Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

 

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

 

 

கவிஞன் சாதாரணன். ஒரு கவிஞனாக நானும் சாதாரணன். மானுடத்தைப் பாடுவது, மானுடத்துக்குத் துணை நிற்கும் இயற்கையின் கூறுகளைப் பாடுவது கவிஞனின் பணி.

ஒரு புல்லும் ஒரு பறவையும் வேறொரு மனிதனும் தமக்கான கவிதைகளை ஒரு கவிஞன் மூலமாக எழுதிச் செல்கிறார்கள். கவிஞன் கவிதைக்கு ஒரு கருவி. கவிதையும் கவிஞனுக்கு ஒரு கருவி.

கவியரசர்கள், கவிச்சிற்றரசர்கள், மஹாகவிகள் என்று கவிஞர்களில் படிநிலைகள் தேவையில்லை என்பது என் கருத்து. 

ஆனால் சாதாரணனான கவிஞனின் கவிதைகள் சாதாரணமாகவும், சிறந்தவையாகவும் இருக்கலாம். ஒரு சாதாரணக் கவிஞனான எனது சாதாரணக் கவிதைகளுக்கு இடையில் நான் தேர்ந்தெடுக்கும் சில கவிதைகள் எனக்கு அசாதாரணமாகத் தோன்றும். மற்றவர்களுக்கு அப்படித் தோன்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை.

அப்படி எனக்குத் தோன்றும் கவிதைகளே இப்பதிவுகளில் இடம்பெறுகின்றன. (“ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றும் கொள்ளலாம் இவற்றை. இல்லையெனில் பிற கவிதைகளை பதிக்க “ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றொரு பக்கத்தையும் தொடங்கலாம்)

இந்தப் பக்கத்தில் பதிக்கப்படும் என் (அ)சாதாரணக் கவிதைகளைப் படித்துப் பகிருங்கள் இயன்றவரை. பகருங்கள் உங்கள் கருத்துகளை.

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சேயோன் யாழ்வேந்தன் ... அழகான, தெளிவான வரிகள் !! 
 கவிதை ஆரம்ப வரிகளே "குட்டிக் கவிதைகள்" 
சாதாரண வரிகள்...அசாதாரண சிந்தனை 
கவிஞரே வாழ்த்துக்கள்....
  
 நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.
Link to comment
Share on other sites

எவர்க்கும் புரிகின்ற சாதாரணமான அசாதாரண கவிதை தான் ....

 

அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 
உனக்கு
என்ன கிடைத்தது?
எனக்கு -
ஒரு கவிதை.
  

 

எங்களுக்கும்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 01 

அவரவர் அகராதிகள்

 

நீ குடை கொண்டுவர விரும்பாத

ஒரு நாளில்

திடீரென்று மழை வந்தது.

எனது குடையில்

இருவருக்கும் இடமிருந்தபோதும்

நாகரிகமும் கூடவர

இடமில்லாததால்

குடையை உன்னிடம் தந்து

நனைந்தபடி நானும் நடந்தேன்.

 

நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை 

நீ கடைக்கண்ணால் பார்த்தாய்.

நான் மகிழ்ந்தது 

உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல;

குடை இருந்தும்

நான் நனைய முடிந்தற்காகவே.

 

உன் கூந்தலிலிருந்த ரோஜா

கீழே விழுந்ததை

நான் வருத்தத்துடன் பார்த்ததை 

நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்.

நான் வருந்தியது 

உன் கூந்தலிலிருந்து

ரோஜா விழுந்ததற்காக அல்ல,

அது விழுந்ததற்காகவே.

என் மகிழ்ச்சியையும்

வருத்தத்தையும் 

உனது அகராதியில் 

அர்த்தப்படுத்திக்கொண்டு,

ஓர் ஏளனப் பார்வையோடு

எனக்குக் குடையும் விடையும் தந்து

நீ நிழற்குடையில் ஒதுங்கினாய்.

அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 

உனக்கு

என்ன கிடைத்தது?

எனக்கு -

ஒரு கவிதை.

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 25

முதலும் கடைசியும்

 

கடைசி ஆசை

என்னவென்று கேட்டனர்

வாழணும் என்றான்.

முதலும் முடிவுமான

ஆசையென்னவோ

அது மட்டும் தானே?

ஒருவன் மட்டுமே

உயிர் பிழைக்க

வாய்ப்பென்றதும்

பல லட்சம் பேரை

முந்திக்கொண்டு

முன் வந்து

அண்டத்துக்குள்

நுழைந்ததும்

அதனால்தானே?

முந்நூறு நாளுக்குப் பக்கம்

மூச்சடக்கி உள்ளிருந்து

பின் உதிரம் சொட்டச் சொட்ட

முட்டி மோதி தலைகுப்புற

மண்ணில் விழுந்ததும்

அதற்குத்தானே?

எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற

தத்துவங்களையெல்லாம்

ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு

வாழ்வை ருசிப்பதும்

அதனால்தானே?

இது என்ன தனிப்பட்ட

இவன் ஒருவனின் ஆசையா என்ன,

இவனுக்குள் இருக்கும்

கோடான கோடி செல்களுக்கும்

இருக்கின்ற ஆசைதானே?

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 24

அவன்

 

 

அவன் இதயம்

எப்போதும்

முகத்திற்கு

இடம் பெயர்ந்திருக்கும்

நீங்கள் அதை

அறிய முடியாதபடி

தாடி மயிர்

மறைத்திருக்கும்

 

அவன் நெஞ்சிலிருக்கும்

கனல்

சில நேரம்

விரலிடுக்கு வரை

இறங்கி வந்துவிடும்

 

அவனைச் சிலர்

கவிஞன் என்று

அழைப்பதுண்டு

 

உங்களைப் பெரும்பாலும்

தாமதமாகவே

அடையாளம் கண்டுகொள்ளும்

அவன் மேல்

வருத்தப்பட  வேண்டாம்

 

காகிதம் தேடிக்

கிடைப்பதற்குள்

தன்  கவிதைகளையே

மறந்து விடுபவன் அவன்

 

ஏதாவது

பூங்கா  மரத்தடியில்

எழுதிக்கொண்டிருப்பவனைப்

பார்க்க நேர்ந்தால்

சாப்பிட்டாயா

என்று கேட்பது தப்பில்லை

 

நீங்கள் உண்பதைக்

கொஞ்சம்

அவனுக்கும் கொடுத்தால்

தன்மானம் பார்க்காமல்

வாங்கித் தின்றுவிட்டு

இன்னும் கொஞ்சம் -

எழுதுவான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 02

 

இழந்தவை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வால் இல்லை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வாள் இல்லை

என் முன்னோருக்கு இருந்தது

எனக்கு வாழ்வில்லை

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 03

பயணிகளின் கனிவான கவனத்துக்கு

 

தாமதமாக வரும் ரயில்கள்

தாமாகவே தாமதமாக வருவதில்லை

 

ஜன்னலோரம் அமரும் பயணிகள்

ரயில் ஓடும்போது மரங்களையும்

நிற்கும்போது உங்களையும் ரசிக்கிறார்கள்

 

அபாயச் சங்கிலியைப் பார்த்தாவது

அதிக சங்கிலிகள் அணிவதை

பெண்கள் தவிர்க்க வேண்டும்

 

பயணி ஒருவர்

கழுத்துச் சங்கிலியை

கை விரலில் சுற்றி

பல்லிடுக்கில் கடித்தால்

அது அபாயச் சங்கிலி என்பதை

இளைஞர்கள் அறிக

 

ரயில் எவ்வளவு புகை விட்டுச் சென்றாலும்

பயணிகள் புகைவிடுவது

தண்டனைக்குரிய குற்றமாகும்

 

பயணச் சீட்டு இல்லாத பயணிகளை

பரிசோதகர்கள் இறக்கிவிடுவதில்லை

அவர்கள் நுண்பேசியில்

குறுஞ்செய்தி வைத்திருப்பார்கள்

முன்பதிவு செய்த பயணிகள்

பிறருடன் பேசாது வருவதால்

‘ரிசர்வ்ட்’ பயணிகள் என்றும்

பொதுப்பெட்டியில் கலந்து பழகும் பயணிகள்

‘அன்ரிசர்வ்ட்’ பயணிகள் எனவும்

அறியப்படுகிறார்கள்

 

பொதுப்பெட்டியின் கழிவறையில்

சரியாகக் கழுவிக்கொள்ளப் பழகியவர்கள்

வாழ்க்கையில் எத்தகைய சவாலையும்

எளிதாக சமாளித்துவிடுவார்கள்

 

உயர் வகுப்பு பெட்டிகளில்

இன்னமும்

உயர் சாதிப் பயணிகளே

அதிகம் பயணிக்கிறார்கள்

 

மேல் தட்டு

நடுத்தட்டு

கீழ்தட்டு என்று

சமூகத்தைப் பிரதிபலிப்பவையாகவே

ரயில் பெட்டியில்

படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன

 

இணையாக இருந்தாலும்

இணையவே இணையாத

தண்டவாளங்களில்

அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன

 

நானும் அவளும்

அன்று வேறு வேறு பெட்டிகளில்

ஏறியிருந்தால்

இன்று எதிரெதிர் கூண்டுகளில்

நின்றிருக்கமாட்டோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, நற்கவிதை உறவுகளுக்கு.

மற்ற கவிஞர்களின் படைப்புகளை எதிர்நோக்குகிறேன்.

 


நன்றி, நற்கவிதை உறவுகளுக்கு.

மற்ற கவிஞர்களின் படைப்புகளை எதிர்நோக்குகிறேன்.

 


 ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 04

வர்ணத்தின் நிறம் 

 

முதலில்

நிறத்தில்

வர்ணம்

தெரிகிறதாவெனத்

தேடுகிறோம்

 

நெற்றியில் தெரியவில்லையெனில்

சட்டைக்குள் தெரியலாம்

சில பெயர்களிலும்

வர்ணம் பூசியிருக்கலாம்

 

வார்த்தையிலும்

சில நேரம்

வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

 

நான்கு மூலைகளில்

மஞ்சள் தடவிய

திருமண அழைப்பிதழ்களில்

முந்தைய தலைமுறையின்

வால்களில்

வர்ணங்கள் தெரிகின்றன

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

நான்கு வர்ணங்களையும்

நானே படைத்தேன்

என்றவன்

ஒரு நிறக்குருடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 05

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எளிய தமிழில் இனிய கவிதைகள் பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் தாயாம் தமிழால் இணைந்திருக்கிறோம்.   படைப்பாளியைப் படைப்பவர்கள் வாசகர்கள்.  தொடர்ந்து கவிதைகளைப் படியுங்கள், பதியுங்கள், பகிருங்கள்.   நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 06

சொந்த மதத்தின் புதிய கடவுள்

    

வேறு யாருமல்ல

இயேசு அழைத்ததால் மட்டுமே

நாங்கள் சென்றோம்

 

சொந்த மதத்தின் சார்பாக

வேறெந்தக் கடவுளும்

எங்களை அழைக்கவில்லை

மோடி அழைத்ததால் மட்டுமே

நாங்கள் திரும்புகிறோம்

 

குஜராத்தில் கோயில் கட்டப்பட்டு

தன் சிலையும் நிறுவப்பட்டபிறகு

விளக்குமாற்றுக்கு

பட்டுக்குஞ்சம் வைத்த

தலைநகரத்துத் தேர்தல் கண்டு

தனக்குக் கோயில்

வேண்டாமென்று சொன்ன

எங்கள் சொந்த மதத்தின்

புத்தம் புதிய கடவுளைத் தவிர

வேறெந்தக் கடவுள்

தனக்குக் கோயில்

வேண்டாமென்று சொல்லியிருக்கிறது?

 

 

 

(செய்தி: குஜராத்தில் மோடி பக்தர்களால் கட்டப்பட்ட மோடி கோயிலில் மோடியின் சிலை நிறுவப்பட்ட பிறகு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தனக்குக் கோயில் வேண்டாமென்று மோடி அறிவித்திருக்கிறார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 07

அவர்கள்
 

 

அவர்கள் 
வெறுங்கையோடுதான்
பேசிக்கொண்டிருந்தார்கள்
தம்மீது ஏவப்பட்ட 
ஆயுதங்களைத்தான்
கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்

அவர்களும்
வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்
ரத்தம் சிந்த வைத்து
அதை சிவப்பாக்கியது
நீங்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும்
வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்
ரத்தம் சிந்த வைத்து
அதை சிவப்பாக்கியது
நீங்கள்தான்.

 

உண்மை

தொடருங்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 08

 

என் மரணம் இன்னும் நிகழவில்லை

 

என் மரணம்

நிகழ்ந்து விட்டதாக

என் எதிரிகள் தான்

தொலைக்காட்சியில்

முதலில் அறிவித்தார்கள்

ஒரு பிணத்தின்

கழுத்தருகே

என் முகத்தையும்

வைத்துக்காட்டினார்கள்

எனக்கு

அந்நியமானவர்கள் முதல்

அன்னியோன்னியமானவர்கள் வரை

அனைவருமே

என் மரணத்துக்கு

இரங்கல் தெரிவித்தார்கள்

என் மரணத்தை

அவர்கள்

உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்

என் மனத்தின்

அடியாழத்தில்

ஏதோவோர் ஓரத்தில்

ஒரு சிறு நம்பிக்கையின்

கீற்று

நான் மரணிக்கவில்லையென்று

சொல்கிறவரை

என் மரணத்தை

எப்படி நான் நம்ப முடியும்?

என் அடையாளம்

அவன்.

அவன் வேறு

நான் வேறோ?

 

எழுநூறு கோடி மனிதர்கள்

இருப்பதாய் நம்பும்

கடவுள்

இருக்கிறாரா என்று

எப்படி சந்தேகிப்பதில்லையோ

அப்படியே

எட்டு கோடி தமிழர்கள்

நம்பும்

ஒரு மனிதன்

இருப்பதை நாங்கள்

சந்தேகிப்பதில்லை ..... (20.2.15 4.00 am) கவிதை இன்னும் நிறைவடையவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்திரமான கவிஞர் நீங்கள். பந்தை எப்படிப் போடுவது என்று நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நரியின் தந்திரம் அல்ல, புலியின் தந்திரம் என்று நம்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 09

தூக்கத்தில் நடப்பவை 

 

தூக்கத்தில்

கனவுகள் நிகழ்கின்றன

கனவுகள் பெரும்பாலும்

நினைவிலிருப்பதில்லை

தூங்குவதுபோல் கனவு கண்டு

விழிப்பவர்களுக்கு

தூக்கமே கனவாகப் போய்விடுகிறது

 

தூக்கத்தில்

மரணங்கள் நிகழ்கின்றன

தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று

செத்தவனைத் தவிர்த்து

எல்லோரும் சொல்லுவார்கள்

 

தூக்கத்தில்

விபத்துகள் நிகழ்கின்றன

இறந்து போன பயணிகளும்

ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக

யூகங்களினடிப்படையில்

ஊடகங்கள் தெரிவிக்கின்றன

சாவதற்கு சற்றுமுன்

அவர்கள் விழித்திருப்பதற்கு

சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில்

பெண்களின் தூக்கத்தில்

அதிகார்ப்பூர்வ கணவர்களால்

நிகழ்த்தப்படும் விபத்துகள்

சேர்க்கப்படக் கூடாதென

உச்ச நீதிமன்றமே

தீர்ப்பளித்திருக்கிறது

 

தூக்கத்தில் கொலைகள் நிகழ்கின்றன

மதுபோதையிலோ

புணர்ச்சிக்குப் பிந்தைய அயர்ச்சியிலோ

உறங்கும் கணவனின் தலையில்

குழவிக்கல்லையோ (கிராமப் பெண்டிர்)

கிரைண்டர் கல்லையோ (நகரப் பெண்டிர்)

போட்டுக்கொல்வது பெரும்பான்மையாக உள்ளது

அப்படியொரு கொலையைச் செய்து

ஜெயிலுக்குப் போய்வந்த பழனியம்மாள்

75 வயதிலும் நலமாக இருக்கிறாள்

 

தாங்கள் தூக்கத்தில் நடப்பதையோ

தங்கள் தூக்கத்தில் நடப்பதையோ

தூக்கத்தில் நடப்பவர்கள் அறிந்திருப்பதில்லை

நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த

மருத்துவர்களின் பயமுறுத்தலாலும்

ஊடகங்களின் மிகைப்படுத்தலாலும்

ஏற்படுகின்ற மனஉலைச்சலாலேயே

அவர்கள் தூக்கத்தில் நடப்பதாக

அவர்களால் சொல்ல முடிவதில்லை.

 

சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 10

 

எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்

 

சரக்கு ரயில் என்பது

மதுபானங்கள் ஏற்றி வரும்

ரயிலல்ல

 

ஆண்டிமணி என்றோர்

உலோகம் இருந்தாலும்

கோயில் மணி பித்தளையால்தான்

செய்யப்படுகிறது

 

 

மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்

மோடி மேஜிக் என்பதும்

வேறு வேறு

 

இந்தியாவின் ‘கேபிட்டல்’

வெளிநாடுகளில் இருந்தாலும்

‘புதுடெல்லி’ என்பதுதான்

சரியான விடை

 

நாட்டைத் தூய்மையாக்க

நாம் யாரும்

சுத்தமானவர்களாக

இருக்கவேண்டியதில்லை

 

எங்களுக்கு விடை தெரிந்த

இது போன்ற

பொது அறிவுக் கேள்விகள்

எந்தப் போட்டித் தேர்விலும்

கேட்கப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

"நாட்டைத் தூய்மையாக்க

நாம் யாரும்

சுத்தமானவர்களாக

இருக்கவேண்டியதில்லை"

 

வாழ்த்துக்கள்!! சேயோன் யாழ்வேந்தன். :rolleyes: 

உங்கள் கவிதைகள் அசாதாரணக் கவிதைகள் மட்டுமல்ல! வாந்தி எடுப்போருக்கு மருந்தாகவும் தெரிகிறது!!. :rolleyes:  :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதின் ஆழத்திலிருந்து வரும் தாய்த்தமிழ் உறவின் பாராட்டு மொழி, ஒரு படைப்பாளியை பல மடங்கு எழுதச் செய்யும். தோழர்  Paanchன் வாழ்த்து அத்தகையது.  படைப்பாளியைப் படைப்பவை இத்தகைய வாழ்த்துகள். நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

கவிதை கேளுங்கள்

 

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 12

க வி தை

 

கவி தைக்கிறான்

கவிதை

குரங்கு தைக்கும் உடை

எனக்கெதற்கென்று

எவரும் உடுத்தாமல்

கிடக்கிறது கவிதை

கவி விதைக்கிறான்

கவிதை

வினை விதைத்தவனே

அதை அறுக்கட்டுமென்று

அறுவடை ஆகாமல்

கிடக்கிறது கவிதை

கவி கதைக்கிறான்

கவிதை

அவன் சொந்தக் கதை

சோகக்கதை

எனக்கெதற்கு என்று

கேட்காமல்

கிடக்கிறது கவிதை

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 13

விழுந்தவை  

 

தென்னை மரத்தில்

சட்டென்று நிலா எரிந்தது

நான் சுதாரிப்பதற்குள்

கீற்றின் நிழல்

கீழே விழுந்துவிட்டது

தொப்பென்று

கிணற்றில்

ஏதோ விழுந்த சத்தம்.

அது விழுந்ததால்

எழும்பிய அலைகளில்

நெளிந்தபடி மிதந்தது

நிலா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.