Jump to content

நல்லதோர் வீணை செய்வோம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்வோம்!

கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (நான் வைத்தியரும் அல்ல!). ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபணமான தகவல்கள் மட்டுமே பகிரப் படும். ஓரிரு நாட்களில் தொடர்வேன்.

Link to comment
Share on other sites

ஆம். மிக நல்ல விடயம்.. முதலில் சிட்டுக்குருவி லேகியத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே.. 307.gif

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தேவையான பணி

தொடருங்கள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்வோம்!- 1
 
இதயம் ஒரு கோயில்!

இதயம் உண்மையிலேயே ஒரு கோயில் தான்!. நாலு அறைகள், அதில் ஒன்றின் சுவரில் நரம்பு முடிச்சுகளால் ஆக்கப் பட்டிருக்கும் மூலஸ்தானம் அல்லது பலி பீடம் சைனோ ஆட்ரியல் நோட் எனப்படும் இதய இயக்கி (pace maker). மக்கள் வெள்ளம் போல இரத்த வெள்ளம்! இரத்தம் வலது இதய அறையொன்றில் இருந்து நுரையீரல் போய் அங்கே சுத்தமான ஒக்சிசன் நிரம்பிய காற்றை உள்வாங்கிக் கொண்டு  இடது அறைக்கு மாறி, அங்கே இருந்து உடலின் உறுப்புகளுக்கெல்லாம் ஒக்சிசனையும் சக்திப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறது. தாயின் வயிற்றில் சிசுவில் மூன்றாவது வாரத்தில் துடிக்க ஆரம்பித்து இறுதி வரை (சில சமயம் நீங்கள் கோமாவில் இருந்தாலும்!) துடிக்கும் இதயத்தின் முக்கியத்துவத்தை பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை! ஆனால் இதயத்தைப் பராமரிக்கும் பழக்க வழக்கங்கள் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியும் பின்பற்ற வேண்டியும் இருக்கிறது!

பிரதானமான இதயக் கோளாறு எது?

உலகளாவிய ரீதியில், ஆண் பெண் வேறு பாடின்றி, அதிகம் பேரின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது மாரடைப்பு (heart attack) என அழைக்கப் படும் "இதய இரத்த அடைப்பு நோய்" (ischemic heart disease) ஆகும். போசணைக் குறைபாடுகளால் ஏற்படும் இறப்பிற்கு உலகில் இருபதாவது இடம்! தவறான அல்லது அதிகப் படியான போசணையை ஒரு காரணமாகக் கொண்ட மாரடைப்புக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் முதலாவது இடம். இதனால் தடுக்கப் படக்கூடிய ஒரு மரண காரணி மாரடைப்பு என்பது தெளிவாகிறது!

இது நாற்பது தாண்டின ஆட்களின் நோயா?

மாரடைப்பு என்பது இதயத்திற்குச் செல்லும் இரத்தக் கலன்களில் ஏற்படும் அடைப்பினால் வருவது. இந்த அடைப்புக்கு பிரதான காரணம் இதயத்தின் குருதிக் கலன்களில் படியும் கொழுப்பும் அந்தக் கொழுப்பை விழுங்க வரும் உடலின் நோய் காப்புக் கலங்களும் இணைந்துருவாகும் திட்டுக்கள் (atheroma) தான். முக்கியமான தகவல், இந்தத் திட்டுகள் பல வருடங்களாக எமக்குத் தெரியாமலே உருவாகி எமது இரத்தக் கலன்களில் வளர்ந்து வருபவை. உலகளாவிய ரீதியில் 85 வீதமான மாரடைப்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தான் வருகிறது. ஆனால், மாரடைப்பிற்கான அடித்தளம் நாற்பதுக்கு முந்தைய வாழ்க்கை முறையிலேயே இடப் பட்டு விடுகிறது. மாரடைப்பு ஏற்படும் வயதைப் பொறுத்தவரை வெவ்வேறு இனக்குழுக்களிடையே (race) வித்தியாசங்கள் இருக்கக் கூடும் என்று சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் முதல் மாரடைப்பு ஏற்படும் ஆண்களின் சராசரி வயது (இவர்களில் அனேகர் வெள்ளையர்கள் அல்லது கறுப்பினத்தவர் என்பதைக் கவனிக்கவும்!) 65. ஆனால் இந்தியர்களில் மாரடைப்பு ஏற்படும் சராசரி ஆணின் வயது 52. இந்தியர்களின் பரம்பரை அமைப்பை ஒத்தவர்களாக இருக்கும் எம்மிடையேயும் இப்படியான 'இள வயது" மாரடைப்பு அதிகம் இருக்கலாம்.

நம் கையில் என்ன இருக்கு?

மாரடைப்பு பெரும்பாலான மனிதர்களில் தடுக்கப் படக்கூடிய ஒரு நோய்! நம் கையில் என்ன இருக்கு என்பதை விட நம் கால்களிலும் நம் சாப்பாட்டுத் தட்டிலும் என்ன இருக்கு என்று பார்த்தல் மாரடைப்புத் தடுப்பின் ஆரம்பம் எனலாம்!. ஏற்கனெவே சொன்னது போல நமது இரத்தக் கலன்களில் கொழுப்புப் படிகிறது, கொழுப்பைத் தின்ன உடலின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கலங்கள் வருகின்றன. இந்தக் குறு யுத்தத்தின் விளைவாக மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டுகள் உருவாகின்றன. எனவே கொழுப்பு கவனிக்கப் பட வேண்டிய ஒன்று!

தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"The dose makes the poison" ("நச்சுத் தன்மை நஞ்சில் இல்லை, நஞ்சின் அளவில் இருக்கிறது!")- கிரேக்க ஞானி பராசெல்சஸ்.

கொழுப்பு அவசியம் தானா?

கொழுப்பு என்பது எங்கள் உணவின் முக்கியமான மூன்று போசணைப் பொருட்களில் ஒன்று (குளுக்கோசும், புரதமும் மற்றைய இரண்டு போசணைப் பொருட்கள்). சக்தியைத் தருவதில் குளூக்கோசை விட கொழுப்பு திறன் மிக்கது. மேலும் எங்கள் உடலின் ஹோர்மோன்கள் பல கொழுப்பில் இருந்து பிறப்பவை! தோலின் கீழ் இருக்கும் கொழுப்பு வெப்பத்தை உற்பத்தி செய்யா விட்டால், கனடாக் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாது. ஆனால் கொழுப்பின் அளவும், கொழுப்பின் சில குறிப்பிட்ட வகைகளும் உடலில் அதிகமானால் இதய நோய் , பக்க வாதம், உடற் பருமன் போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றன.

கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பு!

அரை நூற்றாண்டுக்கு முன்னரே, இதய நோய் தாக்கியவர்களின் இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பது இதய நோயைத் தடுக்கும் ஒரு வழியாக அன்று தொடக்கம் பின்பற்றப் பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் வழிகள் பற்றிய அறிவு தான் மாறிக் கொண்டே இருக்கிறது. உணவின் மூலம் எடுக்கபடும் கொலஸ்ட்ரோல் மட்டுமன்றி எமது உடலினுள்ளும் கொலஸ்ட்ரோல் உருவாக்கப் படுவதால் வெறுமனே கொலஸ்ட்ரோல் நிரம்பிய முட்டை, இறால் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதால் மாத்திரம் கொலஸ்ட்ரொலைக் கட்டுப் படுத்த முடியாது.

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

உடலினுள் கொலஸ்ட்ரோல் உற்பத்தி செய்யப் பட ஏதுவான பல வகையான கொழுப்பு வகைகளை நாம் உணவில் கட்டுப் படுத்தும் போது தான் கொலஸ்ட்ரோலைக் கட்டுப் படுத்த முடியும். இந்த இடத்தில் தான் நாம் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என பிரிக்கப் படும் LDL, HDL என்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.
நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.
இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள்

:Dவிசுகர் கவனத்திலெடுக்கிறேன். ஆனால் கீழ் வரும் காரணங்களுக்காக சிறிய பகுதிகளாக வருகிறது:

1. நீளமாக இருந்தால் வாசிக்கிறார்கள் இல்லை (நான் அப்படித் தான்! :D)

2. பிறகு ஏற்றுவோம் என்று எழுதி வைத்து பின்னர் அப்படியே விட்ட என் பதிவுகள் சில (எங்கே சேமித்தேன் என்றே மறந்து விட்டேன்!)

3. வகுப்பறையில் நான் படிப்பித்த காலங்களில் இப்படிப் பகுதி பகுதியாகக் கொடுக்கும் தகவல்கள் பெறுனர்கள் கேள்வி கேட்க உதவின, அந்த மொடல் இங்கேயும் வேலை செய்கிறதா ஒரு பரீட்சார்த்தம் தான்!

பலருக்குப் பிடிக்கவில்லையானால் மாற்றி விடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மான்புமிகு டாக்டர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.

நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.

இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

 

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

 

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

 

டாக்டர்,  நீங்களே..... பதிலையும் சொல்லி, கேள்வியும் கேட்பது,

நன்றாக... உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.இப்படி எழுதுவது தான் வாசிக்க இலகுவாக இருக்குது என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றிகள். சிறிய, ஆனால் முக்கியமான தகவல்களின் பொதிகளாக இந்தத் தொடரை முன்னகர்த்தும் திட்டம். வேலைப் பழு இருந்தாலும் மதிய உணவு இடைவேளையில் நகர்த்துகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!

 

மேற்கு நாட்டில் வாழும் தென்னாசியர்களில் இதயநோய் ஆபத்து அதிகமா?

அனுபவ ரீதியான தகவல்களின் (empirical evidence) அடிப்படையில் மேற்கு நாடுகளில் வாழும் தென்னாசியர்களிடையே இதய நோய், பக்க வாதம், நீரிழிவு என்பன அதிகம் என்பது என் அபிப்பிராயம். வித்தியாசமான உணவு முறையும், காலநிலையும், உடற்பயிற்சிக்கென பிரத்தியேகமாக நேரம் ஒதுக்காமையும் இந்த அதிக நோய் வாய்ப்பிற்கான சில காரணங்கள். எங்கள் பிறப்புரிமையியலும் (genetics) காரணமாக இருக்கலாம். இந்தத் தகவலை அண்மையில் கனேடிய மருத்துவ இதழொன்றின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. விஞ்ஞான சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்ட, மொத்தமாக 5 மில்லியன் பேர்களை உள்ளடக்கிய ஐம்பது தரமான ஆய்வுக் கட்டுரைகளை மீளாய்வு செய்து வெளியிடப் பட்ட முடிவு இது:  இதய நோய் பக்க வாதம் என்பவை வெள்ளையின கனேடியர்களை விட தென்னாசியக் கனேடியர்களை இரு மடங்கு அதிகமாகத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.  நாம் இதய ஆரோக்கியம் பற்றி இரண்டு மடங்குகள் கவனம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

கெட்ட கொழுப்பும் நல்ல கொழுப்பும்

உடலினுள் கொழுப்பை காவிச் செல்லும் இரு வடிவங்களே இந்த LDL, HDL எனப்படும் கொழுப்பு வகைகளாகும். இதில் LDL கொழுப்பைக் காவிச் செல்லும் போது உடலின் இரத்தக் கலன்கள் உட்பட பல உறுப்புகளில் கொழுப்பை விட்டு விட்டுச் செல்வதால் உடல் கொழுப்பு அதிகமாகி இதய நோய்களுக்கு ஏதுவாகிறது. ஆனால் HDL எனப்படும் நல்ல கொழுப்பு உடலின் ஏனைய உறுப்புகளில் இருந்து கொழுப்பை அகற்றி ஈரல் நோக்கி எடுத்துச் செல்வதால் உடற்கொழுப்பைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. உங்கள் இரத்தப் பரிசோதனை அறிக்கையில் கொலஸ்ட்ரோல் அளவுடன் இந்த LDL, HDL என்பவற்றின் அளவுகளும் இடம்பெற்றிருக்கும். மருத்துவர் இவற்றைப் பார்த்தே உங்கள் உடற் கொழுப்பு நிலை பற்றிப் பரிந்துரைப்பார்.

உணவினால் மாற்ற முடியுமா?

உடலில் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதுடன் LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்ட உணவு உட்பட சில வழிமுறைகள் உண்டு. ஆய்வுகளின் படி ஒலிவ் எண்ணை போன்றவை LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்டும் பணியைச் செய்கின்றன. தேங்காய் எண்ணை, நெய், பால் பொருட்கள், மாட்டிறைச்சி போன்ற உணவுகள் மொத்தக் கொல்ஸ்ட்ரோலைக் கூட்டுவதுடன், LDL ஐயும் அதிகரித்து HDL ஐக் குறைத்து விடுவதால் இதய குருதிக் கலன் நோய்களுக்குக் காரணமாகின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் கொழுப்பமிலங்கள் (fatty acids) எனப்படும் கொழுப்பை ஆக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு எண்ணை/உணவு வகைகளில் வித்த்தியாசமாக அமைந்திருத்தல் ஆகும். இவை என்ன வகையான கொழுப்பமிலங்கள், நீங்கள் ஒரு உணவுப் பொருளை வாங்கும் போது லேபலைப் பார்த்து எப்படிக் கண்டு பிடிப்பது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் டாக்குத்தர்!
இந்த தொடரை வாசித்து பயனடைபவர்களில் நானும் ஒருத்தன்.
நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர வேண்டுகின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்ரின். படித்துப் பயன்பெறுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியாகிப் போகும் கெட்ட எண்ணை!

"மார்கழிக் குளிரில் கட்டியாகும் எண்ணெய் கெட்ட எண்ணெய்" என்று எங்கள் அம்மா சொல்வார். வெளியே திண்மமாக மாறிப் போவது போலவே, உடலினுள்ளும் அது திண்மமாகி விடுவதால் அது கூடாத எண்ணை என்பது அவரது விளக்கமாக இருந்தது!. உண்மையில் விசயம் அதை விடச்சிக்கலானது என்பது இப்போது புரிகிறது. எங்கள் ஊரில் இரண்டு எண்ணை அல்லது எண்ணை சார் பொருட்கள் மார்களிக் குளிரில் திண்மமாகி உறையும் இயல்பு கொண்டவை: ஒன்று தேங்காய் எண்ணை, மற்றது நெய்!. உண்மையில் இந்த இரண்டும் இதய நோய் ஏற்படுத்தும் விடயத்தில் கெட்ட எண்ணைகள் என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இவை ஆரோக்கியமற்ற எண்ணை வகைகள் என்று வெறுமனே சொல்லிச் செல்வதை விட, இவற்றின் என்ன இயல்பினால் ஆரோக்கியமற்றவையாக இவை அமைகின்றன என்று உங்களுக்கு விளக்கினால், நீண்ட கால நோக்கில் உங்களுக்குப் பயன் இருக்கும். இந்த விளக்கத்திற்கு சிறிது இரசயானவியலைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது! ஆர்வமற்றோர், நேராகக் கீழே இருக்கும் அட்டவணையில் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற எண்ணை வகைகளைக் காண்பதால் பயன் பெறலாம்! ஆர்வமுள்ளோர் அடுத்த பத்திக்கு வாருங்கள்!
 
காபன் சங்கிலிகள்!

எண்ணைகள் கொழுப்பமிலங்களின் கலவைகள். இந்தக் கொழுப்பமிலங்கள் அடிப்படையில் சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்ட காபன் மூலக்கூறுகளால் ஆனவை. இந்தக் காபன் மூலக்கூறுகளிடையே உறுதியான ஒற்றைப் பிணைப்புகளும் ஐதரசன் மூலக்கூறுகளும் நிரம்பியிருந்தால் அவை "நிரம்பிய கொழுப்பமிலங்கள் (saturated fatty acid)" என்கிறோம். குறைவான ஐதரசன் மூலக்கூறுகளும் பலங்குறைந்த இரட்டைப் பிணைப்புகளும் காணப்பட்டால் அவற்றை “நிரம்பாத கொழுப்பமிலங்கள் (unsaturated fatty acid)” என்கிறோம். நிரம்பாத கொழுப்பமிலங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒரே ஒரு இரட்டைப் பிணைப்புக் காணப்பட்டால் அதனை "ஒற்றை- நிரம்பாத கொழுப்பமிலம் (mono-unsaturated fatty acid-MUFA)” என்றும், பல இரட்டைப் பிணைப்புகள் காணப்பட்டால் "பல்- நிரம்பாத கொழுப்பமிலம் (poly-unsaturated fatty acid-PUFA)”  என்றும் வகை பிரித்து அழைக்கிறோம்!.

நிரம்பிய கொழுப்பமிலங்கள் உறுதியான அமைப்புடையதால் உயர்ந்த உருகு வெப்ப நிலை கொண்டவை (அதனால் திண்மமாகி விடக் கூடியவை!). தேங்காய் எண்ணையும் நெய்யும் மார்கழிக் குளிரில் உறைந்து விடுவதன் காரணம் இது தான். ஆனால், உடலினுள் உறைந்து விடுவதால் இவை இதய நோயை ஏற்படுத்துவதில்லை!. மாறாக, நிரம்பிய கொழுப்பமிலங்களை அதிகமாக நாம் உள்ளெடுத்தால், எங்கள் உடலில் LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவும் , அதன் விளைவாக கொல்ஸ்ட்ரோலின் அளவும் அதிகரிக்கின்றன. இதனால் இதய குருதிக் கலன் நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. அதே வேளை, நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிகம் உட் கொண்டால், நல்ல கொழுப்பான HDL இன் அளவு அதிகரிக்க கொலஸ்ட்ரோலின் அளவு குறைகின்றது.
 
ஒரு எண்ணை- பல முகங்கள்!

இயற்கையான ஒரு எண்ணையில் நிரம்பிய கொழுப்பமிலங்களும் நிரம்பாத கொழுப்பமிலங்களும் கலந்தே இருக்கின்றன.  கீழே நான் மீளமைத்திருக்கும் அட்டவணையில் எமக்குப் பரிச்சயமான சில எண்ணை அல்லது உணவு வகைகளில், மேற் சொன்ன மூன்று வகையான கொழுப்பமிலங்களின் விகிதாசார அளவுகள் தரப் பட்டிருக்கின்றது. தேங்காய் எண்ணையில் மிக உயர் அளவிலான நிரம்பிய கொழுப்பமிலங்கள் (சிவப்பில் குறிக்கப் பட்டிருக்கின்றது!) இருப்பதும், நெய்யிலும் அதிகமான நிரம்பிய கொழுப்பமிலங்கள் இருப்பதும் அவற்றின் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் திறனைச் சுட்டி நிற்கின்றன.
 
நிரம்பாத கொழுப்பமிலங்களின் இரண்டு வகைகளிலும், PUFA எனப்படும் பல்நிரம்பாத வகை சில தீமைகளைக் கொண்டு வரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக,  PUFA அதிகம் கொண்ட எண்ணைகளில் வதக்கல் போன்ற அதி வெப்பநிலை கொண்ட சமையல்களைச் செய்யும் போது, அவை புற்று நோய் அல்லது அழற்சி (inflammation) போன்றவற்றை உண்டாக்கும் காரணிகளை உணவில் அதிகரிக்கின்றன. இதனால், PUFA அதிகமாக உள்ள எண்ணைகள் கொலஸ்ட்ரோலைக் குறைத்தாலும், குருதிக் கலன்களில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்துவதால்  இதய நோய் ஆபத்தை வேறு வழிகளில் அதிகரிக்கின்றன.   எனவே, நல்லெண்ணை, சோள எண்ணை, சூரியகாந்தி எண்ணை போன்றவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முழு உடலுக்கும் நலம் தரும். MUFA எனப்படும் ஒற்றை- நிரம்பிய கொழுப்பமிலங்கள் இந்த ஆபத்துக் குறைந்ததென்பதால் இதயத்திற்கும், உடலின் ஏனைய உறுப்புகளுக்கும் நன்மை பயக்கக் கூடியது,. கீழுள்ள அட்டவணையின் படி, அதிக MUFA கொண்ட இதய-ஆரோக்கியம் சார்ந்த எண்ணை ஒலிவ் எண்ணையாகும். 

 

அட்டவணைக்கான இணைப்பு இதோ:

http://tinypic.com/view.php?pic=9jehw9&s=8#.VMFPm3vly7Q

 

அட்டவணை மூலம்: University of Colorado (Colorado Springs)

 

வீட்டுப் பாடம் (அதாம்பா "ஹோம் வேர்க்"! :D )
சமையலில் சேர்க்கும் எண்ணைகள் மட்டுமன்றி வேறு பல உணவுகளும் இந்த நிரம்பிய, நிரம்பாத கொழுப்பமிலங்களில் அளவுகளின் அடிப்படையில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தனவா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும்!. உங்கள் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சில உணவுகளைக் கீழே தருகிறேன். அடுத்த முறை நீங்கள் கடையில் இவற்றை வாங்கும் போது அல்லது வேறு வழிகளில் இந்த உணவுகளில் இருக்கும் நிரம்பிய கொழுப்பு, MUFA, PUFA என்பவற்றின் அளவுகளைக் கண்டு பிடித்து இங்கே பதிவிடுங்கள். முதலில் பதிவிடும் மாணவமணிகளுக்கு பச்சை கிடைக்கும்! :D

உணவுப் பொருட்கள்:
பிசா (pizza)
பாற்கட்டி (chesse)
அப்பிள் பை (apple pie)
பைக்கற்றில் அடைத்த எள்ளுப் பாகு
முழு ஆடைப் பால் (full-cream milk)
"ஆடை நீக்கிய" :icon_mrgreen:  பால் (skim milk)

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

 

வாசித்தமைக்கு நன்றி விசுகர்! கஷ்டப் பட்டு ஒரு அட்டவணை நானே தயாரித்தேன். ஏற்ற இயலாமல் போய் விட்டது! அதைப் பார்த்தால் தான் வீட்டுப் பாடம் செய்ய முடியும். வீட்டுக்குப் போய் ஏற்ற முயற்சிக்கிறேன்!

 

ஜஸ்டினின் பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

நன்றிகள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

வீணை நல்ல ராகங்களை தொடர்ந்து  மீட்டட்டும் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட இடைவெளி சில சமயங்களில் அவசியமானது :D . இந்த நீண்ட இடைவெளியில் உங்கள் உணவுப் பொருட்களில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு என்பவற்றின் அளவுகளை நீங்கள் ஆவலோடு தேடிப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

உணவு லேபலில் பார்க்க வேண்டியவை எவை?

 

பொதுவாக ஒரு மனிதனின் ஒரு நாள் சக்தித் தேவை 1500 முதல் 2000 கலோரிகள் ஆகும். இந்தக் கலோரிகளில், பெரும் பகுதி மாச்சத்துகளில் இருந்தும் , இன்னொரு பகுதி கொழுப்பில் இருந்தும் கிடைக்க வேண்டும். உங்கள் ஒரு நாள் சக்தித் தேவையில் மூன்றிலொரு பங்கிற்கும் குறைவான அளவே (30%) கொழுப்பில் இருந்து கிடைக்க வேண்டும் என்பது பல்வேறு போசணை ஆலோசனையாளர்களின் பரிந்துரை. ஆனால், பல்வேறு உணவுப் பொருட்களை ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் போது, இப்படிக் கணக்கு வைத்து உட் கொள்வது இயலாத காரியம். எப்படி இதைக் கடைப் பிடிப்பது?

 

இரண்டு வழிகள்!

 

வழி ஒன்று: இயலுமான அளவு கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து அல்லது குறைத்து விடுவது ஒரு சாத்தியமான வழி. எண்ணை வழிந்தோடும் பாபு கடை ரோல்ஸ், சீசில் மிதக்கும் பிசா, கருகப் பொரித்த இறைச்சி என்பன வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய சில உதாரணங்கள்!. வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய உணவுகளை நீங்கள் தவிர்த்தாலும், நீங்கள் உட் கொள்ளும் தானியங்கள், விதைகள், பழங்கள் என்பன உங்களுக்கு அடிப்படையில் தேவையான கொழுப்பை உங்களுக்கு வழங்கியவாறு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

வழி இரண்டு: நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்று அறிந்து அதற்கேற்ப அதன் பாவனையைக் கட்டுப் படுத்துங்கள். இதற்குத் தான் உணவு லேபல்கள் பற்றிய விழிப்புணர்வை நான் கடந்த பதிவில் அறிமுகம் செய்தேன். பொதி செய்த ஒரு உணவின் பொதியில் உள்ள போசணை அளவுகளை ஒரு நிமிடம் வாசியுங்கள். அதில் முக்கியமாக "கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தி" அளவு வீதம் (Daily Value % or DV%) குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த DV, 25% என்று ஒரு உணவில் இருந்தால் உங்கள் ஒரு நாளின் சக்தித் தேவையில் இந்த உணவு 25% ஐத் தந்து விடப் போகிறது என்று பொருள். ஆரோக்கியமான நடைமுறை: அந்த உணவைத் தவிர்க்கலாம் அல்லது அதை உண்ணும் நாளில் இன்னுமொரு கொழுப்பு செறிந்த உணவை உண்ணுவதைத் தவிர்க்கலாம்.  

 

மொத்தமான கொழுப்பை மட்டுமே குறைத்தால் போதுமா?

 

இது ஏற்கனவே சொல்லப் பட்டது என்றாலும் மீள வலியுறுத்தும் அளவுக்கு முக்கியமான ஒரு விடயம்: நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒற்றை நிரம்பாத கொழுப்பமிலங்கள் (MUFA) கொண்ட உணவுகளை உங்கள் கொழுப்புத் தேவைக்கேற்ப உட் கொள்ள வேண்டும்.

 

நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட, தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை:

சீஸ் கொண்ட உணவுகள் (பீசா, சில பஸ்ரா வகைகள்),
பால் (ஆடை நீக்கிய பால் தவிர!),
தேங்காய் பால், தேங்காய் எண்ணை கொண்ட உணவுகள்
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
பட்டர், மார்ஜரின்  கொண்ட குக்கி வகைகள்

 

ஆரோக்கியமான ஒற்றை (MUFA) அல்லது பல் நிரம்பாத (PUFA) கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகள்:

ஒலிவ் எண்ணையில் உருவான உணவுகள்
அல்மண்ட், வால்னற் போன்ற விதைகள்
மீன்

 

மாச்சத்தும் கொழுப்பும்

 

நீங்கள் கொழுப்பைக் குறைத்து அளவுக்கதிகமான மாப்பொருட்களை உட் கொண்டாலும் தேவைக்கு அதிகமான மாப்பொருள் கொழுப்பாக உடலில் சேமிக்கப் படும். இதனால் கொழுப்பு அதிகரிக்கும். மாப்பொருட்கள் பற்றிய விரிவான பதிவை நீரிழிவு நோயுடன் தர இருப்பதால் இப்போதைக்கு அதிக மாச்சத்தும் கொழுப்பை அதிகரிக்கும் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கொழுப்பை உணவு மூலம் கட்டுப் படுத்துவது பற்றிய பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. இதை நடை முறைப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. இது கொழுப்பை உணவு மாற்றங்களால் கட்டுப் படுத்தும் முறைகள் மட்டுமே என்பதைக் கவனிக்கவும்! சிலருக்கு இதை விட மேலதிகமாக கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் பாவிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.

 

அடுத்த பதிவில் கொழுப்பை மட்டுமன்றி நீரிழிவு, உடற்பருமன் என்பவற்றையும் குறைக்கும் சர்வ ரோக நிவாரணியான உடற்பயிற்சி ஆரம்பமாகிறது!

 

இணைந்திருங்கள் நண்பர்களே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.