Jump to content

குழந்தைகளுக்காக எழுதுவது எப்படி?


Recommended Posts

children_2284423f.jpg
 
நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்போது நீங்கள் உங்களுடைய குழந்தைப் பருவத் துக்கும் இப்போதுள்ள குழந்தைப் பருவத்துக்கும் இடையே முன்னும் பின்னும் பயணப்பட வேண்டியிருக்கும். குழந்தை யாக இருந்தபோது நாம் எப்படி இருந்தோம், நமக்கு ஏன் சிலதெல்லாம் பிடித்திருந்தது, நான் ஏன் சிலவற்றில் மட்டும் ஆர்வமாக இருந்தோம், எது நம்மை மனச் சோர்வுக்கு ஆளாக்கியது, எது உற்சாகத்தை ஊட்டியது, எது நம்மை அச்சப்பட வைத்தது, எதற்காக நாம் ஏங்கினோம், நாம் சந்தித்த குழந்தைகள் எப்படி இருந்தார்கள், எதை ரசித்தார்கள், எதைச் சிந்தித்தார்கள் என்றெல்லாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள், நீங்கள் சந்தித்த அக்காலக் குழந்தைகள் ஆகியோரை மனதில் கொண்டுவர வேண்டும். இரண்டு வெவ்வேறு காலத்துக் குழந்தைகளுக்கிடையே என்ன வேறுபாடுகள், முக்கியமாக ஏதேனும் இருக்கிறதா, அல்லது குழந்தைத் தன்மை என்பதே மாறிவிட்டதா? அப்படியானால் நீங்கள் எழுதுவது எப்படி அவர்களைச் சென்று சேரும்?
 
பெரிய பட்டியல்
 
சரி, குழந்தைகளுக்காக எழுதுவது என்று தீர்மானித்து விட்டீர்கள், எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், குழந்தைகளுடைய புத்தகத்தில் எவையெல்லாம் இடம்பெற வேண்டும், எவையெல்லாம் இடம்பெறக் கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது. அதைப் படித்து ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடலாம். குழந்தைகளுக்கான புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை இறுதியாகத் தீர்மானிப்பது பதிப்பாசிரியர்தானே என்று நீங்கள் நினைக்கக்கூடும். சிறு வயதில் நீங்கள் படித்த ‘குட்டி இளவரசன்’ என்ற கதைப் புத்தகம் இந்த வரம்புகளுக்கு உட்படாமல் இருந்ததாகத் தோன்றலாம்.
 
குழந்தைகளுக்காகப் புத்தகங்களை எழுதுவோர் அதற்கு முன்னால் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்களை எப்படி அச்சிடுகிறார்கள், கதைகள் எந்த விதத்தில் சொல்லப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். எழுத்தாளர் மோரிஸ் கிளிட்ஸ்மேன், தான் ஒரு பொன்னான விதியைக் கடைப்பிடிப்பதாகக் கூறி அதை விளக்கினார். குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைதான் என்றாலும் பூர்வ பீடிகையோடு ஆரம்பிக்காமல் நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட வேண்டும் என்கிறார். இப்போதைய இளம் வாசகர்கள் முன்கதைச் சுருக்கத்துக்காகவோ, காட்சி விளக்கத்துக்காகவோ பொறுமையாகக் காத்திருக்கப் பழகிய வர்கள் அல்ல. அத்துடன் அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அதிகம். நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட்டு, கதையை மெல்ல மெல்ல அவிழ்த்தால் அதை அவர்கள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதே இதன் விளக்கம்.
 
சிறுவர்களுக்காக எழுதுவது என்றால், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விதிகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எழுதும்போது அது உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவும்.
 
முதல் வாசகர்
 
புத்தகங்களைச் சிறுவர்கள் எப்படித் தேர்வு செய் கிறார்கள், படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள புத்தகக் கடைகளிலும், நூலகங்களிலும், நர்சரி பள்ளிக்கூடங்களிலும், இதர பள்ளிக்கூடங்களிலும் சென்று பார்க்க வேண்டும். நீங்கள் எழுதும் புத்தகத்துக்கு நீங்கள்தான் முதல் வாசகர். குழந்தைகளைப் போல நடித்து நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால், உண்மையில் குழந்தைகள் இயல்பாக அதைப் படிக்க வேண்டுமே! எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள், முதல் வாசகராகப் படிக்கும்போது கறாராக இருந்துவிடுங்கள். அப்போதுதான் அந்தப் புத்தகம் சிறுவர்களால் விரும்பப்படுமா, படிக்கப்படுமா என்று முடிவெடுக்க உதவும். நீங்கள் குழந்தையாக இருந்த போது எப்படிப் படித்தீர்கள் என்ற நினைவு இதில் ஓரளவுக்கு உதவலாம். இது மட்டும் போதாது. இப்போதுள்ள குழந்தை களின் விருப்பத்தை, தேர்வை உங்கள் மண்டையிலும் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
 
குழந்தைகளுக்கான புத்தக உலகம் தோழமை மிக்கது, மகிழ்ச்சிகரமானது. குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட, கற்பனை யான வார்த்தைகளாலும் சித்திரங்களாலும் மகிழ்ச்சியூட்ட, தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் நிரம்பிய உலகம் அது. மிகக் குறைவான ஊதியமே கிடைத்தாலும் குழந்தை களுக்கு நாம் தரும் புத்தகம் மகிழ்ச்சியையும் அறிவையும் ஊட்ட வேண்டும் என்று அதற்காக மிகுந்த அக்கறையுடனும் கனிவுடனும் உழைக்கும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் அனேகம். தங்களுடைய முழு வாழ்க்கையையும் அதற்காகவே தியாகம் செய்வோர் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
 
குழந்தைகளுக்காக எழுதும் புத்தகங்கள் புத்தகக் காட்சிகளிலும் நூலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இடம்பெறுவதில்தான் வெற்றியே இருக்கிறது. குழந்தை களுக்காகவே புத்தகங்களை எழுதி வெற்றிகண்டவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் புத்தகம் யாருக்குப் போய்ச்சேர்கிறது என்ற சமூக நோக்கம்தான் முக்கியம். குழந்தைகளுக்கான நூல் களைக் கொண்டுபோய் சேர்க்க பெற்றோர்கள், நூலகர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களோடு நீங்கள் சேர்ந்திருப்பதுதான் முக்கியம். இதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால் உங்களுடைய ஆசைப்படி நீங்கள் புத்தகம் எழுதத் தொடங்கலாம்.
 
- மைக்கேல் ரோசன், சிறுவர் இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தவர், குழந்தைகளுக்கான கவிதைகள், கதைகள் என்று 140 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
 
‘தி கார்டியன்’, தமிழில்: சாரி.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.