Jump to content

இம்சை அரசன் - 100வது நாள் விழாத்துளிகள்


Recommended Posts

* வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அபார வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதற்கான விழாவை தயாரிப்பாளர் ஷங்கரும், இயக்குனர் சிம்புதேவனும் "சந்தோஷப் பகிர்வு விழா" என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டாடினார்கள்.

* 6 மணிக்கு விழா ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கே விழா தொடங்கியது.

* இயக்குனர் சிம்புதேவன் அநியாயத்துக்கு சிம்பிளாக இருக்கிறார். தயாரிப்பாளர் ஷங்கர் "சிவாஜி" பட விஷயமாக பிஸியாக இருக்க விழா ஏற்பாடுகள் முழுவதையும் சிம்புதேவனே PRO நிகில் உதவியுடன் கவனித்திருக்கிறார்.

* மேடையின் பேக் டிராப்பாக வடிவேலு அட்டகாசமாக இம்சை அரசன் வேடத்தில் சிரிக்கும் படம் பெரிய அளவில் Flexல் போடப்பட்டிருந்தது.

* விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே நடிகர் சிவக்குமார் வந்திருந்து சிம்புதேவனுக்கும், ஷங்கருக்கும் பொக்கே கொடுத்து விட்டு அவசர அவசரமாக கிளம்பினார்.

* இயக்குனர் மனோபாலா, நடிகர் ராஜேஷ், நடிகர் தியாகு, நடிகர் இளவரசன், இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி, காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், இயக்குநர் லிங்குசாமி, புலவர் புலமைப்பித்தன், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், லதா ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

* படத்தில் பணியாற்றிய வடிவேலுவின் காமெடி செட் தோழர்கள் பாலபத்திர ஓணாண்டி, சிசர்ஸ் மனோகர் உட்பட பலவர் வந்திருந்தனர்.

* படத்தின் நாயகிகளில் ஒருவரான மோனிகா ப்ளூ கலர் காக்ரா சோளியுடன் கலக்கலாக வந்தார். அவருக்கு வயது 16 இருக்கலாம். செம கலராக சூப்பராக இருந்தார்.

* படத்தின் இன்னொரு நாயகியான தேஜாஸ்ரீ தான் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தார். பிங்க் கலர் புடவையில் சூப்பர் கவர்ச்சியுடன் வந்திருந்தார்.

* நிகழ்ச்சிகளை காமெடி நடிகர் சந்தானமும், அவரது லொள்ளு சபா சகா ஒருவரும் தொகுத்து வழங்கினர். அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

* மேடைக்கு சரியாக ஏழு மணிக்கு நடிகர் நாசர், பிரபு, விவேக், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனோரமா, வடிவேலு மற்றும் சத்யராஜ் வந்தார்கள். மேடையில் நாயகிகள் இருவருக்கும் கூட இடம் தரப்பட்டது. சீனியர் தொழில்நுட்ப கலைஞரான ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும், ஆர்தர் வில்சனுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மேடையில் இடம் கொடுத்திருக்கலாம்.

* நடிகர் விஜய் கொஞ்சம் கருப்பாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் என்னை மாதிரி கலராக கொஞ்சம் உயரமாகத் தான் இருக்கிறார்.

* விஜய், சூப்பர் ஸ்டார் இருவருக்கும் விசில் சத்தம் பலமாக இருந்தது. ஆனாலும் இந்த இருவரையும் மிஞ்சக்கூடிய அளவுக்கு விசில்சத்தம் விழாநாயகனான வடிவேலுக்குத் தான் கிடைத்தது. கையை ஸ்டைலாக எம்.ஜி.ஆர் பாணியில் ஆட்டியபடியே மேடைக்கு வந்தார். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இருக்கிறதோ, என்னவோ?

* வரவேற்புரையை புலவர் புலமைப்பித்தன் சுமார் 20 நிமிடம் நிகழ்த்தி வெறுப்பேற்றினார். வரவேற்புரை என்பதன் இலக்கணமே விழாவுக்கு வந்தவர்களை வரவேற்பது தான். இதில் இவரது "சமீபத்தில் 1965ல்" டைப் சுயபிரதாபம், நடிகர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு ஐஸ் என்று ஜவ்வடித்தார்.

* மேடையில் இருந்தவர்களில் சத்யராஜ், வடிவேலு மற்றும் விவேக் தவிர வேறு யாருக்கும் மேடையில் எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை. இவர்கள் மூவர் பேச்சை தவிர மற்றவர்கள் பேசாமல் இருந்திருந்தாலே இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

* விழாவில் ரொம்பவும் மகிழ்ச்சியாக தெரிந்தவர் நடிகர் விவேக் தான். தன் சகப் போட்டியாளரின் வெற்றியை ரொம்பவும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு பாராட்டினார். பின்னர் பேசிய மனோரமாவும் இதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

* விவேக் பேசும்போது "உயிருக்கு உயிர்" கொடுத்தவர் அண்ணன் வடிவேலு என்று "பொடி" வைத்துப் பேசினார். 'அண்ணன்' என்று சொன்னதுமே வடிவேலு வின்னர் ஸ்டைலில் விவேக்கை முறைக்க அரங்கம் அதிர்ந்தது.

* விழாவில் பேசிய அனைவருமே நாசரை "இரண்டாம் நம்பியார்" என்று வர்ணித்தார்கள்.

* பிரபு பேசியபோது அரசியலில் குதிக்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை என்றார். சென்ற வாரம் தான் பிரபுவின் சகோதரர் ராம்குமார் "பிரபு அரசியலில் குதிக்கப் போகிறார்" என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* சத்யராஜ் பேசியபோது சில பழைய ஆங்கில சரித்திரப் படங்களுக்கும், இம்சை அரசனுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட்டு இயக்குனர் சிம்புவையும், நடிகர் வடிவேலையும் பாராட்டினார். வழக்கம்போல தன் "பெரியார்" பட புராணத்தையும் பாடத் தவறவில்லை.

* வடிவேலு பேசும்போது படத்திற்காக தாங்கள் பட்ட இன்னல்களை விரிவாக நகைச்சுவையாக எடுத்துரைத்தார். "மயிறு", "பட்டக்ஸ்" போன்ற வார்த்தைகளை கொஞ்சமும் கூச்சமில்லாமல் படத்தில் பயன்படுத்துவதைப் போலவே எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக உபயோகித்தார். மன்னர் வேடம் போடும்போது காஸ்ட்யூமர்கள் படுத்தும் பாட்டை நகைச்சுவையாக வர்ணித்தார். அந்த உடை போட்டிருக்கும் போது "ஒண்ணுக்கு" கூட போக முடியாதாம். படம் எடுத்து முடித்தும் கூட வெளிவருவதில் இருந்த சிக்கல் என்ன என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரச்சினையை முடிக்க நடிகர் தியாகு உதவியுடன் கலைஞரை சந்தித்தது வரை வெளிவராத பல தகவல்களை சொன்னார்.

* நாயகிகள் தேஜாஸ்ரீயும், மோனிகாவும் சன் மியூசிக் காம்பியரர்கள் ஸ்டைலில் தலா அரை நிமிடம் பேசினார்கள்.

* நடிகர் ராஜேஷ், லிங்குசாமி, இயக்குனர் பாலாஜி சக்திவேல் போன்றவர்களும் மைக் கிடைத்ததற்காக தலா 5 நிமிடம் பிளேடு போட்டார்கள்.

* ரஜினி பேசியபோது கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் சிம்பு, ஷங்கர், வடிவேலு மூவரோடு ஒப்பிட்டுப் பேசினார். ஒப்பிடுதல் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. பேச்சிலும் சுத்தமாக காரமில்லாமல் காஞ்சிப்போன மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தது.

* சிம்புதேவன் (32 வயசு தானாம்) ரொம்பவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும் மைக்கை பிடித்ததுமே ரொம்ப இயல்பாகப் பேசினார். அவருடன் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவருக்கு படசான்ஸ் கிடைத்திருப்பதைப் பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். படத்தில் தன் பங்கு 1 சதவிகிதம் தான் என்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் பங்கு தான் 99 சதவிகிதம் என்றும் அடக்கமாகப் பேசினார்.

* இயக்குனர் ஷங்கர் தனக்கு மேடையில் பேசத்தெரியாது என்று பொய் சொல்லிவிட்டு அருமையாகப் பேசினார். சிம்புதேவன் சொன்னதைப் போல படத்தின் வெற்றியில் தனக்கு 99 சதவிகிதம் பங்கெல்லாம் இல்லை என்று மறுத்தவர் தனக்கு 1 சதம் பங்கு மட்டுமே உரியது. மீது 99 சதவிகிதமும் சிம்புத்தேவனையே சாரும் என்று ஒரு போடு போட்டார். தயாரிப்பாளர் என்ற முறையில் படம் வெளிவர உதவி புரிந்த கலைஞர், வனத்துறை அமைச்சர் ராஜா மற்றும் நடிகர் தியாகு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

* படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஷீல்டுகள் வழங்கப்பட்டது. வி.எஸ். ராகவன், மதுரம் போன்ற பழம்பெரும் கலைஞர்களும் விருது பெறும்போது பரவலான கைத்தட்டல் சத்தம் எழுந்தது. நாகேஷ் சார்பில் மனோரமாவே ஷீல்டினை பெற்றுக் கொண்டார்.

* விழா தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து தேசியகீதத்துடன் சுமார் 10.30 மணிக்கு இனியதாகவே முடிந்தது.

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

ம்ம்ம் இந்த கலர் பாக்கிறத எல்லாம் விட்டிட்டு வேறு நாடு போகின்றீர்களாமே? வாழத்துகள் எங்கு இருந்தாலும் யாழுடன் இனைந்து இருங்கள்...

Link to comment
Share on other sites

ம்ம்ம் இந்த கலர் பாக்கிறத எல்லாம் விட்டிட்டு வேறு நாடு போகின்றீர்களாமே? வாழத்துகள் எங்கு இருந்தாலும் யாழுடன் இனைந்து இருங்கள்...

யாருப்பா இதுமாதிரி கிசு கிசு எல்லாம் பரப்புறது?

சொர்க்கமே என்றாலும் அது

மடிப்பாக்கம் போல ஆகுமா? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

Link to comment
Share on other sites

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

Link to comment
Share on other sites

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

Link to comment
Share on other sites

யாருப்பா இதுமாதிரி கிசு கிசு எல்லாம் பரப்புறது?

சொர்க்கமே என்றாலும் அது

மடிப்பாக்கம் போல ஆகுமா? :lol::lol::lol:

சிட்னி அன்னதானத்திலும் உங்களை பற்றி தான் கதை நீங்கள் எப்ப போறீங்கள்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

சென்னை சொர்க்கம் என்று தெரிச்சு தானே உங்களை வெளியே அனுபுறம்லே :P

ஆனாலும் நல்ல இருந்திச்சு உங்கள் விமர்சனம் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நாரதர் மாம்பழம் கொண்டு செல்லாத இடத்துக்கு லக்கி போகப்போவதாக அன்னதானத்தில் கேள்விப்பட்டேன்

Link to comment
Share on other sites

யாழ்கள நாரதர் மாம்பழம் கொண்டு செல்லாத இடத்துக்கு லக்கி போகப்போவதாக அன்னதானத்தில் கேள்விப்பட்டேன்

இல்லை ஐயா. சென்னையை விட்டு எங்கேயும் போவதாக இல்லை. ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதுமாதிரி ஒரு திட்டம் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.