருக்கின்ற ஆசைதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 26

இரவுக்கு நிறம் தரும் இறகு

கூடடைந்த காகங்களின்

கறுப்பினைப்  பெற்றுக்கொண்ட

இரவு

கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின்

வெண்மையைப் பெற்றுக்கொள்ளும்

விடியலில்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 27

மறந்து விடாதே

 

இன்னுமா என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆச்சரியமாய் அவள் கேட்டது

அதிர்ச்சியாக இருந்தது.

மறந்துவிடாதே என்று

நீ தானே சொன்னாய்

விடைபெறும் போது

நூறு முறை என்றேன்.

அப்படியா சொன்னேன் என்று

ஐயத்தோடு கேட்டாள்.

நன்றாக யோசித்துப் பார்த்தேன் –

மறந்து விடாதே என்றுதான் சொன்னாள்.

மறக்க மாட்டேன் என்று சொல்லவேயில்லை.

 

-    சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்  :rolleyes: 

Link to comment
Share on other sites

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது.

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்   "  Paanch

 

அன்புத் தோழர்  Paanch- ன்.  உள்ளத்தின் ஆழத்திலிருந்து தோழமையுடன் வந்த இந்த வரிகளை நான் மாலையாகச் சூடிக் கொள்ளவா? மகுடமாகச் சூட்டிக்கொள்ளவா?

தம் கவிதை புத்திசாலிக்குக் கூடப் புரியக்கூடாது என்று நினைக்கின்ற கவிஞர்களுக்கு மத்தியில், நம் கவிதை முட்டாளுக்குக் கூடப் புரியவில்லையெனில் நாம் கவிஞர் இல்லை என்று நினைக்கும் சாதாரணர் நாம்.

 

தொடர்ந்து படியுங்கள். உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.  காவல்லூர் கண்மணி அவர்களின் உளமார்ந்த பாராட்டு மொழிகளுக்கு நன்றி.  உங்கள் வரிகள் இன்று இரண்டு கவிதைகளையாவது எழுத என்னைத் தூண்டலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது."

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

நன்றி. அருமையான  கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

நான்காவது வர்ணம் என்று சொல்லப்படும் சூத்திரர்களைக் குறிக்கவே "நான்காவது வர்ணம் கறுப்பாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தேன்.  இந்த வரிகளுக்கு செந்தமிழன் அன்புச்செல்வன் சொல்லும் பொருள் புதுமையானது மட்டுமல்ல, மிகவும் பொருத்தமானதும் கூட.  நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

 

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

Link to comment
Share on other sites

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

 

 

LcBvQ.gif

 

 

சேயான் 'புலவர்' சொல்வது சரிதான்.

 

அறிவியல்படி சிவப்பு(Red), பச்சை(Green), நீலம்(Blue) தான் வண்ணங்களின் அடிப்படை. :)

 

இவற்றை பலவிகிதங்களில் தேவைக்கேற்றபடி கலந்தால், மற்ற வண்ணங்களை உருவாக்கலாம்.. தொலைக்காட்சி குழாய்களில் RGB என்ற மூன்று ஒளிபாய்ச்சிகள்(Guns) உண்டு, அவற்றில் சில விகிதாசாரப்படி இந்த அடிப்படை வண்ணங்களின் சிறு மின்னழுத்தத்தை(voltage) செலுத்துவதன் மூலமே நாம் பலவித வண்ணக் கலவைகளை படமாக பார்க்கிறோம்..

கவிதைக்கும், எனக்கும் காத தூரம், 'பெரியவாள்' என்ன எழுதியுள்ளார் என தற்செயலாக பார்த்ததால் இத்திரியில் சுட்ட நேரிட்டது.. Escape..! :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரு தோழரை கவிதைக்குள் இழுத்து வந்த Paanch அவர்களுக்கும், எனக்கு உதவுவதற்க்கு வந்த ராசவன்னியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

 

அனுபவத்தில் மஞ்சளும் நீலமும் சேர்ந்தால் பச்சை கிடைக்கும்.  அறிவியல்படி ராசவன்னியன் சொன்ன விளக்கம்தான் சரி.

 

 

எனது கவிதை நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்ட இந்து மத வர்ணாசிரம முறையையும், நிறத்தை வைத்து வர்ணத்தை அனுமானிக்கும் மனப்பான்மையையும் பற்றியது.  RGB மட்டுமல்ல  சூத்திரனின் கறுப்பும் அடிப்படை வர்ணமாக இருக்கலாம் என்று நையாண்டி செய்வது. செந்தமிழன் அன்புச்செல்வன் சொன்ன புதிய கருத்தான,  நான்கு வர்ணங்களை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களின் "கருப்பு",  அடிப்படை வர்ணங்களில் நான்காவது என்பதும் பொருத்தமானதுதான்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 29

பிரச்சனைகள் ஒன்றும் பெரிதாயில்லை

 

பிரச்சனைகள் ஒன்றும்

பெரிதாய் இல்லை

 

சாலையோரத்தில்

முதுகைக் காட்டிக்கொண்டுதான்

சிறுநீர் கழிக்கிறார்கள்

 

முகத்தில் மோதும்

பட்டாம்பூச்சிகளை

வாகன ஓட்டிகள் சபிப்பதில்லை

 

வாயாரவாவது

நண்பனின் மனைவியை

சகோதரி என்கிறார்கள்

 

எழுத முடியாததையும்

எழுதக்கூடாததையும்

எவரெவரோ

எழுதிவிட்டபோதும்

எழுதுவதற்கு இன்னும்

ஏதாவது இருக்கத்தான் செய்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 30

சுதந்தரப் புறா

 

சுதந்தர தினத்தைக் கொண்டாட

புறாவைப் பறக்கவிட்டார்கள்

சென்ற வருடம்

பறக்கவிட்ட

அதே புறாதான் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 31

 

நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழி வந்ததா?

என்ன முயன்றும்

விடை காணேன்

என் மகன் சொன்னான்:

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து

கோழி வராது

கோழிக்குஞ்சுதான் வரும் என்று

கேள்வியை மாற்றினேன்:

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழிக்குஞ்சு வந்ததா?

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து வந்தது

சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் என்றான்

கேள்வியை இன்னும் செதுக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

முட்டை முதலில் வந்ததா?

கோழி பிறகுதான் வந்தது

கோழி வருவதற்குமுன்பே

பலவித முட்டைகள் வந்துவிட்டன என்றான்

கேள்வியை இன்னும் கூர்மையாக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

கோழி முட்டை முதலில் வந்ததா?

கோழி முட்டை மூன்றாவதாக வந்தது

கோழியும் சேவலும்

முதலாவதாகவோ இரண்டாவதாகவோ

வந்தபின் என்றான்.

கேள்வி கேட்கத் தெரியாமல்

பதிலை ஏன் தேடுகிறேன் ?

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

 

வாழ்த்துக்கள் seyon yazhvaendhan.

. பறவைக்கு ஞாபக மறதி இருக்காது.  சில மனிதர்களுடன் சேர்ந்த பறவையாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

சேயோனின் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்.

 

திரியில் குறுக்கிட்டு திசை திருப்ப விரும்பவில்லை. நிறங்கள் பற்றி இங்கு உள்ளதைப் பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/62201-photoshop-பாவிக்கும்-முறை-photoshop-tamil/?p=532191

(படங்கள் அழிந்து விட்டன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த பயனுள்ள கடினமான் தகவல்களை எளிய தமிழில் தந்துள்ளீர்கள். நிறங்களைப் பற்றி இன்னும் அதிக தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.  இணையவனுக்கு மிக்க நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 32

தூக்கத்துக்கு கனவே சாட்சி

தூக்கம் 
தினமும் வருகிறது 
இரவைப்போல் 

தூக்கம் 
படுக்கையைப்போல் 
இருக்கிறது 

நான் அதில் 
கனவாய்ப் புரள்கிறேன் 

தூக்கம் 
கரும்பச்சைப் புல்வெளியாய் 
படர்கிறது 

புல் நுனிகளில் 
அங்கங்கே 
பனித்துளிகளாய் 
கனவுகள் அமர்கின்றன 

தூக்கம் 
இருண்ட 
மா மரமாய் எழுகிறது 
மின்மினிகளாய் 
கனவுகள் 
அதன் கிளைகளில் அமர்கின்றன 

நள்ளிரவு வானமாய் 
தூக்கம் இருள 
விண்மீன்களாய் 
கனவுகள் பளிச்சிடுகின்றன 

தூக்கம் 
கருமுகிலாய்க் கூடுகிறது 
கனவு 
மின்னலாய்த் தெறிக்கிறது 


தூக்கம் 
மேல் போர்வை தேட 
கனவு 
என்னையே துகிலுரிக்கிறது 
 

தூக்கம் 
என்னைப் படுக்கையில் 
வீழ்த்தப் பார்க்கிறது 
கனவு 
என்னை 
வானில் பறக்கவைக்கிறது 

இருளறைக்குள் 
தூக்கம் 
கருக்கொள்கிறது 
பின் 
கனவுக் குழந்தைகளைப் 
பிரசவிக்கிறது 

தூக்கம் 
நிழலாய் வருகிறது 
அந்த நிழலுக்கே 
காரணமான வெளிச்சமாய் 
கனவு மேலே இருக்கிறது 

கனவுதான் 
நான் தூங்கினேன் 
என்பதை நினைவூட்டுகிறது 

தூக்கம் 
இருளடர்ந்த கானகத்துக்குள் 
என்னை இட்டுச் செல்கிறது 
ஆங்கே 
நெடுமரமாய் நிற்கும் 
கனவுகள் மீதே 
மோதி விழுகிறேன் 

தூக்கத்திலேயே 
நான் செத்துவிடவில்லை என்பதை 
கனவுகள் மூலமே 
உறுதிசெய்துகொள்கிறேன்
கனவுகள் இல்லாத தூக்கம் 
மரணம் மட்டும் தானே

தாயின் அணைப்பே 
என்னைத் தூங்கவைத்துவிடுகிறது 
அவள் தாலாட்டு 
என்னை விழிக்க வைக்கிறது 

நினைவு 
புகைப்படமாய் 
என் அழகைக் காட்டுகையில் 
கனவு 
எக்ஸ்-கதிர்ப் படமாய் 
என் உள் அசிங்கங்களைக் காட்டுகிறது 

கனவில் 
சிலப் போழ்தில் 
ஆள் மாறாமல் 
என் பால் மாறுகிறது 
மற்றைச் சில கணங்கள் 
உரு மாறாமல் 
என் திணை மாறுகிறது

தூக்கம் 
உன்னைப்போல் 
என்னிடமிருந்து 
விலகியே இருக்கிறது 

கனவு 
என்னைப்போல் 
என்னுடனே இருக்கிறது 
 

தூக்கம் 
எப்போதாவது 
தூக்கம் போல் 
வருகிறது 
ஆனால் 
கனவைப் போல் 
வெகுவிரைவில் 
கலைந்துவிடுகிறது.

-seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 33

கவி மரபு

 

புறநானூறு

பொதுமக்களுக்கும்

அகநானூறு

மன்னர்களுக்கும்

எழுதப்பட்டது

 

எதிர்க்கேள்வி கேட்காமல்

சக மனிதனைக் கொல்வதற்கு

வீரம் கற்பிக்கப்பட்டது

விழுப்புண் புகழப்பட்டது

 

பூனையை விரட்டியது

முறத்தால்

புலியை விரட்டியதாக

மிகைப்படுத்தப்பட்டது

 

மன்னனுக்காகச் சாவது

நாட்டுக்காகச் சாவதாக

நாடகமாடப்பட்டது

 

நல்ல மன்னனிடம்

அடிமைப்பட்டுவிடாமலிருக்க

நமது மன்னனிடம்

அடிமையாய் வாழ்வது

நாட்டுப்பற்றென்று

நம்பவைக்கப்பட்டது
 

போர்களில்

மாண்டனர் மக்கள்

வென்றனர் மன்னர்

 

துதிபாடிகளும்

அடிவருடிகளும்

தூக்கிப்பிடித்த

மன்னர் மரபை

கொஞ்சமும்

பெருமை குலையாமல்

கட்டிக் காக்கிறதெங்கள்

கவிமரபு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

 

கவிதையின் பொருளில் தங்களின் கருத்து வேறுபாட்டை வரவேற்கிறேன்.  எனது கவிதை சொல்லும் பொருள்களில் எனக்கே கருத்து வேறுபாடு இருக்கிறது.

 

இப்போது மக்களாட்சி என்ற பெயரில் உலகமெங்கும் பெரும்பான்மையான நாடுகளில்  மன்னராட்சி நடக்கிறது.  பதவியிலிருப்பவர்களின் வாரிசுகள்தாம் குடியரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும், மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும், மட்டுமல்ல, மாவட்டச் செயலாளர்களாகவும், வார்டு கவுன்சிலர்களாகவும் கூட வர முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  ஆட்சிக்கட்டிலில் சுகபோகமாக இருக்கும் இந்த மன்னர்களுக்காக, பொதுமக்களிடம் நாட்டுப்பற்றும் வீரமும் போதையைப் போல் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.  எல்லையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் வீரனுக்கு பக்கத்து நாட்டு வீரனுடன் என்ன பகை இருக்கப்போகிறது? ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக பொதுமக்கள் பலியிடப்படுகிறார்கள்.

 

இனவாதத்துக்கு எதிராக, இன அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டங்களைக் குறித்து இந்தக் கவிதையை நான் எழுதவில்லை.

 

இது தொடர்பாக உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன். எனது கருத்தில் பிழை இருந்தால் திருத்திக்கொள்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.