Jump to content

இது தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் கூடியவர் என்று எங்கே என்றாலும் கூறியிருக்கிறேனா?

பகிடிக்கு தான் சொன்னனான்... கோவிக்கிறிங்கள் போல இருக்கு...தவறாக புரியிற மாதிரி சொல்லியிருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... :roll: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி நீங்கள் அடுக்கடுக்காய்பல கேள்விகள் வைத்திருக்கலாம். எந்த விடயமானாலும் கேள்விகள் கேட்காவிட்டால் தெளிவிருக்காது.

ஒரு பெண்ணின் பருவ மாற்றத்தை எடுத்து அளவளாவுவது என்பது பெண்களாகிய எங்களுக்கு பெரும் சங்கடத்தையும், வலியையும் தருகின்றது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

சாமத்தியச் சடங்கு என்பதைப்பற்றி பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் அதிகமானோர் திருமணத்திற்கு எனது மகள் தயார் என்பதை அறிவிக்கவே அச்சடங்கு உதயம் பெற்றதாகக் கூறுகின்றனர். காரணம் பண்டைய காலங்களில் உறவினர்களுக்குள் தமது மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொருட்டு தூர இடங்களில் வாழும் உறவினர்களுக்கு தமக்கு திருமணத்திற்குத் தயாரான பெண் இருக்கிறாள் என்பதை அறிவிப்பதற்காகவே இச்சடங்கு நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேறு சிலர் வீட்டில் உள்ள வயதானவர்கள் அதாவது தாத்தா, பாட்டி போன்றோர் தம் பேரப்பிள்ளையின் திருமணத்தைப் பார்க்கும் வரை உயிருடன் இருக்கும் சந்தர்ப்பக்குறைவால் பேரமகளை கிட்டத்தட்ட திருமணக்கோல அலங்காரத்தில் பார்க்க ஆசைப்படுவதாலும் இச்சடங்கு நடாத்தப்படுகிறது என்று கூறப்பட்டாலும் இச்சடங்கின் நேரடிக்காரணத்தை நாகரீகம் கருதி மறைக்கும் பொருட்டு இக்காரணி உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இதே வேளை விலைமாதர் கதையையும் கூட சிலர் என்னிடம் கூறியுள்ளனர். எது எப்படி ஆயினும் தற்காலத்தில் இது தேவையா?

சில பெண்பிள்ளைகளிடம் பேசிப் பார்த்தபோது அவர்கள் கூறிய காரணங்களாவன- பரிசுப் பொருட்கள் கிடைக்கின்ற படியாலும், சேலைகட்டி விதவித அலங்காரம் செய்வதாலும் அந்தப் பதின்ம வயதில் தங்களுக்கு அச்சடங்கின் மேல் விருப்பு இருந்ததாகவும் அதையே ஒரு வருடம் தாண்டிய பிற்பாடு சிந்திக்கின்ற வேளையில் வெட்கமும், வேதனையும் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அதே வேளை நான் அவர்களிடம் உங்களுக்கு ஏற்படும் இந்த சங்கடத்தை ஏன் நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைக்க முயலவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம்....

இவற்றைப் பேச முற்பட்டால் பெரியவர்கள் கலச்சாரம், பண்பாடு எனப்பல காரணங்கள் சொல்கிறார்கள். அதில் முதன்மை பெறுவது நீ பெரிய பெண் கவனமாக இருக்கவேண்டும். ஆண்களிடத்திருந்து விலகி இருக்கவேண்டும் என்பதே... இதைக் கூறும் அப்பெண்பிள்ளைகளே இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். எங்களுக்குத்தான் பாடசாலைகளில் பாலியல் பற்றிய தெளிவை ஆசிரியர்கள் ஒன்பது வயதிலேயே கற்பிக்கிறார்களே அதற்குப் பிற்பாடு பருவமடையும் போது சடங்கு வைத்து எங்கள் பெற்றோர் சொல்ல முற்படுவது என்ன? நாங்கள் திருமணத்திற்குத் தயார் என்ற அறிவிப்பையா?

ஆக பெண் பிள்ளைகள் விரும்புகிறார்கள் செய்கிறோம் என்ற வாய் சவடால்கள் அந்தப் பெண் பிள்ளையின் குழந்தைத்தனத்தைவிட பெற்றோரின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகிறது.

நாங்கள் ஊரில் வாழ்ந்த காலங்களில் ஊருக்கு ஊர் வித்தியாசமான நடைமுறைகளுடன் சில சாதியக் கோட்பாடுகளுடன் அச்சடங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். இதன் ஊடும் சாதியப் பேய்களை வளர்த்திருக்கிறோம். இப்போது புலம் பெயர் தேசங்களில் திரண்ட பொருளாதார வளத்தால் அச்சடங்கின் உட்பொருள் தெரியாது ஊருக்கே அழைப்புக் கொடுத்து கொண்டாடுவது என்பது எந்த வகைக்குள் அடக்கும் என்பதை கொண்டாட்டம் செய்யத் துணியும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஆடம்பரத்தை பொருளாதாரத்தை காட்டவேண்டும் என்றால் வேறு கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தயவு செய்து பெண்களை சங்கடத்திற்குள்ளாக்கும் இச்சடங்கைத் தவிருங்கள்.

யாருக்கு யார் சொல்வது? ஒவ்வொரு தாயும் உணர்ந்தால் மாத்திரமே எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். இந்தச் சடங்கை ஆண்களே எம்மிடம் திணிக்கிறார்கள் என்று எந்தப் பெண்ணும் கூற முடியுமா?

முதலில் பெண்ணுக்குப் பெண்தான் எதிரி

மற்றும் ஆதிவாசி நீங்கள் பெண்களை ஏட்டுச் சுரைக்காய்களா? என்று கேட்டு இருந்தீர்கள். சில சமயங்களில் நாங்கள் ஏட்டுச்சுரைக்காய்களாகவும் இருக்கிறோம் என்பது எங்களுக்கும் புரிகிறது. பொறுப்புகளை உதறிவிட்டு பெண்ணியம் பேச நாங்கள் வரவில்லை. பொறுப்புகளையும் கையாண்டு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கிறோம் ஆதலால் சில சமயங்கள் மற்றையோரின் பார்வைக்குக் கையாலாகாதவர்களாகவும் தோன்றுகிறோம்.

புல்லாங்குழல் எடுத்து அடுப்புூதச் சொன்னீர்கள்!

அது கூட ஒரு கலை வடிவம்தான் அதற்கு நாங்கள் நன்றிதான் சொல்வோம்.

சொந்தக் கருத்துக் கிடையாதா? என்று கேட்டீர்கள்.

பண்டைய காலத்துச் சடங்குபற்றி சரியான தகவல்களை அறியமுன் எங்கள் சொந்தக் கருத்தை நீங்கள் எப்படி எங்களிடம் எதிர்பார்க்கலாம்?

உங்களின் இந்தக் கருத்துக்கு அன்றே வாதிட என் மனம் எழுந்தது. ஆனால் ரமா உங்களுடன் வாதாடிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை அதனாலேயே இப்போது இதனை இங்கு இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கற்பனைவாதி என்பதற்கு அப்பால், கருத்தில் பாதி உங்களுடையது என்று நான் சொல்வேன் என்று, நீங்கள் வைக்கும் கற்பனை தான் மிகமிக அதிகமானது. ஆனால் அவ்வாறு பாதிப் பேரின் கருத்துக்களை எழுதும் அளவுக்கு அறிவுள்ளவர் நீங்கள் என்று நான் எள்ளவும் எண்ணியது கிடையாது. ஆகவே உங்களைப் பற்றிய அதிக பிரமிப்புக்கள் வேண்டமே!

சமீபத்தில், கனடாத் தேனிக்காரர்கள், ரிபிசி பற்றிய கட்டுரை ஒன்றுக்கு, விவாதித்து விட்டு, உடனேயே பதில் எழுதியபோது, கூட, நீர் இந்த ஜடியில் தான் எழுதினீர். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் அதை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் காலத்துக்கு காலம் யாழ்களத்தின் மீது அவதூறு புூச முனைபவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமே தான் செய்ய நினைத்தேன். நாளைக்கு இன்னுமோரு பெயரில் வந்து நீர் எழுதினால் கூட அறிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தை கொண்டிருக்கலாம்.

எனவே, இந்தச் சமாளிப்புக்கள், நழுவல்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என நினைக்கின்றேன். மேலும் உமக்கு கவிதை எழுதத் தெரியுமா இல்லையா என்பது குறித்து ஆராய்வு, பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு பெருமிதப்பட ஒன்றுமில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

ரமாக்கா மன்னிச்சுக் கொள்ளுங்க. நீங்க எழுதுகோலுக்கு உரியவர்தான். அது ஏன் ஆதிசொன்ன கருத்து தனியாக உங்களை மட்டுமே தாக்குகிறது? மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

அல்லது யாரேனும் கூப்பிட்டு உங்களை ஆதி கிண்டலடிக்கிறார் என்று சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்த்தான் வந்து மொத்துவார்களா?

ஆதியைப்போல் அடியைக் கேட்டு வாங்கும் பிறவி இருக்கமுடியுமா?

ஆதிவாசி அவர்களே!

பருவமடைதல் என்பது பற்றிய விளக்கமல்லாவிட்டால், அது வேண்டவே வேண்டாம் என்று அடம்பிடிப்பது என்ன நியாயம்? உங்களுக்கு அது பற்றித் தெரிந்து கொள்ள ஆசையிருந்தால், விளக்கமுள்ளவர்களோடு அறிந்து கொள்ளுங்களேன்.

மற்றவர்களுக்கு பொங்கி எழத் தெரியுமா தெரியாதா என்பதை உங்களிடம் கேட்டுக் பார்க்கின்றேன். தேவையில்லை என்றால் தூக்கிப் போட்டு விசுற பெண்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் இடையில் நின்று சத்தம் போடுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகுமோ? கற்பனைகளை நிஜமாக்க ஏதாவது தமிழ் மீடீயா இழிச்ச வாயங்கள் இருப்பாங்க அவங்களிட்ட சேர்ந்தால் நல்லா உழைக்கலாம்.!

Link to comment
Share on other sites

[

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

ரமாக்கா மன்னிச்சுக் கொள்ளுங்க. நீங்க எழுதுகோலுக்கு உரியவர்தான். அது ஏன் ஆதிசொன்ன கருத்து தனியாக உங்களை மட்டுமே தாக்குகிறது? மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

அல்லது யாரேனும் கூப்பிட்டு உங்களை ஆதி கிண்டலடிக்கிறார் என்று சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்த்தான் வந்து மொத்துவார்களா?

ஆதியைப்போல் அடியைக் கேட்டு வாங்கும் பிறவி இருக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி .......

அண்ணா பிறேமண்ணா!

குருட்டுப் புூனை விட்டத்தில் பாய்வது என்று கேள்விப்பட்டிருங்கீங்களா?

உங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜடிஸஎல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

ரொம்ப முக்கியம் கோபிதா : பேசமால் ஒரு புத்தகமாக வெளிவிடும்.

உமது கதையிலிருந்து ஒரு பெண்ணின் மனநிலை நன்றாக தெரிகின்றது??? நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு ஆட்கள் இருக்கினம். பேசமால் இதை சினிமா பகுதிக்கு நகர்த்தச் சொல்லிவிட்டு எழுதுங்கள். யாரவது உங்கள் கதையை வாசித்து விட்டு படம் எடுக்கட்டும் :

ரமா அக்கா இதோ ஒரு பேர்பரில் கதை வந்து விட்டது இனி யாரையாவது கூட்டி வந்து படம் எடுப்பதுதான் பாக்கி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.