Jump to content

ஈ - திரை விமர்சனம்


Recommended Posts

பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ"

மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங்களை சோதனை செய்யும் சோதனைச் சாலைகளாக ஏழைமக்கள் வசிக்கும் நாடுகள் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் சென்ற வாரம் சிக்கன் குனியாவுக்காக தனக்கு போடப்பட்ட ஊசி என்ன ஊசியோ என்று தியேட்டரில் அலறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராமகிருஷ்ணன் என்ற மருத்துவர் கெமிக்கல் ஆயுதங்களைத் தயாரித்து அந்த பார்முலாவை சென்னையின் சேரிகளில் வாழும் ஏழை மக்கள் மீது பிரயோகித்து பார்க்கிறார். இவரது சோதனை முயற்சிகளில் பல பேர் மரணமடைகிறார்கள். கொடுமை என்னவென்றால் அந்த ஏழைகளுக்கு டாக்டர் போடும் ஊசி எதற்கென்றே தெரியாது. இலவச மருத்துவம் செய்பவர் என்பதால் அவரது மருத்துவமனைக்கு விட்டில் பூச்சிகள் மாதிரி நிறைய ஏழைகள் படையெடுக்கிறார்கள்.

இந்த மாதிரியான டாக்டர்களை அழிக்க ஆயுதம் ஏந்துகிறார் மருத்துவம் படித்த இளைஞர் நெல்லை மணி. டாக்டர் ராமகிருஷ்ணனை கொல்லும் முயற்சியின் போது அவருக்கு அறிமுகமாகிறான் "ஈ" எனும் ஈஸ்வரன். ஆரம்பத்தில் ஈயும் நெல்லை மணியுமே மோதுகிறார்கள். ஒரு கட்டத்தில் "ஈ"யின் ஆயாவும் டாக்டர் ராமகிருஷ்ணனின் சோதனையில் மரணமடைகிறார். நெல்லை மணி மூலமாக "ஈ"க்கு உண்மை தெரியவருகிறது. நெல்லை மணியும் மரணமடைய அவரது பணியைத் தொடர்கிறான் "ஈ"

"ஈ"யாக ஜீவா. காசுக்காக எதையும் செய்வார். "ஒரு நாளைக்கு நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம். தொழிலுக்கு வர்றியா" என்று காதலியிடமே கேட்கிறார். சென்னை ஸ்லாங்க் என்பதற்காக ரொம்பவும் இழுத்து இழுத்துப் பேசாமல் ஒரிஜினல் சென்னைத் தமிழை யதார்த்தமாகப் பேசுகிறார். போலிசிடம் அடிவாங்கி அயுவுர மாதிரி ஆக்ட்டு கொடுக்கும் போதும் சரி, தனக்கெதிராக சாட்சி சொல்ல நினைத்தவனை புரட்டியெடுக்கும் போதும் சரி.... பட்டையைக் கிளப்புகிறார்.

"ஈ"க்கு காதலியாக, காபரே டேன்ஸராக ஜோதியாக நயன்தாரா. இவர் உருப்படியாக நடிக்க ஆரம்பித்ததே இந்தப் படத்தில் தான் போல. "காசுக்காக என்னையே கூட்டிக் கொடுக்க நெனைச்ச மாமா பையன் நீ" என்று காதலனிடம் சீறும் போதும். அவனை கடைசி வரை திருத்த முயற்சித்து தோற்று ஊரை விட்டே போகும் போதும் நடிப்பு ரொம்பவும் இயல்பாக இருக்கிறது.

"ஈ"க்கு நண்பனாக கருணாஸ். லுங்கியை போர்த்திக்கொண்டு பிளாட்பாரத்தில் தூங்குகிறார். லுங்கியின் முனையைக் கடித்துக் கொண்டே வேன் புட்போர்டில் தொங்குகிறார். சென்னை சேரி இளைஞர்களை நன்கு அப்சர்வேஷன் செய்து நடித்திருக்கிறார். டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஷ் வித்யார்த்தி அவரைக் கொல்ல வரும் தீவிரவாதி நெல்லை மணியாக பசுபதி என நல்ல நடிகர் தேர்வு....

மக்களுக்காக போராட தன் பிறப்புக்கே தகுதியில்லை என கதாநாயகன் சொல்லும் கட்டத்தில் "நீ பொறந்த சாதி தெரிஞ்சிருந்தா சாதிசங்கத் தலைவன் ஆயிருப்பே, நீ பொறந்த மதம் தெரிஞ்சிருந்தா மத வெறியன் ஆயிருப்பே... நீ தேவடியா மகனா பொறந்ததே பெரிய தகுதி தாண்டா" என்று பசுபதி வசனம் சொல்லும் இடம் செம காரம். சீரியஸான சப்ஜெக்டாக இருந்தாலும் கூட வசனங்களையும், காட்சியமைப்புகளையும் நகைச்சுவையாக அமைத்து படத்தின் ஒரு காட்சியில் கூட தம் அடிக்க வெளியே போக இடம் தராமல் விறுவிறுப்பாக படம் நகருகிறது.

பாடல்கள் பரவாயில்லை. கேட்கவும், பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஒரே முறை பாடலும், காதல் ஒரு போதிமரமும் ஒன்ஸ் மோர் கேட்கலாம். படத்துக்காக போடப்பட்டிருக்கும் சென்னை சேரி செட்டிங் அட்டகாசம்.

"ஈ" - ஈடு இணையில்லாதவன்....

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

நல்லது லக்கி வாழ்த்துக்கள் இதெ போலெ நகைச்சுவை படம் இல்லையில்லை கோமாளிகளின் கூட்டில் உருவாகிய படமான தர்மபுரியை பற்றி விமர்சிக்கலாமே படம் முழுக்க சிரிப்பாக கிடக்கு

அதிலயும் பேரரசுவின் டயலொக் வேற ஜயோ ஜயோ

Link to comment
Share on other sites

ஆகா...பயோகெமிக்கல் ஆயுதங்கள் மனிதர் மீது பரிசோதனை செய்வது பின்னர் அவர்களை "ஈ" என்பவர் பழிவாங்குவது எல்லாம் எற்கனவே எங்கோ பார்த்த கதை போலத் தெரிகிறதே...

ஆட ஆமாம் "V for Vendetta"

http://www.imdb.com/title/tt0434409/

http://en.wikipedia.org/wiki/V_for_Vendetta

Lion top 10 ஸ்டைலில் சொல்வதானால்

"ஈ - ஈ அடிச்சான் கொப்பி"

பி.கு.: நானே எனது முகமுடியை அங்கேதான் உருவினேன்.

:-)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.