Jump to content

மௌனப் போர்க்களமே!


Recommended Posts

ரிஷியா

 

அவனைக் கண்ட அந்தநாள். விழிமொழியால் பேசிய நாள் அது. விழிவழியே வந்த காதல் இதயத்தில் நிறைந்தது. என்புவரை சென்று உயிரைத் தாக்கியது. எனக்கு மட்டுமா இந்த நிலை? அவனுக்கு? கண் வழியே நெருப்புப் பூக்கள் உடலெங்கும் மலர்ந்த தருணம் அது.

விழிமொழியால் பேசப்படாத வார்த்தைகளை விரல்மொழியால்தானே பேச இயலும். விழிமொழிக்குக் காதல் என்று பெயரிட்டால், விரல்மொழிக்குக் காமம் என்று பெயரிடலாமே! விழியும் விரலும் பேசினால்தானே அன்பின் அத்தியாயங்கள் வாழ்க்கை என அரங்கேறும். இதை அவன் உணர்ந்தானா? உணரவில்லையே!

அவனை விரும்பி, இணைந்து, பிணைந்து கொள்ள என் துயர் தீர்க்க அவன் வரவில்லை. என்னை ஊரறிய ஏற்றுக் கொள்ளவும் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனக்குள் மலர்ந்த அக்னிப்பூக்கள் அவனுக்குள் மலரவில்லையா? என் துன்பம் தீர்ப்பார் யார்?

காதல் என்று வந்துவிட்டால் தூது செல்ல ஒருவர் வேண்டுமே! என் நிலையறிந்து என் நோய் களைவார் ஒருவர் வேண்டுமே! இந்தத் தோழி என் நிலையறிந்தும் கண்டுகொள்ளவில்லை. கண்டும் காணாதவள் போல் இருக்கிறாளே! என் உயிரோடு அல்லவா போராடுகின்றன அவனின் நினைவுகள்!

கலைந்து செல்லும் மேகம், ஊர்விட்டு ஊர்செல்லும் நதி, தினம் வந்துபோகும் சூரியன், மரக்கிளைதோறும் பேசிச் செல்லும் குருவி, இவற்றில் ஒன்றிற்குக்கூட என் துயர் சொல்லத் தெரியாதே! தோழி நீ அல்லவா எனக்குத் தூது செல்லவேண்டும். அறத்தோடு நிற்காமல் தொலைவில் நின்று தொடர்பே இல்லாததுபோல் இருக்கிறாயே. இது சரியா? தனிமை வேதனை தருகிறது. அவனை என்னோடு தழுவி ஏற்றுக்கொள்வது எப்பொழுது? கள்ளினும் இனிதாயிற்றே இந்தக் காதல்?

காதலுடன் தனிமையில் போரடும் இந்தப்போர் என்று முடிவுக்கு வரும்? தினமும் ஒரு மௌனப் போர்க்களம் என்னுள்ளே நிகழ்கிறது. முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது. தானாகவே முடியுமோ அல்லது இதைத் தடுத்து நிறுத்துவார் உளரோ? வருத்துகிறது, வதைக்கிறது, கொல்கிறது, கணங்கள் தோறும் தொடர்கிறது இந்த மௌனப்போர்.

குறுந்தொகைத் தலைவியின் காதல் போர்க்களம் இது. இதோ பாடல்.

கண்தர வந்த காமஒள் எரி
என்பு உற நலியினும், அவரோடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அலர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்துஇடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல,
களைவார் இலை - யான் உற்ற நோயே

குறுந்தொகை : 305 : குப்பைக்கோழியார் : மருதம்

விழியினால் தரப்பட்ட காமமாகிய ஒளிமிகுந்த தீ, உள்ளத்தளவில் நில்லாமல், எலும்புவரை சென்று வருத்துவதாயினும், அவரை விரும்பிச் சென்று வருத்துவதாயினும், அவரை விரும்பிச் சென்று, அவரோடு ஒத்துத் தழுவுவதற்கு அரியநிலையில் அவரைக் காண்பதற்குக் காட்சியுடையேன். வரைவுடன் வந்து என் வருத்தத்தை நீக்குதலை அவரும் செய்திலர். என்னைத் தன் மனையகத்துச் செலுத்தியும் விடார். வெற்றி தோல்விகளுக்கிடையே விலக்கி வரைந்து கொள்ளுதலும் செய்திலர். குப்பையில் மேய்ந்து கொண்டிருக்கும் கோழிகள், தாமே நிகழ்த்தும் போர் போல அதுவாக முடியுங்காலத்தில் முடியுமேயன்றி, நான் கொண்ட நோய் களைவார் ஒருவரும் இலர்.

சேரிக் கோழிகளுக்கிடையே நிகழும் போராயின் உய்ப்போர், காண்போர், களைவோர் இருப்பர். ஆனால் இது குப்பைக் கோழிகள் தமக்குள் செய்யும் போர். அதனால் காண்பவர் மகிழ்ச்சியோ வருத்தமோயின்றி அலட்சியத்துடன் நோக்குவர். குப்பைக் கோழிகள் தம்முள் பொருது, தானாகவே நீங்குதல் வேண்டும் அல்லது குருதி சிந்தி மாய்தல் வேண்டும். ஏனென்றால் காண்போர், களைவோர், உய்ப்போர் யாரும் இலர்.

தலைவியும் காதல்நோயும் நிகழ்த்தும் மௌனப்போர், குப்பைக் கோழிகள் நிகழ்த்தும் தனிப்போருக்கு ஒப்பாக உவமிக்கப்படுள்ளது. நாகரிகமாகவும், நயமாகவும் தலைவியின் காதல் போரை விளக்குகிறார் புலவர். சீரிய கருத்தாக்கம், ஒரு நிகழ்வின் நுட்பமான பதிவு. இது சார்ந்தே இப்பாடலைப் பாடிய புலவருக்கு "குப்பைக் கோழியார்" என்ற சிறப்புப் பெயர் இயல்பாய் அமைந்துவிட்டது.

சங்ககாலப் புலவர்களின் மதிநுட்பமும், கருத்துச் செறிவும் சொற்களுக்கும் அப்பாற்பட்டன. அழகான குறுந்தொகையே! உன்னை நேசிக்க, வியக்க, இரசிக்க இப்பாடலின் கருத்தாக்கம் ஒன்று போதுமே!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு ஆதித்திய இளம்பிறையன்.

Link to comment
Share on other sites

வரவுக்கு நன்றி சுமேரியர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.