Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 22

தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன் 

 

ஒட்டடைக்குச்சியால்

உங்கள் தலையில் படிந்துள்ள

பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்

 

துடைப்பத்தால் பெருக்கி

மனசின் குப்பைகளை

வெளியே தள்ளுங்கள்

 

ரத்த வாடை போகும்வரை

கைகளை நன்றாகக்

கழுவிக்கொள்ளுங்கள்

 

ரத்தக்கறை படிந்த ஆடைகளை

சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு

ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்

 

 

(பின்குறிப்பு : இந்தியாவில் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் பின்புலத்தில் வாசிக்கவும்)

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 23

விளிம்பின் தாகம்

 

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறையும் வரை

விளிம்பு குடிப்பதற்குள்

பானம் வழிந்துவிடுகிறது.

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறைய

இருக்கும் பானம்

தன்னைக் கடந்து செல்லுகையில்

ருசித்து விட.

விளிம்பைத்

தொடும் கணத்திலேயே

பானம் உறிஞ்சப்பட்டுவிடுகிறது

விளிம்பு

காத்திருக்கிறது

கடைசிச். சொட்டு வரை

கடைசிச் சொட்டையும்

ஒரு நாக்கு

நீண்டு ருசித்துவிடுகிறது

விளிம்பின்றி

எதுவுமில்லாதபோதும்

விளிம்புக்கு எதுவுமில்லை

விளிம்பு நிலை

வாழ்க்கை

ஒவ்வொரு கோப்பைக்குமிருக்கிறது

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 24

அவன்

 

 

அவன் இதயம்

எப்போதும்

முகத்திற்கு

இடம் பெயர்ந்திருக்கும்

நீங்கள் அதை

அறிய முடியாதபடி

தாடி மயிர்

மறைத்திருக்கும்

 

அவன் நெஞ்சிலிருக்கும்

கனல்

சில நேரம்

விரலிடுக்கு வரை

இறங்கி வந்துவிடும்

 

அவனைச் சிலர்

கவிஞன் என்று

அழைப்பதுண்டு

 

உங்களைப் பெரும்பாலும்

தாமதமாகவே

அடையாளம் கண்டுகொள்ளும்

அவன் மேல்

வருத்தப்பட  வேண்டாம்

 

காகிதம் தேடிக்

கிடைப்பதற்குள்

தன்  கவிதைகளையே

மறந்து விடுபவன் அவன்

 

ஏதாவது

பூங்கா  மரத்தடியில்

எழுதிக்கொண்டிருப்பவனைப்

பார்க்க நேர்ந்தால்

சாப்பிட்டாயா

என்று கேட்பது தப்பில்லை

 

நீங்கள் உண்பதைக்

கொஞ்சம்

அவனுக்கும் கொடுத்தால்

தன்மானம் பார்க்காமல்

வாங்கித் தின்றுவிட்டு

இன்னும் கொஞ்சம் -

எழுதுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 25

முதலும் கடைசியும்

 

கடைசி ஆசை

என்னவென்று கேட்டனர்

வாழணும் என்றான்.

முதலும் முடிவுமான

ஆசையென்னவோ

அது மட்டும் தானே?

ஒருவன் மட்டுமே

உயிர் பிழைக்க

வாய்ப்பென்றதும்

பல லட்சம் பேரை

முந்திக்கொண்டு

முன் வந்து

அண்டத்துக்குள்

நுழைந்ததும்

அதனால்தானே?

முந்நூறு நாளுக்குப் பக்கம்

மூச்சடக்கி உள்ளிருந்து

பின் உதிரம் சொட்டச் சொட்ட

முட்டி மோதி தலைகுப்புற

மண்ணில் விழுந்ததும்

அதற்குத்தானே?

எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற

தத்துவங்களையெல்லாம்

ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு

வாழ்வை ருசிப்பதும்

அதனால்தானே?

இது என்ன தனிப்பட்ட

இவன் ஒருவனின் ஆசையா என்ன,

இவனுக்குள் இருக்கும்

கோடான கோடி செல்களுக்கும்

இருக்கின்ற ஆசைதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 26

இரவுக்கு நிறம் தரும் இறகு

கூடடைந்த காகங்களின்

கறுப்பினைப்  பெற்றுக்கொண்ட

இரவு

கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின்

வெண்மையைப் பெற்றுக்கொள்ளும்

விடியலில்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 27

மறந்து விடாதே

 

இன்னுமா என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆச்சரியமாய் அவள் கேட்டது

அதிர்ச்சியாக இருந்தது.

மறந்துவிடாதே என்று

நீ தானே சொன்னாய்

விடைபெறும் போது

நூறு முறை என்றேன்.

அப்படியா சொன்னேன் என்று

ஐயத்தோடு கேட்டாள்.

நன்றாக யோசித்துப் பார்த்தேன் –

மறந்து விடாதே என்றுதான் சொன்னாள்.

மறக்க மாட்டேன் என்று சொல்லவேயில்லை.

 

-    சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்  :rolleyes: 

Link to comment
Share on other sites

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது.

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்   "  Paanch

 

அன்புத் தோழர்  Paanch- ன்.  உள்ளத்தின் ஆழத்திலிருந்து தோழமையுடன் வந்த இந்த வரிகளை நான் மாலையாகச் சூடிக் கொள்ளவா? மகுடமாகச் சூட்டிக்கொள்ளவா?

தம் கவிதை புத்திசாலிக்குக் கூடப் புரியக்கூடாது என்று நினைக்கின்ற கவிஞர்களுக்கு மத்தியில், நம் கவிதை முட்டாளுக்குக் கூடப் புரியவில்லையெனில் நாம் கவிஞர் இல்லை என்று நினைக்கும் சாதாரணர் நாம்.

 

தொடர்ந்து படியுங்கள். உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.  காவல்லூர் கண்மணி அவர்களின் உளமார்ந்த பாராட்டு மொழிகளுக்கு நன்றி.  உங்கள் வரிகள் இன்று இரண்டு கவிதைகளையாவது எழுத என்னைத் தூண்டலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது."

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

நன்றி. அருமையான  கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

நான்காவது வர்ணம் என்று சொல்லப்படும் சூத்திரர்களைக் குறிக்கவே "நான்காவது வர்ணம் கறுப்பாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தேன்.  இந்த வரிகளுக்கு செந்தமிழன் அன்புச்செல்வன் சொல்லும் பொருள் புதுமையானது மட்டுமல்ல, மிகவும் பொருத்தமானதும் கூட.  நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

 

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

Link to comment
Share on other sites

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

 

 

LcBvQ.gif

 

 

சேயான் 'புலவர்' சொல்வது சரிதான்.

 

அறிவியல்படி சிவப்பு(Red), பச்சை(Green), நீலம்(Blue) தான் வண்ணங்களின் அடிப்படை. :)

 

இவற்றை பலவிகிதங்களில் தேவைக்கேற்றபடி கலந்தால், மற்ற வண்ணங்களை உருவாக்கலாம்.. தொலைக்காட்சி குழாய்களில் RGB என்ற மூன்று ஒளிபாய்ச்சிகள்(Guns) உண்டு, அவற்றில் சில விகிதாசாரப்படி இந்த அடிப்படை வண்ணங்களின் சிறு மின்னழுத்தத்தை(voltage) செலுத்துவதன் மூலமே நாம் பலவித வண்ணக் கலவைகளை படமாக பார்க்கிறோம்..

கவிதைக்கும், எனக்கும் காத தூரம், 'பெரியவாள்' என்ன எழுதியுள்ளார் என தற்செயலாக பார்த்ததால் இத்திரியில் சுட்ட நேரிட்டது.. Escape..! :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரு தோழரை கவிதைக்குள் இழுத்து வந்த Paanch அவர்களுக்கும், எனக்கு உதவுவதற்க்கு வந்த ராசவன்னியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

 

அனுபவத்தில் மஞ்சளும் நீலமும் சேர்ந்தால் பச்சை கிடைக்கும்.  அறிவியல்படி ராசவன்னியன் சொன்ன விளக்கம்தான் சரி.

 

 

எனது கவிதை நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்ட இந்து மத வர்ணாசிரம முறையையும், நிறத்தை வைத்து வர்ணத்தை அனுமானிக்கும் மனப்பான்மையையும் பற்றியது.  RGB மட்டுமல்ல  சூத்திரனின் கறுப்பும் அடிப்படை வர்ணமாக இருக்கலாம் என்று நையாண்டி செய்வது. செந்தமிழன் அன்புச்செல்வன் சொன்ன புதிய கருத்தான,  நான்கு வர்ணங்களை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களின் "கருப்பு",  அடிப்படை வர்ணங்களில் நான்காவது என்பதும் பொருத்தமானதுதான்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 29

பிரச்சனைகள் ஒன்றும் பெரிதாயில்லை

 

பிரச்சனைகள் ஒன்றும்

பெரிதாய் இல்லை

 

சாலையோரத்தில்

முதுகைக் காட்டிக்கொண்டுதான்

சிறுநீர் கழிக்கிறார்கள்

 

முகத்தில் மோதும்

பட்டாம்பூச்சிகளை

வாகன ஓட்டிகள் சபிப்பதில்லை

 

வாயாரவாவது

நண்பனின் மனைவியை

சகோதரி என்கிறார்கள்

 

எழுத முடியாததையும்

எழுதக்கூடாததையும்

எவரெவரோ

எழுதிவிட்டபோதும்

எழுதுவதற்கு இன்னும்

ஏதாவது இருக்கத்தான் செய்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 30

சுதந்தரப் புறா

 

சுதந்தர தினத்தைக் கொண்டாட

புறாவைப் பறக்கவிட்டார்கள்

சென்ற வருடம்

பறக்கவிட்ட

அதே புறாதான் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 31

 

நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழி வந்ததா?

என்ன முயன்றும்

விடை காணேன்

என் மகன் சொன்னான்:

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து

கோழி வராது

கோழிக்குஞ்சுதான் வரும் என்று

கேள்வியை மாற்றினேன்:

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழிக்குஞ்சு வந்ததா?

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து வந்தது

சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் என்றான்

கேள்வியை இன்னும் செதுக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

முட்டை முதலில் வந்ததா?

கோழி பிறகுதான் வந்தது

கோழி வருவதற்குமுன்பே

பலவித முட்டைகள் வந்துவிட்டன என்றான்

கேள்வியை இன்னும் கூர்மையாக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

கோழி முட்டை முதலில் வந்ததா?

கோழி முட்டை மூன்றாவதாக வந்தது

கோழியும் சேவலும்

முதலாவதாகவோ இரண்டாவதாகவோ

வந்தபின் என்றான்.

கேள்வி கேட்கத் தெரியாமல்

பதிலை ஏன் தேடுகிறேன் ?

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

 

வாழ்த்துக்கள் seyon yazhvaendhan.

. பறவைக்கு ஞாபக மறதி இருக்காது.  சில மனிதர்களுடன் சேர்ந்த பறவையாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

சேயோனின் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்.

 

திரியில் குறுக்கிட்டு திசை திருப்ப விரும்பவில்லை. நிறங்கள் பற்றி இங்கு உள்ளதைப் பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/62201-photoshop-பாவிக்கும்-முறை-photoshop-tamil/?p=532191

(படங்கள் அழிந்து விட்டன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த பயனுள்ள கடினமான் தகவல்களை எளிய தமிழில் தந்துள்ளீர்கள். நிறங்களைப் பற்றி இன்னும் அதிக தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.  இணையவனுக்கு மிக்க நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 32

தூக்கத்துக்கு கனவே சாட்சி

தூக்கம் 
தினமும் வருகிறது 
இரவைப்போல் 

தூக்கம் 
படுக்கையைப்போல் 
இருக்கிறது 

நான் அதில் 
கனவாய்ப் புரள்கிறேன் 

தூக்கம் 
கரும்பச்சைப் புல்வெளியாய் 
படர்கிறது 

புல் நுனிகளில் 
அங்கங்கே 
பனித்துளிகளாய் 
கனவுகள் அமர்கின்றன 

தூக்கம் 
இருண்ட 
மா மரமாய் எழுகிறது 
மின்மினிகளாய் 
கனவுகள் 
அதன் கிளைகளில் அமர்கின்றன 

நள்ளிரவு வானமாய் 
தூக்கம் இருள 
விண்மீன்களாய் 
கனவுகள் பளிச்சிடுகின்றன 

தூக்கம் 
கருமுகிலாய்க் கூடுகிறது 
கனவு 
மின்னலாய்த் தெறிக்கிறது 


தூக்கம் 
மேல் போர்வை தேட 
கனவு 
என்னையே துகிலுரிக்கிறது 
 

தூக்கம் 
என்னைப் படுக்கையில் 
வீழ்த்தப் பார்க்கிறது 
கனவு 
என்னை 
வானில் பறக்கவைக்கிறது 

இருளறைக்குள் 
தூக்கம் 
கருக்கொள்கிறது 
பின் 
கனவுக் குழந்தைகளைப் 
பிரசவிக்கிறது 

தூக்கம் 
நிழலாய் வருகிறது 
அந்த நிழலுக்கே 
காரணமான வெளிச்சமாய் 
கனவு மேலே இருக்கிறது 

கனவுதான் 
நான் தூங்கினேன் 
என்பதை நினைவூட்டுகிறது 

தூக்கம் 
இருளடர்ந்த கானகத்துக்குள் 
என்னை இட்டுச் செல்கிறது 
ஆங்கே 
நெடுமரமாய் நிற்கும் 
கனவுகள் மீதே 
மோதி விழுகிறேன் 

தூக்கத்திலேயே 
நான் செத்துவிடவில்லை என்பதை 
கனவுகள் மூலமே 
உறுதிசெய்துகொள்கிறேன்
கனவுகள் இல்லாத தூக்கம் 
மரணம் மட்டும் தானே

தாயின் அணைப்பே 
என்னைத் தூங்கவைத்துவிடுகிறது 
அவள் தாலாட்டு 
என்னை விழிக்க வைக்கிறது 

நினைவு 
புகைப்படமாய் 
என் அழகைக் காட்டுகையில் 
கனவு 
எக்ஸ்-கதிர்ப் படமாய் 
என் உள் அசிங்கங்களைக் காட்டுகிறது 

கனவில் 
சிலப் போழ்தில் 
ஆள் மாறாமல் 
என் பால் மாறுகிறது 
மற்றைச் சில கணங்கள் 
உரு மாறாமல் 
என் திணை மாறுகிறது

தூக்கம் 
உன்னைப்போல் 
என்னிடமிருந்து 
விலகியே இருக்கிறது 

கனவு 
என்னைப்போல் 
என்னுடனே இருக்கிறது 
 

தூக்கம் 
எப்போதாவது 
தூக்கம் போல் 
வருகிறது 
ஆனால் 
கனவைப் போல் 
வெகுவிரைவில் 
கலைந்துவிடுகிறது.

-seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 33

கவி மரபு

 

புறநானூறு

பொதுமக்களுக்கும்

அகநானூறு

மன்னர்களுக்கும்

எழுதப்பட்டது

 

எதிர்க்கேள்வி கேட்காமல்

சக மனிதனைக் கொல்வதற்கு

வீரம் கற்பிக்கப்பட்டது

விழுப்புண் புகழப்பட்டது

 

பூனையை விரட்டியது

முறத்தால்

புலியை விரட்டியதாக

மிகைப்படுத்தப்பட்டது

 

மன்னனுக்காகச் சாவது

நாட்டுக்காகச் சாவதாக

நாடகமாடப்பட்டது

 

நல்ல மன்னனிடம்

அடிமைப்பட்டுவிடாமலிருக்க

நமது மன்னனிடம்

அடிமையாய் வாழ்வது

நாட்டுப்பற்றென்று

நம்பவைக்கப்பட்டது
 

போர்களில்

மாண்டனர் மக்கள்

வென்றனர் மன்னர்

 

துதிபாடிகளும்

அடிவருடிகளும்

தூக்கிப்பிடித்த

மன்னர் மரபை

கொஞ்சமும்

பெருமை குலையாமல்

கட்டிக் காக்கிறதெங்கள்

கவிமரபு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

 

கவிதையின் பொருளில் தங்களின் கருத்து வேறுபாட்டை வரவேற்கிறேன்.  எனது கவிதை சொல்லும் பொருள்களில் எனக்கே கருத்து வேறுபாடு இருக்கிறது.

 

இப்போது மக்களாட்சி என்ற பெயரில் உலகமெங்கும் பெரும்பான்மையான நாடுகளில்  மன்னராட்சி நடக்கிறது.  பதவியிலிருப்பவர்களின் வாரிசுகள்தாம் குடியரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும், மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும், மட்டுமல்ல, மாவட்டச் செயலாளர்களாகவும், வார்டு கவுன்சிலர்களாகவும் கூட வர முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  ஆட்சிக்கட்டிலில் சுகபோகமாக இருக்கும் இந்த மன்னர்களுக்காக, பொதுமக்களிடம் நாட்டுப்பற்றும் வீரமும் போதையைப் போல் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.  எல்லையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் வீரனுக்கு பக்கத்து நாட்டு வீரனுடன் என்ன பகை இருக்கப்போகிறது? ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக பொதுமக்கள் பலியிடப்படுகிறார்கள்.

 

இனவாதத்துக்கு எதிராக, இன அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டங்களைக் குறித்து இந்தக் கவிதையை நான் எழுதவில்லை.

 

இது தொடர்பாக உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன். எனது கருத்தில் பிழை இருந்தால் திருத்திக்கொள்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.