Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான எழுத்துக்களுடன் கவிதைகள் அழகு. ஏனோ கவிதையை எல்லோரும் இரசிப்பதில்லை. நான் நினைக்கிறேன் பலருக்கு அதை விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனாலேயே வருவதுமில்லை வாசிப்பதுமில்லை. :D

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுதலான வார்த்தைகள்.   படைப்பாளிகள் படைப்பதில் பிசியாக இருப்பார்கள்.  கவிதைகளைப் படிப்பவர்கள் குறைவு.  கவிதை படிப்பவர்களை விட கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம் - குறிப்பாக இணையத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 14

தெய்வங்களின் கைகளில் 

 

தெய்வங்களின் கைகளில்

நாம் என்னென்ன கொடுத்திருக்கிறோம்?

பாத்திரம் தேய்க்கும் பிரஸ்

எச்சில் இலை எடுக்கும் வாளி

மேசை துடைக்கும் துணி

சட்டங்களில் அடுக்க தீக்குச்சிகள்

பட்டாசில் திணிக்க கந்தகத் திரிகள்

கொண்டாடும் இடத்தில் தெய்வமும்

திண்டாடித் தெருவில் குழந்தையும்.

 

சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 15

என் சடலம்

 

நிச்சயமாகத் தெரியும்

அது

என் சடலம் தான்

கண்ணாடியில்

தினமும்

பார்ப்பதுதானே

அடையாளம்

தெரியாமல்

போய்விடுமா என்ன?

இப்போதெல்லாம்

அடிக்கடி

தென்படுகிறது

என் சடலம்

இல்லை, அது எப்போதும்

இருக்கிறது

நான்தான்

இதுவரை

கண்டுகொள்ளவில்லையோ

என் சடலத்தை?

நம் சடலத்தை

நாம் கண்டு

அழாமல்

நாயா அழும்?

வாழும் போது

என் சடலம்

எனக்கே தெரியாமல் போனால்

செத்த பின்பு

என் சடலம்

தன் சடலமென்று

தெரியாமல் போகாதா

இன்னொருவனுக்கு?

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 16

தமிழ் வாழ்க

 

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்தோம்

தமிழை வைத்து

கட்சி வளர்த்தோம்

கட்சியை வைத்து

ஆட்சியைப் பிடித்தோம்

ஆட்சியை வைத்து

தமிழை அழித்தோம்

இன்னோரிடத்தில்

தமிழரையும் அழித்தோம்

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

Link to comment
Share on other sites

தமிழானது...... தன் அழிவையும் அழகுசொட்ட எழுதுவதற்குச் சொற்களைத் தரும் ஆழ்ந்த வல்லமை கொண்டது என்பதை யாழ் வேந்தன் கவியும் வெளிப்படுத்தி நிற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சிந்தனைகளுடன் தவழ்கிறன கவிதைகள்

Link to comment
Share on other sites

அருமை கவிகள் ஏன்னோ இந்த திரியை கவனிக்க தவறியிருக்கிறேன் தொடருங்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகன் கவிதையைத் தேடுவது போலவே, கவிதை வாசகனைத் தேடிச் சென்றடைகிறது. என் தாயாம் தமிழ் எனது சில கவிதைகளில் பயணித்து நல்ல வாசகர்களை நாள்தோறும் புதிதாய்ச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து தமிழோடு உறவாடுவோம். நன்றி சுமேரியர், அஞ்சரன், Paanch மற்றும் உள தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்.

 

 

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

 

எழுதுவதற்கு நேரமில்லாமல், ஊக்குவிக்க ஆளில்லாமல் எழுதாமல் இருக்கிறார்கள் நிறையப் பேர்.

 

"இறந்தவர்கள்

பூமியை விட்டு

வெளியேற்றப்படுவதில்லை

அவர்கள்

பூமிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்"

 

இவை என் மகன் ஆழிமுகிலன் (7ஆம் வகுப்பு) எழுதிய வரிகள். இத்தகைய படைப்பாளிகளை பள்ளிக்கு அனுப்பி, பாடச்சுமை தூக்க வைத்து, படைப்புத்திறனை மழுங்கடிக்கிற கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.  (என்ன, கவிதை நன்று தானே?)

 

உறவுகள் நிறைய எழுதுங்கள்.  நண்பர்கள் விமர்சனம் செய்யட்டும். படைப்புத் திறனை வளர்த்தெடுப்போம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 17

 

மலர்ச்செடி தரும் நிழல்

இடையில் சிறுத்த

கரிய

அழகிய

அதன் நிழலுக்காகத்தான்

அந்தச் செடியை

நான் வாங்கினேன்

நிழலில் கூட அது

கறுப்பு மலர்களை

பிறப்பித்திருந்தது

நிழலுக்காகத்தான்

அந்த மலர்ச்செடியை

நான் வாங்குவதாக

உன்னிடம் சொன்னபோதே

மர்மப் புன்னகை

பூத்தாய்

செடியை நான்

மடியில் வைத்து

பேருந்தில் அமர்ந்தபோதுதான்

பார்த்தேன்

நிழலின்றிச் செடி

அம்மணமாய் இருந்ததை.

உடனே நான்

உன்னிடம் ஓடி வந்தேன்

செடியை நீ

நிழலின்றி

கொடுத்ததைச் சொன்னேன்

வெட்கமின்றி நீ

வாய்விட்டுச் சிரித்தாய் -

இங்கேயும் இல்லை பார்

அச்செடி நிழலென்று.

பெண் வியாபாரத்தில்

ஆண் சொல்

அம்பலம் ஏறுமா?

சோர்வுடன் நான்

வீடு திரும்பி

வாசலில் செடியை வைத்தேன்

என் சோகம்

பொறுக்காமல்

மறைத்து வைத்திருந்த

நிழலை

விரித்துச் சிரித்தது

சிறு குழந்தைபோல்

செடி.

Link to comment
Share on other sites

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

 

என் எண்ணத்திலும் கற்பனையிலும் தோன்றும் 
என் கதைகளையும் கவிதைகளையும்....
அப்படியே பதிந்துவிட இயந்திரம் ஒன்று இருந்தால்!
உலகமே என்னை வியந்து பாராட்டும்!!  :)
 
என் எண்ணமும் கற்பனையும் தந்தவற்றை
நான் எழுதிப் பதிய முயலும்போது!... அவை
நீர்மேல் எழுத்துப்போல் மறைந்து விடுகின்றனவே!!  :(
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனமே எந்திரம், மற்றொரு எந்திரமா?  

காகிதம் தேடிக் கிறுக்குவதற்குள் 

கவிதை மறந்துவிடுவது

நம் போல் கவிஞருக்கு இயல்பு.

 

"காட்டு விலங்கிடமிருந்து

பாதுகாப்பாக

ஆடு பட்டியில்

அடைக்கப்பட்டிருக்கிறது

மனிதனின் உணவுக்காக"

 

இவை உங்கள் அழகிய வரிகள் தாமே?  எழுதுங்கள் தோழர்.  கவிதை வானம் வசப்படும்.

 

 

 

Link to comment
Share on other sites

உள்ளத்தில் நினைவுண்டு எழுதுவதற்கு நேரமில்லை. என்றாலும் எறும்புக்குள்ள மனப்பாண்மை எமக்கு வேண்டாமா?  

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

 

 தோளைத் தூக்கி நேரமில்லை என்று கூறித் தலையைத் திருப்பும் உலகில் நீங்கள் கண்ட  எறும்புகள் நல்ல எறும்புகள்.,     என் கூட வந்து சொல் என்றதுகளே

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

                                 எறும்பையே கவிதை கேட்க வைத்த      உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

முயற்சி திருவினை  ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும். -   என்றார் வள்ளுவர்.

முயற்சி திருவினையாக்கும்-   பழமொழி   

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

 

கவிதை கேளுங்கள்

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

 

சிந்திக்க வைத்த எறும்புகள். பாராட்டுகள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 18

கயிறு

 

 

தொப்புள் கொடி அறுத்து

முதல் முடிச்சு

போட்டது முதல்

நாளைப் பின்னிப் பின்னி

வாழ்வைத் திரிக்கிறாய்

கால் கட்டைவிரலைக் கட்டி

கடைசி முடிச்சு

போடும் வரை

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

கவிதை கேளுங்கள்

 

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது? :lol:

 

மிகவும் ரசித்தேன் , எளிய தமிழில் கவிதை விதைக்கிறீர் யாவருக்கும் புரியும் வகையில், நல்ல கவிஞனுக்குரிய நேர்த்தி :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 19

எதைக் கூற?

 

வாழ்க்கை முழுதும் விரவி நிற்கும்

வலியைக் கூறிப் போகும்

வாழ்வினின்றும் தப்பிப் போகும்

வழியைக் கூறிப் போகும்

கேட்க விரும்பா செய்திகளையும்

வலியக் கூறிப் போகும்

வரிக்கு வரி

கவி மேதாவித்தனத்தை

வாய்கிழியக் கூறிப் போகும்

கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 21

ஒரே ஒரு வித்தை

 

ஒரு புறாவை

ஒரு முயலை

ஒரு பெண்ணை

மறைய வைத்த

அந்த மாயவித்தைக் கலைஞனிடம்

ஒரே ஒரு வித்தையை

கற்றுத்தரக் கேட்டேன்

ஒரு நிராகரிப்பை

ஒரு ஏமாற்றத்தை

ஒரு துரோகத்தை

ஒரு புன்னகையால்

மறைக்கும் வித்தை

அல்லது

வாழ்நாள் முழுதும்

தொடரும் சோகத்தை

ஓரிரவுத் தூக்கத்தில்

மறக்கும் வித்தை

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்>

 

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

 

அருமையிலும் அருமை.... ! ஆயிரம் பச்சைகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி, Poet மற்றும் எம் கவிதைத் தமிழ் உறவுகளுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாதாரணக் கவிதைகள் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன... சேயோன்...!!

Link to comment
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

எனக்கும் விளங்கிவிட்டது.. :o

அதாவது குளத்து நீரில் பனைமரங்களின் நிழல் தெரியும்.. அதற்கு கல்லெறிந்து மகிழ்வார்கள்.. நீர் வற்றியதும் நிழல் மறைந்துவிடும்.. ஆனால் எறியப்பட்ட கற்கள் அப்படியே இருக்கும்.. :huh:

நல்ல கவிதை சேயோன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாதாரணக் கவிஞனின் கவி வித்தைகளுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்த suvy, இசைக்கலைஞன், வாத்தியார் மற்றும் உள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.