Jump to content

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்


Recommended Posts

உலகக்கிண்ண பங்களாதேஷ் அணி

உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்காளதேஷ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு செய்து அறிவித்துள்ளது.

சகலதுறை வீரரான சௌமியா சர்கார், புதிய வீரராக அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் சிம்பாவே அணியுடன் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். நசிர் ஹொசைன், டஸ்கின் அஹமட் ஆகியோர் சிம்பாவே தொடரில் விளையாடாத வீரர்கள் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அணித் தலைவர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. மஸ்ரபி மோர்த்தாசா தலைவராகவும் சகிப் அல்-ஹசன் உப தலைவராகவும் அறிவிக்கப்படுவர் என நம்பப்படுகின்றது.

 

 

அணியை தெரிவு செய்யும் போது உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நினைப்பிலேயே தெரிவு செய்வோம். ஆனாலும் நடைமுறை சாத்தியம் என்று ஒன்று உள்ளது. அதன்படி பங்களாதேஷ் அணியிலும் பார்க்க பலம் குறைந்த அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளை வெற்றி பெறவேண்டும். அத்துடன் நியூசிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்றையாவது வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. முடிந்தால் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இந்த அணியை தெரிவு செய்துள்ளோம் என தெரிவுக்குழுவின் தலைவர் பரூக் அஹமட் தெரிவித்துள்ளார்.

 

அணி விபரம்
தமிம் இக்பால், அனாமல் ஹக், சௌமியா சர்கார், மொமியுனல் ஹக், சகிப் அல் ஹசன், முஸ்பிகீர் ரஹீம், மஹமதுல்லா, நசீர் ஹொசைன், சபீர் அஹமட், மஷ்ரபீ மோர்தாசா, தஸ்கின் அஹமட், அல் அமின் ஹொசைன், ரூபல் ஹொசைன், அரபாத் சன்னி, டைஜுல் இஸ்லாம்

- See more at: http://www.tamilmirror.lk/136983#sthash.wpoxztA8.dpuf

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: பின்னி, அக்சருக்கு வாய்ப்பு
 

 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட அணி விவரம்:

 

தோனி (கேப்டன்)

 

ரோஹித் சர்மா

 

ஷிகர் தவன்

 

விராட் கோலி

 

அம்பாத்தி ராயுடு

 

சுரேஷ் ரெய்னா

 

அஜிங்கிய ரஹானே

 

மொகமது ஷமி

 

ஸ்டூவர்ட் பின்னி

 

ரவீந்திர ஜடேஜா

 

அக்சர் படேல்

 

இஷாந்த் சர்மா

 

புவனேஷ் குமார்

 

அஸ்வின்

 

உமேஷ் யாதவ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6760174.ece

Link to comment
Share on other sites

உலக கிண்­ணத்­தொ­ட­ருக்­கான இலங்கைக் குழாம் இன்று அறி­விப்பு
 

 

அவுஸ்­தி­ரே­லிய மற்றும் நியூ­ஸி­லாந் தில் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள உலக கிண்­ணத்தொ­ட­ருக்­கான 15பேர் கொண்ட இலங்கைக் குழாம் இன்­றைய தினம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இலங்கை கிரிக்கெட் சபை கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடை­பெறும் ஊடக­வி­ய­லாளர் மாநாட்டில் இக்­குழாம் தொடர்­பான விபரம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் சபையின் தொடர்­பா­டல் முகா­மை­யாளர் ரஞ்சித் பெர்­னாண்டோ குறிப்­பிட்­டுள்ளார்.

 

நடை­பெ­ற­வுள்ள உலக கிண்­ணத்­தொ­ட­ருடன் இலங்கை அணியின் முன்னாள் தலை­வர்­க ளும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர்­க­ளு­­மான மஹேல ஜெய­வர்த்­தன, குமார் சங்கக்­கார ஆகியோர் விடை­பெ­ற­வுள்­ளனர். குறிப்­பாக மஹேல ஜெய­வர்த்­தன சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/01/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%8A%C2%AD%E0%AE%9F%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Link to comment
Share on other sites

உலக கோப்பைக்கான பாக். வீரர்கள் லிஸ்டில் சானியா கணவருக்கு நோ என்ட்ரி, சர்ச்சை பவுலர் ஹபீஸ் சேர்ப்பு!

 

 

இஸ்லாமாபாத்: அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. பந்தை எறிவதாக தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஹபீசும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரம் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று மதியம், அந்த நாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

 

  அணி வீரர்கள் விவரம்:

 

மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாட், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, யூனிஸ் கான், ஹரீஷ் சொகைல், உமர் அக்மல், சோயிப் மக்சூட், அப்ரிடி, யாசிர் ஷா, முகமது இர்பான், ஜுனைட் கான், ஈசான் அடில், சொகைல் கான், வகாப் ரியாஸ்.

 

இந்த பட்டியலில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது குல்லுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் உலக கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அதேபோல ஆல் ரவுண்டரும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவருமான சோயிப் மாலிக்கிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

 

அதிரடி வீரர் கம்ரான் அக்மலுக்கும் கல்தா தரப்பட்டுள்ளது. அதே நேரம் மூத்த வீரர்கள் யூனிஸ்கான், உமர் அக்மல், அப்ரிடி ஆகியோருடன் மிஸ்பா உல் ஹக்கும் கை கோர்த்துள்ளார். இந்தியாவை போலவே, பாகிஸ்தானிலும் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக ஆடப்போகும் வீரர்கள்தான் அதிகம்பேர் உள்ளனர். பாகிஸ்தானின் அணி தேர்வு இரு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, முகமது ஹபீசின் தேர்வாகும். இவர் பந்தை எறிவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் தடை செய்யப்பட்ட வீரர். சென்னையில் சமீபத்தில் அவரது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதும், அவர் பந்தை எறிவதாகவே ரிசல்ட் வந்தது.

 

அந்த சர்ச்சை இருக்கும் நிலையிலும், ஐசிசியை கண்டுகொள்ளாமல் ஹபீசை பாகிஸ்தான் தேர்வு குழு தேர்வு செய்துள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக ஹபீஸ் தன்மீது தவறு இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே, களத்தில் இறங்க முடியும் என்பதால் அவரது தேர்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேபோல, சொகைல் கான் தேர்வும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சொகைல் கான், கடைசியாக 2011ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதோடு சரி. அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடவேயில்லை. இந்திய அணியில் திடீரென ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டதைபோலவே, பாகிஸ்தானில் சொகைல் கான் உள்ளே வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/team-pakistan-icc-cricket-world-cup-2015-announced-218519.html

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அறிவிப்பு: ஜனித் பெரேரா நீக்கம், சச்சித்திர சேர்ப்பு
 

 

அவுஸ்­தி­ரே­லிய மற்றும் நியூ­ஸி­லாந்தில் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள உலக கிண்­ணத்தொ­ட­ருக்­கான 15பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபை கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடை­பெற்ற ஊடக­வி­ய­லாளர் மாநாட்டிலேயே உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணி தொடர்­பான விபரம் அறி­விக்­கப்­ப­ட்டது.

 

அந்தவகையில் அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் உப அணித் தலைவராக லஹிரு திரிமன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, திலகரட்ன டில்சான் தினேஸ் சந்திமால், திமுது கருணாரட்ன, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாத், நுவான் குலசேகர, ரங்கன ஹேரத் மற்றும் சச்சித்திர சேனாநாயக்க ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 

இதேவேளை கடந்த காலத் தொடர்களில் பிரகாசிக்கத் தவறிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித்பெரேரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/01/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Link to comment
Share on other sites

கிண்ணத்தை வெல்ல மிகச் சிறந்த அணி தெரிவு: சனத் ஜயசூரிய
 

 

உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி கிண்ணத்தை வெல்வதற்கு மிகச் சிறந்த அணி என தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடை­பெற்ற ஊடக­வி­ய­லாளர் மாநாட்டிலேயே தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியா இதனைத் தெரிவித்தார்.

 

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலேயே 15 பேர் அடங்கிய உலகக்கிண்ணத்திற்கான குழாமை தெரிவு செய்துள்ளோம். நியூசிலாந்திலுள்ள அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து மற்றும் பிரமோதயவிக்கிரமசிங்க ஆகியோருடன் ஸ்கைப் வழியாக தொடர்பையேற்படுத்தியே கலந்துரையாடல்களின் பின்னரே இம் முடிவை எடுத்தோம்.

 

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமானது அதிசிறந்தது என நாம் நம்புவதுடன் எமதணி உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு செல்லும் என நம்புவதுடன் கிண்ணத்தை மீண்டுமொருமுறை கைப்பற்றுவதே எம் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

 

7 துடுப்பாட்ட வீரர்கள், 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சகலதுறை ஆட்டக்காரர்களை கொண்ட எமது அணி சமபலத்தை கொண்டுள்ளது.
நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திமுத் கருணாரடண சிறப்பாக செயற்பட்டதால் அவரை அணிக்குள் உள்வாங்கியுள்ளோம்.

 

சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஓய்விலுள்ள லசித் மலிங்க நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் இறுதி இரு போட்டிகளிலும் பங்கெடுப்பார் என எதிர்பார்ப்பதோடு உலகக் கிண்ணத் தொடரில் முழுத்தகுதி பெற்று அணியின் வெற்றிக்கு பங்களிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

நுவான் பிரதீப் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக செயற்பட்டுள்ளபோதும் நுவான் குலசேகரவின் அனுபவத்தையும் அண்மைக்கால வெளிப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டும் புற்தரை ஆடுகளங்களில் ஸ்விங் முறையிலாக பந்து வீச்சில் பிரகாசிப்பார் என்ற எதிர்பார்பிலுமே குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/01/07/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

 

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மலிங்கா
 

 

உலகக்கோப்பை போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் காயமடைந்துள்ள லஷித் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதாவது, உடற்தகுதியில் தேறினால் அவர் விளையாடலாம் என்ற நிபந்தனை அடிப்படையில் மலிங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

15 வீரர்கள் கொண்ட இலங்கையின் உலகக் கோப்பை அணி வருமாறு:

 

அஞ்சேலோ மேத்யூஸ் (கேப்டன்), திலகரத்ன தில்ஷன், குமார் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனே. லாஹிரு திரிமன்ன (துணை கேப்டன்), தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னே, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, சுரங்க லக்மல், லஷித் மலிங்கா (உடற்தகுதி பெற்றால்), தம்மிக பிரசாத், நுவன் குலசேகரா, ரங்கன்னா ஹெராத், சசித்ர சேனநாயக.

 

உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 29-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

 

அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றனர்.

 

பிப்ரவரி 14-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை களமிறங்குகிறது. இந்தப் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது.

 

பிரிவு ஏ-யில், இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6764322.ece

Link to comment
Share on other sites

தென் ஆபிரிக்கா உலகக்கிண்ண அணி

இம்முறை உலகக்கிண்ணத்தை இவர்கள்தான் வெல்வார்கள் என்ற அதிக நம்பிக்கையுடைய அணியாக வந்து, இவர்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று சொல்லுமளவுக்கு இறுதிப் போட்டி பக்கமே பார்க்காமல் வெளியே சென்று விடுவார்கள் தென் ஆபிரிக்கா அணியினர். இம்முறையும் அதே நிலைமைதான். அணியின் சமநிலை, வீரர்களின் நிலைமை என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்த அணி இலகுவாக இந்த தொடரைக் கைப்பற்றும் என்றே கூற முடியும். ஆனாலும் எந்த விமர்சகரும் இந்த அணியை நம்பி அப்படி ஒரு கருத்தை முன்வைக்க மாட்டார்கள்.

 

அவர்களின் ஆரம்ப நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை இருந்தும் அணியில் இணைத்துள்ளனர். அவரின் அதிரடி ஆரம்பம் தென் ஆபிரிக்கா அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். முதல் இரண்டு போட்டிகளிலும் AB DE வில்லியர்ஸ் விக்கெட் காப்பில் ஈடுபட, ரிலி ரொசொவ் அல்லது பர்ஹான் பெஹைர்டீன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளனர்.

 

உபாதை காரணமாக அண்மையில் போட்டிகளில் பங்குபற்றாத JP டுமினி, மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். சகலதுறை வீரராக அணியில் இடம் பிடித்து இருந்த ரயன் மக்லரன், அணியில் இருந்து நீக்கப்படுள்ளார். நல்ல தரமான சகலதுறை வீரர்களுடன் களமிறங்கும் தென் ஆபிரிக்கா அணி, ஒரு சகலதுறை வீரர் கூட இன்றி இம்முறை உலகக்கிண்ண தொடரில் களமிறங்கவுள்ளது. பலமான வேகப்பந்து வீச்சு மூவரும் அணியில் இருக்கும் அதேவேளை, வெர்னொன் பிலான்டரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணி விபரம்

AB DE வில்லியர்ஸ், ஹாசிம் அம்லா, கைல் அப்போர்ட், பர்ஹான் பெஹைர்டீன், குயின்டன் டி கொக், JP டுமினி, பப் டு பிலேசிஸ், இம்ரான் தாகிர், டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், வேய்ன் பார்னல், ஆரோன் பங்ஹிசோ, வேர்ணன் பிலான்டர்

- See more at: http://www.tamilmirror.lk/137197#sthash.mq2Muytq.dpuf

Link to comment
Share on other sites

கடும் சவாலாகத் திகழவிருக்கும் நியூசிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு
 

 

2015 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் போன்ற திறமை மிக்க வீரருக்கே அந்த அணியில் இடமில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆனால், ஆல்ரவுண்டர் கிராண்ட் எலியட் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013, நவம்பரில் இவர் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியில் கிராண்ட் எலியட் தவிர, டேனியல் வெட்டோரி, கோரி ஆண்டர்சன், நேதன் மெக்கல்லம் ஆகியோர் உள்ளனர்.

 

 

மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை பேட்ஸ்மென்கள் மீது மோதவிடும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, 2014ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவருக்கும் இடமில்லை.

வேகப்பந்து வீச்சிற்கு டிரெண்ட் போல்ட், டிம் சவுதீ, மெக்ளீனகன், மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஆடம் மில்னா ஆகியோருடன் மதிப்புமிக்க அனுபவம் பெற்ற கைல் மில்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 

 

பேட்டிங்கில் அதிரடி வீரர்களான கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், டாம் லாதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு காலக்கட்டத்தில் விளையாடிய லூக் ரோஞ்சி இடம்பெற்றுள்ளார்.

அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸான் அறிவித்த 15 வீரர்கள் கொண்ட நியூசி. அணி வருமாறு:

 

பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், கிராண்ட் எலியட், டாம் லாதம், மார்டின் கப்தில், மிட்செல் மெக்ளீனகன், நேதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னா, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், டிம் சவுதீ, லூக் ரோஞ்சி, ராஸ் டெய்லர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6768114.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிராவோ, போலார்டுக்கு ‘கல்தா’
ஜனவரி 09, 2015.

 

பெங்களூரு: வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை அணியில் இருந்து டுவைன் பிராவோ, போலார்டு கழற்றி விடப்படுவர் என்று தெரிகிறது.    

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் அணி வீரர்கள் விவரம் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படுகிறது.         

   

அதேநேரம், வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை அணி மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் (டபிள்யு.ஐ.சி.பி.,) ஏற்பட்ட சம்பள ஒப்பந்த பிரச்னை காரணமாக, இந்தியாவுக்கு எதிரான தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு கிளம்பியதில் டுவைன் பிராவோ உள்ளிட்ட சிலருக்கு பங்கிருக்கும் என்று பேசப்படுகிறது.     

       

இதையடுத்து, இந்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் தொடரில் டுவைன் பிராவோ, போலார்டை புறக்கணித்து, ‘டுவென்டி–20’ அணியில் மட்டும் சேர்த்தனர்.            

தற்போது, உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியிலும், டுவைன் பிராவோ, போலார்டு சேர்க்கப்பட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.           

 

இதை, 2001 முதல் 2012 வரை வீரர்கள் சங்கத் தலைவராக இருந்த ராம்நரைன் உறுதி செய்துள்ளார். டபிள்யு.ஐ.சி.பி., இன்னும் முறைப்படி அணியை அறிவிக்காத நிலையில், ராம்நரைன் கூறியது வியப்பு ஏற்படுத்தியுள்ளது.           

தவிர, இந்தச் செய்தியை டபிள்யு.ஐ.சி.பி., உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.

 

http://sports.dinamalar.com/2015/01/1420814702/DwayneBravoKieronPollardWestIndiesWorldCupCricket.html

Link to comment
Share on other sites

உலக கோப்பை அணி: மீண்டும் கிளார்க் கேப்டன்
ஜனவரி 11, 2015.

 

 

சிட்னி: உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் அவதிப்படும் மைக்கேல் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் அடுத்த மாதம் 21ம் தேதிக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் காயத்தால் (தோள்பட்டை) அவதிப்படும் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்ற இவர், காயத்தால் அடுத்த மூன்று போட்டிகளில் விலகினார். இதனால், ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். காயம் இன்னும் குணமாகாக நிலையில், கிளார்க்கிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

 

தோகர்டிக்கு வாய்ப்பு:

மற்றபடி பெய்லி, வார்னர், வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், ஹேசல்வுட் இடம்பிடித்துள்ளனர். சுழல் வீரர் தோகர்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

நிரூபிக்க வேண்டும்:

இது குறித்து ஆஸ்திரேலிய அணி தேர்வாளர் ரோட் மார்ஷ் வெளியிட்ட செய்தியில்,‘‘ உலக கோப்பை அணியில் கேப்டன் பொறுப்பை கிளார்க் ஏற்றுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான (பிப்.,21) போட்டிக்கு முன்பாக, கிளார்க் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இல்லை எனில், இவருக்குப்பதில் வேறு வீரர் தேர்வு செய்யப்படுவார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒருவேளை, கிளார்க் பங்கேற்கவில்லை எனில், கேப்டன் பொறுப்பை பெய்லி ஏற்கலாம்.

 

அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), பெய்லி (துணை கேப்டன்), கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாடின், ஹேசல்வுட், மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், ஸ்டார்க், வார்னர், வாட்சன்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420957980/clarkeaustralia.html

Link to comment
Share on other sites

டிவைன் பிராவோ, பொலார்டு நீக்கம்: உலகக் கோப்பைக்கு மே.இ.தீவுகள் அதிர்ச்சித் தேர்வு
 

 

உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் கெய்ரன் பொலார்டு மற்றும் டிவைன் பிராவோ தேர்வு செய்யப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜெசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டதும், கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. மர்லன் சாமுயெல்ஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஆனால், டேரன் பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் பலருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

 

15 வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகள் அணி வருமாறு:

 

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்)

 

மர்லன் சாமுயெல்ஸ் (துணை கேப்டன்)

 

சுலைமான் பென்

 

டேரன் பிராவோ

 

ஜொனாதன் கார்ட்டர்

 

ஷெல்டன் காட்ரல்

 

கிறிஸ் கெயில்

 

சுனில் நரைன்

 

தினேஷ் ராம்தின் (விக்.கீப்பர்)

 

கிமார் ரோச்

 

ஆந்த்ரே ரசல்

 

டேரன் சமி

 

லெண்டில் சிம்மன்ஸ்

 

டிவைன் ஸ்மித்

 

ஜெரோம் டெய்லர்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article6780570.ece

Link to comment
Share on other sites

தகுதியின் அடிப்படையிலேயே அணித்தேர்வு: மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம்
 

 

உலகக்கோப்பை அணியில் ஆல்ரவுண்டர்கள் பொலார்ட், டிவைன் பிராவோ ஆகியோர் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படவில்லை என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகசாதனை துரத்தலுக்குப் பிறகு நேற்று உலகக்கோப்பைக்கான மேற்கிந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிரடி ஆல்ரவுண்டர்களான கெய்ரன் பொலார்ட் மற்றும் டிவைன் பிராவோ இடம்பெறவில்லை. இதன் மூலம் பொலார்டின் அபாரமான ஃபீல்டிங் திறமைகளை இந்த உலகக் கோப்பை இழந்துள்ளது. டிவைன் பிராவோவின் ஆல் ரவுண்ட் திறமைகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் இழக்கின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான அணி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்று வாரியத்தலைவர் கூறியுள்ளார்.

 

 

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஊதிய பிரச்சினை காரணமாக பாதியிலேயே கைவிட்டதற்கு டிவைன் பிராவோ, பொலார்ட் காரணம் என்று அவர்களை தண்டிக்கும் விதமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று கிறிஸ் கெய்ல் மற்றும் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

"இதன் மூலம் நாங்கள் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். கிரிக்கெட் அல்லாத காரணங்கள் கூறப்படுகிறது. இது குறித்து நாங்கள் பணிக்குழுவின் அறிக்கையின் படி நடந்து கொண்டோம். நேற்று வாரியக்கூட்டம் நடந்தது, அதில் பணிக்குழுவின் அறிக்கையைப் பரிசீலனை செய்து, அறிக்கையின் பரிந்துரைகளை அமல் செய்ய முடிவெடுத்தோம்” என்றார்.

 

 

இந்திய பயணம் பாதியிலேயே முடிந்ததற்குக் காரணம் என்னவென்று ஆராய இந்தக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரனெடா பிரதமர் ரால்ஃப் கொன்சால்வேஸ் வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பிரச்சினைகளில் தலையிட்டு ஒப்பந்தம் செய்ய உதவி புரிந்தார்.

இந்நிலையில், அவர் வாரியத் தலைவர் டேவ் கேமரூனுக்கு எழுதிய 2 பக்க கடிதத்தில், பிராவோ, பொலார்ட் நீக்கம் ஒரு பழிவாங்கும் செயலே என்றும், பாகுபாடும், பலிகடா ஆக்கப்படும் மனநிலைக்கான செயல் என்றும், கிரிக்கெட் ஆட்ட தகுதியின் அடிப்படையில் அணித் தேர்வு அமையவில்லை என்றும் சாடியிருந்தார்.

ஆனாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும், ஒருநாள் தரவரிசையில் மே.இ.தீவுகள் 8ஆம் இடத்தில் உள்ளது, இதனை சரிசெய்யவே அணித் தேர்வு என்றும் டேவ் கேமரூன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

பிராவோ, பொலார்ட் இடையே 255 ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அனுபவம் இருக்கிறது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அவர்கள் நன்றாகவே பங்களிப்பு செய்துள்ளனர் என்று கூற முடியும். ஆனாலும் பழிவாங்கும் செயலுக்கு மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் ‘தகுதி’ என்பதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அரங்கில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6780956.ece

Link to comment
Share on other sites

பிராவோ, பொலார்ட் நீக்கம்: கிறிஸ் கெய்ல் கடும் தாக்கு
 

 

மே.இ.தீவுகள் உலகக்கோப்பை அணியில் டிவைன் பிராவோ, பொலார்ட் தேர்வு செய்யப்படாதது பழிவாங்கும், கேலிக்குரிய செயல் என்று அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடுமையாக சாடியுள்ளார்.

"அந்த இரு வீர்ர்களை எப்படி தேர்வு செய்யாமல் இருக்க முடியும்? என்னைப் பொறுத்தவரையில் இது பழிவாங்கும் செயல், பலிகடாக்களாக்கும் செயல், இது கேலிக்குரியது, இழிவானது. உண்மையில் இது என்னை மிகவும் காயப்படுத்துகிறது.

நேர்மையாக் கூற வேண்டுமெனில் என்னை இந்த முடிவு தூக்கி எறிந்து விட்டது. நம்மால் பேச மட்டுமே முடியும், நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தலாம், அதைத்தான் இத்தருணத்தில் நான் செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் வருந்தத்தக்க செய்தி.

 

 

அவர்களுடன்தான் எங்கள் அணி ஒரு பெரிய பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. இந்த அணி பலமானது அல்ல. 2 பெரிய வீரர்களை இழப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள், சிறந்த பீல்டர்கள். இதன் பின்னணியில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த அணித்தேர்வு கேலிக்குரியது என்றே நான் கருதுகிறேன்.

 

 

எங்கள் கிரிக்கெட் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இத்தகைய நிலை வருந்தத்தக்கது. டி20 கிரிக்கெட் தொடரை பொலார்ட், பிராவோவுக்காக வென்றோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறென்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிராவோ என்னிடம் கூறியது என்னவெனில், அடுத்த உலகக் கோப்பைக்காக அணியை மறுகட்டுமானம் செய்ய இந்த உலகக் கோப்பைக்கு இந்த அணியைத் தேர்வு செய்ததாகக் கூறினார். இதன் மூலம் அவர்கள் தெரிவிக்கும் செய்தி என்னவெனில்: இந்த உலகக்கோப்பையை நாங்கள் வெல்லப்போவதில்லை..அதனால் அடுத்த உலகக்கோப்பைக்கு அணியை உருவாக்குகிறோம்... இது உண்மையில் கேலிக்குரியதாகும்.”

இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6781272.ece

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப காத்திருக்கும் 14 அணிகள் தயார்
 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் உலகக்கிண்ண போட்டித் தொடர் பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 29ம் திகதி முடிவடைகிறது.

இந்த தொடரில் அவுஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.

அதன்படி உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளும்,பெயர் விபரங்களும்,


ஆப்கானிஸ்தான்

முகம்மது நபி (அணித்தலைவர்), நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டானிக்ஸாய், சைமுல்லா ஷென்வாரி, அப்சர் சசாய் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஜர்தான், நசீர் ஜமால், மீர்வைஸ் அஷ்ரப், குல்பதின் நயீப், ஹமீத் ஹசன், ஷபூர் சர்தான், தவ்லத் சத்ரான், அப்தாப் ஆலம், ஜாவேத் அகமதி, உஸ்மான் கனி.

அவுஸ்திரேலியா

மைக்கேல் கிளார்க் (அணித்தலைவர்), ஜார்ஜ் பெய்லி, டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஷான் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், பிராட் ஹாடின், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், ஜேம்ஸ் பால்க்னர், மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸல்வுட், பாட் கமின்ஸ், ஜேவியர் டோஹர்த்தி.

வங்கதேசம்

மஷ்ரப் மொர்தஸா (அணித்தலைவர்), தமீம் இக்பால், அனாமுல் ஹக், சோம்யா சர்க்கார், மொமிமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகர் ரஹீம், மெகமதுல்லா, நசீர் ஹூசேன், சபீர் ரஹ்மான், டஸ்கின் அகமது, அல் அமீன் ஹூசேன்,ரூபல் ஹூசேன், அராபத் சன்னி, தைஜுல் இஸ்லாம்.

இங்கிலாந்து

இயான் மோர்கன் (அணித்தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ்,இயான் பெல், ரவி போபரா,ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜாோர்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்லர், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

இந்தியா

எம்.எஸ்.டோனி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஸ்டூவர்ட் பின்னி.

அயர்லாந்து

வில்லியம் போர்ட்டர் பீல்ட் (அணித்தலைவர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, பீட்டர் சேஸ், அலெக்ஸ் குசக், ஜார்ஜ் டாக்ரெல், எட் ஜாய்ஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், ஜான் மூனி, டிம் முர்த்கா, கெவின் ஓ பிரையன், நியால் ஓ பிரையன், பால் ஸ்டர்லிங், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கேரி வில்சன், கிரேக் யங்.

நியூசிலாந்து

பிரென் மெக்கல்லம் (அணித்தலைவர்), டிரென்ட் போல்ட், கிரான்ட் எல்லியாட், டாம் லோதம், மார்ட்டின் குப்தில்,மிட்சல் மெக்ளேனகன், நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, டேணியல் வெட்டோரி, கனே வில்லியம்சன்,கோரி ஆண்டர்சன், டிம் செளதீ, லூக் ரோஞ்சி, ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் அணி

மிஸ்பா உல் ஹக் (அணித்தலைவர்), அகமது செஷாத், முகம்மது ஹபீஸ், சர்பிராஸ் அகமது, யூனிஸ் கான், ஹாரிஸ் சோஹைல், உமர் அக்மல், சோஹைப் மக்சூத், ஷாஹித் அப்ரிதி, யாசிர் ஷா, முகம்மது இர்பான், ஜூனைத் கான்,ஈசான் ஆடில், சோஹைல்கான். வஹாப் ரியாஸ்.

ஸ்காட்லாந்து

பிரெஸ்டன் மாம்சன் (அணித்தலைவர்), கைல் கோயட்ஸர், ரிச்சி பெர்ரிங்டன், பிரடெரிக் கோல்மேன், மாத்யூ கிராஸ், ஜோஷுவா டேவி, அலஸ்டர் இவான்ஸ், ஹமீஷ் கார்டினிர், மஜீத் ஹக், மிக்கல் லீஸ், மாட் மேச்சன், காலம் மெக்லியாட், சப்யான் ஷெரீப், ராபர்ட் டெய்லர், இயான் வார்ட்லா.

தென் ஆப்பிரிக்கா

டி வில்லியர்ஸ் (அணித்தலைவர்), ஹஷீம் அம்லா, கைல் அப்பாட், பர்ஹான் பெஹர்தியன், குவின்டன் டி காக், ஜே.பி. டுமினி, பாப் டு பிளஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மார்னி மார்க்கல், வேயன் பர்னல், ஆரோன் பாங்கிசோ, வெர்னான் பிலான்டர், ரைலி ரோஸ்ஸோ, டேல் ஸ்டெயின்.

இலங்கை

அஞ்சலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), திலகரத்னே டில்ஷான், குமார் சங்கக்காரா, மஹலே ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, திணேஷ் சண்டிமல், திமுத் கருணாரத்னே, ஜீவன் மென்டிஸ், திசரா பெரைரா, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, தம்மிகா பிரசாத், நுவன் குலசேகரா,ரங்கண ஹெரத், சசித்ரா சேனனாயகே.

மேற்கிந்தியத் தீவுகள்

ஜேசன் ஹோல்டல் (அணித்தலைவர்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கெய்ல், சுனில் நரீன், திணேஷ் ராம்தின், கெமர் ரூச், ஆண்டி ருஸ்ஸல், டேரன் சமி,லென்டில் சிம்மன்ஸ், வேயன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

முகம்மது தாக்கிர் (அணித்தலைவர்),குர்ரம் கான், ஸ்வப்னில் பாட்டீல், சக்லைன் ஹைதர், அம்ஜத் ஜாவேத், ஷைமான் அன்வர், அம்ஜத் அலி, நஸீர் அஜீஸ், ரோஹன் முஸ்தபா, மஞ்சுள குருகே, ஆண்ட்ரி பெரெங்கர், பஹத் அல் ஹஷ்மி, முகம்மது நவீத், கம்ரான் ஷஷாத், கிருஷ்ணா கராத்தே.

ஜிம்பாப்வே

எல்டன் சிகும்பரா (அணித்தலைவர்), சிக்கந்தர் ரஸா, ரெஜிஸ் சகப்வா, டெண்டாய் சதாரா, சமு சிபபா, கிரேக் எர்வின், டபட்ஸ்வா கமுங்கோஸி, ஹாமில்டன் மஸகட்ஸா, ஸ்டூவர்ட் மட்சிகென்யேரி, சாலமோன் மைர், டவன்டா முப்பரிவா, டினாஷே பன்யங்கரா, பிரென்டன் டெய்லர், பிராஸ்பர் உத்சயா, சீன் வில்லியம்ஸ்.

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=399743804012870670#sthash.53gEHtxG.dpuf

Link to comment
Share on other sites

உலக கோப்பை: இந்தியா- பாக். மோதலைப் பார்க்கத் தயாராகும் 200 கோடி கண்கள்!

 

சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள போட்டியை உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க ஆர்வமுடன் உள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கிரிக்கெட் போட்டியை அதிகம் ரசிகர்கள் பார்த்த சாதனையை அப்போட்டி நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகம் பேர் பார்க்கப்போகும் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

பிப்ரவரி 15ல் மோதல் உலக கோப்பை கிரிக்கெட்டில் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

 

மூன்று காரணங்கள் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணங்கள் மூன்று உள்ளன. முதலாவது காரணம், அனைவருக்கும் தெரிந்தது போலவே, எதிரி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம், இது உலக கோப்பை போட்டி என்பது, மூன்றாவது முக்கிய காரணம், இவ்விரு அணிகளும் சமீபத்தில் விளையாடிக்கொள்ளவில்லை என்பதாகும்.

 

ரசிகர்கள் குவிந்தனர் இந்தியா-பாகிஸ்தான் அணிகள், கடந்த 2011ம் ஆண்டு மொகாலியில் நடந்த அரையிறுதி போட்டியில் மோதின. அதில் இந்தியா வென்று இறுதி போட்டிக்குள் சென்றது. இந்த போட்டிக்கு பிறகு இதுவரை இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளவில்லை. மொகாலியில் நடைபெற்ற கடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியை, உலகெங்கிலும் 988 மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்திருந்தனர்.

 

எதிர்பார்ப்பு இந்நிலையில், ஆஸ்திரேலிய உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை 1 பில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று அந்த நாட்டு விளையாட்டு துறை வல்லுநர்கள் கட்டியம் கூறுகின்றனர். பிப்ரவரி 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உலகெங்கிலும் டிவிகளில் போட்டியை பார்ப்போர் எண்ணிக்கை கட்டாயம் 1 பில்லியனை தாண்டும் என்கின்றனர் அவர்கள். அதாவது 100 கோடியை தாண்டப்போகிறதாம்.

 

இந்தியாவே ஆதிக்கம் உலக கோப்பை போட்டிகளில், பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை வென்ற வரலாறு கிடையாது. 1992ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் உலக கோப்பைகளில் 5 முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தபோதிலும், இந்தியாவே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

 

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-vs-pakistan-world-cup-clash-set-attract-record-viewers-218888.html

Link to comment
Share on other sites

உலக கோப்பை போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்

 

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 29-ம் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.

இந்தப்போட்டி தொடங்க இன்னும் 32 தினங்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாட்டு அணிகளின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது


இந்தப்போட்டியில் முன்னணி வீரர்கள் பலருக்கு இடம்கொடுக்கப்படவில்லை. கடந்த உலககோப்பையில் தொடர் நாயகன் விருதை பெற்ற யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய அணியில் உள்ள பிராவோ, பொல்லார்ட், இங்கிலாந்து தலைவராக பணியாற்றிய குக் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். 9 ஆட்டத்தில் 362 ஓட்டங்கள் குவித்தார். 15 விக்கெட் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

மோசமான ஆட்டம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவருக்கு ரவிந்திர ஜடேஜh காயம் மூலம் உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இதற்கு ஏற்ற வகையில் ரஞ்சி கோப்பையில் ஹட்ரிக் சதம் அடித்தார். ஆனாலும் தேர்வு குழு அவரை நிராகரித்துவிட்டது. மேற்கிந்திய அணியின் தலைசிறந்த சகலதுறை வீரான வெய்ன் பிராவோ, பொலார்ட். இருவரும் நீக்கப்பட்டது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சம்பள பிரச்சினை தொடர்பாக மேற்கிந்திய கிரிக்கெட் சபையுடன்; மோதல் போக்கை கடை பிடித்ததே நீக்கத்துக்கு காரணமாகும்.

தென்ஆபிரிக்கா பயணத்தில் பிராவோ முதலில் தலைவர்; பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது உலக கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

இந்த இருவரும் இல்லாதது மேற்கிந்திய அணிக்கு பாதிப்பே இங்கிலாந்து அணியின் தலைவர்  பதவியோடு அணியில் இருந்தும் நீக்கப்பட்டவர் கூக் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததோடு அவரது துடுப்பாட்டம்; மோசமாக இருந்தது. இதனால் தான் அவர் நீக்கப்பட்டு மோர்கன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதேபோல பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவரான உமர்குல்லும் உலக கோப்பையில் இடம் பெறவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணம் அடையவில்லை.

உடல் தகுதி இல்லாததால் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் விக்கெட் காப்பாளருமான கம்ரன் அக்மலும் நீக்கப்பட்டார். இதேபோல ரியான் ஹரிஸ் (அவுஸ்திரேலியா), அஜந்த மெண்டிஸ் (இலங்கை), ஜpம்மி (நியூசிலாந்து), ரொபின் பீட்டர்சன் (தென்ஆபிரிக்கா) ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=239153807914846138#sthash.K5NeXcaC.dpuf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை போட்டி விவரங்கள்
 

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

 

பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.

 

லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

 

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

 

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:

 

ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,

 

ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,

 

ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,

 

ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

 

அரையிறுதி:

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

 

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6788969.ece
 

Link to comment
Share on other sites

"கப்"பு இவங்க 3 பேரில் ஒருவருக்குத்தான்.. மத்தவங்களுக்கு ஆப்புத்தான்... இது விவ் "ரெவ்யூ

2vlt9if.jpg

சிட்னி: உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம்தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து இந்த உலக கோப்பை தொடரை நடத்த உள்ளன. இதனிடையே விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் எப்போதுமே உலக கோப்பையை வெல்ல தகுதியான அணிகள் பட்டியலில் இருந்து நீங்கியதில்லை.

 

அதே நேரம் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் உள்ளது. இம்மூன்று அணிகளும் என்னுடைய ஃபேவரைட் அணிகளாகும். நியூசிலாந்து அணியை கணிக்க முடியாது. அது வீறு கொண்டு எழுந்தால் பிற அணிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. பாகிஸ்தானை பொறுத்தளவில் அபாயகரமான அணியாக உள்ளது. அந்த அணி திடீரென எழுச்சியோடு ஆடும், திடீரென மொத்தமாக சுருண்டுவிடும். அந்தந்த நாளில் அந்த அணி எப்படி ஆடுகிறது என்பதை பொறுத்துதான் பாகிஸ்தானை கணிக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

மேற்கிந்திய தீவுகள் அணி 1975ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்றது. அதேபோல 1979ம் ஆண்டு 2வதாக நடந்த உலக கோப்பை தொடரிலும் அந்த அணியே சாம்பியன் ஆனது. 1983ம் ஆண்டில், மேற்கிந்திய தீவுகள் இறுதி போட்டி வரை வந்து இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா சாம்பியன் ஆனது. இம்மூன்று போட்டிகளின்போதுமே விவியன் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடினார். உலக கோப்பை தொடர்களில், மொத்தம் 23 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட்ஸ், அதில், 1103 ரன்களை குவித்தவர். சராசரி ரன் விகிதம் 63.31 ஆகும். அதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-one-the-favourites-world-cup-says-viv-richards-posted-218969.html

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தப் படை போதுமா?
143dt2a.jpg

 

இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் காதலர் தினம். இந்த ஆண்டு, இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், சிறியவர், பெரியவர் என எல்லா தரப்பையும் சேர்ந்த கோடிக்கணக் கானோர் அந்நாளினை மேலும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்தி ருக்கின்றனர். காரணம், நான்காண்டு களுக்கு ஒரு முறை நடக்கும் உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்குத் தனி அந்தஸ்து உள்ளபோதிலும், ஒரு நாள் உலகக்கோப்பைக்கு இருக்கும் மவுசு தனி.

 

 

ஒரு நாள் உலகக்கோப்பை போட் டியில் விளையாடுவதை மிகவும் கவுரவமாக கருதுவதால், எப்படி யாவது அணியில் இடம்பெற்றுவிட வேண்டுமென் பதே வீரர்களின் எண்ணமாக இருக்கும். ஆஸ்தி ரேலியா-நியூசிலாந்தில் நடைபெற வுள்ள இப்போட்டிகளுக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்திய அணி, பல பிரபல வீரர்களின் உலகக் கோப்பை வாழ்க்கைக்கு ‘குட்பை’ சொல்லியிருக்கிறது.

 

அனுபவத்தினைக் கருத் தில் கொண்டு அணியில் இடம்பிடிப் பார்கள் என்று கருதப்பட்ட சேவாக், கம்பீர், யுவராஜ்சிங் போன்றோர் அணியில் இடம்பெறாமல், இளம் வீரர்களைக்கொண்ட அணி தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்க ளது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை யும். அதிர்ச்சியையும் அளித்திருக் கிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த உலகக்கோப்பைப் போட் டியை மீண்டும் வென்ற இந்தியா, இம்முறை முழுக்க, முழுக்க இளம் வீரர்களைக் கொண்டுள்ளது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்த அணியால், உலகக் கோப்பையைத் தக்க வைக்க முடியுமா? என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 

தோனி தலைமையிலான உலகக்கோப்பை அணியில் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகம்மது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில், தோனி, கோலி, ரெய்னா மற்றும் அஸ்வின் ஆகியோர் தவிர, மற்ற 11 பேரும் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகின் றனர். சச்சின் ஏற்படுத்திய வெற்றி டம், கடந்த உலகக்கோப்பையின் ஹீரோ யுவராஜ் சிங், மேலும் சில மூத்த வீரர்கள் இல்லாத இந்த இளம்வீரர்கள் நிறைந்த அணி உலகக்கோப்பையில் சாதிக்குமா?

 

 

இந்த அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலானோர், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு நாள் அணியில் தொடர்ந்து இடம்பெற்று, நன்கு பரிமளித்து வருபவர்கள். இவர்களில் ஷிகர் தவன், அம்பதி ராயுடு, ரஹானே போன்ற இளம் அறிமுகங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாகவே, ரஞ்சிப் போட்டியில் ஹாட்ரிக் சதம் கண்டும், ரசிகர்கள் கடுமையாக கோரிக்கை விடுத்தும், கடந்த உலகக்கோப்பையின் ஹீரோவான யுவராஜ் சிங்கால் அணியில் இடம்பிடிக்கமுடியவில்லை.

இதுபோல், தொடக்க ஆட்டக் காரர்களான ஷிகர் தவனும், ரோஹித் சர்மாவும் ஒரு நாள் போட்டி களில் தொடர்ந்து சிறப்பாக ஜொலித்துவருவதால், உள்ளூர் போட்டிகளில் பரிமளித்து வந்த போதிலும் கம்பீரால் அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போய் விட்டது.

 

மூத்தவீரர்களில் ஒரு வரான ஜாகீர் கான் தோள் பட்டை காயத்திலிருந்து மீளாத தாலும், ஹர்பஜன் சிங் சமீப காலமாக போட்டிகளில் சரிவர பங்கேற்காததாலும், அவர் களைப் பற்றி விவாதிக்கவே தேர் வாளர்களுக்கு அவசியம் ஏற்பட் டிருக்காது. இடக்கை ஆட்டக்கார ரான அம்பதி ராயுடுவை பொறுத்த வரை தேவைப்பட்டால் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது கூடுதல் சிறப்பு. இதனால்தான் தோனியின் நண்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ராபின் உத்தப்பாவுக்கு கூட இடம் கிடைக்க வில்லை.

 

தோனி காரணமா?

இந்த அணியில் சீனியர்களுக்கு இடம் கிடைக்காததற்கு தோனியும் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருதினாலும், தான் கடைசியாக பங் கேற்கும் உலகக்கோப்பை போட்டி யில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் மற்றவர்களைவிட அவ ருக்கு சற்று அதிகமாகவே இருக் கும் என்று நம்பலாம். மேலும், 7 ஆண்டுகளாக அணியை வழி நடத்திவரும் அவருக்கு, ஆஸ் திரேலிய சூழலில் நன்கு ஆடக் கூடிய, தற்போது உடல்தகுதியுடன் இருக்கக்கூடிய இந்திய வீரர் களைப் பற்றி தெரியாமலாபோகும்? அதனால் அது போன்ற சிந்தனை களை மூட்டை கட்டிவைக்கலாம்.

 

மேலும், மற்றெந்த அணிக் கும் கிடைக்காத வாய்ப்பாக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 11 முக்கிய வீரர் கள் கடந்த இருமாதகாலமாக ஆஸ் திரேலியாவில் ஆடிவருகின்றனர். அதனால் அங்குள்ள மைதா னங்களைப் பற்றியும் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என்பது போனஸ்.

இதுதவிர, ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்துடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் இந்த அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பைக்கு தயாராக இதைவிட நல்ல வாய்ப்பு வேறெந்த அணிக் குக் கிடைக்கும்? அலெஸ்டர் குக் கழற்றி விடப்பட்டு, புதிய கேப்டன் இயான் மார்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்தை இந்த ஒருநாள் தொடரில் தோற் கடிக்கவேண்டும்.

 

உலகக்கோப்பையில் காலிறுதி யில் நம்முடன் இங்கிலாந்து மோத வாய்ப்புள்ளதால், இத்தொடரில் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் அடி பின்னர் மனரீதியாக அவர் களுக்கு நெருக்க டியைக் கொடுக் கும். உலகக் கோப்பையில் நமக்கு பிரச் சினை என்று பார்த்தால், பவுலிங்கில்தான் ஏற்பட வாய்ப் புள்ளது. ஸ்டெயின், மிட்செல் ஜான்சன், மோர்கல் அளவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத போதும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி போன்றோர் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதன் மூலம் கற்ற பாடம், தோனி மற்றும் அணிப் பயிற்சியாளர் பிளெட்சர் மற்றும் மேலாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நிச்சயம் வழிகாட்டுவர்கள் என்பதால் நம்மை கைவிடமாட்டார்கள் என்று நம்பலாம்.

 

இதுதவிர, மிதவேகப் பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான ஸ்டூவர்ட் பின்னி, அணியில் இடம் பிடித்திருப்பது ஆஸ்திரேலிய களங் களில் உதவிகரமாக இருக்கும். உலகக்கோப்பையில் ஆடிய முதல் இந்திய தந்தை- மகன் ஜோடி (தேர்வுக்குழுவிலுள்ள ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி) என்ற பெருமையுடன் களமிறங்கும் பின்னி, நடுவரிசை பேட்டிங்கை வலுப்பெறச் செய்வதோடு மட்டு மின்றி, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு.

அதனால் நமது பலமான ஸ்பின்னர்கள் ஒரு வரை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள தோனிக்கு வாய்ப்பு கிடைக் கும். இதுபோல், ஸ்விங் பவுலர் புவனேசுவர் குமார், அஸ்வின் ஆகியோரும் பின் வரிசை பேட்டிங்குக்கு வலுசேர்ப் பார்கள். அனேகமாக, இரு வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல் ரவுண்டர், இரு ஸ்பின்னர்கள் (அஸ்வின், ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல்) என்ற பார்முலாவை தோனி பயன்படுத்துவார் என்றும், அஸ்வினை முதல் ஓவர் வீசவும் அனுமதிக்கக்கூடும் (1992 கோப்பை யில் நியூசிலாந்து அணியில் தீபக் படேல் வீசியதைப் போல்) என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாறும் முகம்

டெஸ்ட் அணியாக சரியாக பரிமளிக்காவிட்டாலும், ஒருநாள் போட்டி, இருபது ஒவர் என்று வந்துவிட்டால் இந்திய அணியின் தோற்றமே அச்சுறுத்தும்வகையில் மாறிவிடும். உதாரணத்துக்கு, டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் கடுமையாகத் தோற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, அதற்கு அடுத்ததாக நடந்த இருபது ஓவர் ஆட்டத்தில் தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்றிருப்பதை, அதுவும் உலகசாதனை துரத்தல் மூலம் அடைந்திருப்பதுடன் ஒப்பிடலாம்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, லீக் போட்டிகளில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுடன் மட்டுமே நியூசிலாந்தில் இந்தியா ஆடுகிறது. மற்ற முக்கிய லீக் போட்டிகளில் சற்று பழகிவிட்ட ஆஸ்திரேலிய களங்களில் நடப் பதும் இந்தியாவுக்கு சாதக மாக அமையலாம்.கடந்த 2007-ம் ஆண்டில், மேற் கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளி யேறியது. ஆனால், அப்போது அணியில் ஏராளமான சீனியர் வீரர்கள் அணியில் இருந்தனர்.

 

இருப்பினும் பயிற்சியாளர் கிரெக் சாப்பலின் தாக்கத்தால் ‘டிரெஸ்ஸிங் ரூமில்’ வீரர்கள் நிம்மதி யான மனநிலையில் இல்லாததால் சோபிக்கத் தவறியதாக கருத்து நிலவியது. அப்போட்டிகளில் பங் கேற்றவர்களுள் இம்முறை உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒரே வீரர் கேப்டன் தோனி.

அவர், நாட்டில் தற்போது சிறப்பாக விளங்கும் 15 வீரர்களாக தேர்வாளர்கள் (அவரும்தான்) கருதும் அணியைப் பெற்றிருப்பதாலும், டங்கன் பிளெட்சர் மற்றும் ரவிசாஸ்திரி போன்ற பக்கத்துணையாக இருக் கும் அணிநிர்வாகமும், அவரது சொல்லைத் தட்டாத வீரர்களும் இருக்க, இந்த இந்திய அணி, முந் தைய உலகக்கோப்பை ஆட்டங் களில் பங்கேற்ற வேறெந்த அணிக் கும், சற்றும் சளைத்ததல்ல என்றே எண்ணத்தோன்றுகிறது. அதனால், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

 

20kc9zr.jpg

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6791908.ece

 

Link to comment
Share on other sites

மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவோம்: தோனி நம்பிக்கை
 

 

ஒருநாள் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்த கேப்டன் தோனி, 2011 உலகக்கோப்பையை வென்றது போல் இந்த உலகக்கோப்பையையும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறும்போது, “2011 உலகக்கோப்பையில் ஆடிய ஆட்டத்தை மீண்டும் ஆடுவோம். ஆனால் ஆஸ்திரேலிய சூழ்நிலை வேறு; அதற்கேற்ப ஆடுவது அவசியம்.

 

உலக கிரிக்கெட்டில் மெல்போர்ன் மைதானம் அற்புதமானது. என்ன விதமான கிர்க்கெட் போட்டிகளாக இருந்தாலும் மெல்போர்ன் சிறந்த மைதானமே. ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டவிருக்கிறோம். மார்ச் 29-ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு அறிவித்தது குறித்து அவர் கூறும்போது, “நான் ஓய்வு எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். எந்த விளையாட்டில் ஆடினாலும் சர்வதேச மட்டத்தில் இந்தியாவுக்காக ஆடுவது என்பது ஒரு பெரிய வரம்தான்” என்றார் தோனி.

 

புதிய சீருடையை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் கோலி கூறும்போது,

"டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் எங்கள் மனநிலையில், அணுகுமுறயில் மாற்றமிருக்காது. நாட்டிற்காக ஆடும் போது ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுவது என்பது சவால்தான். ஆனால் இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ரசிகர்களின் எதிர்வினையும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் தொடர் நல்ல முறையில் அமைந்தது என்றே நான் கருதுகிறேன். அடுத்தபடியாக முத்தரப்பு ஒருநாள் தொடர் பிறகு உலகக் கோப்பை போட்டிகளின் மேல் என் கவனம் குவியும்.

அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்வது என்பது சிறந்த விஷயம்தான். இந்த முறையும் அந்த நோக்கத்திற்காக விளையாடுவோம்” என்றார் கோலி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-29%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6793721.ece
 

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை: கங்குலி கணிப்பு
ஜனவரி 16, 2015.

 

கோல்கட்டா: ‘‘உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும்,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. மெல்போர்னில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

முத்தரப்பு தெடாருக்கு பின், வரும் பிப்., 14ல் துவங்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: தோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீடியாவில் பேசுவதற்காக இதைக் கூறவில்லை. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்பதால், பவுலர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். டெஸ்ட் அணியை காட்டிலும், ஒருநாள் அணி சிறப்பாகவே உள்ளது.

 

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வரும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து அணி, எளிதில் தோல்வி அடையவில்லை. ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து பவுலர்கள் கைப்பற்றினர்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1421427537/WorldCupCricketIndiaChampionGanguly.html

Link to comment
Share on other sites

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: யூனிஸ்கான் சபதம்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு  படைக்கப்போவதாக பாகிஸ்தான் அணியின் யூனிஸ்கான் தெரிவித்தார்.

இந்திய பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவது வழமை. இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனையாகிவிடும். பல இலட்சக்கணக்கான  ரசிகர்கள் தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பார்கள்.

உலகக்கிண்ண தொடரில் பெப்ரவரி 15ஆம் திகதி அடிலெய்டில் இடம்பெறும் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கின்றன.
இப்போட்டி தொடர்பாக யூனுஸ்கான் தெரிவிக்கையில்,

 

 

பெப்ரவரி மாதம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி கொண்டதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வகையில் இந்தியாவை வீழ்த்துவோம்.

தற்போதைய சூழ்நிலையில் பாக்கிஸ்தான் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படும் நேரத்தில் அடிலெய்டில் நடைபெறும் உலகக்கிண்ண  போட்டியில் இந்தியாவை வீழ்த்த முடியும்.

 

 

அண்மையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் நான் ஆடியபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதே ஆச்சரியம் இந்த உலக்கிண்ணப் போட்டியிலும் ரசிகர்களிடையே எழும். நல்ல போர்மிலுள்ள வீரர்கள் நிறைய பேர் எங்கள் அணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் திறமையாகவும் பொறுப்பாகவும் விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்திவிடலாம்.
ஆனால், இந்த முறை யார் சம்பியனாவார்கள் என்று  குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனெனில் சமீப காலங்களாக ஒருநாள் போட்டிகளின் நிலை மாறிவிட்டன. எனவே இந்தமுறை யார் வேண்டுமானாலும் சம்பியனாக முடியும்.

 

 

விதிமுறைகள் மாறியிருப்பது பலம்வாய்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கிறது. நீங்கள் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை கூட நினைக்கலாம். அவை இரண்டுமே இந்த போட்டியை நடத்தும் நாடுகள்.

இதுதவிர, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளை எதிர்பார்க்கலாம். ஆனால், அவற்றைகூட சாதகமாக சொல்ல முடியாது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி இப்போது நான் சிந்திக்கவில்லை. நான் இன்னும் விளையாடுவதை ரசிக்கின்றேன்.

என்னுடைய வாழ்க்கையில் இன்னும் சிறந்த காலங்கள் இருக்கிறது. சர்வதேச போட்டியில் சாதனை படைக்கும் வாய்ப்பை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஓய்வு பெறுவது எனது தனிப்பட்ட முடிவு என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/137814#sthash.urXFJQ0a.dpuf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய 10 வீரர்கள்: ஜெஃப் லாசன் பட்டியல்

 

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தங்களது ஆட்டத்தினால் கவரக்கூடிய 10 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் பட்டியலிட்டுள்ளார்.

 

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ள 10 வீரர்கள் விவரம் வருமாறு:

 

1. மிட்சில் ஸ்டார்க்:

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டுகளில் அவர் ஒரு அச்சுறுத்தலான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது யார்க்கர்களும் பவுன்சர்களும் சிலபல விக்கெட்டுகளை அவருக்குப் பெற்றுத்தரும். முடிவு ஓவர்களில் அவரது இன்ஸ்விங்கிங் யார்க்கர்களை விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அன்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிட்னியில் இதனை அவர் நிரூபித்தார். உலகக் கோப்பையிலும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

 

2. டேவிட் வார்னர்:

 

ஸ்டார்க் எப்படி பந்துவீச்சில் எதிரணியினரை முறியடிப்பாரோ அப்படித்தான் பேட்டிங்கில் டேவிட் வார்னர். ஒருநாள் போட்டிகளில் இவரது ஆட்டம் அதிகம் சோபிக்கவில்லை என்றாலும் தன் சொந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகளில் இவர் அபாயகரமான வீரராகத் திகழ்வார். இவரை முடக்க தொடக்க ஓவரிலேயே ஸ்பின்னைக் கொண்டுவர அணிகள் முயற்சி செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

3. மொயீன் அலி (இங்கிலாந்து):

 

தொடக்கத்தில் களமிறங்குவதோடு ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 10 ஓவர்களை வீச முடியக்கூடியவர். புதிய பந்தில் பயப்படாமல் அடித்து ஆடுகிறார். பந்தை தூக்கி அடிக்கவும் அஞ்சுவதில்லை. அவர் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்கிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார். அவரை சிலபல ஷாட் பிட்ச் பந்துகளை வீசி அவுட் செய்ய அணிகள் தங்கள் ஹோம்வொர்க்கை தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய பிட்ச்களின் பவுன்ஸிற்கு மொயீன் அலி புதிது. ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆல்ரவுண்டர் மொயீன் அலி.

 

4. ஏ.பி.டீவிலியர்ஸ்:

 

எந்த ஒரு ஆட்டக்களமாக இருந்தாலும் அதில் எந்தவிதமான பந்து வீச்சாக இருந்தாலும் ஏ.பி.டீவிலியர்ஸ் ரன்களைக் குவிப்பார். ஏ.பி.டீவிலியர்ஸ் கிரீஸில் இருக்கும் வரையில் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை.

 

5. பிரெண்டன் மெக்கல்லம்

 

சிறந்த வேகப்பந்து வீச்சைக்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லமின் பேட்டிங் மிக முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில் அவரது டெஸ்ட் அதிரடி ஆட்டங்கள் 2015 ஒருநாள் போட்டிகளுக்கு மாறியுள்ளது. உலகில் எந்த ஒரு பந்து வீச்சும் அவரது தாக்குதல் ஆட்டத்தை முடக்க திராணியற்றதாக இருக்கிறது. மேலும் உள்நாட்டிலேயே விளையாடுவதால் மெக்கல்லம் தனது ஆட்டத்தின் மூலம் தன் அணியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

 

6. ஷாகித் அப்ரீடி (பாகிஸ்தான்)

 

என்றும் புத்துணர்வுடன் இருக்கும் பூம்... பூம் அஃப்ரீடி ஆடிக்கொண்டேயிருக்கிறார். நான் அவரது வயதைக் குறிப்பிட விரும்பவில்லை. காரணம் அவர் பிறந்த தேதி பற்றி 4 வேறுவேறு குறிப்புகள் உள்ளன. ஆனால் ஊடுருவும் அவரது பந்து வீச்சிற்கும், அதிரடி ஆட்டத்திற்கும் வயது தடையல்ல. அவர் தனது லெக் பிரேக் மற்றும் ஸ்லைடர்கள் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். இது அவரது கடைசி உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் எல்லாம்.. அவருக்கு இது ஒரு பெரிய உலகக்கோப்பை.

 

7. குமார் சங்கக்காரா

 

சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக எழுச்சியுற்ற ஒரு மூத்த வீரர் சங்கக்காரா. அவரது சக வீரர் மகேலா ஜெயவர்தனே போல் இவருக்கும் ஆட்டங்களை எப்படி வெல்வது என்பது தெரியும். விக்கெட் கீப்பராகவும் அவருக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன. போட்டிகளை வெல்லவும் ரன்களைக் குவிக்கவும் அவருக்கு தீராத தாகம் உள்ளது. இவர் தோல்வியடைவது அரிது. துணைக் கண்டத்தின் பேட்டிங் சொர்க்கத்தை விடுத்து மற்ற நாடுகளிலும் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை அவரது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு இது நல்ல உலகக் கோப்பையாக அமைந்தால் அவரது அணிக்கும் சிறப்பாகவே அமையும்.

 

8.கிறிஸ் கெய்ல்

 

சொல்லவேத் தேவையில்லை மேற்கிந்திய தீவுகள் அணி என்ற சக்கரத்தில் உராய்தலைத் தடுத்து சக்கரம் தங்குதடையின்றி ஓடவைப்பவர் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட் அதிரடி ஆட்டத்தை ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் மாற்றிவிட்டால் மே.இ.தீவுகள் ரன்களைக் குவிக்கும், பிறகு வெற்றி சுலபமாகும். மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு வர முடியாவிட்டாலும் கெய்லின் ஆட்டம் இந்த உலகக் கோப்பையில் ஒரு பெரிய பொழுதுபோக்கு அமசம்தான்.

 

9. ரவீந்திர ஜடேஜா

 

முழுதும் ரன்களாக இருக்கும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பின்கள ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரவி அஸ்வினுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவின் தற்போதைய உண்மையான ஆல்ரவுண்டர் இவர்தான். பீல்டிங்கில் சிறந்தவர். பவர் பிளேயில் வீசக்கூடியவர். அவரது பீல்டிங்கே இந்திய அணிக்கு சில விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்து அதன் மூலம் ஆட்டம் திரும்பியுள்ளது.

 

10. ஜாவேத் அஹ்மதி (ஆப்கானிஸ்தான்):

 

துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஜாவேத் நிறைய ரன்களைக் குவித்தார். நான் முதன் முதலில் 2011 அண்டர்-19 உலகக் கோப்பையின் போது இவரைப் பார்த்தேன். துணைக்கண்ட வீரர்கள் பலரிடம் இல்லாத ஒன்று இவரிடம் உள்ளது. அதாவது வேகமான, ஷாட் பிட்ச் பந்துகளை இவர் அனாயசமாக ஆட முடிவதை நான் பார்த்திருக்கிறேன். ஆப்கான் அணியை சாதாரணமாக எடைபோடவேண்டாம். அந்த அணி சிலபல அதிர்ச்சிகளை கொடுத்தால் அதில் ஜாவ்”ஏத் அஹ்மதி ஒரு முக்கியப் பங்கு வகிப்பார் என்றே நான் கருதுகிறேன்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-10-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article6796907.ece

Link to comment
Share on other sites

இந்திய அணியை வீழ்த்தனும்னா '3 செஞ்சுரி போடனும்'- பாக். வீரர்களுக்கு மியான்டட் அட்வைஸ்!

 

இஸ்லாமாபாத்: இந்திய அணியை வீழ்த்த வேண்டுமானால், பாகிஸ்தான், 300க்கும் அதிக ரன் குவிக்க வேண்டியது அவசியம் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியான்டட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜாவீத் மியான்டட் கூறியுள்ளதாவது: இந்தியாவில் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், டோணி என வலிமையான பேட்டிங் திறமையாளர்கள் உள்ளனர்.

 

எனவே இந்தியாவை வீழ்த்த வேண்டுமானால் பாகிஸ்தான் 300 அல்லது 325க்கு மேல் ரன் எடுக்க வேண்டியது அவசியம். இந்திய அணியை வீழ்த்தனும்னா '3 செஞ்சுரி போடனும்'- பாக். வீரர்களுக்கு மியான்டட் அட்வைஸ்! பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ் கான், ஷாகித் அப்ரிடி மற்றும் அகமது சேஷாத் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் பிட்சுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய விரைந்து தயாராக வேண்டும். பாகிஸ்தானின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான போட்டி, முதலிலேயே முடிந்துவிடுவதால், இரு அணிகளுமே டென்ஷன் இல்லாமல், பிற போட்டிகளில் கவனம் வைக்க வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இவ்விரு அணிகளும் மோதும் போட்டிதான் இந்த உலக கோப்பையின் தாய் போட்டி என்று கூற முடியும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/pakistan-must-score-over-300-beat-india-world-cup-miandad-219097.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.