Jump to content

தமிழில் இலகுவாக தட்டச்சு செய்ய எண்ணுபவர்களுக்கு கூகிலின் உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

 
இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ்  ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.
 
 
 
 


நீங்கள் பார்த்த இந்த வசதியை கூகுள் நிறுவனம் சில இந்திய மொழிகளுக்கும், மேலும் பல உலக மொழிகளுக்கும் வழங்குகிறது.

பொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான எழுத்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில்  அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.

இதனால் என்ன பயன்?
தமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் அல்லது தட்டச்சு செய்ய சிரமமாக உள்ளது என எண்ணுபவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளீடு(Input) செய்து இணையத்தேடல்(Internet Search) செய்யலாம், ஜிமெயிலில்(Gmail) தமிழ் மின்னஞ்சல்கள் இடுவு(Compose) செய்து அனுப்பலாம் , கூகுள் டாக்ஸில் (Google Docs) தமிழ் ஆவணங்களை(Documents) கையால் எழுதி சேமிக்கலாம். செல்பேசியில் இந்த நுட்பத்தை கொண்டு எளிதாக தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து இணைய வேலைகளை செய்வது தான் இதன் முதன்மை சிறப்பாகும். 

இந்த ஈர்த்தறி வசதி கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்பேசியில் நாம் பயன்படுத்தும் கூகிள் இணையத்தேடல் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி (Google Translate Tool), கூகிள் டாக்ஸ்(Google Docs) மற்றும் கூகிள் டிரைவ்(Google Drive) போன்றவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. 
oMZEQAF.png ஜிமெயில் (Gmail)
xwImHn9.png ஜிமெயில் (Gmail)
 
TDgqvg8.png கூகிள் மொழிபெயர்ப்பு (Google Translate) bzRMYFJ.png கூகிள் டாக்ஸ் (Google Docs) LLk6ZI8.png கூகிள் டாக்ஸ் (Google Docs)

இதுவரை ஆங்கிலம் மற்றும் சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எட்டா கனியாகத் தான் இருந்தது. இந்த குறையை கூகிள் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும் தமிழில் ஈர்த்தறி (Handwriting Recognition) என்பது முடியாத ஒன்றாகவே தமிழ் கணினி மேம்புனர்களால்(Developer) உருவகப்படுத்தப்பட்டு வந்தது. இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரை அளவில் மட்டுமே இதுநாள்வரை இருந்தது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தமிழை கணிமை (Computing) துறையில் மேம்படுத்தும் ஒரு சிறப்பான வசதியை கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளதை நாம் மனதார பாராட்டவேண்டும். 

இந்த வசதியை கொண்டு இனி சமூக பிணையங்களில் (Social Network) தமிழை தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட தமிழில் எழுதி மற்றவர்களுடன் பறிமாறிகொள்ளலாம். கூகிள் மொழிபெயர்ப்பு கருவியில்(Google Translate Tool) எழுத வேண்டியதை கையால் எழுதினால், அது தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். பிறகு அதை அப்படியே நகல் (Copy) எடுத்து முகநூல், கூகிள்+, டுவிட்டர் போன்ற சமூக பிணைய தளங்களில் ஒட்டி பயன்படுத்தலாம். மேலும் இந்த எழுத்தறி வசதியை மேலும் சிறப்பாக்கும் தொடர்பான பணிகளை கூகிள் நிறுவனம் செய்துவருகிறது. நாம் இந்த வசதியை எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து கூகிள் நிறுவனம் தமிழ் சேவையை வழங்கும் என நம்பலாம். மலையாளம், பிகாரி, ராஜஸ்தானி, ஒரிய, காஷ்மீரி போன்ற பல இந்திய மொழிகளுக்கு இதுவரை இந்த வசதிகளை அளிக்காததற்குக் காரணம், அவர்கள் தங்கள் மொழியை இணையதளத்தில் சரியாக பயன்படுத்தாதது தான். 

இந்த வசதியை கொண்டு தமிழில் எழுதும் கையெழுத்து அச்சுப்பிசகாமல் சரியாக வருகிறது. கோணலாக எழுதினாலும் சரி, சிறியது, பெரியதுவென  எழுதினாலும் சரி தமிழ் எழுத்து சரியாக வருகிறது. காகிதத்தில் கட கடவென எழுதுவதைப் போன்று எழுதுவதை நிறுத்தாமல் எழுதினால் கூட எழுத்து வரிகள் அருமையாக வருகின்றது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்வென்றால், எழுதிய சொல்லில் ஒரு எழுத்தை நீக்க(Delete) வேண்டும் என்றால் முடியாது. எழுதிய மொத்த வரிகளும் நீக்கப்பட்டுவிடும், மற்றபடி வேறு எந்தப் பெரிய குறைகளும் இல்லை.

 


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா? என்றால் அதுவும் இல்லை. 

Handwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் ஈர்த்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்த்தறி = ஈர்த்தல் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். ஈர்த்தல் என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறி என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்.

http://puthutamilan.blogspot.in/2014/07/tamil-handwriting-recognition-facility.html#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு.... நன்றி பெருமாள்.
ஆறுதலாக ஒருமுறை, முயற்சி பண்ணி பார்க்க வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி கணணியயும் மடில போட்டு விரலால கிறுக்கலாம்...!

 

நன்றி பெருமாள்...! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி பெருமாள்.

இந்த ஈர்த்தறி மென்பொருள் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த வசதியில்லாமல் பல பக்கங்கள் கொண்ட பழங்கால காகித தரவுகள், வீட்டுப் பத்திரங்கள், உயில்கள், சட்ட நடைமுறை ஏடுகள் போன்றவற்றை அப்படியே ஸ்கேன் செய்து, ஈர்த்தறி(OCR) மென்பொருள் மூலம் மாற்றம் செய்து மென்பொருள் வடிவில் பல யுகங்களுக்கு சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

இவ்வசதி முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு நாட்டின் எல்லைகளை நம் முன்னோர்கள் தரவேற்றம் செய்து வைத்திருப்பர்.. ஈழத்தின் பூர்வகுடிகள் யாரென்ற குழப்பமும் இருந்திருக்காது. :icon_idea:

 


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா? என்றால் அதுவும் இல்லை. 

 

http://puthutamilan.blogspot.in/2014/07/tamil-handwriting-recognition-facility.html#more

 

இப்பொழுதாவது தெரிந்ததே என சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.