Jump to content

"தைரோய்ட்" பிரச்சினை, உள்ளது என்பதன் அறிகுறி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=1JI9Z4ZFORU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியல் - கேடயப் போலிச் சுரப்பி

 

thyroid-gland.jpg

 

கழுத்துப் பகுதியில் குரல்வளை, வாதநாளி ஆகியவற்றுக்கு முன்னாலும், பக்கங்களிலும் சிறகு வடிவில் அமைந்துள்ளது.

கூம்பு/முக்கோணவடிவான இரு சோணைகளை கொண்டது. இரு சோணைகளும் குரல்வளையிலன் முன்புறத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.

அகத்தோற்படை உற்பத்திக்குரியது.

மண்ணிறம் கலந்த செந்நிறமுடையது.

நாரிழைய உறையால் போர்த்தப்பட்டுள்ளது.

இதன் தொழிற்பாட்டை TSH கட்டுப்படுத்தும்.

இச்சுரப்பி ஓமோன்களை சுரப்பதற்கு I2 அவசியம்'

குருதியிலுள்ள I2 வை அகத்துறுஞ்சி I ஆக மாற்றும் திறனுடையது.

குருதிக் கலன் செறிந்தது.

உட்புறமாக குவளை வடிவான புடகங்களை கொண்டுள்ளது.

புடகங்களின் சுவர் செவ்வகத் திண்ம மேலணியால் ஆக்கப்பட்டுள்ளது.

புடகங்களினுள் தடித்த, ஓட்டக்கூடிய Jelly தன்மையான, கட்டமைப்பற்ற புரதங்கள் (Colloid Protein) காணப்படும்.

Thyroid ஓமோன்கள் Colloid புரதங்களுடன் இணைந்து Thyroglobulin வடிவில் புடங்களினுள் சேமிக்கப்படும். புடங்களுக்கிடையே C கலங்கள் காணப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.

i. Thyroxinc (T4)     - Thyroid Hormones

ii. Tri Iodo Thyronine (T3)        - Thyroid Hormones

iii. Calcitonin – C கலங்களால் சுரக்கப்படும்.

தைரொயிட் ஓமோன்களின் தொழில்கள்.

1. உடலின் அனுசேப வீதத்தை சீர்செய்தல்.

2. O2 வின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தல்.

3. இழைமணியின் உற்பத்தியை தூண்டுதல்.

4. ATP யின் தொகுப்பைத் தூண்டுதல்.

5. சுவாசத்தில் பங்குகொள்ளும் நொதியங்களைச் சீர்செய்தல்.

6. புரத உடைப்பை தூண்டுதல்.

7. GH உடன் சோர்ந்து என்பிழையங்களின் வளர்ச்சியைத் தூண்டுதல்.

8. RBC யில் Oxy Haemoglobin இன் பிரிகையைத் தூண்டுதல்.

9. மூளையின் விருத்தியைத் தூண்டுதல்.

 

h5550930.jpg

தைரொயிட் ஓமோன்கள் அதிகளவு சுரக்கப்பட்டால்,

Hyper Thyrodism ஏற்படும் இதன்போது,

1. அனுசேப வீதம் அதிகரிக்கும்.

2. புரத உடைப்பு அதிகரிக்கும்.

3. உடல் மெலிவடையும்.

4. உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

5. நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

6. விரைவில் உணர்ச்சி வசப்படுவர்.

7. அமைதியின்மை ஏற்படும்.

8. தைரொயிட் சுரப்பி வீக்கமடைந்து கழலை (Goitre) தோன்றும்.

9. கண்ணுக்குப் பின்னால் கலத்திடைப்பாயி தேங்கி கட்கோளங்கள்

    வெளிதள்ளப்படும். இத்தன்மை விழி வெளிக்கண்டமாலை எனப்படும்.

தைரொயிட் ஓமோன்கள் குறைவாகச் சுரக்கப்பட்டால்.

1. சிறுவர்களில் குறண்மை / கறாளை நிலை ஏற்படும்.

2. சீரற்ற வளர்ச்சி, உளரீதியான பாதிப்புக்கள் ஏற்படும்.

3. வளர்ந்தோரில் Hypothyrodism உருவாகும்.

    இதனால்,

1. அனுசேபவீதம் குறையும்.

2. பருத்த உடல் தோன்றும்.

3. மூளை, உடல் ஆகியவற்றின் தொழிற்பாடு குறையும்.

4. சீதவீக்கம் (Myxodema) ஏற்படும்.

5. சோம்பல் அதிகரிக்கும்.

6. குருதியமுக்கம் அதிகரிக்கும்.

7. உடல் வெப்பநிலை குறைவடையும்.

8. முகத்திலுள்ள இழையங்கள் வீங்கிக் காணப்படும்.

Calcitonin

என்பு, சிறுநீரகம் ஆகியவற்றில் தொழிற்படும்.

குருதியில் Ca2+ இன் செறிவை சீராக பேணுவதற்கு உதவும்.

• குறைவாகச் சுரக்கப்பட்டால் - என்பு உடைந்து அதிலுள்ள Ca2+

                                                                        குருதிக்குள் செல்லும் எனவே குருதியில்

                                                                        Ca2+ இன் செறிவு அதிகரிக்கும்.

• அதிகளவு சுரக்கப்பட்டால் -         குருதியிலுள்ள Ca2+ என்பில் படியும்

                                                                        எனவே குருதியில் Ca2+ இன் செறிவு

                                                                        குறைவடையும்.

 

நன்றி

மூலம் :- http://tamilpaddippu.blogspot.ca/2013/11/blog-post_3716.html

Link to comment
Share on other sites

உடல் எடை மெலிவுக்கும் தைரோய்ட் சுரப்பியின் செயற்பாட்டுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு என்பதை என் அனுபவத்தின் ஊடாகவும் கண்டுகொண்டுள்ளேன். அதனால்தான் குளிர்காலங்களில் கழுத்தைச் சுற்றி scarf அணிந்துகொள்ள ஆரம்பித்தேன். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகாவில் தைரொயிட் சுரப்பியின் வேலையை ஒழுங்கு படுத்தலாம்

 

Surya Mudra (சூர்ய முத்திரை):

Surya_mudra.JPG

செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

anandhiselva.blogspot.com/2011/12/6.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன செய்தும் நமக்குத்தான் இந்த உடம்பு குறையுதில்லையே :unsure:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன செய்தும் நமக்குத்தான் இந்த உடம்பு குறையுதில்லையே :unsure:  :D

 

என் அநுபவத்தில் உடற்பயிற்சிபோல வேறெதுவும் உடலின் சுற்றளவை குறைக்காது. உடற்பயிற்சி செய்யும்போது தொளதொளத்து நிற்கும் தசைநார்கள் இறுக்கமடைகின்றன.... உணவு விடயம் கை கொடுப்பது குறைவு. அவை ஓரளவுக்குத்தான்  :lol: :lol:  அதனால இனிவருங்காலங்களில் சுமே உடற்பயிற்சியை முழுமனதோடு ஒன்றி செய்ய பரிந்துரைக்கிறேன் :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன செய்தும் நமக்குத்தான் இந்த உடம்பு குறையுதில்லையே :unsure:  :D

 

மனிசரின்ரை வாழ்க்கையிலை ஏதாவது ஒரு ரிஸ்க் இருக்கதான் செய்யும்.... :(
 
அதுக்காக மனம் தளரக்கூடாது.. :lol:  :D
 
இஞ்சை பாருங்கோ சிங்கி குலுங்காமல் நலுங்காமல் சிலம்பெடுத்து தில்லையில் ஆடுகின்றாள். :o
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.