Jump to content

உருளைக்கிழங்கு போண்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு போண்டா

potattobondalp7.jpg

தேவையானவை:

கடலை மாவு - 1 கப்

ஆப்ப சோடா - 1 சிட்டிகை

ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

(மசாலாவுக்கு)

உருளைக்கிழங்கு - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - ருசிக்கேற்ப

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள்.

* வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

* ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.

* பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள்.

* எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.

ஆதாரம்: வெப் உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தால் சாப்பிட வேண்டும் போல இருக்கு,இது தமிழனிட்ட உணவு தானே இல்லாட்டி சாப்பிடமாட்டேன்

8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பிடிவாதம் புத்தன் சார்.

சாப்பாட்டு விசயத்தில ஒரு பிடி பிடிக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பிடிவாதம் புத்தன் சார்.

சாப்பாட்டு விசயத்தில ஒரு பிடி பிடிக்கிறது

சும்மா டைம் பாஸிற்கு தான் இப்ப இப்படி சொன்னால் தான் ஒரு மஜா

:roll: :roll:

Link to comment
Share on other sites

கறுப்பி உருளைக்கிழங்கு போண்டா பார்க்க வடிவா இருக்கு. செய்து போட்டு அனுப்புங்கோ. நான் சாப்பிடுறன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி உருளைக்கிழங்கு போண்டா பார்க்க வடிவா இருக்கு. செய்து போட்டு அனுப்புங்கோ. நான் சாப்பிடுறன். நன்றி

அப்பிடியே எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உருளைக்கிழங்கு போண்டா பார்க்க வடிவா இருக்கு. செய்து போட்டு அனுப்புங்கோ. நான் சாப்பிடுறன். நன்றி

இன்னும் கொஞ்சம் போனால் உங்களை நினைத்து சாப்பிடவும் சொல்லிவிடுவியள் அம்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போண்டா பார்க்கவடிவாக இருக்கிறது சாப்பிட நல்ல இருக்குமோ :wink:

போண்டா பார்க்க மட்டும் வடிவில்லை சாப்பிடவும் நல்ல ருசியா இருக்கும் இலக்கியன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கும் இது போண்டா மாதிரியா இருக்கு, ஐயர் கடை பூந்திலட்டு மாதிரீல்லோ

Link to comment
Share on other sites

எந்த ஜயர்?

தெறியாதோ அது தான் அவர் விளங்கவில்லையோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

இக்கும் இது போண்டா மாதிரியா இருக்கு, ஐயர் கடை பூந்திலட்டு மாதிரீல்லோ

எப்படி இருந்தாலும் எல்லாமே வாயுகுள்ள தான் போக போகுது

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

[அப்பிடியே எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமோ?

அண்ணா உங்களுக்கு இல்லாததா? ஆனால் கறுப்பி செய்து தர மாட்டாவாம்/. :cry: நாங்கள் சமருக்கு செய்வம் நீங்கள் வாங்கோ :wink:

Link to comment
Share on other sites

அண்ணா உங்களுக்கு இல்லாததா? ஆனால் கறுப்பி செய்து தர மாட்டாவாம்/. :cry: நாங்கள் சமருக்கு செய்வம் நீங்கள் வாங்கோ :wink:

போன கோடைகால விடுமுறைக்கு எள்ளுச் சாம்பல் அடுத்த முறை உருளைக்கிழங்கு போண்டவா? ரசிகை தாங்காது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா உங்களுக்கு இல்லாததா? ஆனால் கறுப்பி செய்து தர மாட்டாவாம்/. :cry: நாங்கள் சமருக்கு செய்வம் நீங்கள் வாங்கோ :wink:

சொல்லுங்கோ கட்டாயம் வாறன். அது சரி ஒரு சின்னச்சந்தேகம்...போண்டா வீட்டுக்க வைத்துத்தானே செய்யுறது.. பிறகேன் அடுத்த கோடைக்கென்று... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன கோடைகால விடுமுறைக்கு எள்ளுச் சாம்பல் அடுத்த முறை உருளைக்கிழங்கு போண்டவா? ரசிகை தாங்காது.. :lol:

தருகிற தங்கச்சியையும் தரவிட மாட்டீங்கள் போல கிடக்கு. சரி சரி உங்களுக்கும் ஒரு பங்கு தரலாம் நீங்களும் வாங்கோ :lol::lol: .

Link to comment
Share on other sites

போன கோடைகால விடுமுறைக்கு எள்ளுச் சாம்பல் அடுத்த முறை உருளைக்கிழங்கு போண்டவா? ரசிகை தாங்காது.. :lol:

ஹா ஹா ரமா அது உங்களுக்கு இல்லை எண்டை அண்ணாக்கு :evil:

Link to comment
Share on other sites

சொல்லுங்கோ கட்டாயம் வாறன். அது சரி ஒரு சின்னச்சந்தேகம்...போண்டா வீட்டுக்க வைத்துத்தானே செய்யுறது.. பிறகேன் அடுத்த கோடைக்கென்று... :roll:

உந்த சந்தேகத்துக்கு ஒண்டும் குறைச்சல் இல்லை. சமருக்குத்தான் இரசிகை பிஸி இல்லை.

Link to comment
Share on other sites

உதென்ன பிள்ளையள் போண்டாவின் பெயரில் அரட்டை அடிகின்றியள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறுக்காலும் நெடுக்காலும் பெரிசுகள் ஓடி வந்து அட்வைஸ் பண்ணப்போதுகள்.

Link to comment
Share on other sites

உதென்ன பிள்ளையள் போண்டாவின் பெயரில் அரட்டை அடிகின்றியள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறுக்காலும் நெடுக்காலும் பெரிசுகள் ஓடி வந்து அட்வைஸ் பண்ணப்போதுகள்.

அந்த பெயரில அவை அட்வைஸ் பண்ணுவினம் மற்ற பெயரில அவை அரட்டை அடிப்பினம் இது எல்லாம் சகஜமப்பா

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன பிள்ளையள் போண்டாவின் பெயரில் அரட்டை அடிகின்றியள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறுக்காலும் நெடுக்காலும் பெரிசுகள் ஓடி வந்து அட்வைஸ் பண்ணப்போதுகள்.

அட்வைஸ் பண்ண மாட்டினம். அவையளும் போண்டா செய்யிரது எப்படி எண்டு பார்ப்பினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.