Jump to content

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்; 32 ஆண்டு சாதனை முறியடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) .

chesss0130_1.jpg

இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான செஸ் கேம்களும் உருவாக்கபட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஐபிஎம்மின் டீப் புளு கம்ப்யூட்டர் செஸ் மகாராஜா காஸ்ப்ரோவிற்கோ கண்ணாமூச்சி காட்டியிருக்கிறது.

ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் செஸ் கேம் இந்த அளவுக்கு எல்லாம் திறன் படைத்ததல்ல. மாறாக அது மிக மிக எளிதானது. அதன் சிறப்பு அதன் கீர்த்தியில் இல்லை;அதன் மூர்த்தியில் இருக்கிறது. ஆம், இது வரை உருவாக்கப்பட்ட செஸ் கேம்களிலேயே மிகவும் சிறிய கேமாக இந்த பூட் செஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

சிறியது என்றால் ,கம்ப்யூட்டரில் விளையாடக்கூடிய செஸ் கேம்களிலேயே மிகவும் சிறியது. கம்ப்யூட்டர் மொழியில் சொல்வதனால் இது 487 பைட் மட்டுமே கொண்டது. பைட் என்பது கம்ப்யூட்டர் அல்லது சிப்களில் ஒரு புரோகிராம் அல்லது சாப்ட்வேர் இயங்க தேவையான இடப்பரப்பை குறிக்கும். 

புரோகிராமோ , கேமோ கிலோபைட் எல்லாம் கூட ஒன்றுமே இல்லை என ஆகிவிட்ட நிலையில் இந்த சாப்ட்வேர் கில்லாடி 487 பைட் அளவுக்கு ஒரு முழுமையான செஸ் கேமை உருவாக்கியிருக்கிறார். 

சாப்ட்வேர் வரலாற்றில் இது ஒரு மைல்கல் மற்றும் சாதனை என்கின்றனர். இதற்கு முன்னர் சின்கிலர் கம்ப்யூட்டரில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட 1 கே இசட்.எக்ஸ் செஸ் கேம் தான் மிகச்சிறியது என்று கருதப்பட்டு வந்தது. இந்த கேம் உருவாக்கப்பட்டது 1983 ம் ஆண்டில். ஆக 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆலிவர் பவுடாடே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

கவிதையில் சொற்சிக்கனம் என்பது போல பவுடாடே கோடிங்கில் சிக்கனத்தை கடைபிடித்து மொத்த செஸ் கேமையும் 487 பைட்டில் கொண்டு வந்திருக்கிறார்.இதற்காக புரோமிங்கில் புதுமையை கையாண்டதுடன் பழைய அசெம்பிளி லாங்குவேஜ் நுட்பத்தையும் நாடியிருக்கிறார்.

chesss0130_2.jpg

ஆனால்,இந்த கேம் உள்ளடக்கத்திலும் சரி ,தோற்றத்தில் சரி ரொம்ப சாதாரணமாக இருக்கிறது. பைட்களை சேமிக்க வேண்டும் என்றால் கிராபிக்ஸ்களை எல்லாம் மறந்துவிட்டு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தியாக வேண்டுமே.

சொல்லப்போனால் இந்த சின்னஞ்சிறிய செஸ் கேமில் நகர்த்துவதற்கு காய்கள் கூட கிடையாது. எல்லாமே எழுத்துக்கள் தான்.சிப்பாய்களும் ,ராணியும் ,ராஜாக்களும் எழுத்துக்கள் தான். கியு என்றால் ராணி. பி என்றால் சிப்பாய்கள். அதே போல காய்களின் நிறத்தை குறிக்கும் குறியீட்டிலும் சிக்கனம் தான். பெரிய எழுத்துக்கள் வெள்ளை நிற காய்கள். சிறிய எழுத்துக்கள் கருப்பு நிற காய்கள். எழுத்துக்களை டைப் செய்வதன் மூலம் காய்களை நகர்த்த வேண்டும்.

பூட் செஸ் கேமை எப்படி ஆடுவது என விரிவாக குறிப்புகளையும் தந்திருக்கிறார் பவுடாடே. ஆனால் இதை புரிந்து கொள்ளவே கொஞ்சம் புரோகிராமிங் அடிப்படை தெரிந்திருந்தால் நல்லது. 

கம்யூட்டர்களில் நினைவுத்திறன் என்பது மிகவும் காஸ்ட்லியாக இருந்த காலத்தில் டேவிட் ஹோம் எனும் சாப்ட்வேர் வல்லுனர் , 1 கே இசட்.எக்ஸ் செஸ் கேமை 672 பைட் அளவில் உருவாக்கி கம்ப்யூட்டர் உலகை வியக்க வைத்தார். வீடியோ கேம் என்பது மெய்நிகர் பரப்பில் முழு மாய உலகையும் உள்ளடக்கியதாக இருக்கும் காலத்தில் பவுடாடே இந்த கேமை விட சிறிய கேமை உருவாக்கி புருவங்களை உயர வைத்திருக்கிறார்.

இருந்தாலும், இதில் செக் வைப்பதற்கான வழியே இல்லை என்பது போன்ற குறைகளை சுட்டிக்காட்டி இது ஒரு செஸ் கேமே இல்லை என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். பவுடாடே அது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. முதல் கேமிலேயே இது போன்ற குறைகள் உண்டு என்று கூலாக கூறியிருக்கிறார். விஷயத்தை விட்டுவிட்டு குறைகளை தேடிக்கொண்டிருப்பவர்களால் இந்த சாதனையை புரிந்து கொள்ளமுடியாது என நினைக்கிறார் போலும்.

செஸ் கேமில் ஆர்வமிருந்தால் பூட் செஸ் கேமை ஆடிப்பார்க்கலாம். ஆனால் இத்ன் மூலம் செஸ் நுணுக்கங்களை எல்லாம் கற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் என்ன கோடிங் நுணுக்கம் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாமே.

பூட் செஸ் கேம்; http://www.pouet.net/prod.php?which=64962

- சைபர்சிம்மன்

http://cybersimman.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.