Jump to content

குழந்தைகளுக்காக எழுதுவது எப்படி?


Recommended Posts

children_2284423f.jpg
 
நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்போது நீங்கள் உங்களுடைய குழந்தைப் பருவத் துக்கும் இப்போதுள்ள குழந்தைப் பருவத்துக்கும் இடையே முன்னும் பின்னும் பயணப்பட வேண்டியிருக்கும். குழந்தை யாக இருந்தபோது நாம் எப்படி இருந்தோம், நமக்கு ஏன் சிலதெல்லாம் பிடித்திருந்தது, நான் ஏன் சிலவற்றில் மட்டும் ஆர்வமாக இருந்தோம், எது நம்மை மனச் சோர்வுக்கு ஆளாக்கியது, எது உற்சாகத்தை ஊட்டியது, எது நம்மை அச்சப்பட வைத்தது, எதற்காக நாம் ஏங்கினோம், நாம் சந்தித்த குழந்தைகள் எப்படி இருந்தார்கள், எதை ரசித்தார்கள், எதைச் சிந்தித்தார்கள் என்றெல்லாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள், நீங்கள் சந்தித்த அக்காலக் குழந்தைகள் ஆகியோரை மனதில் கொண்டுவர வேண்டும். இரண்டு வெவ்வேறு காலத்துக் குழந்தைகளுக்கிடையே என்ன வேறுபாடுகள், முக்கியமாக ஏதேனும் இருக்கிறதா, அல்லது குழந்தைத் தன்மை என்பதே மாறிவிட்டதா? அப்படியானால் நீங்கள் எழுதுவது எப்படி அவர்களைச் சென்று சேரும்?
 
பெரிய பட்டியல்
 
சரி, குழந்தைகளுக்காக எழுதுவது என்று தீர்மானித்து விட்டீர்கள், எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், குழந்தைகளுடைய புத்தகத்தில் எவையெல்லாம் இடம்பெற வேண்டும், எவையெல்லாம் இடம்பெறக் கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது. அதைப் படித்து ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடலாம். குழந்தைகளுக்கான புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை இறுதியாகத் தீர்மானிப்பது பதிப்பாசிரியர்தானே என்று நீங்கள் நினைக்கக்கூடும். சிறு வயதில் நீங்கள் படித்த ‘குட்டி இளவரசன்’ என்ற கதைப் புத்தகம் இந்த வரம்புகளுக்கு உட்படாமல் இருந்ததாகத் தோன்றலாம்.
 
குழந்தைகளுக்காகப் புத்தகங்களை எழுதுவோர் அதற்கு முன்னால் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்களை எப்படி அச்சிடுகிறார்கள், கதைகள் எந்த விதத்தில் சொல்லப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். எழுத்தாளர் மோரிஸ் கிளிட்ஸ்மேன், தான் ஒரு பொன்னான விதியைக் கடைப்பிடிப்பதாகக் கூறி அதை விளக்கினார். குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைதான் என்றாலும் பூர்வ பீடிகையோடு ஆரம்பிக்காமல் நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட வேண்டும் என்கிறார். இப்போதைய இளம் வாசகர்கள் முன்கதைச் சுருக்கத்துக்காகவோ, காட்சி விளக்கத்துக்காகவோ பொறுமையாகக் காத்திருக்கப் பழகிய வர்கள் அல்ல. அத்துடன் அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அதிகம். நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட்டு, கதையை மெல்ல மெல்ல அவிழ்த்தால் அதை அவர்கள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதே இதன் விளக்கம்.
 
சிறுவர்களுக்காக எழுதுவது என்றால், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விதிகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எழுதும்போது அது உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவும்.
 
முதல் வாசகர்
 
புத்தகங்களைச் சிறுவர்கள் எப்படித் தேர்வு செய் கிறார்கள், படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள புத்தகக் கடைகளிலும், நூலகங்களிலும், நர்சரி பள்ளிக்கூடங்களிலும், இதர பள்ளிக்கூடங்களிலும் சென்று பார்க்க வேண்டும். நீங்கள் எழுதும் புத்தகத்துக்கு நீங்கள்தான் முதல் வாசகர். குழந்தைகளைப் போல நடித்து நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால், உண்மையில் குழந்தைகள் இயல்பாக அதைப் படிக்க வேண்டுமே! எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள், முதல் வாசகராகப் படிக்கும்போது கறாராக இருந்துவிடுங்கள். அப்போதுதான் அந்தப் புத்தகம் சிறுவர்களால் விரும்பப்படுமா, படிக்கப்படுமா என்று முடிவெடுக்க உதவும். நீங்கள் குழந்தையாக இருந்த போது எப்படிப் படித்தீர்கள் என்ற நினைவு இதில் ஓரளவுக்கு உதவலாம். இது மட்டும் போதாது. இப்போதுள்ள குழந்தை களின் விருப்பத்தை, தேர்வை உங்கள் மண்டையிலும் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
 
குழந்தைகளுக்கான புத்தக உலகம் தோழமை மிக்கது, மகிழ்ச்சிகரமானது. குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட, கற்பனை யான வார்த்தைகளாலும் சித்திரங்களாலும் மகிழ்ச்சியூட்ட, தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் நிரம்பிய உலகம் அது. மிகக் குறைவான ஊதியமே கிடைத்தாலும் குழந்தை களுக்கு நாம் தரும் புத்தகம் மகிழ்ச்சியையும் அறிவையும் ஊட்ட வேண்டும் என்று அதற்காக மிகுந்த அக்கறையுடனும் கனிவுடனும் உழைக்கும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் அனேகம். தங்களுடைய முழு வாழ்க்கையையும் அதற்காகவே தியாகம் செய்வோர் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
 
குழந்தைகளுக்காக எழுதும் புத்தகங்கள் புத்தகக் காட்சிகளிலும் நூலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இடம்பெறுவதில்தான் வெற்றியே இருக்கிறது. குழந்தை களுக்காகவே புத்தகங்களை எழுதி வெற்றிகண்டவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் புத்தகம் யாருக்குப் போய்ச்சேர்கிறது என்ற சமூக நோக்கம்தான் முக்கியம். குழந்தைகளுக்கான நூல் களைக் கொண்டுபோய் சேர்க்க பெற்றோர்கள், நூலகர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களோடு நீங்கள் சேர்ந்திருப்பதுதான் முக்கியம். இதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால் உங்களுடைய ஆசைப்படி நீங்கள் புத்தகம் எழுதத் தொடங்கலாம்.
 
- மைக்கேல் ரோசன், சிறுவர் இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தவர், குழந்தைகளுக்கான கவிதைகள், கதைகள் என்று 140 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
 
‘தி கார்டியன்’, தமிழில்: சாரி.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.