Jump to content

கீபோட் போராளி (முகடு)


Recommended Posts

பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் ..

 

நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட்டன் ஏரியாக்கு நீ எப்ப வருவா ,இந்த உடுப்பு மாத்திரன் இப்ப வருவான் நில்லு போயிடாத ;என்று சொல்லிக்கொண்டு சப்பாத்தை கட்டிக்கொண்டு ஜக்கெட்டை எடுத்து கொளுவினான் ...

வணக்கம் மச்சி எப்படி சுகம் வேளைக்கு வந்திட்ட போல ,ஓம் மச்சான் பருவாயில்லை இந்த அண்ணையும் வாறன் என்று சொன்னார் அதுதான் கொஞ்சம் நேரத்தோட வந்திட்டன் ,ஓ யாரு இவர் புதுசா கிடக்கு ஒருநாளும் காணவில்லை ஆளை ,ம்ம் நீ கண்டிருக்க மாட்ட இப்பத்தான் ஊரில இருத்து வந்தவர் முதல் இயக்கத்தில இருத்து கடைசி சண்டையில காயப்பட்டு ,பிறகு பிடிபட்டு உள்ளுக்கு இருந்து வெளியால வந்து இப்ப ஒரு கிழமை முதல் தான் இங்க வந்து சேர்த்தவர் ,ஓகே ஆள் எங்க ஆளத்தான் அப்ப ...

 

சும்மா இருடா அவர் இயக்கத்தில பெரிய பொறுப்பில் இருத்த ஆள் பழைய சண்டைக்காரன் , எங்கட கதைகளை ஆளோட கதைக்காத பிறகு கதை பொத்தி அடிக்கும் ,சரி சரி எங்களுக்கு தேவையான விஷயம் இருத்தல் எடு அங்க போட்டு ,முழங்க நல்ல வரவேற்ப்பு இருக்கும் தெரியும் தானே உனக்கு ,ம்ம் அது பிறகு பார்ப்பம் இப்ப என்னமாதிரி ஆளை இரவு கூப்பிட்டு அடிப்பமே ...

 

அதுக்குத்தான் வந்தது ஒரு ஒன்பது மணிக்கு தொடங்கு நான் கரிகாலன் தம்பியால வாறன் ;நீ ஈழ வேங்கையாள வா சரியா இண்டைக்கு ஒரு கை பார்ப்பம் ,அவன் ,மற்ற பார்ட்டி தான் நான் இளைவன் அண்ணையிட்ட கேட்டனான் ,அவர் சொன்னார் அவன் ஒட்டுக்குழு ஆள் என்றுதான் உன்னை கேட்டதா சொன்னார் மச்சி ..

முன்னாள் போராளி இவங்கள் என்ன கதைக்கிறாங்கள் என்று தெரியாமல் நெக்டோ சோடாவை குடித்தபடி என்னடாப்பா இங்கயும் சண்டையா ,எதாவது இயக்க நிர்வாக பிரச்சினையா ஏன் இதுக்கு எல்லாம் நீங்கள் போறீங்கள் அப்பு கவனம் ,சும்மா வெளிநாட்டில் வந்து எங்கட சனத்துக்கு ஏதாவது செய்ய முயற்ச்சி பண்ணுங்க ;எனக்கு சகோதரம் வெளிநாடு நான் வந்திட்டன் அப்படி இல்லாமல் எத்தினை போராளிகள் அங்க இன்னும் கஷ்டப்படினம் ,இல்லை அண்ணே இது வேற பிரச்சினை அப்படி ஒன்றும் இல்லை ...

 

சரி மச்சி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு நான் சாப்பிட்டு வர சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு பரணி ரயில் தரிப்பிடம் நோக்கி நடந்தான் ,மனம் எல்லாம் அவனை இன்றையோட ஒடப்பண்ணனும் துரோகி ஆக்கினா சரி ,பிறகு அவருக்கு ஒரு ஆதரவும் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போக ,தம்பி குகன் ஒரு படம் எடுத்துக்கொண்டு போவம் ,நாளைக்கு வீசா அலுவல் பார்க்க வேணும் ,சரி அண்ணே பக்கத்தில தான் போயிட்டு போவம் என்று இருவரும் நடக்க தொடங்கினர் ..

 

அண்ணே நீங்க இயக்கத்தில எத்தினை சண்டை போனநிங்கள் ,எங்க எங்க போனநிங்கள் என்று பேச்சை கொடுத்துக்கொண்டு நடந்தான் குகன் , அதை விடு தம்பி சும்மா எல்லாத்துக்கும் போய் இருக்கிறன் ,இங்க எப்படி வீசா போட்டா கிடைக்குமே எனக்கு காயங்களை பார்த்து புலி என்று சொல்லி நிராகரிக்க மாட்டினமே தம்பி ,இல்லை அண்ணே இங்க இரவு கோழி களவுக்கு போய் முதுகில கம்பி கிழிச்சவன் எல்லாம் தான் புலி என்று சொல்லித்தான் வீசா எடுத்து வைத்து இருக்கிறாங்க ..

பரணி வேகமா சாப்பிட்டு மடிக்கணணியை தூக்கி மடியில வைத்தபடி குகனுக்கு போனை போட்டான் மச்சி எங்க வந்திட்டியா வீட்டுக்கு என்று ,ஓ இப்பத்தான் மேல ஏறிக்கொண்டு இருக்கிறன் படியால என்று மூச்சு வாங்கியபடி கதைத்தான் குகன் ,அண்ணே பார்த்து வாங்கோ காலும் ஏலாது பிடிச்சு நடவுங்க என்று பின்னாடி வரும் பழைய போராளி அண்ணைக்கு சொல்லிக்கொண்டு வீட்டு திறப்பை எடுத்து கதவில் செருகினான் குகன் ..

 

ஒரு டீ குடிப்பம் போடவா அண்ணே என்று கேட்டுக்கொண்டு இருக்க இல்லை அப்பு அதிக சீனி சேர்க்க கூடாது காயத்துக்கு பிரச்சினை இன்னும் இங்க மெடிகல் காட்டும் இல்லை ,நீங்க குடியுங்க எனக்கு வேணாம் என்று சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்த்தார் ,முன்னாள் போராளி தம்பி நீர் எங்கையோ ஒன்பது மணிக்கு போறான் எண்டு சொன்னீர் போகவில்லை போல ,இல்லை வீட்டில் இருந்துதான் அது கதைப்பது அண்ணே போறது எல்லாம் இல்லை ,ஆ எதோ சண்டை என்று எல்லாம் சொன்னியள் அதுதான் நான் பயந்து போனன என்று சிரித்தார் அவர் ...

 

பரணி மீண்டும் போன் பண்ணி எங்கட ஆள் நிக்கு வா வா குடுப்பம் ,நான் கரிகாலன் தம்பியை இறகிட்டன் ;ஏன்டா கோமான்சுக்கு லைக்கு பாயுது அவரை துரோகி என்று சொல்லி குடுத்துக்கொண்டு இருக்கிறன் நீ ,வா ஈழ வேங்கை ஐடியால அவர் ஒட்டுக்குழு ஆள் என்று எல்லோரும் நம்பிட்டினம் என்று மூச்சு விடாமல் வேகமா கதைதான் பரணி ..

 

இவ்வளவு நேரமும் வரும்போது அவரின் கதைகேட்டுக்கொண்டு வந்த குகனின் மனதில் எவ்வளவு தியாகம் எப்படியான உயிர் கொடுப்புகள் ,அவர் உடலில் உள்ள காயம்; இதை எல்லாம் நாம் பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் நானே செய்வது போல நானே அங்கு சண்டையில் நின்றது போல எழுதி நாலு லைக்கும் ,என்னையும் போராளியா புலியா பார்க்கணும் என்னும் எண்ணத்தில் எழுதி என் பெயர் புகழுக்கு அலைத்து இருக்கிறேன் என்று மனதில் உள்ளே எண்ணி வெட்க்கபட்டான் குகன் ...

 

புலிக்கொடியை பிடித்து ,மடித்து போர்த்து எல்லாம் படம் எடுத்து போட்டால் என்னையும் புலியா நினைப்பினம் என்னும் எண்ணமே இருந்தது, ஆனால் ஒரு நாள் புலியா வாழ்த்து இருந்தால் இந்த வெந்து சினிமாத்தனமான செயலுக்கு வெக்கப்பட்டு இருப்பேன் ,இவ்வளவு கள அனுபவும் உள்ள இந்த அண்ணன் சாதரணமா சொல்லுறார் ,அவரளிடம் ஒப்பிடுகையில் நாம் எம் மண்ணுக்கு இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதுதான் உண்மை ..

 

மீண்டும் போன் அடித்தது டீ ஊற்றியபடி நிண்ட குகன் சொன்னான் எடுங்க அண்ணே எடுத்து இஸ்பிக்கரில் விடுங்க என்று ,அவரும் இணைப்பை எடுத்து இஸ்பிக்கரை அமத்தி விட ,மச்சான் ஓடுவா மகிந்தன் அண்ணையும் வந்து நிக்கிறார் இரண்டு பெரும் சேர்த்து கொடுக்கிறம் ஆளுக்கு பதில் சொல்ல எல்லாமல் பார்ட்டி திணறுது ,நீயும் சயிட் சப்போர்ட் தந்தால் ஆள் எங்க போக்ஸ்க்குள் மாட்டிட்டும் இண்டைக்கு செத்தான் என்று சந்தோஷம் மிகுந்த களிப்பில் சொன்னான் பரணி ..

 

அதை சோபாவில் சாய்ந்து இருந்தபடி புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த முன்னாள் போராளியின் மனதில் தீச்சுவாலை சண்டை ஒருநொடி வந்து போனது ,குகன் எதை பேசுவது என்று தெரியாமல் மவுனமா நின்றுகொண்டு இருந்தான் ,மீண்டும் பரணி மச்சி சே செமையா ஆளுக்கு போட்டுகொண்டு இருக்க ப்ரீ வீப்பி கட்டா போயிட்டு சே என்று வெறுப்பா கத்தினான் ,அட பாவிகளா ஈழத்தை இலவச இணைப்பில் எப்படி எல்லாம் பிடிக்கறாங்க என்று மனதில் சிரித்தான் முன்னாள் போராளி ..அதுக்குள் பரணியின் போனை துண்டித்தான் குகன் ..

 

பரணியில் போன் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது பேஸ்புக் வேணாம் பேக் ஐடியும் வேணாம் ,இன்றில் இருத்தாவது இங்கு வந்திருக்கும் அண்ணைக்கு வீசா எடுத்து கொடுக்கும் வரை ,என் சிந்தனை ஓட்டம் எல்லாம் அதுபற்றியே இருக்கணும் என்று நினைத்துக்கொண்டு அண்ணே உங்களுக்கு உடல் நலம் நல்லா இல்லாட்டி நாளைக்கு வைத்தியரை பார்க்க போகலாம் ,இல்லை அப்பு எனக்கு ஒன்றும் இல்லாமல் எப்படி பார்க்கிறது கொஞ்சம் வலி இருக்கு முதுகு பக்கம் ,பிறகு பார்ப்பம் வீசா போட்டுட்டு ..இல்லை என்னுடைய காட்டில் காட்டலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை ...

 

கரிகாலன் தம்பியின் அழைப்பு பேஸ்புக்கில் ஓவர் ஓவர் என்று ஒலித்துக்கொண்டு இருக்க ,குகனின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க எதையும் கவனிக்காது சமைக்க தொடங்கினான் குகன் ,போலி முகவரியில் ஈழம் பிடிப்பதை விட ஈழத்துக்காக வாழ்த்தவர்கள்,தியாகம் செய்தவர்கள் ,உயிர் கொடுத்தவர்களுக்கு நாலு உதவி செய்தாலே போதும் என்னும் எண்ணத்தில் அவன் முழுமையா தன்னை மாற்றி இருந்தான்.. தம்பி குகன் போன் அடிக்குது பரணியாம் ,அவன் கிடக்கிறான் லூசுப்பயல் விடுங்க அண்ணே என்று திடமா சொன்னான் குகன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு. :lol::icon_idea::rolleyes:


உலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்..  பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல்     அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும். :)

Link to comment
Share on other sites

இதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு. :lol::icon_idea::rolleyes:

உலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்..  பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல்     அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும். :)

மிக்க  சந்தோசம்  நான்  இந்த  கதையில்   வெற்றி  கண்டுள்ளேன்  நெடுக்கர் அண்ணாவே ...யாருக்கு  உறைக்கணும் என்று  நினைத்தனோ  அங்கு உறைத்து  இருக்கு  என்பதால்  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா
அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?
உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா

அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?

உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

அங்கு  சரி  பார்க்கபட்டு  போடப்பட்டது  வாத்தியார் ஐயா  இது  நான்  எழுதி  அனுப்பியதை  பதிந்தேன்  :(

 

மீள்  வாசிப்பு  செய்தாலும்  பிழைகளை   தவிர்க்க  முடியவில்லை  என்பது  வருத்தம் தான்  :(  :(

Link to comment
Share on other sites

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

Link to comment
Share on other sites

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

சிறு  கதை  என்பது  ஒரு  கருத்தை  தாங்கி  நிப்பது  விஸ்வா  எதுவம்  இல்லாமல்  இருந்தால்  அது  சிறுகதை  இல்லை சமூக  விழிப்பு  எழுத்தில் சிறு தாக்கத்தை  ஏற்படுத்த  வேணும் ..நிஜம்  எப்பவும்  சுடும் அதுக்கு  நானும்  விதி  விலக்கு அல்ல .. :unsure:

Link to comment
Share on other sites

மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

Link to comment
Share on other sites

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

 

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

Link to comment
Share on other sites

மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா :)

நீங்கள் யாழ்  இணையத்துடன  கதையை  இணைத்து  பார்க்காது  பொது வெளியில்  பாருங்கள் உண்மை  புரியும் விஷ்வா . ^_^

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

அளவானவர்கள்  போடலாம்  என்று  நினைத்தேன்  அவர்களே  முண்டி  அடித்து  போட்டுகொண்டுள்ளர்கள்  என்பதால்  சந்தோசம்  கதையில்  :icon_idea:

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

 

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

உண்மை யாரவாது  போராளிகள்  சொல்லும்  கதையை  கேட்டுட்டு வந்து தானே  செய்வது  போல  அடிச்சு விடுறது இப்ப புது  யுத்தியா  இருக்கு ..

 

பிறந்தது  யாழில் வளர்த்தது  கொழும்பில் எனக்கு தெரிய ஒரு பையன் வயது இப்ப இருபத்திரண்டு  எனக்கே சொல்லுறான்  தீசுவாலை சண்டையில் கிளாலி  பக்கம் நிண்டனான்  தான்  என்று  அப்ப அவனுக்கு  வயது  பத்து என்னத்த  சொல்ல  அண்ணே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.

Link to comment
Share on other sites

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

அஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை ஒரு  அற்ப  சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை ஒரு  அற்ப  சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

 

 

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

 

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

 

 

Page_1_img045.jpg

Link to comment
Share on other sites

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

 

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

 

 

Page_1_img045.jpg

நாம்  இங்கு  விவாதிப்பது  இணைய  போலி  முகவரி  போராளிகளை  நீங்கள்   சம்மந்தம்  இல்லாமல்  சஞ்சிகையை  கொண்டுவந்து  நுழைப்பது  எதுக்கு  என்று  புரியவில்லை ...ஊடகம்  வேறு  இணையங்களில் நான்தான்  புலி நான் தான்  எல்லாமே  என்று  தம்பட்டம்  அடிப்பது வேறு  அதை முதலில்  புரிந்து  கொள்ளுங்கள் அண்ணே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு விவாதிப்பது இணைய போலி முகவரி போராளிகளை நீங்கள் சம்மந்தம் இல்லாமல் சஞ்சிகையை கொண்டுவந்து நுழைப்பது எதுக்கு என்று புரியவில்லை ...ஊடகம் வேறு இணையங்களில் நான்தான் புலி நான் தான் எல்லாமே என்று தம்பட்டம் அடிப்பது வேறு அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அண்ணே ..

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

Link to comment
Share on other sites

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

மீரா  சஞ்சிகை  போலி  என்று  சொல்வதை  பார்க்க  சிரிப்பு  வருது  அதுக்கு  ஒரு  பச்சை  வேற  ஐயகோ ..எங்கும்  நாங்கள்  எங்கள்  சுய  முகவரியில்  இயங்கும்  ஆக்கள்  ...ஊரை  சுற்றி  உலையில்  போடும்  ஆக்கள்தான்  போலிகளில்  தேசியம்  ஈழம்  பிடிக்கும்  ஆக்கள் .

 

செந்த முகத்தில் தலைவர்  படம் போடுங்க என்றுதான்  சொல்கிறோம் ஆக்கும்  :icon_idea:

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

கீர்த்திதீபன்  இப்படி  பலது  நடக்கும் ஈழம்  பிடிக்கிறவ  காட்டும்  கூத்து  ஆட்டுக்க  மாட்டை  விட்டு  தங்களை  புனிதர்  ஆக்குவீனம் . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை

 

ஒரு  அற்ப  சந்தோஷம்

 

1- தலைவர் படம் போட்டு ...

2- காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..

3- ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

 

 

1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

2-  இயக்க பாடல்களை கேட்க  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

உங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா??

அதற்கு சாட்சி உண்டா??

 

3-  மாவீரருக்கு அஞ்சலி செலுத்த  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான்  மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

 

*********

நியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

 

 

1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

2-  இயக்க பாடல்களை கேட்க  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

உங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா??

அதற்கு சாட்சி உண்டா??

 

3-  மாவீரருக்கு அஞ்சலி செலுத்த  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான்  மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

 

*********

நியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

 

இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள எந்த வைகையில் இவரு தேசியத்துக்கு எதிரானவர் ..அல்லது துரோகிகள் என்று தரம் பிரிப்பது போலவே நாங்களும் எவர் வெற்று கூச்சல் ..எவர் உண்மையான விசுவாசி என்று ஒரு வரையறை வந்துள்ளோம் ..அதன் படி நாம் அவர்களை அணுகுவோம் தரம் பிரிப்போம் .

இந்த கேள்வி கேட்கும் அதிகாரங்கள் எல்லாம் எவர் உங்களுக்கு தருகிறார்களோ அவர்களே எமக்கு தருகிறார்கள் ..

அஞ்சரன் ஒருவர் தான் இரண்டு வகையாக உங்களையும் விசுகரையும் கையாளுகிறாரா? இது சுத்த முட்டாள்தனம். உண்மையான விசுவாசிக்கு என்ன வரையறை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1- நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

 

2- இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

 

 

1- ஒரு  ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்

கேள்விகள் வரும்.  அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.

 

2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்

அந்த இடத்தில் கேட்கணும்.

பதில் தரப்படும்.

 

மற்றும்படி

முகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...

ஒருவரை  நோக்கி  கைநீட்டும்போது

நாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.

பேசும் சொற்களைவிட  எழுதும் எழுத்துக்கள் வலுவானவை

சாட்சியாக நிலைப்பவை.

எனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்

உங்களுக்கு நீங்களே முரண்படாதீர்கள்...

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

1- ஒரு  ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்

கேள்விகள் வரும்.  அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.

 

2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்

அந்த இடத்தில் கேட்கணும்.

பதில் தரப்படும்.

 

மற்றும்படி

முகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...

ஒருவரை  நோக்கி  கைநீட்டும்போது

நாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.

பேசும் சொற்களைவிட  எழுதும் எழுத்துக்கள் வலுவானவை

சாட்சியாக நிலைப்பவை.

எனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்

உங்களுக்கு நீங்களே முரண்படாதீர்கள்...

நன்றி.

கதை  முகநூலில்  உள்ள  நண்பர்கள்  தங்களை  கடிப்பதா  சொல்கிறார்கள் ...இங்கு  போட்டால்  நீங்கள்  எங்களை  நோக்கி  என்று  நினைக்கிறிர்கள்  ஆக  இங்கு  பலர்  இதை  ஒரு  கதையா  பார்த்து  கடந்து  போனார்கள்  ,நீங்கள்  மட்டும்  அந்த  கதையின்  ஒரு  பாத்திரமா   மாறி  பார்த்தது  என்று  நினைக்கிறேன் ,மற்றும்படி இது  ஒரு  கதை  :)

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

இப்ப  எதுக்கு  சூப்பர்  பெற்றோல் ஊத்துறிங்க  கிருபன்  அண்ணே  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.