Jump to content

ஜஸ்' அசின்


Recommended Posts

காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள்.

மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டாம்.

இளம் ஹீரோக்களிலும் கூட எல்லோருடனும் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லையாம் அசினுக்கு. அதாவது தமிழ் என்றால் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என சிலருடனும், தெலுங்கிலும் அதேபோல செலக்டிவ்வாக சிலருடனும் மட்டுமே நடிப்பாராம் அசின்.

இந்த வட்டாரத்தை பலப்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் மனைவிகளுடன் படு நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாராம். அதன் மூலம் தொடர்ந்து தனக்கு அந்த ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த ஐஸ் நட்பாம்.

இப்போது விஜய்யின் மனைவியும், அசினும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். படு அன்னியோன்யமாக பேசிக் கொள்ளும் அளவுக்கு தோஸ்துகளாம். அதேபோல விஜய்யின் அம்மாவுடனும் நட்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டார் அசின்.

இதேபோல, அஜீத்தின் மனைவியான நடிகை ஷாலினியுடனும் இப்போது நட்பாகியுள்ளாராம் அசின். வரலாறு படத்தின்போது கூட ஷாலினியுடன் அசின் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது ஆழ்வார் படத்தின் ஷýட்டிங்கின்போது ஷாலினியுடன் தோஸ்த் ஆகி விட்டாராம்.

விக்ரமின் மனைவியும் கூட அசினுக்கு பிரண்டுதானாம். இப்படி தான் விரும்பும் நடிகர்களின் குடும்ப வட்டத்திற்குள் புகுந்து விட்டால், அடுத்தடுத்து தனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கும் என்பது அசினின் கணக்காம்.

அப்படியானால் சூர்யாவின் மனைவியாகி விட்ட முன்னாள் போட்டியாளர் ஜோதிகாவுடனும் நட்பை ஏற்படுத்திக் கொள்வாரா அசின் என்று கேட்கிறார்கள் குசும்பர்கள் சிலர்.

http://thatstamil.oneindia.in/specials/cin...nes/asin_8.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.