Jump to content

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

சுரேஷ் ரெய்னாவின் ஹேட்ரிக் ‘டக்’ அவுட்கள்; முரளி விஜய்யின் சாதனை: சுவையான புள்ளிவிவரங்கள்
 

 

சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆனதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா வென்றது. இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை முரளி விஜய் பெற்றுள்ளார்.

சிட்னி 2-வது இன்னிங்சில் 80 ரன்கள் எடுத்த விஜய் இந்தத் தொடரில் 482 ரன்களை 6,25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு தொடரில் இவரது சிறந்த ரன் குவிப்பாகும் இது. முன்னதாக 2012ஆம் ஆண்டு 4 டெஸ்ட்களில் 430 ரன்களை முரளி விஜய் எடுத்திருந்தார்.

 

 

மேலும், ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச மொத்த ரன்களும் முரளி விஜய்யின் 482 ரன்களே.

இது தவிர ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் 4 அரைசதங்களுடன் 5 அரைசதம் அல்லது அரைசதத்திற்கு கூடுதலான ரன்களை எடுத்தவர் என்ற விதத்திலும் புதிய இந்திய தொடக்க வீரருக்கான சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளார்.

டிரா ஆன டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 70.53. அதே போல் டிரா ஆன டெஸ்ட் போட்டிகளில் கோலி 1058 ரன்களை 9 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் 4 அரைசதங்கள் அடங்கும்.

 

 

இந்த டெஸ்ட் தொடரில் கோலி எடுத்தது 692 ரன்கள் (சராசரி 86.50). 4ஆம் நிலையில் களமிறங்கும் இந்திய வீரர்களில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை எடுத்துள்ளவர் தற்போது கோலியே. மேலும் டெஸ்ட் வரலாற்றில் 5-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும் இது. 1947-ல்டி.சி.எஸ். காம்ப்டன் தென் ஆப்பிரிக்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 753 ரன்களையும், 1952-52 தொடரில் இந்தியாவுக்கு எதிராக மே.இ.தீவுகள் வீரர் எவர்டன் வீக்ஸ் 716 ரன்களையும், 2003-04 டெஸ்ட் தொடரில் ஜாக் காலிஸ் மே.இ.தீவுகளுக்கு எதிராக 712 ரன்களையும், 1929-30 தொடரில் ஹெண்ட்ரன் என்ற வீரர் மே.இ.தீவுகளுக்கு எதிராக 693 ரன்களையும் எடுத்துள்ளனர்.

 

 

ஆஸ்திரேலியாவில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 992 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 62.00. இதில் 5 சதங்கள், 2 அரைசதங்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானங்களில் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்த 4-வது இந்திய வீரராவார். சச்சின் டெண்டுல்கர் 20 டெஸ்ட் போட்டிகளில் 1,809 ரன்களை 53.20 என்ற சராசாரியிலும், லஷ்மண் 15 டெஸ்ட் போட்டிகளில் 1236 ரன்களை 44.14 என்ற சராசரியிலும், ராகுல் திராவிட் 15 டெஸ்ட் போட்டிகளில் 1143 ரன்களை 43.96 என்ற சராசரியிலும் இதற்கு முன்னர் எடுத்துள்ளனர்.

 

 

நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 25 முறை ஒரு இன்னிங்ஸில் பவுலர்கள் 100 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறாகும். இதற்கு முன்னர் 1924-25-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பவுலர்கள் 23 முறை 100 ரன்களுக்கும் மேல் ஒரு இன்னிங்ஸில் விட்டுக் கொடுத்துள்ளனர்.

 

 

சுரேஷ் ரெய்னா தனது கடைசி 3 இன்னிங்ஸ்களில் ரன் எதையும் எடுக்கவில்லை. ஹேட்ரிக் ‘டக்’ அவுட்கள் ஆகியுள்ளார். சிட்னியில் 2 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன ரெய்னா, இதற்கு முன்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ஒவல் மைதானத்தில் (2011) இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ளார். 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். மொகீந்தர் அமர்நாத்திற்குப் பிறகு டாப் இந்திய பேட்ஸ்மென் ஒருவர் டெஸ்ட் வாழ்வில் இருமுறை இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ள வீரர் சுரேஷ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6775507.ece

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

சிட்னி டெஸ்ட்: ‘டிரா’ செய்தது இந்தியா
ஜனவரி 09, 2015.

 

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி ‘டிரா’ செய்தது. பொறுப்பாக ஆடிய முரளி விஜய் அரைசதம் கடந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 0–2 என ஏற்கனவே தொடரை இழந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 572/7 (டிக்ளேர்), இந்தியா 475 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் (251/6) இரண்டாவது இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்வதாக ஆஸ்திரேலிய அணி தெரிவித்தது. இதனையடுத்து, 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (16) ஏமாற்றினார். பின் இணைந்த முரளி விஜய், ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த போது வாட்சன் பந்தில் ரோகித் (39) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய முரளி விஜய், அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, ஹேசல்வுட் ‘வேகத்தில்’ முரளி விஜய் (80) நடையை கட்டினார். கேப்டன் விராத் கோஹ்லி (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். முதல் இன்னிங்சில் ‘டக்–அவுட்’ ஆன ரெய்னா (0), மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த விரிதிமன் சகா (0), அஷ்வின் (1) ஏமாற்றினர். பின் இணைந்த ரகானே, புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. ஆஸ்திரேலிய பந்துவீ்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டனர்.

 

 

ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 97 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனையடுத்து இப்போட்டி ‘டிரா’ ஆனது. அஜின்கியா ரகானே (38), புவனேஷ்வர் குமார் (20) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான், ஹேசல்வுட் தலா 2, ஷேன் வாட்சன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

இருப்பினும் நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2–0 என கைப்பற்றி கோப்பை வென்றது.

 

http://sports.dinamalar.com/2015/01/1420819475/IndiaAustraliaTestCricketSydney.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.