Jump to content

இது தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோபிதா, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிகின்றேன்.

அதற்கு முன்னர் ஒரு சிறிய அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். 2002 ம் ஆண்டு நீண்ட காலத்தின் பின்பு யாழ்ப்பாணத்துகு தரைவழியாக சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம். இலங்கையில் எல்லைகளைக் கடந்து, ஈழத்தின் வரிக்கட்டுப்பாடு சோதனைச்சாவடி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் மட்டுமே. அதை விட நாம் சென்ற வாகனத்தை பதிவதற்காக ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அந்தப்படிவம் ஜப்பானிய பயண அனுபவங்களை நினைவு படுத்தின. படிவம் முற்றிலும் தமிழில் இருந்தது. நான் ஒரு கணம் திகைத்து விட்டேன். காரணம் அந்த படிவத்தில் அடிச்சட்டக இலக்கம் என்க்கேட்கப்பட்டிருந்தது. நான் அறிந்திராத சொல்லாக இருந்தாலும் ஊகிக்க கூடியதாக இருந்தது. அப்போது ஜப்பானியரின் மொழிக்கொள்கையைப்போல ஈழத்திலும் இருப்பதாக தோன்றியது. ஜப்பானியர்கள் அவர்களது அந்த கொள்கையால் அடைந்த நன்மைகள் பல. எந்த ஒரு வேற்று நாட்டு மொழி ஆதிக்கமும் இல்லாமல் உலக சந்தையில் கோலோச்சினார்கள்... காரணம் அவர்கள் திறமையோடு அவர்கள் வேற்று கலாச்சாரங்களுக்கும் மொழிப்பரவல்களுக்கும் இடங்கொடுக்காமையுமேயாகும்.

நாம் ஜப்பானியர்களுக்கோ சீனர்களுக்கோ சிறிதும் சழைத்தவர்கள் அல்ல. சில ஜப்பானிய மற்றும் சீன நண்பர்களே இதனைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நம்மில் பலர், வேற்று கலாச்சார மோகத்திலும், வேற்று மொழிகளின் பேர் கொண்ட ஆர்வங்களிலும் நேரத்தையும் திறமைகளையும் காட்ட முன் நிற்பதால் எம்மால் சாதனைகள் பல செய்து நமக்கென ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. ( ஈழத்தில் இருப்பவர்கள் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது)

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

ஆக நாம் என்ன தான் கலாச்ச்சாரதினை மாற்றினாலும் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமது வம்சாவழி மாறப்போவது இல்லை.

சிலபேருக்கு இந்த விடயத்தை எப்பிடிதான் சொன்னாலும் புரியவைக்கவே முடியாது.

ஒரு மனிதனை, அவனது கலாச்சார பழக்க வழக்கங்கள், மொழி, வம்சாவழி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு, தமிழர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சீனர் என அழைக்கின்றோம். எமது கலாச்சார பழக்கவழக்கங்களை நாம் தொடராது விட்டால், இன்று புலத்தில் உருவாகிய எமது சந்ததியின் நிலை இன்னும் ஒரு சில வருடங்களில் இது தான். ஒரு வம்சாவழி, இன்னொரு அல்லது கலந்து பட்ட ஒரு கலாச்சாரம், வேற்று மொழிப்பாவனை. இது தான் அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும். ஆக இன்னும் சில காலத்தில் நமது சந்ததியினை எப்படி அழைப்பது? கலாச்சாரத்தை தொடராத நமது சந்ததியினை பார்ப்பவர்களை இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ண வைக்கும். அது புதியதொரு இனத்தினை உருவாக்கும் ( பல நாடுகளின் எல்லைகளில், பல புதிய இனங்க்கள் தோன்றி இருக்கின்றன். பெயர்கள் வாயில் கூட நுழைய கஸ்டமாக இருக்கின்றன) . ஆக நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்ப்படுங்கள்.

இதற்கான உதாரணங்கள் பல என்னால் கூறமுடியும்

என்னுடைய அகராதியில காதல் என்பதுக்கு சும்மா ஒரு விளக்கம் குடுத்து இருக்கின்றன். அதை அப்படியே இங்கு தருகின்றேன். தப்பாக இருந்தால் அடிக்க வராதீர்கள்.

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை.

சத்தியமா எனக்கு உதுக்கு மறுமொழி தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் உண்மை, எங்கடா ஒரு அபாவி கிடைகாதா போட்டுச்சிப்பிலியாட்ட என்று இரை தேடும் பி****னி கழுகு கூட்டம் புலத்தில் அதிகம். அதிலும் முக்கியமா எங்கள் சமூகத்தவரிடையே!!!!! இது இருபாலருக்கும் பொருத்தும்.

ஒரு மனைவி கணவனிடமும், ஒரு கணவன் மனைவியிடமும் சந்தர்ப்ப சூழ் நிலைக்களுக்கு ஏற்ற மாதிரி உறவு முறையினை வளர்க்க வேண்டும் .(சந்தர்ப்பவாதிகளாக அல்ல) அதாவது ஒரு அன்னையாக அல்லது தந்தையாக, நண்பனாக அல்லது நண்பியாக, காதலனாக அல்லது காதலியாக, ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒரு தப்பு செய்தால், அன்னையாக அல்லது தந்தையாக அல்லது நண்பனாக அல்லது நண்பியாக எண்ணி, அந்த தப்பு எதிர்காலத்தில நடக்கா வண்ணம் அறிவுரை கூறி அல்லது அன்புக்கட்டளை இட்டு வாழ வேண்டும். இப்படி வாழும் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது காதலன் காதலிக்கு இடையில் இருப்பது தான் காதல்.... இதில நல்ல காதல் கெட்ட காதல், உண்மைக்காதல் பொய்க்காதல் எல்லாம் இல்லை.....

ம்ம்.. விட்டுக்கொடுத்தல், ஒத்துப்போகுதல், பகிர்தல் போன்றவை அரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு அத்தியாவசியமென்பது என்கருத்து. சின்னா என்ன சொல்லுறீங்கள்? (நீங்கள் மூத்த உறுப்பினர் 60ம் கலியாணமெல்லாம் வைக்கிறீங்கள், எங்களுக்கும் கொஞ்சம் ஆலோசனை தாங்கோவன்)

கடைசியா தம்பி சும்மாவிற்கு அண்ணனின் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா பிரின்ஸ்..... மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு......... thanksu....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா பிரின்ஸ்..... மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு......... thanksu....

Link to comment
Share on other sites

4-Sad_Girl.gif:lol::lol::lol::lol::lol:

எல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

(என்ன ஆதி சீரியசாக எழுதுகிறேன்?) :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஒய் சின்னப்பு என்ன இதுக்குள்ள நிக்கிறிங்க ஆச்சிட்ட சொல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

(என்ன ஆதி சீரியசாக எழுதுகிறேன்?) :wink: :wink: :wink:

சிறகு விரிக்கும் சின்னச் சிட்டின் இறக்கைகளை முடக்கும் முதல் சடங்கு....

அவசியம் ஏற்பட்டால் மேலும் இக்கருத்தில் எவரேனும் பிழையுள்ளதாகச் சுட்டிக்காட்டினால் மீண்டும் வருகிறேன் ஆதிவாசி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை..

- ஆரியா எழுதியது -

இதில் எதில் குழப்பம் ஆரியா?

ஏன் இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன என்பதற்கான மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ தனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லைவீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

என் வீட்டுச் சாமத்திய வீடுமற்றயவர் வீட்டை

விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

இப்படிப் பெரிதாகச் செய்யா விட்டால் என்ன

நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,

கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன்

கழிப்பதற்கும்..,

என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக்

கொண்டுதான்,புூப்படைந்த பெண்ணைக் காட்சிப்

பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில்

பெரும்பாலான சாமத்தியச் சடங்குகள் நடைபெறு

கின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடுஎன்று

போலி முலாம் புூசப்படுகிறது. அவ்வளவுதான் என்று சொல்வதுடன் அதை களைவதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளா.

அதற்கு சுந்தரி

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள hPதியாகவும், உடல் hPதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அநுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டவும்,

ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து என்கிறா.

இதற்கு கிளியின் கண் ஊரான்

சிறுமிக்கு சாமத்திய சடங்கு மூலம் வாழும் வழிமுறைகளைக் கற்று கொடுப்பதோடு கூடித் திரிந்து விளையாடிய சிறுவர் சிறுமிகளிடத்து வேறுபடுத்திக் காட்டுவதுடன் உற்றார் உறவினர் அயலவர் அனைவர்க்கும் இவளுக்கு இனி பாதுகாப்புத் தேவை என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த சாமத்திய சடங்குகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இல்லாததினால் தான் எத்தனை சிறுமிகள் முதல் கருவிலேயே கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள், உலகிலேயே மிகச் சிறிய வயதில் குழந்தையை பெற்றது என்றால் அது இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தான. எந்தளவிற்கு மருத்துவ வசதிகள் இருந்தும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படி குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் என்றால் வளர்ச்சியடைந்து வரும் எங்கள் நாட்டில் எப்படி இருக்கும்? இதற்காகத்தான் எமது இன மக்கள் எமது பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார்கள் என்கிறார்.

தயவுசெய்து எங்கள் நாட்டு கலாச்சாரத்தை இங்கே ஒப்பிடாதீர்கள். அந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் மனம் தளரக்கூடாது. தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை மக்களுக்கு உரைத்து நல்ல சமுதாயம் மலர வைப்பீர்களாக, என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார்.

எம்.ஜ.செவின்,

எமது பாரம்பரியத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்தல், மரணம் என்பன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. இதற்கும் பெண்ணடிமைக்கும் ராதிகா குமாரசாமி முடிச்சு போட்டு பெண் விடுதலையை வேண்டி நிற்கிறார் என்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித வாழக்கை வட்டத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்துதல், மரணம் எனபன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. குறிப்பாக ஆசிய ஆபிரிக்க யுத கலச்சாரங்களில் உள்ளது. யுூத- கிறிஸ்தவ பண்பாட்டில் வந்த ஐரோப்பியரிலும் இது நடைமுறையில் இருந்ததோ தெரியவில்லை.

இந்தவகையில் பராயம் எய்துவதை கொண்டாடும் பழக்கம் தமிழரைப்போல யுூதர்களிடமும் இன்னமும் இருக்கிறது. நாளடைவில் மாறி வரும் நாகரிகத்தில் அவை குறைந்து போயின. குறிப்பாக நகரப்புறங்களில் வாழ்பவரிடம் அருகி வருகிறது. இதில் பெண்ணடிமைத்தனம் ஏதும் இருப்பதாக தெரியாவிட்டாலும் இதனை பெண் அடிமைத்தனத்தின் வடிவமாக மேற்கத்தைய (அ)நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் சில பெண்ணியவாதிகள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

சிலவருடங்களுக்கு முன்னர் போராட்டத்தில் தமிழ்பெண்களின் பங்கு என்பது பற்றி ஒரு விரிவுரையாற்றிய ராதிகா குமாரசாமி லண்டனிலும் புலம்பெயரந்த நாடுகளிலும் தமிழர்கள் சாமத்திய சடங்குகள் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ் பெண்கள் இன்னமும் விடுதலையடையவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொதுவாகவே கிராமத்து பழக்க வழக்கங்களை படித்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரும் விமர்சிப்பது வழக்கம் அந்த வகையில் இந்தச் சடங்கும் விமர்சிக்கப்படுகிறது.

புலம் பெயரந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இனப்பிரச்சினையின் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். அவர்கள் வேறுபட்ட சமூக பொருளாதார தளத்திலிருந்து வந்தவர்கள். கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் நகரப்புறங்களிலிருந்து வந்தவர்களைப்போல் தங்களது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அந்த வகையில் இந்தச்சடங்கும் கொண்டாடப்படுகிறது.

இங்கு நடைபெறும் வைபவங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட பெண்களின் புூரண விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. ஆகவே பெண்ணடிமைத்தனம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.

வெறுக்கத்தக்க வி;டயம் என்னவென்றால் இந்த வைபவங்கள் வெறுமனே பகட்டுக்கு செய்யும் சங்கதியாகி விட்டது. இதனால் பணம் வீணாக விரயம் செய்யப்படுகிறது. பண்பாடு பழக்க வழக்கம் என்பதற்கு பதிலாக இவை ஒரு சினிமாத்தனமான போலியாக மாறிவிட்டது.

இந்த ராதிகா குமாரசாமி அவர்கள் திருமணத்தின் போது பெண்கள் கழுத்தில் கட்டப்படும் தாலியும் ஓரு பெண் அடிமை தனம் எள்று விமர்சித்தவரா?

:roll: :roll: :roll:

அல்லது நான் ஆள் மாறி சொல்கிறேனா? :oops: :oops:

உங்கள் உளவு பிரிவு என்ன சொல்கிறது? :idea: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு என்பது அவசியம் தான். ஆனால் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஆண்களுக்கும் செய்ய வேண்டும்( எத்தனை பேர் ஒத்துக் கொள்வினமோ தெரியாது :wink: ).

இன்று பாலியல்கல்வி என்று ஏன் படிப்பிக்கப்படுகின்றது. அந்த வயதில், இவ்வாறான செயற்பாட்டை எதிர் நோக்க வேண்டும். அல்லது துர்நடத்தையுள்ளவர்கள் எவ்வாறு நடப்பார்கள் என்பதை சிறுவயதிலேயே அவதானத்தோடு இருக்க வேண்டும் என்பதாகக் காரணம் சொல்லப்படுகின்றது.

இப்போது நடக்கின்ற பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொருவரினதும் வசதிக்காகச் செய்யப்படுகின்றது. அல்லது மற்றவர்களுக்கு தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் செய்யப்படுகின்றது. வீடியோ கமராக்காரர்கள் தான், இப்போது நல்ல நேரம் குறிப்பவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே பெற்றோர்கள் செய்கின்ற தப்பை, சம்பிர்ருதாயத்தின் மீது பழியைப் போடுவது தகுமா?

யாராவது இப்படிச் செலவளித்துச் செய்யச் சொல்லி விதி வகுத்தார்களா என்ன? சாத்திய வீடு மட்டும் செய்தால் போதாது, குழந்தைகளுக்கு அது பற்றிய தெளிவையும் செய்ய வேண்டும். அதை எத்தனை பேர்கள் செய்கின்றார்கள்?

சிறுமிகளை உணர்வூட்டலுக்காகத் தான் பூப்புனிதநீராட்டு விழா என்று ஒரு சடங்கு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆண்கள் அடங்காப்பிடாரிகள் என்று மறுக்கப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும் அன்று, கருக்கலைப்பு என்பது சாத்தியமற்றதாக இருந்ததால், பெண்களின் தப்புக்களே சமூகத்தில் உணரப்படும் என்ற கண்ணோட்டத்தில் பெண்களை மட்டுமே, கண்டிப்பாக வளர்க்கப்படுகின்றார்கள். அது தலைமுறையாகவும் தொடருகின்றது.

இப்போது அந்த நிலை மாறி தப்பு செய்தாலும் பிடிபடாமல் இருக்கலாம். அல்லது அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற சிந்தனையோடு பல தமிழர் இருப்பதால், புலத்தில், ஏன் கனடாவில் திருமணம் ஆகி கொஞ்ச நாளில் வேறு ஒருத்தரோடு குடும்பம் நடத்துகின்ற ஆண்கள், பெண்களைத் தமிழரில் பார்க்க முடிகின்றது.

வீட்டுக்கு வந்த கணவனின் நண்பரோடு குடித்தனம் நடத்துகின்ற அவல நிலை கூட பத்திரிகைகளில் படிக்க முடிகின்றது. இது தான் அடக்குமுறை அற்ற வாழ்வாகப் பலர் தெரிவு செய்கின்றார்கள் என்பது நிதர்சனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் 600 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் குறைந்தது 350 மில்லியன் வரை பெண்களாக இருப்பர். இதில் எத்தனை சதவீதம் பேர் பூப்புனித நீராட்டு விழா நடத்தி தங்களின் இயற்கையான உடல் உள மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஊட்டபடுகின்றனர்.

விஞ்ஞான ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதை எட்டும் போது ஏற்படும் உடல் உள மாற்றங்கள் பொதுவானதே. இருவருக்கும் உளத் தாக்கங்களும் உடல் தாக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்களுக்கு உடல் தாக்கம் என்பது சற்று அதிகம். அது விலங்கு இராச்சியத்தில் பிரைமேற்றுக்களுக்கு உள்ள சிறப்பம்சம். அது கூட தனது இனவிருத்திக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் நோக்கோடே நிகழ்கிறது.

சமூக வழமைகள் என்பது சமூகத்துக்குச் சமூகம் மாறுபடுகின்ற போது தமிழர் சமூக கலாசார நடைமுறைகளில் பெண் பிள்ளைகள் மீதான கவனிப்புக்கு அதிக முக்கியம் அளிக்கிறது. அந்த வகையிலேயே பூப்புனித நீராட்டுவிழா என்பது குறித்த பெண் பிள்ளைக்கான தனது நிலையுணரும் அறிவூட்டல் என்று கொள்ளலாம்.

மேற்குலகில் இன்று பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பான ஆண் பெண் உடல் சார்ந்த உறவுகளுக்கு என்று கொண்டொம் போன்றவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தமிழர் கலாசாரம் என்பது ஆண் பெண் உடல் ரீதியான உறவு என்பதை திருமணத்தின் பின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மேன்மிய நிலையில் பேணி வந்தது. அந்த நிலையைத் தக்க வைக்க வேண்டின் ஆண் அல்லது பெண் பிள்ளை பருவ வயதை அடையும் போது நிச்சயம் அவர்களின் நிலை குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தாக்கம் அதிகம் என்பதால் அவர்களைத் தெரிவு செய்து பூப்புனித நீராட்டு விழா என்ற அடிப்படையில் அறிவூட்டலை அவளுக்கு சமூகத்துக்கும் வழங்கினர்.

மேற்குலகு நோக்கிய குடிபெயர்வின் பின்னான இன்றைய நிலை என்ன..?

இன்று தமிழர்கள் மேற்குலகம் ஈழம் என்று உலகெங்கும் பரந்து வாழும் நிலையை எட்டி இருப்பதால் அந்தந்த வாழும் சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் நடமுறைகளைப் பின்பற்ற விளைகின்றனர். அவற்றில் அவர்கள் காணும் நெகிழ்வுத் தன்மையான நிலைப்பாட்டை பெண்களுக்கான உரிமை மறுப்பாக தமது சமூகத்தில் இனங்காட்ட முயல்கின்றனர். அதன் பிரகாரம் பல பெண்கள் மேற்குலக நடைமுறைகள் தங்கள் வாழ்வுக்கு வசதியாக இருப்பதாக எண்ணி அதன் கீழ் வாழப்பழகியும் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் மேற்குலக வாழ்க்கை நடைமுறைகளை ஏற்றுக் கொண்டாலும் சில தனிப்பட்ட தேவைகளுக்கு விளம்பரத்துக்காக என்று இப்படியான பூப்புனித நீராட்டு விழாக்களை களியாட்ட நிகழ்வுகளாக்கிக் கொண்டாடி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதில் கலாசார பற்றுறுதி என்பது கிடையாது.

இன்னும் சிலர் தங்கள் காலாசார அடையாளத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் இதைக் கொண்டாடுகின்றனர். ஆனால் கலாசாரத்துள் ஏன் இந்த நிகழ்வு உள்ளடக்கப்பட்டது என்ற அடிப்படை, வாழ்வியல் நெறி குறித்து அவர்கள் பிள்ளைகளுக்கு விளக்குபவர்களாக இல்லை.

இன்று மேற்குலகில் ஆண் பெண் அடிப்படைச் சுதந்திரம் என்பது வெகுவாக எல்லோருக்கும் கிடைக்கின்றது. அதற்கேற்பவே வாழ்வியல் நடைமுறைகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பார்வைக்கு மேற்குலக வாழ்வியல் என்பது கவர்ச்சிகரமானதாக அதிக சுதந்திரத்தை உறுதி செய்வதாகக் காணப்படுவதால் தமிழ் பெண்களும் ஆண்களும் அதைனையே விரும்பி மாற்றங்களைத் தேடுகின்றனர். அதை தமிழர் சமூகத்திலும் காண வேண்டும் என்ற நோக்கில் முற்போக்குவாதம் என்ற நிலையில் அதை தமிழர் சமூகத்திலும் புகுத்த விளைகின்றனர். இதனால் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் கூட இழக்கப்பட்டு விடுகின்றன.

தமிழர்களின் தனித்துவ அடையாளம் என்பது சமூகம் சார்ந்தது.

வெறும் பெண்களே அதைக் காவுவதாக பெண்கள் நினைக்கத் தூண்டப்பட்கின்றனர். ஆண்கள் ஏலவே அந்த நிலையைத் தொட்டுவிட்டதால் பெண்களும் அதைத் தங்களின் உரிமையாகக் காட்டி பெற விளைகின்றனர். அதில் அவர்கள் அளவில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.

மேற்குலக வாழ்வு என்பது எவ்வளவு எவ்வளவு கட்டுப்பாடற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரச்சனைக்குள்ளானதாகவும் இருக்கிறது. தமிழர் சமூகக் கட்டமைப்பு என்பது சமூக நடத்தைகளால் இட்ட கட்டுபாடுகள் என்பது மனித வாழ்வியலில் தனி மனிதன் ஒருவன் சீரிய வழியில் மன அழுத்தங்கள் இன்றி தன் வாழ்வை வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் அதிகம் இடம்பிடித்திருக்கிறது.

மேற்குலகில் 13 வயதுச் சிறுமிக்குக் கூட காதல் முறிவுப் பிரச்சனை. அடுத்த போய் (boy) பிரண்டைத் (friend) தேட வேண்டிய கட்டாயம். சுதந்திரத்தின் பெயரால் அவள் வாழ்வியலில் அகலக் கால் வைக்கினும் 15 வயதில் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நிலை. அது அவளின் சுதந்திரம் என்று பார்த்தால் ஒரு சிறுமியால் எந்தளவுக்கு தனது பிள்ளையின் மீதான அன்பை ஆதரவை கவனிப்பை வழங்க முடியும் என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. 13,14 ,15,16 வயதில் திருமணம் செய்தால் இலவச வதிவிடம் பணம் என்று சலுகைகளை அளித்துவிடுவதால் கட்டுப்பாடற்ற வாழ்வியல் தொடர்கிறது.

தமது சுய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து வாழ்ந்துவிட்டால் சரி என்ற என்னம் நிலைக்கிறது. இதனால் பிள்ளைகள் பெற்றோர் இடைவெளி அதிகரிக்கிறது. குடும்ப சமூகக் கட்டமைப்புக்கள் பலவீனமாகி கவன்சிலிங் நிலையங்களை வைத்தியசாலைகளை நோக்கி இள வயதினர் படையெடுக்கின்றனர்.

சொந்த அனுபவத்தில் சொன்னால் குறுகிய பயிற்சிக்காக வைத்தியசாலை ஒன்றுக்கு சென்ற போது அனுமதிக்கப்பட்ட 40% பெண்கள் 13- 16 வயதுடைய பெண்கள் கருக்கலைப்புப் பிரச்சனைக்காக ஸ்கானிங் செய்ய வந்திருந்தார்கள். இந்த வயதில் தான் ஊரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடாத்துவார்கள். உண்மையில் அது அறிவூட்டப்பட வேண்டிய வயதுதான் என்பதை மேற்குலகை வந்த போதுதான் அனுபவ ரீதியாக உணர முடிந்தது.

மேற்குலகில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் மருத்துவ சோதனைகளில் சிறு பகுதியே இலங்கை போன்ற நாடுகளில் நடத்தப்படுகிறது. ஆனால் அங்குள்ள சமூகக் கட்டமைப்பு அல்லது சமூக ஒழுக்கம் என்பது சோதனைக்கு மேலான பாதுகாப்பை பெண்களுக்கும் ஆண்களுக்கும் அளிக்கின்றன என்றால் அது தவறே அல்ல.

மேற்குலகில் வாழும் ஆண்கள் மற்றும் பெண்களுக்குள்ள மன அழுத்தமே அவர்கள் அடிக்கடி தங்கள் சோடிகளை நண்பர்களை மாற்றிக் கொண்டு தங்கள் மனதுக்கு தோன்றும் மாறுபடும் சூழநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை வாழ மாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு நிலையான கட்டமைப்புக்குள்ளான ஒழுக்கம் என்பதான அறிவூட்டல் பெறாத ஒரு வாழ்வியலையே வாழ்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை சமூகக் கட்டுப்பாடு ஒழுக்கம் என்பதெல்லாம் கிடையாது. சட்டம் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. இதுதான் மேற்குலக வாழ்வியல்.

இது எமது தமிழர்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் அதனுள் வாழ்ந்து வலிகளை உணரும் போதே அவர்கள் தெளிவு பெறுவர். அதுவரை அவர்கள் உணரப் போவதில்லை.

இந்த நிலைகளைக் கடக்கவே எமது சமூகத்தில் சில கட்டுப்பாடுகள். சம்பிரதாயங்கள். அவை மனிதர்களை வாழ்வியலில் வழி நடத்துகின்றன என்றால் அது மிகையல்ல. ஆனால் சில சம்பிரதாயங்கள் வழங்கும் அளவுக்கு மிஞ்சிய அழுத்தங்கள் மூடநம்பிக்கைகள் உண்மையான பிரதிபலனை அளிக்காமல் தட்டிக்கழிக்க வகை செய்து கொண்டிருப்பதே இப் பூப்புனித நீராட்டு விழா என்பது அதன் உண்மைத் தன்மை இழந்து களியாட்டத்துக்கும் அல்லது புறக்கணிப்புக்கும் உள்ளாகி வரக் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சனத்தொகை 600 அல்ல 6000 மில்லியன் என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். அதேபோலேதான் 3500 மில்லியன் பெண்களின் சனத்தொகை. (பருமட்டான அளவுகளில்)

Link to comment
Share on other sites

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

இதைதான் கள்ளுண்ட குரங்கென்பதோ? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ, பொறுங்கோ வாறன்

நிண்டு நிலைச்சு கருத்தாட நேரமில்லாமத் தாவித்திரியிறன்....

கேள்விகளோட வாறன் தெளிவுபடுத்துங்கோ.

தாராளமாக வாங்க! ஒரு மாதம் கழிச்சு வந்தாலும் கேள்வியைக் காட்டினீர்கள் என்றால் பதிலளிக்க, அல்லது சலாப்பிக் கொள்ள நாங்கள் தயார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்று வரையும் புரியவில்லை ஏன் இந்த சடங்கு என்று ஆனா கட்டுரை எழுதியவர்களில் இருந்து கருத்து சொன்னவர்கள் வரை தெளிவுபடுத்த வில்லை..

- ஆரியா எழுதியது -

இதில் எதில் குழப்பம் ஆரியா?

ஏன் இந்த சடங்குகள் செய்யப்படுகின்றன என்பதற்கான மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ தனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லைவீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய வீடு என்பது அவசியம் தான். ஆனால் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஆண்களுக்கும் செய்ய வேண்டும்( எத்தனை பேர் ஒத்துக் கொள்வினமோ தெரியாது ).

நாங்கள் பெண்களுக்கே நடத்துவதை எப்படி நிறுத்தலாம் என்று நினைக்கும் போது நீங்கல் வேற?????

ஆனா இபப்டி செய்லாம் பெண்களுக்கு நடத்துவதை நிறுத்தி விட்டு ஆண்களுக்கு மாடும் ஆடமரமாக செய்து பார்கலாம் வீடியோவும் எடுகலாம் அதோடு எவளவு பேர் வருகிறார்கள் என்று பார்போம் :roll: :?:

Link to comment
Share on other sites

இதைதான் கள்ளுண்ட குரங்கென்பதோ? :lol::lol:

இங்க நாங்க கதைக்கிற விசயமே போதையைக் கொடுக்கப்போகுது பிறகேன் கள்ளுண்ண வேணும்...?

Link to comment
Share on other sites

முதல்ல பெண்கள் மன்னிக்கவேணும்.....

உங்களுடைய உணர்வுகளை மதிப்பதனால்த்தான் இங்கு கருத்தாடவே இறங்குகிறேன். உங்களைப்பாதிக்கிறதாக இருந்தாச் சொல்லிப்போடுங்கோ பொடிச்சிகளே!

நீங்க உங்களுக்காக வாதாட வேண்டிய இடத்தில ஆதி இறங்கியிருக்கிறன் அடிச்சுக் கலைச்சுப் போடாதேங்கோ...

Link to comment
Share on other sites

தாராளமாக வாங்க! ஒரு மாதம் கழிச்சு வந்தாலும் கேள்வியைக் காட்டினீர்கள் என்றால் பதிலளிக்க, அல்லது சலாப்பிக் கொள்ள நாங்கள் தயார்!

அடப்பாவி :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

பெண் வயதுக்கு வந்ததை விழாவாக எடுக்கும் சடங்கு பற்றி சில விடயங்கள் தெளிவுபடவேண்டியுள்ளது.

இதுவரை கருத்துவழங்கியவர்கள் நாகரீகமான முறையில் விடயங்களை தந்திருந்தாலும் தெரிந்துகொண்டே சிலவிடயங்களை மூடிமறைக்கிறார்களா? அல்லது தெரியாமல் விட்டுவிட்டார்களா? என்பது தெரியவில்லை.

கருத்துக்களம் என்று வந்தபின் பேசவிரும்பாத விடயங்களைக்கூட பேசவேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாது.....

அந்த வகையில்..... :arrow:

Link to comment
Share on other sites

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல பெண்கள் மன்னிக்கவேணும்.....

உங்களுடைய உணர்வுகளை மதிப்பதனால்த்தான் இங்கு கருத்தாடவே இறங்குகிறேன். உங்களைப்பாதிக்கிறதாக இருந்தாச் சொல்லிப்போடுங்கோ பொடிச்சிகளே!

நீங்க உங்களுக்காக வாதாட வேண்டிய இடத்தில ஆதி இறங்கியிருக்கிறன் அடிச்சுக் கலைச்சுப் போடாதேங்கோ...

நீங்கள் மதிகிறதால் கருத்தாட இறங்கிறீங்கள். நான் மதிக்கிறதால் அனவசியமா தலையிட்டு மன உளைச்சலைக் கொடுக்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

தம்பி பிறின்ஸ்

பெண்களை நாங்க மதித்தால் அவர்களும் எங்களை மதிப்பார்கள் மிதித்தால் அவர்களும் மிதிப்பார்கள்....

உங்களுக்கு எப்படியோ?......

ஆதியால மிதிபட முடியாதப்பா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.