Jump to content

நல்லதோர் வீணை செய்வோம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்வோம்!

கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (நான் வைத்தியரும் அல்ல!). ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபணமான தகவல்கள் மட்டுமே பகிரப் படும். ஓரிரு நாட்களில் தொடர்வேன்.

Link to comment
Share on other sites

ஆம். மிக நல்ல விடயம்.. முதலில் சிட்டுக்குருவி லேகியத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே.. 307.gif

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தேவையான பணி

தொடருங்கள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்வோம்!- 1
 
இதயம் ஒரு கோயில்!

இதயம் உண்மையிலேயே ஒரு கோயில் தான்!. நாலு அறைகள், அதில் ஒன்றின் சுவரில் நரம்பு முடிச்சுகளால் ஆக்கப் பட்டிருக்கும் மூலஸ்தானம் அல்லது பலி பீடம் சைனோ ஆட்ரியல் நோட் எனப்படும் இதய இயக்கி (pace maker). மக்கள் வெள்ளம் போல இரத்த வெள்ளம்! இரத்தம் வலது இதய அறையொன்றில் இருந்து நுரையீரல் போய் அங்கே சுத்தமான ஒக்சிசன் நிரம்பிய காற்றை உள்வாங்கிக் கொண்டு  இடது அறைக்கு மாறி, அங்கே இருந்து உடலின் உறுப்புகளுக்கெல்லாம் ஒக்சிசனையும் சக்திப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறது. தாயின் வயிற்றில் சிசுவில் மூன்றாவது வாரத்தில் துடிக்க ஆரம்பித்து இறுதி வரை (சில சமயம் நீங்கள் கோமாவில் இருந்தாலும்!) துடிக்கும் இதயத்தின் முக்கியத்துவத்தை பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை! ஆனால் இதயத்தைப் பராமரிக்கும் பழக்க வழக்கங்கள் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியும் பின்பற்ற வேண்டியும் இருக்கிறது!

பிரதானமான இதயக் கோளாறு எது?

உலகளாவிய ரீதியில், ஆண் பெண் வேறு பாடின்றி, அதிகம் பேரின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது மாரடைப்பு (heart attack) என அழைக்கப் படும் "இதய இரத்த அடைப்பு நோய்" (ischemic heart disease) ஆகும். போசணைக் குறைபாடுகளால் ஏற்படும் இறப்பிற்கு உலகில் இருபதாவது இடம்! தவறான அல்லது அதிகப் படியான போசணையை ஒரு காரணமாகக் கொண்ட மாரடைப்புக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் முதலாவது இடம். இதனால் தடுக்கப் படக்கூடிய ஒரு மரண காரணி மாரடைப்பு என்பது தெளிவாகிறது!

இது நாற்பது தாண்டின ஆட்களின் நோயா?

மாரடைப்பு என்பது இதயத்திற்குச் செல்லும் இரத்தக் கலன்களில் ஏற்படும் அடைப்பினால் வருவது. இந்த அடைப்புக்கு பிரதான காரணம் இதயத்தின் குருதிக் கலன்களில் படியும் கொழுப்பும் அந்தக் கொழுப்பை விழுங்க வரும் உடலின் நோய் காப்புக் கலங்களும் இணைந்துருவாகும் திட்டுக்கள் (atheroma) தான். முக்கியமான தகவல், இந்தத் திட்டுகள் பல வருடங்களாக எமக்குத் தெரியாமலே உருவாகி எமது இரத்தக் கலன்களில் வளர்ந்து வருபவை. உலகளாவிய ரீதியில் 85 வீதமான மாரடைப்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தான் வருகிறது. ஆனால், மாரடைப்பிற்கான அடித்தளம் நாற்பதுக்கு முந்தைய வாழ்க்கை முறையிலேயே இடப் பட்டு விடுகிறது. மாரடைப்பு ஏற்படும் வயதைப் பொறுத்தவரை வெவ்வேறு இனக்குழுக்களிடையே (race) வித்தியாசங்கள் இருக்கக் கூடும் என்று சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் முதல் மாரடைப்பு ஏற்படும் ஆண்களின் சராசரி வயது (இவர்களில் அனேகர் வெள்ளையர்கள் அல்லது கறுப்பினத்தவர் என்பதைக் கவனிக்கவும்!) 65. ஆனால் இந்தியர்களில் மாரடைப்பு ஏற்படும் சராசரி ஆணின் வயது 52. இந்தியர்களின் பரம்பரை அமைப்பை ஒத்தவர்களாக இருக்கும் எம்மிடையேயும் இப்படியான 'இள வயது" மாரடைப்பு அதிகம் இருக்கலாம்.

நம் கையில் என்ன இருக்கு?

மாரடைப்பு பெரும்பாலான மனிதர்களில் தடுக்கப் படக்கூடிய ஒரு நோய்! நம் கையில் என்ன இருக்கு என்பதை விட நம் கால்களிலும் நம் சாப்பாட்டுத் தட்டிலும் என்ன இருக்கு என்று பார்த்தல் மாரடைப்புத் தடுப்பின் ஆரம்பம் எனலாம்!. ஏற்கனெவே சொன்னது போல நமது இரத்தக் கலன்களில் கொழுப்புப் படிகிறது, கொழுப்பைத் தின்ன உடலின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கலங்கள் வருகின்றன. இந்தக் குறு யுத்தத்தின் விளைவாக மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டுகள் உருவாகின்றன. எனவே கொழுப்பு கவனிக்கப் பட வேண்டிய ஒன்று!

தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"The dose makes the poison" ("நச்சுத் தன்மை நஞ்சில் இல்லை, நஞ்சின் அளவில் இருக்கிறது!")- கிரேக்க ஞானி பராசெல்சஸ்.

கொழுப்பு அவசியம் தானா?

கொழுப்பு என்பது எங்கள் உணவின் முக்கியமான மூன்று போசணைப் பொருட்களில் ஒன்று (குளுக்கோசும், புரதமும் மற்றைய இரண்டு போசணைப் பொருட்கள்). சக்தியைத் தருவதில் குளூக்கோசை விட கொழுப்பு திறன் மிக்கது. மேலும் எங்கள் உடலின் ஹோர்மோன்கள் பல கொழுப்பில் இருந்து பிறப்பவை! தோலின் கீழ் இருக்கும் கொழுப்பு வெப்பத்தை உற்பத்தி செய்யா விட்டால், கனடாக் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாது. ஆனால் கொழுப்பின் அளவும், கொழுப்பின் சில குறிப்பிட்ட வகைகளும் உடலில் அதிகமானால் இதய நோய் , பக்க வாதம், உடற் பருமன் போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றன.

கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பு!

அரை நூற்றாண்டுக்கு முன்னரே, இதய நோய் தாக்கியவர்களின் இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பது இதய நோயைத் தடுக்கும் ஒரு வழியாக அன்று தொடக்கம் பின்பற்றப் பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் வழிகள் பற்றிய அறிவு தான் மாறிக் கொண்டே இருக்கிறது. உணவின் மூலம் எடுக்கபடும் கொலஸ்ட்ரோல் மட்டுமன்றி எமது உடலினுள்ளும் கொலஸ்ட்ரோல் உருவாக்கப் படுவதால் வெறுமனே கொலஸ்ட்ரோல் நிரம்பிய முட்டை, இறால் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதால் மாத்திரம் கொலஸ்ட்ரொலைக் கட்டுப் படுத்த முடியாது.

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

உடலினுள் கொலஸ்ட்ரோல் உற்பத்தி செய்யப் பட ஏதுவான பல வகையான கொழுப்பு வகைகளை நாம் உணவில் கட்டுப் படுத்தும் போது தான் கொலஸ்ட்ரோலைக் கட்டுப் படுத்த முடியும். இந்த இடத்தில் தான் நாம் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என பிரிக்கப் படும் LDL, HDL என்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.
நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.
இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள்

:Dவிசுகர் கவனத்திலெடுக்கிறேன். ஆனால் கீழ் வரும் காரணங்களுக்காக சிறிய பகுதிகளாக வருகிறது:

1. நீளமாக இருந்தால் வாசிக்கிறார்கள் இல்லை (நான் அப்படித் தான்! :D)

2. பிறகு ஏற்றுவோம் என்று எழுதி வைத்து பின்னர் அப்படியே விட்ட என் பதிவுகள் சில (எங்கே சேமித்தேன் என்றே மறந்து விட்டேன்!)

3. வகுப்பறையில் நான் படிப்பித்த காலங்களில் இப்படிப் பகுதி பகுதியாகக் கொடுக்கும் தகவல்கள் பெறுனர்கள் கேள்வி கேட்க உதவின, அந்த மொடல் இங்கேயும் வேலை செய்கிறதா ஒரு பரீட்சார்த்தம் தான்!

பலருக்குப் பிடிக்கவில்லையானால் மாற்றி விடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மான்புமிகு டாக்டர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.

நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.

இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

 

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

 

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

 

டாக்டர்,  நீங்களே..... பதிலையும் சொல்லி, கேள்வியும் கேட்பது,

நன்றாக... உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.இப்படி எழுதுவது தான் வாசிக்க இலகுவாக இருக்குது என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றிகள். சிறிய, ஆனால் முக்கியமான தகவல்களின் பொதிகளாக இந்தத் தொடரை முன்னகர்த்தும் திட்டம். வேலைப் பழு இருந்தாலும் மதிய உணவு இடைவேளையில் நகர்த்துகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!

 

மேற்கு நாட்டில் வாழும் தென்னாசியர்களில் இதயநோய் ஆபத்து அதிகமா?

அனுபவ ரீதியான தகவல்களின் (empirical evidence) அடிப்படையில் மேற்கு நாடுகளில் வாழும் தென்னாசியர்களிடையே இதய நோய், பக்க வாதம், நீரிழிவு என்பன அதிகம் என்பது என் அபிப்பிராயம். வித்தியாசமான உணவு முறையும், காலநிலையும், உடற்பயிற்சிக்கென பிரத்தியேகமாக நேரம் ஒதுக்காமையும் இந்த அதிக நோய் வாய்ப்பிற்கான சில காரணங்கள். எங்கள் பிறப்புரிமையியலும் (genetics) காரணமாக இருக்கலாம். இந்தத் தகவலை அண்மையில் கனேடிய மருத்துவ இதழொன்றின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. விஞ்ஞான சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்ட, மொத்தமாக 5 மில்லியன் பேர்களை உள்ளடக்கிய ஐம்பது தரமான ஆய்வுக் கட்டுரைகளை மீளாய்வு செய்து வெளியிடப் பட்ட முடிவு இது:  இதய நோய் பக்க வாதம் என்பவை வெள்ளையின கனேடியர்களை விட தென்னாசியக் கனேடியர்களை இரு மடங்கு அதிகமாகத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.  நாம் இதய ஆரோக்கியம் பற்றி இரண்டு மடங்குகள் கவனம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

கெட்ட கொழுப்பும் நல்ல கொழுப்பும்

உடலினுள் கொழுப்பை காவிச் செல்லும் இரு வடிவங்களே இந்த LDL, HDL எனப்படும் கொழுப்பு வகைகளாகும். இதில் LDL கொழுப்பைக் காவிச் செல்லும் போது உடலின் இரத்தக் கலன்கள் உட்பட பல உறுப்புகளில் கொழுப்பை விட்டு விட்டுச் செல்வதால் உடல் கொழுப்பு அதிகமாகி இதய நோய்களுக்கு ஏதுவாகிறது. ஆனால் HDL எனப்படும் நல்ல கொழுப்பு உடலின் ஏனைய உறுப்புகளில் இருந்து கொழுப்பை அகற்றி ஈரல் நோக்கி எடுத்துச் செல்வதால் உடற்கொழுப்பைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. உங்கள் இரத்தப் பரிசோதனை அறிக்கையில் கொலஸ்ட்ரோல் அளவுடன் இந்த LDL, HDL என்பவற்றின் அளவுகளும் இடம்பெற்றிருக்கும். மருத்துவர் இவற்றைப் பார்த்தே உங்கள் உடற் கொழுப்பு நிலை பற்றிப் பரிந்துரைப்பார்.

உணவினால் மாற்ற முடியுமா?

உடலில் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதுடன் LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்ட உணவு உட்பட சில வழிமுறைகள் உண்டு. ஆய்வுகளின் படி ஒலிவ் எண்ணை போன்றவை LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்டும் பணியைச் செய்கின்றன. தேங்காய் எண்ணை, நெய், பால் பொருட்கள், மாட்டிறைச்சி போன்ற உணவுகள் மொத்தக் கொல்ஸ்ட்ரோலைக் கூட்டுவதுடன், LDL ஐயும் அதிகரித்து HDL ஐக் குறைத்து விடுவதால் இதய குருதிக் கலன் நோய்களுக்குக் காரணமாகின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் கொழுப்பமிலங்கள் (fatty acids) எனப்படும் கொழுப்பை ஆக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு எண்ணை/உணவு வகைகளில் வித்த்தியாசமாக அமைந்திருத்தல் ஆகும். இவை என்ன வகையான கொழுப்பமிலங்கள், நீங்கள் ஒரு உணவுப் பொருளை வாங்கும் போது லேபலைப் பார்த்து எப்படிக் கண்டு பிடிப்பது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் டாக்குத்தர்!
இந்த தொடரை வாசித்து பயனடைபவர்களில் நானும் ஒருத்தன்.
நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர வேண்டுகின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்ரின். படித்துப் பயன்பெறுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியாகிப் போகும் கெட்ட எண்ணை!

"மார்கழிக் குளிரில் கட்டியாகும் எண்ணெய் கெட்ட எண்ணெய்" என்று எங்கள் அம்மா சொல்வார். வெளியே திண்மமாக மாறிப் போவது போலவே, உடலினுள்ளும் அது திண்மமாகி விடுவதால் அது கூடாத எண்ணை என்பது அவரது விளக்கமாக இருந்தது!. உண்மையில் விசயம் அதை விடச்சிக்கலானது என்பது இப்போது புரிகிறது. எங்கள் ஊரில் இரண்டு எண்ணை அல்லது எண்ணை சார் பொருட்கள் மார்களிக் குளிரில் திண்மமாகி உறையும் இயல்பு கொண்டவை: ஒன்று தேங்காய் எண்ணை, மற்றது நெய்!. உண்மையில் இந்த இரண்டும் இதய நோய் ஏற்படுத்தும் விடயத்தில் கெட்ட எண்ணைகள் என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இவை ஆரோக்கியமற்ற எண்ணை வகைகள் என்று வெறுமனே சொல்லிச் செல்வதை விட, இவற்றின் என்ன இயல்பினால் ஆரோக்கியமற்றவையாக இவை அமைகின்றன என்று உங்களுக்கு விளக்கினால், நீண்ட கால நோக்கில் உங்களுக்குப் பயன் இருக்கும். இந்த விளக்கத்திற்கு சிறிது இரசயானவியலைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது! ஆர்வமற்றோர், நேராகக் கீழே இருக்கும் அட்டவணையில் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற எண்ணை வகைகளைக் காண்பதால் பயன் பெறலாம்! ஆர்வமுள்ளோர் அடுத்த பத்திக்கு வாருங்கள்!
 
காபன் சங்கிலிகள்!

எண்ணைகள் கொழுப்பமிலங்களின் கலவைகள். இந்தக் கொழுப்பமிலங்கள் அடிப்படையில் சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்ட காபன் மூலக்கூறுகளால் ஆனவை. இந்தக் காபன் மூலக்கூறுகளிடையே உறுதியான ஒற்றைப் பிணைப்புகளும் ஐதரசன் மூலக்கூறுகளும் நிரம்பியிருந்தால் அவை "நிரம்பிய கொழுப்பமிலங்கள் (saturated fatty acid)" என்கிறோம். குறைவான ஐதரசன் மூலக்கூறுகளும் பலங்குறைந்த இரட்டைப் பிணைப்புகளும் காணப்பட்டால் அவற்றை “நிரம்பாத கொழுப்பமிலங்கள் (unsaturated fatty acid)” என்கிறோம். நிரம்பாத கொழுப்பமிலங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒரே ஒரு இரட்டைப் பிணைப்புக் காணப்பட்டால் அதனை "ஒற்றை- நிரம்பாத கொழுப்பமிலம் (mono-unsaturated fatty acid-MUFA)” என்றும், பல இரட்டைப் பிணைப்புகள் காணப்பட்டால் "பல்- நிரம்பாத கொழுப்பமிலம் (poly-unsaturated fatty acid-PUFA)”  என்றும் வகை பிரித்து அழைக்கிறோம்!.

நிரம்பிய கொழுப்பமிலங்கள் உறுதியான அமைப்புடையதால் உயர்ந்த உருகு வெப்ப நிலை கொண்டவை (அதனால் திண்மமாகி விடக் கூடியவை!). தேங்காய் எண்ணையும் நெய்யும் மார்கழிக் குளிரில் உறைந்து விடுவதன் காரணம் இது தான். ஆனால், உடலினுள் உறைந்து விடுவதால் இவை இதய நோயை ஏற்படுத்துவதில்லை!. மாறாக, நிரம்பிய கொழுப்பமிலங்களை அதிகமாக நாம் உள்ளெடுத்தால், எங்கள் உடலில் LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவும் , அதன் விளைவாக கொல்ஸ்ட்ரோலின் அளவும் அதிகரிக்கின்றன. இதனால் இதய குருதிக் கலன் நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. அதே வேளை, நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிகம் உட் கொண்டால், நல்ல கொழுப்பான HDL இன் அளவு அதிகரிக்க கொலஸ்ட்ரோலின் அளவு குறைகின்றது.
 
ஒரு எண்ணை- பல முகங்கள்!

இயற்கையான ஒரு எண்ணையில் நிரம்பிய கொழுப்பமிலங்களும் நிரம்பாத கொழுப்பமிலங்களும் கலந்தே இருக்கின்றன.  கீழே நான் மீளமைத்திருக்கும் அட்டவணையில் எமக்குப் பரிச்சயமான சில எண்ணை அல்லது உணவு வகைகளில், மேற் சொன்ன மூன்று வகையான கொழுப்பமிலங்களின் விகிதாசார அளவுகள் தரப் பட்டிருக்கின்றது. தேங்காய் எண்ணையில் மிக உயர் அளவிலான நிரம்பிய கொழுப்பமிலங்கள் (சிவப்பில் குறிக்கப் பட்டிருக்கின்றது!) இருப்பதும், நெய்யிலும் அதிகமான நிரம்பிய கொழுப்பமிலங்கள் இருப்பதும் அவற்றின் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் திறனைச் சுட்டி நிற்கின்றன.
 
நிரம்பாத கொழுப்பமிலங்களின் இரண்டு வகைகளிலும், PUFA எனப்படும் பல்நிரம்பாத வகை சில தீமைகளைக் கொண்டு வரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக,  PUFA அதிகம் கொண்ட எண்ணைகளில் வதக்கல் போன்ற அதி வெப்பநிலை கொண்ட சமையல்களைச் செய்யும் போது, அவை புற்று நோய் அல்லது அழற்சி (inflammation) போன்றவற்றை உண்டாக்கும் காரணிகளை உணவில் அதிகரிக்கின்றன. இதனால், PUFA அதிகமாக உள்ள எண்ணைகள் கொலஸ்ட்ரோலைக் குறைத்தாலும், குருதிக் கலன்களில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்துவதால்  இதய நோய் ஆபத்தை வேறு வழிகளில் அதிகரிக்கின்றன.   எனவே, நல்லெண்ணை, சோள எண்ணை, சூரியகாந்தி எண்ணை போன்றவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முழு உடலுக்கும் நலம் தரும். MUFA எனப்படும் ஒற்றை- நிரம்பிய கொழுப்பமிலங்கள் இந்த ஆபத்துக் குறைந்ததென்பதால் இதயத்திற்கும், உடலின் ஏனைய உறுப்புகளுக்கும் நன்மை பயக்கக் கூடியது,. கீழுள்ள அட்டவணையின் படி, அதிக MUFA கொண்ட இதய-ஆரோக்கியம் சார்ந்த எண்ணை ஒலிவ் எண்ணையாகும். 

 

அட்டவணைக்கான இணைப்பு இதோ:

http://tinypic.com/view.php?pic=9jehw9&s=8#.VMFPm3vly7Q

 

அட்டவணை மூலம்: University of Colorado (Colorado Springs)

 

வீட்டுப் பாடம் (அதாம்பா "ஹோம் வேர்க்"! :D )
சமையலில் சேர்க்கும் எண்ணைகள் மட்டுமன்றி வேறு பல உணவுகளும் இந்த நிரம்பிய, நிரம்பாத கொழுப்பமிலங்களில் அளவுகளின் அடிப்படையில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தனவா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும்!. உங்கள் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சில உணவுகளைக் கீழே தருகிறேன். அடுத்த முறை நீங்கள் கடையில் இவற்றை வாங்கும் போது அல்லது வேறு வழிகளில் இந்த உணவுகளில் இருக்கும் நிரம்பிய கொழுப்பு, MUFA, PUFA என்பவற்றின் அளவுகளைக் கண்டு பிடித்து இங்கே பதிவிடுங்கள். முதலில் பதிவிடும் மாணவமணிகளுக்கு பச்சை கிடைக்கும்! :D

உணவுப் பொருட்கள்:
பிசா (pizza)
பாற்கட்டி (chesse)
அப்பிள் பை (apple pie)
பைக்கற்றில் அடைத்த எள்ளுப் பாகு
முழு ஆடைப் பால் (full-cream milk)
"ஆடை நீக்கிய" :icon_mrgreen:  பால் (skim milk)

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

 

வாசித்தமைக்கு நன்றி விசுகர்! கஷ்டப் பட்டு ஒரு அட்டவணை நானே தயாரித்தேன். ஏற்ற இயலாமல் போய் விட்டது! அதைப் பார்த்தால் தான் வீட்டுப் பாடம் செய்ய முடியும். வீட்டுக்குப் போய் ஏற்ற முயற்சிக்கிறேன்!

 

ஜஸ்டினின் பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

நன்றிகள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

வீணை நல்ல ராகங்களை தொடர்ந்து  மீட்டட்டும் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட இடைவெளி சில சமயங்களில் அவசியமானது :D . இந்த நீண்ட இடைவெளியில் உங்கள் உணவுப் பொருட்களில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு என்பவற்றின் அளவுகளை நீங்கள் ஆவலோடு தேடிப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

உணவு லேபலில் பார்க்க வேண்டியவை எவை?

 

பொதுவாக ஒரு மனிதனின் ஒரு நாள் சக்தித் தேவை 1500 முதல் 2000 கலோரிகள் ஆகும். இந்தக் கலோரிகளில், பெரும் பகுதி மாச்சத்துகளில் இருந்தும் , இன்னொரு பகுதி கொழுப்பில் இருந்தும் கிடைக்க வேண்டும். உங்கள் ஒரு நாள் சக்தித் தேவையில் மூன்றிலொரு பங்கிற்கும் குறைவான அளவே (30%) கொழுப்பில் இருந்து கிடைக்க வேண்டும் என்பது பல்வேறு போசணை ஆலோசனையாளர்களின் பரிந்துரை. ஆனால், பல்வேறு உணவுப் பொருட்களை ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் போது, இப்படிக் கணக்கு வைத்து உட் கொள்வது இயலாத காரியம். எப்படி இதைக் கடைப் பிடிப்பது?

 

இரண்டு வழிகள்!

 

வழி ஒன்று: இயலுமான அளவு கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து அல்லது குறைத்து விடுவது ஒரு சாத்தியமான வழி. எண்ணை வழிந்தோடும் பாபு கடை ரோல்ஸ், சீசில் மிதக்கும் பிசா, கருகப் பொரித்த இறைச்சி என்பன வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய சில உதாரணங்கள்!. வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய உணவுகளை நீங்கள் தவிர்த்தாலும், நீங்கள் உட் கொள்ளும் தானியங்கள், விதைகள், பழங்கள் என்பன உங்களுக்கு அடிப்படையில் தேவையான கொழுப்பை உங்களுக்கு வழங்கியவாறு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

வழி இரண்டு: நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்று அறிந்து அதற்கேற்ப அதன் பாவனையைக் கட்டுப் படுத்துங்கள். இதற்குத் தான் உணவு லேபல்கள் பற்றிய விழிப்புணர்வை நான் கடந்த பதிவில் அறிமுகம் செய்தேன். பொதி செய்த ஒரு உணவின் பொதியில் உள்ள போசணை அளவுகளை ஒரு நிமிடம் வாசியுங்கள். அதில் முக்கியமாக "கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தி" அளவு வீதம் (Daily Value % or DV%) குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த DV, 25% என்று ஒரு உணவில் இருந்தால் உங்கள் ஒரு நாளின் சக்தித் தேவையில் இந்த உணவு 25% ஐத் தந்து விடப் போகிறது என்று பொருள். ஆரோக்கியமான நடைமுறை: அந்த உணவைத் தவிர்க்கலாம் அல்லது அதை உண்ணும் நாளில் இன்னுமொரு கொழுப்பு செறிந்த உணவை உண்ணுவதைத் தவிர்க்கலாம்.  

 

மொத்தமான கொழுப்பை மட்டுமே குறைத்தால் போதுமா?

 

இது ஏற்கனவே சொல்லப் பட்டது என்றாலும் மீள வலியுறுத்தும் அளவுக்கு முக்கியமான ஒரு விடயம்: நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒற்றை நிரம்பாத கொழுப்பமிலங்கள் (MUFA) கொண்ட உணவுகளை உங்கள் கொழுப்புத் தேவைக்கேற்ப உட் கொள்ள வேண்டும்.

 

நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட, தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை:

சீஸ் கொண்ட உணவுகள் (பீசா, சில பஸ்ரா வகைகள்),
பால் (ஆடை நீக்கிய பால் தவிர!),
தேங்காய் பால், தேங்காய் எண்ணை கொண்ட உணவுகள்
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
பட்டர், மார்ஜரின்  கொண்ட குக்கி வகைகள்

 

ஆரோக்கியமான ஒற்றை (MUFA) அல்லது பல் நிரம்பாத (PUFA) கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகள்:

ஒலிவ் எண்ணையில் உருவான உணவுகள்
அல்மண்ட், வால்னற் போன்ற விதைகள்
மீன்

 

மாச்சத்தும் கொழுப்பும்

 

நீங்கள் கொழுப்பைக் குறைத்து அளவுக்கதிகமான மாப்பொருட்களை உட் கொண்டாலும் தேவைக்கு அதிகமான மாப்பொருள் கொழுப்பாக உடலில் சேமிக்கப் படும். இதனால் கொழுப்பு அதிகரிக்கும். மாப்பொருட்கள் பற்றிய விரிவான பதிவை நீரிழிவு நோயுடன் தர இருப்பதால் இப்போதைக்கு அதிக மாச்சத்தும் கொழுப்பை அதிகரிக்கும் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கொழுப்பை உணவு மூலம் கட்டுப் படுத்துவது பற்றிய பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. இதை நடை முறைப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. இது கொழுப்பை உணவு மாற்றங்களால் கட்டுப் படுத்தும் முறைகள் மட்டுமே என்பதைக் கவனிக்கவும்! சிலருக்கு இதை விட மேலதிகமாக கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் பாவிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.

 

அடுத்த பதிவில் கொழுப்பை மட்டுமன்றி நீரிழிவு, உடற்பருமன் என்பவற்றையும் குறைக்கும் சர்வ ரோக நிவாரணியான உடற்பயிற்சி ஆரம்பமாகிறது!

 

இணைந்திருங்கள் நண்பர்களே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.