Jump to content

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ணையத்தில் தகவல்களைத் திருட பல வழிகளில் ஒன்று தான் இந்த Key logger (Keystroke logging). உண்மையில் இந்த மென்பொருள் திருடுவதற்காக உருவாக்கப்படவில்லை. முதலில் இந்த மென்பொருளின் பயன் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். Image Credit – Mashable.com

தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் போது எதிர்காலப் பயன்பாடு மற்றும் சாட்சிக்காக தங்கள் இணையத் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் தான் இது. இந்த மென்பொருளை நிறுவிவிட்டால், உங்கள் கணினியில் என்ன தட்டச்சு [Type] செய்தாலும் பதிவாகிக் கொண்டு இருக்கும், உங்கள் கடவுச்சொல் உட்பட. இதைப் பெரும்பாலும் வங்கி சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். எங்கள் நிறுவனத்தில் இதைப் பயன்படுத்திய அனுபவம் எனக்கு உண்டு.

இதை நீங்கள் அறியாமல் உங்கள் கணினியிலோ அல்லது பிரௌசிங் சென்டரிலோ நிறுவி விட்டால், நீங்கள் என்னென்ன தட்டச்சு செய்கிறீர்களோ அத்தனையையும் ஒரு எழுத்து விடாமல் பதிவு செய்து விடும். உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பயனர் கணக்கு [user Account] கடவுச்சொல்லை [Password] இதன் மூலம் எளிதாகத் திருட முடியும். இந்த மென்பொருள் இருப்பதையும் உங்களால் அறிய முடியாது.

Keylogger-hardware-PS2-example-connectedஇதன் உண்மையான பயன்பாடு நல்லதுக்கு தான் என்றாலும், அதிகம் பயன்படுத்தப்படுவது என்னவோ திருடுவதற்குத் தான். இந்த Key logger மென்பொருளாக மட்டுமல்ல, ஹார்ட்வேர் ஆகவும் இருக்கிறது அதாவது, Keyboard இணைக்கும் இடத்தில் ஒரு கனெக்டர் போல ஒரு Key logger சாதனத்தை இணைத்து விட்டால் போதும், மென்பொருள் செய்யும் அனைத்து வேலையையும் இதுவும் செய்து விடும். எனவே தான், அறிமுகம் இல்லாத இடத்தில் முக்கியமான தகவல்களை பரிமாற்றம் செய்யக் கூடாது. Image credit – Wikipedia.org

இதில் என்ன பெரிய ஆபத்து என்றால், உங்கள் தகவல்கள் திருடப்படுவது மட்டுமல்லாமல் நீங்கள் யார்? எப்படிப் பட்டவர்? எதை ரசிக்கிறீர்கள்? எதை வெறுக்கறீர்கள்? என்னென்ன தவறு செய்கிறீர்கள்? என்று ஒன்று விடாமல் எளிமையாக அறிந்து விடலாம். உதாரணத்திற்கு ஒருவர் வெளி உலகத்திற்கு நல்லவராக இருக்கலாம் ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் வேறு மாதிரி இருக்கலாம் அதுவும் இணையத்தில் என்னென்ன செய்கிறார் யாரைத் ரகசியமாகத் திட்டுகிறார்? யாரிடம் சாட் செய்து கொண்டு இருக்கிறார்? என்ன பேசுகிறார்? யாரிடம் கடலை போடுகிறார்? யார் யாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்? என்று ஒன்றுவிடாமல் தெரிந்து விடும். சுருக்கமாக உங்கள் அந்தரங்கத்தைப் புட்டு புட்டு வைத்து விடும்.

நீங்கள் என்னென்ன ஆபாச தளங்கள் சென்றீர்கள்? எதை அதிகம் ரசிக்கிறீர்கள்? என்பது வரை தெரிந்தால், உங்களை எந்த விதத்தில் அணுகினால் மடக்கலாம் என்பதை வரை தெரிந்து விடும். இதே பெண்ணாக இருந்தால்..! இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் (ஆணோ / பெண்ணோ) ஆபாசத் தளங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கலாம். இது பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான செயல் என்றாலும், இது உங்கள் அந்தரங்கம். உங்கள் செயலால் யாருக்கும் பாதிப்பில்லை மற்றும் இவை வெளியே தெரியாத வரை பிரச்சனை இல்லை, தெரிந்து விட்டால் அவர்களும் அதே செய்து கொண்டு இருந்தாலும், சந்தோசமாக அனைவருக்கும் இது குறித்துப் பரப்புவார்கள்.

தற்போது கூறுங்கள் இது மிக மிக ஆபத்தான தொழில்நுட்பம் தானே! icon_smile.gif

இது போல நேரங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன். முடிந்த வரை எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

1. உதாரணத்திற்கு உங்கள் கடவுச்சொல் 12345 என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது முதலில் 35 என்று தட்டச்சு செய்து பின் மவுஸ் கர்சரில் 3 முன்பு க்ளிக் செய்து 12 என்று தட்டச்சு செய்து பின் 3 பிறகு மவுஸ் ல் க்ளிக் செய்து 4 என்று தட்டச்சு செய்ய வேண்டும். நான் உதாரணத்திற்கு இந்த முறையில் கூறினேன் நீங்கள் எழுத்துக்களை மாற்றியும் இதைச் செய்யலாம்.

உங்கள் கடவுச்சொல் 12345 ஆனால், இந்த முறையில் 35124 என்று தட்டச்சு செய்யப்பட்டதாக Key Logger ல் காட்டும். புரியும் படி கூறுவதென்றால், key logger மென்பொருளை ஏமாற்றும் வழி இது. Key Logger வேலை தட்டச்சு செய்வதை பதிவு செய்வது. இதை இந்த வழியின் மூலம் ஏமாற்ற முடியும். எனவே, இதில் இருந்து கடவுச்சொல் கிடைத்ததாக நினைத்து எவர் முயற்சித்தாலும் அவர்களால் நுழைய முடியாது. ஏனென்றால், திருடுபவர் 12345 என்பதற்குப் பதிலாக 35124 என்பதை முயற்சித்துக் குழம்பிக் கொண்டு இருப்பார்.

2. இதெல்லாம் ரொம்ப சிரமங்க.. வேற ஏதாவது எளிமையான வழி சொல்லுங்க என்றால், உங்கள் மின்னஞ்சல் / ஃபேஸ்புக் கணக்கிற்கு இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்துவது தான். இதன் மூலம் உங்கள் கடவுச்சொல் தெரிந்தாலும் குறுந்தகவலில் [sMS] வரும் security code இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

Read: ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

3. Virtual keyboard மூலமாக உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தலாம் ஆனால், இந்த வசதி வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் தான் இருக்கும், நம்முடைய மின்னஞ்சல் கணக்குகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகள் செய்ய வேண்டியது வரும் ஆனால், தற்போது இதையும் ஹேக் செய்ய வசதி வந்து விட்டது.

4. மேற்கூறிய மூன்று முறைகளும் கடவுச்சொல்லை எப்படி பாதுகாப்பது? என்பது ஆனால், இந்த மென்பொருள் பிரச்னைக்கு என்ன செய்வது என்றால்..

நீங்கள் அவசியம் Antivirus நிறுவி இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் இயங்கு தளத்திற்கு (OS) இலவசமாகவே மைக்ரோசாஃப்ட் Antivirus தருகிறது, இதை நிறுவலாம். Microsoft Security Essentials

அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் கணினியைப் பயன்படுத்தக் கொடுக்கக் கூடாது.

கண்டபடி Third Party மென்பொருள்களை நிறுவக் கூடாது. இது பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன். நம்முடைய கணினி கெட்டுப் போக முழுக்காரணமே இது போன்ற மென்பொருள்கள் தான்.

http://www.giriblog.com/2015/01/do-you-know-key-logger.html

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.