Jump to content

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு


Recommended Posts

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர்.

DSCN0824-300x225.jpg

2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம்.

நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது.

கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது.

அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது.

திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும்.

இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள்.

DSCN0785-150x150.jpg DSCN0788-150x150.jpg DSCN0791-150x150.jpg

DSCN0797-150x150.jpg DSCN0809-150x150.jpg DSCN0813-150x150.jpg

DSCN0817-150x150.jpg DSCN0819-150x150.jpg DSCN0823-150x150.jpg

DSCN0824-150x150.jpg DSCN0825-150x150.jpg DSCN0828-150x150.jpg

DSCN0830-150x150.jpg DSCN0834-150x150.jpg DSCN0835-150x150.jpg

DSCN0840-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3753.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்தில் இப்படியான முன்னுதரணமாகத் திகழும் உறவுகளில் நிழலியும் ஒருவர்.

தனது பிறந்த தினத்தை ஏழைகளின் மன நிறைவோடு பகிர்ந்துகொண்ட நிழலிக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

மிக உன்னதமான செயல். இவர்களின் வாழ்த்துக்கள் போன்று வேறெதுவும் அமையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உன்னதமான செயல், வாழ்த்துக்கள் நிழலி...!

Link to comment
Share on other sites

நல்லதொரு முன்னுதாரணமான செயலை செய்திருக்கும் நிழலி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!

இப்படி ஒரு குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாள் செலவை ஒவ்வொரு வருடமும் நாம் செய்தாலே பல குழந்தைகளுக்கு

தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறந்தநாட்களில் மட்டுமல்லாது இறந்தவர்களின் நினைவுநாட்களில் கூட இப்படியான தர்மங்கள் செய்தால் இறந்தவர்களின் ஆத்மா மகிழ்வடையும்.

( இறந்தவர்களின் நினைவு நாட்களில் (வெளிநாட்டில் உள்ளவர்கள்) ஊரை கூட்டி விருந்தளிப்பதிலும் பார்க்க 10 பிள்ளைகளுக்காவது உணவளிப்பது எவ்வளவோ மேல்)

 

அந்த குழந்தைகளின் மனம் நிறைந்த வாழ்த்து நிழலி அண்ணா குடும்பத்திற்கு மகிழ்வான வாழ்வை என்றும் கொடுக்கும்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க பெருமையா இருக்கு அண்ணா...........

Link to comment
Share on other sites

நிழலி உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக பாராட்டபடவேண்டியது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது அடுத்த பிறந்த நாளுக்கு, இப்படியான ஒன்றைச் செய்யும் உத்தேசம் உள்ளது!

 

நன்றிகள், நிழலி!

 

உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக என்னை வருங்காலத்தில் நெறிப்படுத்தும்!

Link to comment
Share on other sites

சிறப்பான பணி காலத்தின் தேவையுங்கூட.. 

 

வாழ்த்துக்கள் நிழலி அண்ணைக்கும் , உதவிகளை ஒருங்கிணைத்த சாந்தி அக்காவுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0824-300x225.jpg
 

படங்களைப் பார்க்க, எம்மையறியாமலே... ஆனந்தக் கண்ணீர் வருகின்றது.
உங்களை நினைக்க... பெருமையாக உள்ளது நிழலி.
இதனை உரியவர்களிடம், சேர்ப்பித்த சாந்திக்கு... பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பாராட்டிய, வாழ்த்திய, பதிவுக்கு பச்சை குத்தி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான நன்றி.

 

நான் உணவு கொடுத்தது 365 நாட்களில் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நேரத்திற்கு மட்டுமே. உதவிகள் கிடைக்காவிடின் மிகுதி 364 நாட்கள் இச் சிறுவர்கள் போசாக்கற்ற உணவுடன் தான் வாழப் போகின்றனர். இவர்களைப் போன்று தாயகத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் போசாக்குள்ள நிறையுணவு இன்றி வளர்ந்து எதிர்காலத்தின் சவால்களை சந்திக்க போகின்றனர். தாயகத்தில் போரின் பின் ஒரு பலகீனமான சமுதாயமாக எம் சிறுவர்கள் வளரப் போகின்றனர்.

 

இதை சிங்கள அரசு நிவர்த்தி செய்ய போவதில்லை. அயல் தேசமும் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. சர்வதேசமும் இது பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை.

 

ஆனால் எமக்கு இதை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் தார்மீக கடமை இருக்கின்றது. நாமும் கைவிட்டு விட்டால் இவர்களை எவரும் திரும்பிப்பார்க்கப் போவதில்லை.

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

முன்னுதாரணமானதொரு நல்ல காரியம் செய்த தம்பி  நிழலிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

இவர் போன்ற  தம்பிகளைத்தந்த யாழுக்கு தலை வணங்குகின்றேன்.

 

 

 

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

இது சம்பந்தமாக அதிகம் எழுத கூசும் தம்பி  நிழலி 

இவ்வளவு எழுதியுள்ளதே

இன்னொருவராவது செய்யமாட்டார்களா என்ற நம்பிக்கையில் தான்.....

உறவுகளே

மனமிருந்தால் இடமுண்டு...

 

 

Link to comment
Share on other sites

நிழலியின் செயலுக்கும், சாந்தியின் சேவைக்கும் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

 

இதை முன்னின்று நடத்திய சாந்திக்கும் பண உதவிகள் செய்த நிழலிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலியும்.. விஜய்.. சூர்யா ரேஞ்சுக்கு ஒரு நாள் சத்துணவு திட்டம் செய்கிறாரா..??!

 

ஊரில ஒரு தடவை ஒரு பிரண்ட் எல்லாருக்கும் சைவ சாப்பாட்டுப் பார்சல் வாங்கித் தந்தான். என்னடா திடீரென்னு.. பாசமழை கொட்டுதேன்னு.. கேட்டா.. இல்ல மச்சான்.. அம்மம்மாட திவசம்.. அது தான் 10 பிச்சைக்காரங்களுக்கு அம்மா சாப்பாடு வாங்கிக் கொடு என்று சொன்னவ என்றான்.

 

சரி இப்படியாவது நன்மை நடக்குதேன்னு வாழ்த்தத்தான் வேணும்.

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். மற்றும்படி.. நிழலியின் இந்த ஓர் நாள் சத்துணவு திட்டம்.. நடைமுறைப்படுத்தப்பட்டது ஒரு முன்மாதிரி என்பதிலும்.. நல்ல ஒரு வழிகாட்டலுக்கான ஆரம்பம் என்று கொள்வதே நல்லது. :icon_idea::)

 

 

 

 


ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த செயற்பாட்டை செய்த நிழலியவர்களுக்கும் அதனைத் தாயகத்திலே முன்னெடுத்துப் பதிவிட்ட சாந்தியவர்களுக்கும் பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். 

 

ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

 

நீங்க சொல்லவருவது உண்மைதான்

ஆனால் எப்பொழுதுமே சிறு துளிகள் தானே பெருவெள்ளம் ஆகின்றன.

 

நிழலி போல ஒவ்வொருவரும் செய்யும் போது

பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து சிலவற்றை  செய்யலாம்..

 

நான்

இந்த அடுத்த கட்டத்தில் நிற்பதால்  இதை இங்கு குறிப்பிடுகின்றேன்

இது போன்று சிலவிடயங்களைச்செய்தோர் ஒன்றிணைந்து

ஆண்டுக்கு பல லட்சங்களுக்கு பலபேருக்கு செய்யக்கூடியதாக இருக்கு.....

 

முதலில் இவர் போன்ற  இரக்கவாளிகளை அடையாளம் காணவேண்டும்

ஒன்றிணைக்கணும்

அடுத்த கட்டத்துக்கு போகலாம்.......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • 2 months later...
நிழலியின் முன்னுதாரண உதவியை வாசித்து பலர் தங்களது பிறந்தநாள் , உறவுகளின் நினைவுநாட்கள் போன்ற நிகழ்வுகளை சிறார்கள் , வயோதிபர்களின் தேவைகளுக்கு தந்துதவ முன்வந்து சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 
எல்லா நன்மைளுக்கும் பின்னால் யாராவது ஒருவர் அல்லது சிலரின் எதிர்மறையான கருத்துக்களும் வரும். அதற்கு இந்த திரியும் விதிவிலக்கில்லாமல் ஒருவர் கருத்தெழுதியிருந்தார். ஆனால் பலருக்கு நிழலியின் எண்ணம் உதவியாக இருந்தது மட்டுமன்றி உதவிகளும் கிடைத்துள்ளது. 
 
நன்றிகள் நிழலி மற்றும் நிழலியின் எண்ணத்தை வரவேற்று ஆதரித்து ஊக்குவித்த கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.