Jump to content

வெளிவந்துவிட்டது எமது கிராமிய காதல் பாடல் :)


Recommended Posts

பொங்கலை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்ட கிராமிய காதல் பாடல்

பாடல் --............................எங்க வீதி அழகி 

இயக்கம் ..........................நிலான் 

இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ]

நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா 

பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் 

குரல் .................................ஜெயன்

ஒளிப்பதிவு .....................தீபன் 

பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுடன்... உடையலங்காரமும், நன்றாக உள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் இதயத்தையும் கடத்தி விட்டீர்கள்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"பார்வை மகரந்தம் வீசி"
அந்த செல்லக்கோபம்  என்னை சிப்பிலியாட்டுது.... :D
 
பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சியும் கானமும் நடிப்பும் அருமை.  ...குழுவினரின் முயற்சிக்கு  என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் அதற்கேற்ற அசைவும்
மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது தமிழ் சூரியன்.
உங்கள் எதிர்காலம் உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பில் தங்கியிருக்கின்றது.

 

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
முதல் முறையாக  என்னால் உருவாக்கப்பட்டுவரும் காதல்பாடல்களில் ஒன்றை காட்சிப்படுத்தி அதனை சிறப்பாக உருவாக்கித்தந்த இயக்குனர் நிலானுக்கு எனது அன்பு கலந்த நன்றி .மேலும் இந்தப்பாடலின் வரவுக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்.
 
முதலாவதாகிய எம் இந்த முயற்சிக்கு உற்சாகம் தந்து வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் பணிவுடனும் அன்புடனும் இந்த குழு சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் படி இன்னும் இன்னும் தரமான படைப்புக்களை தர முயற்சிப்போம் .நன்றி நன்றி நன்றி  
 
தமிழ்சிறி அண்ணா 
தமிழினி 
சுவி அண்ணா 
குமாரசாமி அண்ணா 
நிலாமதி அக்கா 
வாத்தியார் அண்ணா 
கவிதை 
ராஜன் விஷ்வா
சுவைப்பிரியன் 
யாழ் கவி 
சோழியான் அண்ணா 
புங்கையூரான் அண்ணா 
ப்ரோபிசர் 
விசுகு அண்ணா 
 
10374077_1550440415210797_18757096649170
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி அண்ணா. :)  :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி அண்ணா. :)  :icon_idea:

நன்றி சகோ . :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
கிராமத்துகாதல்'எங்கள் வீதி அழகி' பாடல் ஒரு பார்வை.
 
கிராமங்கள போலவே கிராமத்து காதலும் பசுமையானது அழகானது தூய்மையானது. அந்த வியர்வை பூத்த வெள்ளாந்தி மனிதர்களின் உண்மைக்கதை கண்ணீர் உப்புக்கரிக்கும் சோகம். 
 
போகம் பார்த்துக் காத்திருக்கும் நடுகை விதையாக பத்திரப்படுத்தி மனமுடிச்சிலிருக்கும் காதல் நடப்படாமலேயே காலாவதியாவதும் தனியே நாற்றுமேட்டில் முளையாகி அங்கேயே அறுவடையாவதும் உண்டு.
 
வயல்நடும் போது முளைவிடும் காதல் அறுவடை நாளோடு முடிவாகிப்போவதும் உண்டு.கோவில் திருவிழாவில்  தொலையும் குழந்தையாக எங்கள் கிராமங்களில் காதலைத் தொலைத்த கள்ளமில்லா உள்ளங்கள் ஏராளம். 
 
கிராமம் கடந்து வீசும் அந்தக்காதலையும் சுமந்தே செல்கிறது மண்வாசம். புழுதியும் காதலும் படிந்து போகும் வீதியும் காதலருக்கு மடியும் நிழலும் கொடுக்கும் மரம் பற்றைகள், வாய்க்கால் ,கிணற்றடி இப்படி ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு கதை சொல்லும். ஓராயிரம் காதல் கண்ணீர்த் துளிகளை சுமந்து நிற்கும். 
 
வயற்காட்டுப் புற்களோடும் கிராமம் வந்து போகும் பறவைகளோடும் இரகசியமாக பேசும் இதயங்கள் ஏராளம். வெளிப்படுத்த தயங்கிய சொல்லத் தெரியாத காதல் கனதியானது. வெட்கத்தின் முலாம் பூசிய பயம் அறியாமையின் திரை விலக்காத தயக்கம் எல்லாம் சேர்ந்து பலகாதலை கருவிலேயே கரைத்து விடுகிறது. 
 
இது போன்ற கிராமங்களின் உயிரோவியங்களை பதிவு செய்ய பல இலக்கிய வகைகளும் முயன்றிருக்கின்றன. கிராமத்துக் காதலின் கண்ணீர் காயாமல் எடுத்துவரும் நாட்டார் இலக்கியங்கள் கிராமியக்கூத்துகள் , படங்கள், கதைகள் , பாடல்கள் வரிசையில் நான் அண்மையில் ரசித்த இந்தப் புதிய பாடலும் வருகிறது. கேட்கும் போது மனசை வருடுகிறது.
 
பார்வை மகரந்தம் வீசி 
பூவின் இதழினை அனுப்பி (பார்வை)
எந்தன் இதயத்தை கடத்திவிட்டாய்...
கண்ணுக்குள்ள பொத்தி வைச்சேன் 
காதலை நான் சொல்லி வைச்சேன். 
நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பை 
கூட்டுக்குள்ளே மறைச்சு வைச்சேன். (கண்ணுக்குள்ளை)
 
விருப்பம் இருந்தும் வெளிப்படுத்தத் தயங்கும் கிராமத்துக் காதலர்கள் சார்பில் இந்தப்பாடலை வரவேற்றுக் கொள்கிறோம். அழகான கதை சொல்லும் வகையில் பாடலும் காட்சியுமும் அமைகிறது. நல்ல ஆரோக்கியமான முயற்சி. கடும் உழைப்பு , படைப்பின் கனதியில் தெரிகிறது. 
 
எங்கள் வீதி அழகி என்ற உப தலைப்பு மனசைக் கவர்வது மட்டுமன்றி எங்களது தனித்துவ அழகை ரசனையோடு வெளிப்படுத்துகிறது. 
 
படப்பிடிப்பு :- மிக நேர்த்தியாகவும் கலைநயத்தோடும் அமைந்துள்ளது. இன்னொன்றுடன் ஒப்பிட்டு செய்யப்படும் ஆய்வாக இல்லாமல் இந்தப்படைப்பு தனது வெளிப்பாட்டுக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 
 
படப்பிடிப்பு :- பார்வை மகரந்தம் வீசி பூவின் இதழ்களை அனுப்புவதாக அமைந்துள்ளது. 
 
படக்கோர்வை :- இசைக்கு ஏற்றபடியும் பாடல்வரிகளுக்கு ஏற்றபடியும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. 
 
காட்சியமைப்பு :- மிகவும் கவனமெடுத்து நெறியாள்கை செய்யப்பட்டுதுள்ளது.
 
மொத்தத்தில் கலைக்கண் கொண்டு செதுக்கிய கிராமத்து காதல் படைப்பாக இப்பாடல் வெளியாகியுள்ளது.
 
உடை ஒப்பனை விடயத்தில் ஆடைகளுக்கு கொடுத்த முக்கியத்தவம் ஒரு சில காட்சிகளில் ஒப்பனைக்கு கொடுக்கப்படவில்லை. வெற்றிலை பாக்கு மென்றே கிராமத்து பெண்கள் உதட்டை சிகப்பாக்கி கொள்வார்கள். உதட்டுச்சாயம் பூசியறியதாக கிராமத்து பெண் பாத்திரம் சில இடங்களில் பளிச்செனத் தெரியும் ஒப்பனைகளால் உறுத்துகிறது. 
 
நடனம் முகபாவம் உடல்மொழி வெளிப்பாடு சிறப்பாக அமைந்துள்ளது.
 
பாடல்வரிகள் இசை பாடும் குரல் அருமை. பல தேனிகள் சேர்ந்து ஒரு தேன்கூட்டை அமைப்பது போல ஒவ்வொரு கலைஞரும் சிறப்பாக கடமையாற்றியுள்ளார்கள்.
 
பாடல் கேட்டு முடிந்த பின்னரும் „'---தொண தொணண்ணு பேசுறியே அடி பூவரசம் பூவழகி குடமிளகாய் மூக்கழகி எங்கள் வீதி அழகி நீ....' இந்த வரிகள் மீண்டும் மீண்டும் மனசினுள் ஒலிக்கும் வரிகளாகிறது.
 
இதுவரை அதிகம் கையாளப்படாத வார்த்தையாக „' நாளை என் திருமதியே „' என்ற வார்த்தைகள் அடிக்கோடிடப்பட வேண்டிய வரிகளாகும். குறைகள் இல்லாமல் இல்லை. அவை எவை எவையென்று இப்பாடல் உருவாக்கக்குழ இப்போது கண்டறிந்திருப்பார்கள். நாளை வரும் வெளியீடுகளில் இத்தககைய சின்னச் சின்ன குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதுவடிவோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்பாடலை வரவேற்கிறேன்.
 
இந்தப்பாடலை இசையமைத்தவர் நெதர்லாந்து நாட்டில் வாழும் நண்பர் சேகர் அவர்கள். தேசவிடுதலைப் பாடல்களை உருவாக்கி தனது இசைப்பயணத்தை தொடர்ந்த சேகரின் இன்னொரு வெற்றியின் அடையாளம் இப்பாடல். 
 
இசையை தனது மூச்சாக நேசிக்கும் சேகரின் இசைப்பணயம் கடந்து வந்த பாதையில் இப்பாடல் தனித்துவம் மிக்கது. தனது பாடல் முயற்சிகளில் அவ்வப்போது பல்லவி அல்லது சரணத்தை தந்து... 'இதை ஒருக்கா கேளுங்கோ கருத்துச் சொல்லுங்கோ' என கேட்கும் சேகர் தனது இசையை தான் மட்டும் ரசித்து நிறைவடையாமல் அனைவரையும் கவரும் வகையில் அனைவருக்குமான சிறந்த படைப்பை தருவதில் எப்போதும் தயங்காமல் அனைவரின் விமர்சனங்களையும் வரவேற்கும் பண்பு மிக்க இசையமைப்பாளர். சேகர் உங்களின் பயணம் இன்னும் சிகரங்களை தொட வேண்டும். 
 
இப்பாடலில் சேகருடன் தங்கள் இணைந்த பங்களிப்பை செய்த கலைஞர்கள் :-
இயக்கம் ..........................நிலான் 
நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா 
பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் 
குரல் .................................ஜெயன்
ஒளிப்பதிவு .....................தீபன் 
பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்
அனைவரும் எதிர்காலத்தில் மேலும் தொடர்ந்து புதிய படைப்புகளை தர வேண்டும். பலர் இணைந்ததே ஒரு சிறந்த படைப்பு. உங்கள் அனைவரின் கூட்டு முயற்சி மேலும் எங்கள் மண்வாசம் சுமந்து பலவடிவங்களில் வர வேண்டும்.
 
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சகோ, மேலும் பல படைப்புகளை உருவாக்கி ஈழசினிமாவிற்கு தர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.