Jump to content

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

.............................................................................................................................................................................................................................................................................. ரிலாக்ஸ் ப்ளீஸ் with King Gold King........... . எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-..................... 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்................ 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்................. 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்................. 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்............... 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.................. 6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.................. 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக்....... குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.................. 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்................ 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்............. 11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்...... 12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்........... 13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்............... 14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்................. 15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்................. 16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்................. 17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்............ 18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்................ 19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

............................................................................................................................................................................................ ரிலாக்ஸ் ப்ளீஸ் with Bala MJ Jayaraj and Karthik Krish · . இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல் இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை. இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர். இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை . இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கி யுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப் பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறார

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். " இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. " " என்ன சொல்றே? நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா? அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா. எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது. கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன். அப்பா... என்னம்மா... யார் இந்த பையன் இவர்தாம்பா அவர் அவர் ...ன்னா அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன். அப்படியா வாப்பா..உட்கார். உட்கார்ந்தான். உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன். இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ? கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார். சரி... உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் செலவுக்கு என்ன செய்வே ? அதையும் கடவுள் கவனிச்சுக்குவார். சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான். அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... இந்தப் பையன் எப்படி? அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்...!!!

............................................................................................................................................................................................................................................................. ரிலாக்ஸ் ப்ளீஸ் . காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!). இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது. உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா? பொண்ணு: உன் இஷ்டம் பையன்: சரவணபவன்? பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...? பையன்: அப்போ செட்டிநாடு...? பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும் பையன்: ம்ம் கேஎஃப்சி....? பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்.. பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு பொண்ணு: உன் இஷ்டம்... . . பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா? பொண்ணு: உன் இஷ்டம்... பையன்: படத்துக்கு போலாமா....? பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு... பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா? பொண்ணு: வேணாம்... பையன்: காஃபி ஷாப்....? பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்... பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது....? பொண்ணு: நீயே சொல்லு... . . பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்.... பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ.. பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும் பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும் பையன்: அப்போ ஆட்டோ..? பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ? பையன்: அப்போ நடந்து போகலாம்.. பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது.... பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்? பொண்ணு: உன் இஷ்டம்... பையன்:...... இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சுபார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம.............

............................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்.. முதல் ஆள்,”எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்” என்றான். இரண்டாம் ஆள், “எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்” மூன்றாவது ஆள்,”எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்” 15 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.. முதல் ஆள்,” நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்” இரண்டாம் ஆள்,”நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்” மூன்றாம் ஆள், நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்”என்றான் எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று. அவன் சொன்னான், “தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . கொள்ளைக்காரர்கள் BANK ய கொள்ளையடிச்சிட்டு Clerk கிட்ட வந்து..... கொள்ளைக்காரன் : "நாங்க கொள்ளையடிச்சத நீ பார்த்தயா"?. Clerk : "ஆமா பார்த்தன்". உடனே கொள்ளைக்காரன் அந்த Clerk ய சுட்டிட்டு... மற்ற Clerk கிட்ட வந்து....'' நீ பார்த்தயா னு" கேட்டான்.. உடனே அந்த Clerk சொன்னான்.. "நான் பார்க்கல ஆனா என் WIFE உங்கள பார்த்துட்டா'' !!....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிலாக்ஸ் ப்ளீஸ் . நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு. . . கடைக்காரர் விரட்டிவிட்டார், திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. . . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது... பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது... கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்... அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன்நாய் பேருந்தில் ஏறியது... கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்... இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்துஇறங்கியது... கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்... நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது... கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்... நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்... கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க! ஏன் அடிக்கறீங்க? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே.??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. # # # # நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான். நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

 

கன குடும்பங்களிலையும் உதே பிரச்சனைதான்... :D

Link to comment
Share on other sites

..................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பேருந்தில் நடந்த சம்பவம்ஒரு பையன் ஒரு பொண்ணுக்குWhatsapp ல மெசேஜ் பண்றான்.பிறகுஅங்கே என்ன நடந்தது??? இதோ அந்த ஜாலியான உரையாடல்உங்களுக்காக... பையன் : Hi... பொண்ணு : Helloooo... பையன் : எங்க இருக்கீங்க? பொண்ணு : நான் எங்க அப்பாவோடBMW கார்லகோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்பண்ணிட்டு கார வீட்லவிட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா ? பையன் : ஓகேங்க... பொண்ணு : ஆமா,நீ எங்கஇருக்க? பையன் : டவுன் பஸ்ல உங்கபின்னால இருக்குற சீட்லதான் உட்கார்ந்துட்டுஇருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்கவேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்... பொண்ணு : !!!!!!!!!!!! -Speechless- பசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.உண்மை! உழைப்பு! உயர்வு! இதான் பாய்ஸ...

....................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் · . ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்... சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்... 4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப் னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது . எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்... அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்... உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக்கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்... இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை, வெளியில் சுற்றுகிற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்... எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும்முடிவு செய்யாதீர்கள்...!

........................................................................................................................................ ரிலாக்ஸ் ப்ளீஸ் · . எது மகிழ்ச்சி?? கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான். பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை. வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது. சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான். அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர். இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது. இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது. நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள். எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

.................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ??? 1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற பார்க்கும் போது. 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது. 3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது. 4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது. 5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது 6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது . 7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது. 8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாட தலை முடியை சரி செய்யும் போது. 9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது. 10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது. # சுயநலமில்லாத,செ யற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

.............................................................................................................................................. ரிலாக்ஸ் ப்ளீஸ் ஒரு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறி மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும், ''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. ''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார். இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார். ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர். இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

Link to comment
Share on other sites

........................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர். எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . கல்வி அறிவில்லாத ஒரு தந்தை, நன்கு படித்த தன் மகனோடு காட்டுக்குள் போனார். இரவு நெருங்கியதால், இருவரும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். நள்ளிரவில் கண் விழித்த தந்தை, தன் மகனைத் தட்டி எழுப்பி,’மகனே, வானத்தைப் பார் .உனக்கு என்ன தெரிகிறது ?’ என்று கேட்டார். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன’ என்றான் மகன். இதில் இருந்து உனக்கு என்ன தெரிகிறது ?’என்றார் அப்பா.. ‘விஞ்ஞான ரீதியாக சொல்வதென்றால், ஆயிரக் கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் இந்தப் பால்வீதியில் உள்ளன’ என்றான் பளார் என்று ஓர் அறைவிட்ட அப்பா சொன்னார். ‘டேய் மடையா, நம் கூடாரத்தை யாரோ திருடி விட்டார்கள்....

.................................................................................................................................. ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’ அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் ‘அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான். ‘நீ யார்… ‘ பயந்த அவன் கேட்டான். ‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல் சொன்னது. எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…’

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.. # உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !

Link to comment
Share on other sites

.................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு வயதானவர் முடி திருத்தகம் போனாரு. அவர் தலைல இருந்த 8 முடிய பார்த்து கோவத்தோட "முடிய எண்ணனுமா? வெட்டனுமா?"ன்னுகேட்டார் முடி திருத்துபவர். அதுக்கு அந்த கஸ்டமர் சொன்னாரு .............................. . . . . . . . . கலர் அடிக்கனும்

................................................................................................................................................. ரிலாக்ஸ் ப்ளீஸ் . இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ... கணவனும் வந்து ... அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ... பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ... மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் .... "நீ சாப்பிடவில்லையா ?" என்று கணவன் கேட்க .... "எனக்கு பசியாக இருந்தது. அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன்" என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்.... என்ன செய்வான் ? சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம் "இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க ?" என்று கேட்டவளுக்கு ... "ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்" என்று கூறிவிட்டு ... சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான உணவு வாங்கி வந்து ... "இந்தா சாப்பிடு..." என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய... உண்ணுவாளே.... அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை

Link to comment
Share on other sites

இதைத்தான் 2004 க்குப்பிறகு சிறிலன்கனும் பின்பற்றினன்

இதைத்தான் 2004 க்குப்பிறகு சிறிலன்கனும் பின்பற்றினன்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் அறிஞர்களின் சிந்தனைகள் : 1. பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது. - ஜேம்ஸ் ஹோபெல் 2. நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன் 3. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பதுதான் இழிவு. - டால்ஸ்டாய் 4. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான். - தாமஸ் புல்லர் 5. யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன். - எமர்சன் 6. அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர் 7. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ் 8. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. - மார்க்ஸ் 9. அளவில்லாத சோதனைகளைத் தாங்கி சாதனை படைக்கிறவன்தான்மேதை. - ஹோம்கின்ஸ் 10. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருநாளும் துன்பம் அடையார். - காந்தியடிகள்

.................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர். இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது. ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை! சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக் காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஐ.ஏ.எஸ் தேர்வு முடிஞ்சு இண்டர்வ்யூ நடந்துக்கிட்டிருந்திச்சு. அப்போ தேர்வுக்கு வந்திருந்த நபரிடம்..இண்டர்வ்யூ குழுவினர் இப்படி கேள்வி கேட்டாங்க.. நீங்க எத்தனை படி ஏறி வந்தீங்க? நான் எத்தனை படி இறங்கப் போறேனே..அத்தனை படி ஏறி வந்தேன் சார். அமாவாசை அன்னிக்கு, ஒரு காட்டிலே கறுப்பு தொப்பி, கண்ணாடி, கோட், சூட் போட்ட ஒரு கறுப்பு மனிதர், கறுப்பு நிறக் காரை100 கி.மீ வேகத்தில் ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் காரோட ஹெட் லைட் எரியலை. சாலையிலும் விளக்கும் எதுவும் எரியலை. அப்போ திடீர்ன்னு கறுப்புப் பூனை ஒண்ணு ரோட்டைக் கிராஸ் செஞ்சுச்சு. ஆனாலும் அவர் லாவகமா அதன் மேலே இடிக்காம காரை ஓட்டிக்கிட்டுப் போனாரு? எப்படி? அது பகல் வேளை சார். அதான் தெருவிளக்கு எதுவும் எரியலை. காரோட ஹெட் லைட்டும் எரியலை. கறுப்பு கண்ணாடி போட்டிருந்தாலும் அவராலே தெளிவா சாலையைப் பாத்து ஓட்ட முடிஞ்சுது. வெரி குட்..அந்த வாட்டர் ஃபில்டர்லேர்ந்து ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுக்கறீங்களா? உடனே இண்டர்வியூக்கு வந்தவர் டேபிள் மேல் இருந்த காலிங் பெல்லை அழுத்தி...ப்யூனை வரவழைச்சு...அவருக்கு ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னாரு. ப்யூன் தண்ணீரைக் கொடுத்துட்டுப் போனதும், அதிகாரிங்க ஏன் அப்படி செஞ்சீங்க..நீங்களே எழுந்து போயி தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாமே? நாங்க உங்களைத் தானே கொண்டு வரச் சொன்னோம்?ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்,”நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு. ப்யூன் வேலைக்கு அல்ல. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசருக்கு தண்ணீர் தேவைப் பட்டால் என்ன செய்வாரோ அதைத்தான் நான் செஞ்சேன்”ன்னு சொன்னாரு.

..............................................................................................................................................................................................................................................................................------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் . வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன். ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார். சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன. மறுநாள் மீண்டும் கதவைத் தட்டினான் சிறுவன் கதவைத் திறந்து கத்த வாய் திறந்த பெரியவர் கண்கள் மலர்ந்தன. சிறுவன் கைகளில் சின்னச் சின்ன நாய்க்குட்டிகள் இரண்டு. பெரியவருக்குக் கிடைத்தது இரண்டு நாய்க் குட்டிகளும் ஒருபேரனும்.. தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால் சேவைகள் அதைவிட எதுவும் இல்லை smile emoticon

Link to comment
Share on other sites

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பெரிய மன்னர் இருந்தார் , அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார் , வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார் .கடவுளை வேண்டினார் , அதுக்கப்பறம் திரும்பி வந்தார் , கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார் , அவர் கண்ணை , மூடிகிட்டு தியானத்துல இருந்தார் . மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார் . இவரு அவர் கால்ல விழுந்தார் . அவர் ஆசிர்வாதம் பண்ணினார் . அதுக்கப்றம் இந்த மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் . அப்புறம் , விடை பெற்றார் . மறுநாள் காலைல அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி ...காரணம் நேற்று அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான் மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன் வந்தான் " உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு விசாரிச்சார் . அவன் " கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் - னு விபரம் சொன்னான் உடனே போய் அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க - னு உத்தரவு போட்டார் சன்யாசி வந்து சேர்ந்தார் என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் . மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது . பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன் - அப்படீன்னார் . " என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை ... அது மிகவும் விலை உயர்ந்த சால்வை ... மன்னர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு கொடுத்திருக்கீங்க ...! என்றார் மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் . மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் . அன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் - மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் . ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் . மன்னர் " கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?" கடவுள் " குளிர் தாங்க முடியலே " உடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை நெருங்கினார் . கடவுள் பயத்தில் கத்தினார் " என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம் எனக்கு ". மன்னர் " கடவுளே ! இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ? கடவுள் " நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ? சிறை தண்டனை !" மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது . திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின் கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில் விழுந்தார் . " சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள் ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !" என்றார் " மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் .." என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார் .

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள் >># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை.. >>‪#‎ஆணி‬ குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்.. ##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்.. >>‪#‎அழைத்த‬ குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர். ##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை. >># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள். >>‪#‎பட்டினி‬ சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம். >>‪#‎அதிக‬ வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் . நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? * உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். * வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!) * உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். * நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன். * நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான். * பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய். * போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. * கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. * உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை. * உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். *கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்). * இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன். நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் . நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? * உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். * வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!) * உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். * நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன். * நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான். * பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய். * போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. * கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. * உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை. * உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். *கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்). * இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன். நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

 

 

இவை அத்தனையையும் எனக்குத்தந்தது பிரெஞ்சு மக்களும் இந்த மண்ணும்.

அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.

தொடருங்கள்  காரணிகன்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள். “இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள். அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள். இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. # ரொம்ப ரசித்தது

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், விற்பனை பிரதிநிதி (sales representative) – மூவரும் மதிய உணவு இடைவேளையில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. அதை பார்த்ததும் மூன்று பேரும் அந்த விளக்கைத் தேய்க்கிறார்கள் அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டு, "உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான் கேட்க வேண்டும்" என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, "நான் அமெரிக்காவுக்கு போக வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்து விடுகிறார். அடுத்து விற்பனை பிரதிநிதி… "அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், "நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், "ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!" மேனேஜர் ஆர் ஆல்வேஸ் மேனேஜர்ஸ்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

தன்னிடம் சுண்டல் வாங்கிவிட்டு மீதி 25 பைசாவிற்கு சண்டையிட்ட இளைஞன், தன் காதலியோடு ஜோடியாக வருவதை கண்ட சுண்டல் விற்கும் சிறுவன் அந்த இளைஞனை பார்த்து சொன்னான்...

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

" அண்ணே.. நேத்து, உங்க கூட வந்த அக்கா இன்னும் அழகா இருந்தாங்க...!"

# ஆருகிட்ட. tongue emoticon tongue emoticon

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

நைட்டு கரண்டு போயிருச்சு...

.

மெழுகுவர்த்திய எத்தன

வாட்டி கொழுத்தி வெச்சாலும்..

.

மக போயி...ஹாப்பி பர்த்

டே டு யு..ன்னு ஊதிட்டு வருது.... smile emoticon

மேற்கத்திய கலாசாரம்

நம்மள இருட்டுல தள்ளும்

ங்குறது உண்மைதான்

போல..

- ரிட்டயர்டு ரவுடி

........................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

18+

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார்.

அந்த ரோபோ யாரவது பொய்

சொன்னால் கன்னத்தில்

பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர்

மகன் இரவு நேரத்தில்

வீட்டுக்கு லேட்டாக

வந்தான்

தொழிலதிபர்:

ஏன்டா லேட்டு ?? எங்கட

போயிருந்த?

மகன்:

அப்பா நண்பர்களோட

சேர்ந்து பரீட்சைக்கு படிக்க

போயிருந்தேன்

ரோபோ மகனின்

கன்னத்தில்

நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

(கோவம் அடைத்த

தொழிலதிபர்)

மகனிடம்:

ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல

ரோபோ கிட்ட

மறுபடியும்

அடி வாங்குவ

மகன்:

மன்னிச்சிடுங்க

அப்பா .. நண்பர்களோட

சினிமா பார்க்க

போயிருந்தேன்

தொழிலதிபர்:

டேய் நீ

எல்லாம்

உருப்படவே மாட்ட..

நானெல்லாம் உன் வயசுல

எப்படி படிப்பேன்

தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில்

ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான

புன்னகையுடன் வந்த

தொழிலதிபரின் மனைவி:

என்ன இருந்தாலும்

உங்களுக்கு பிறந்த

பையன்

உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில்

பளார்

என்று ஒரு அறை விட்டது

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

·

.

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா.

ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினார் எஸ்.ஐ.

எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க.

அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க.

இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க.

நேத்து நீங்க என் பிரெண்டு வர்ஷினியோட அப்பாகிட்ட லஞ்சம் வாங்கினீங்களாம் பேட் அங்கிளோட பொண்ணும் பேட் பொண்ணுதான்னு சொல்லி என் கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா என்றாள் அழுதபடி.

ஒரு கணம் திடுக்கிட்டு போன எஸ்.ஐ. மனதுக்குள் நினைத்து கொண்டார். இனிமேல்

.

.

.

.

...

.

..

.

,

.

.

.

.

எது வாங்கினாலும் யாருக்கும் தெரியாமல் தான் வாங்க வேண்டும் என....

-------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன்.

அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்..?

அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்...

இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.

அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே, பிறகு அமைதியாக சொன்னார்...

டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா. இன்னைக்கு கோட்வேட்(password) குயில் டா...!

Link to comment
Share on other sites

---------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

வாழ்க்கை தத்துவம்:

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.

வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.