Jump to content

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.


Recommended Posts

அவர்கள் தடை செய்ததிற்கும் நீக்கியதற்கும் அவர்களுககுச் சாதகமான காரணங்களே இருக்கின்றது. இதில் தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.

 

வேண்டுமானால் தடையை மீள கொண்டுவருவார்கள் மீள நீக்கவும் செய்வார்கள்.

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது. இனியும் இருக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

அவர்கள் தடை செய்ததிற்கும் நீக்கியதற்கும் அவர்களுககுச் சாதகமான காரணங்களே இருக்கின்றது. இதில் தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.

 

வேண்டுமானால் தடையை மீள கொண்டுவருவார்கள் மீள நீக்கவும் செய்வார்கள்.

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது. இனியும் இருக்கும்.

உண்மைதான்.. ஐரோப்பிய ஒன்றியம் தனது மையவாத சிந்தனையில் இருந்து வெளிவரும்வரையில் இது தொடரத்தான் செய்யும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த மனிதன்... One of the initiators of the legal move against the eu ban on ltte.  Lathan Suntharalingam

10252166_10152508476184891_1925568058794

 

¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

 

 

600.jpg
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்று என்று இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கான சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களுக்கு இது ஒரு வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

https://audioboom.com/boos/2568204-

 

 

வணக்கம் கனடா OCT 16 2014 LATHAN SUNTHARLINGAM, KURUPARAN K UK & NCCT MOHAN RAMAKRISHNAN

http://www.ctr24.com/archive/16102014-1103-வணக்கம்-கனடா-oct-16-2014-lathan-suntharlingam-kuruparan-k-uk-ncct-mohan

Link to comment
Share on other sites

உண்மைதான்.. ஐரோப்பிய ஒன்றியம் தனது மையவாத சிந்தனையில் இருந்து வெளிவரும்வரையில் இது தொடரத்தான் செய்யும். :D

 

இது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கின்றது. அப்போதும் மையவாதிகள் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்துப் பிழைப்பை நடத்தினார்கள். இப்போதும் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்து பிழைத்துக்கொள்கின்றார்கள்

http://www.jaffnatime.com/contents/?i=4304

http://www.yarl.com/forum3/index.php?/topic/147378-யாழ்-இந்துவில்-ஜனாதிபதி/#entry1049956

போரால் அழிந்த மக்களும் வாழ்வும் வளங்களும் என்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் மையவாதமும் பேரினவாதமும் கைகோர்த்து நீச்சல் குளங்கள் தேர்கள் திருவிளாகக்கள் இதர ஆடம்பரங்கள் என்று தொடர்ந்து சுகபோகத்தில் திளைக்கின்றது.

நானும் ரவுடிதான் என்ற றேஞ்சில் நாங்களும் தேசியவாதிகள் என்று ஒப்புக்கு நடிப்பு வேறு !

ஆட்டுக்க மாட்டைகொண்டுவந்து செருகுவதால் மையவாதம் இல்லை என்று ஆகிவிடாது. வன்னி மக்களின் உயிர்பறிப்பிலும் இப்போதய வறுமை நிலையிலும் வளங்கள் அளிப்பிலும் சிங்களப்பேரினவாதத்துக்கு சம அளவிலான பங்கு மையவாதத்திற்கு உண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

உங்களுக்கு விசிலடித்துக் கனகாலமாகிவிட்டது அதனால் ஐரோப்பிய யுனியன் தடையை நீக்கிவிட்டது என்று ஒரு விஸ்கியை அடித்து இந்த வாரம் விசிலை அடிக்கவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த மனிதன்... One of the initiators of the legal move against the eu ban on ltte. Lathan Suntharalingam

 

Lathan-150-news.jpg
 
சரியாகச் சொன்னீர்கள் சுபேஸ்.

லதன் சுந்தரலிங்கம்,  ஒற்றை மனிதனாக... பெரிய சாதனையை செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

 

இது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கின்றது. அப்போதும் மையவாதிகள் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்துப் பிழைப்பை நடத்தினார்கள். இப்போதும் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்து பிழைத்துக்கொள்கின்றார்கள்

http://www.jaffnatime.com/contents/?i=4304

http://www.yarl.com/forum3/index.php?/topic/147378-யாழ்-இந்துவில்-ஜனாதிபதி/#entry1049956

போரால் அழிந்த மக்களும் வாழ்வும் வளங்களும் என்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் மையவாதமும் பேரினவாதமும் கைகோர்த்து நீச்சல் குளங்கள் தேர்கள் திருவிளாகக்கள் இதர ஆடம்பரங்கள் என்று தொடர்ந்து சுகபோகத்தில் திளைக்கின்றது.

நானும் ரவுடிதான் என்ற றேஞ்சில் நாங்களும் தேசியவாதிகள் என்று ஒப்புக்கு நடிப்பு வேறு !

ஆட்டுக்க மாட்டைகொண்டுவந்து செருகுவதால் மையவாதம் இல்லை என்று ஆகிவிடாது. வன்னி மக்களின் உயிர்பறிப்பிலும் இப்போதய வறுமை நிலையிலும் வளங்கள் அளிப்பிலும் சிங்களப்பேரினவாதத்துக்கு சம அளவிலான பங்கு மையவாதத்திற்கு உண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

உங்களுக்கு விசிலடித்துக் கனகாலமாகிவிட்டது அதனால் ஐரோப்பிய யுனியன் தடையை நீக்கிவிட்டது என்று ஒரு விஸ்கியை அடித்து இந்த வாரம் விசிலை அடிக்கவேண்டியது தான்.

 

ஏன் எரிஞ்சு விழுறீங்கள் சண்டமாருதன்.. :D மையவாதம் என்றால் என்ன என்று நான் முன்னம் ஒருக்கால் கேட்டதுக்கு நீங்கள் பதிலே தரேல்ல.. :huh:  ஆகவே இந்தக் குழப்பத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு..  :lol:

Link to comment
Share on other sites

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கப்பட்டதை அடுத்து கிலிகொண்ட மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பழையபடி தூசுதட்டி தங்கள் புலி எதிர்ப்பு புராணத்தை பாட தொடங்கிட்டீனம்..... மறுபடியும் வேப்பிலை அடிச்சா தான் அடங்குவீனம் போல....

Link to comment
Share on other sites

மிகவும் மகிழ்வான செய்தி... இந்த வெற்றிக்கு யார், எவ்வாறு செயற்பட்டார்கள் என்று தெரிந்தவர்கள் அறியத் தந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கச் சொல்லி போராடி வரும் ஒரு சிலரில்.. வை.கோ ஐயாவும் ஒருவர்... அவர் இத்தீர்ப்புப் பற்றி... கூறியுள்ளவை....

 

 
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று: வைகோ அறிக்கை.
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 16.10.2014 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். இலக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப் பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 
இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் இராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.
 
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோர் 21 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2013 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.
 
சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009 இல் தெளிவுபடுத்தியது.
 
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும்  ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.
 
இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.
 
இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மகிழ்ச்சியான செய்தி. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது ............

 

 

தொலைநோக்கு அரசியல் என்பது கடந்த பத்து வருடங்களில் சீனாவை தவிர மற்றைய நாடுகளிடம் அறவே   இருக்கவில்லை  என்பதற்கு இப்போதைய நிகழ்வுகள் ஆதரமாகின்றன.

 

தமிழரை பகைத்து இந்தியா இன்னொரு புறம் கையை சொறியும்நிலை அண்மித்துகொண்டு இருக்கிறது. 6 கோடி  தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் தமிழ்நாட்டை மையாமகவே உலக தமிழர்கள் கருதுகிறார்கள். இன்றைய நாளில் ஒரு கணிசமான பொருளாதராம் உலக தமிழர்களிடம் இருக்கிறது இதை  நன்கு திட்டம்  தீட்டி இருப்பின் இந்தியா தனதாக்கி இருக்கலாம்.

சிங்கள அரசு வெறும் வப்பாட்டி கணக்கில்தான் இந்தியாவுடன் உறவு கொண்டு உள்ளது நீ படுக்காவிட்டால்  பாகிஸ்தான்  சீனாவுடன் போய்  படுத்துடுவேன் என்றுதான் சிங்களம் இந்தியாவை  ஆட்டுகிறது. இந்தியாவின்  பிடியில் இப்போ சிங்கள அரசும் இல்லை ...... தமிழர் தரப்பும் இல்லை. தமிழர்களை படுகொலை செய்த பழி மட்டுமே  இந்தியாவிடம் இருக்கிறது.

நல்ல அலசல் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திதான்.

தடையை முற்றாக நீக்கிய பின்னராவது புலிகளின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் வெளிப்படையாக ஏதாவது உருப்படியான விடயங்களைச் செய்ய முன்வருவார்களா?

Link to comment
Share on other sites

ஏன் எரிஞ்சு விழுறீங்கள் சண்டமாருதன்.. :D மையவாதம் என்றால் என்ன என்று நான் முன்னம் ஒருக்கால் கேட்டதுக்கு நீங்கள் பதிலே தரேல்ல.. :huh:  ஆகவே இந்தக் குழப்பத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு..  :lol:

அதற்கெல்லாம் உங்களுக்கு போதிய விளக்கம் தந்தாகிவிட்டது.

மையவாதத்திற்கு நீங்களே ஒரு சிறந்த உதாரணம் என்பதை பல முறை இக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

உதாரணத்துக்கு

 

நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

Edited by Dash, 16 February 2014 - 05:51 PM.

சர்வதேச அளவில் போராட்டம் பயங்கரவாதமானதற்கும் தமிழீழம் என்ற இலக்கு திசைமாறிப்போனதற்கும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கி இரவோடு இரவாக வெளியேற்றியது பெரும் காரணமாக இருந்தது. இவ்வளவு அழிவுகளின் பின்னர், கோவணம் கூட உருவப்பட்டபின்னர் கிட்டத்தட்ட தமிழரளவு சனத்தொகையை நெருங்கும் இஸ்லாமியத்தமிழர்களை வெளியேற்றுவோம் இரண்டாம்தரப் பிரஜைகளாக்குவோம் என்ற கருத்தை விரும்பும் உங்கள் மன நிலையே மையவாதத்தின் கருவாகும். ஆகவே உங்களிடமே அதற்கான விடை இருக்கின்றது.

குறிப்பு: சம்மந்தமில்லாமல் மையவாதம் என்று நீங்கள் இத் திரியில் இழுத்தபடியால் தான் அதற்கு பதிலளிக்கும் நோக்கில் எனது கருத்து அமைந்தது. இதற்கு மேல் இத் திரியில் சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை தெடரவில்லை.

Link to comment
Share on other sites

அட .. லைக் பண்ணினது ஒரு குற்றமா?? :huh: தமிழீழம் என்று பெயர் வைத்ததால் தமிழர்கள் வாழ்வார்களாக்கும் என நினைத்துவிட்டேன். அடாத்தாக குடியேற்றப்பட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்கிற விதத்திலேயே அக்கருத்தை விளங்கிக் கொண்டேன்.

இப்படிக்கு

"மையவாதி இசைக்கலைஞன்" :lol:

Link to comment
Share on other sites

நீதிக்காகவும் உண்மைக்காகவும் உழைப்பவர்களில் நான் கண்ட உன்னத மனிதர்கள்.   மாண்புமிகு விக்டர் கோப்பும் ,அவரது உதவியாளர்களும் ,இவர்கள் எமது தேசம் சார்ந்த விடயங்களில் மட்டுமல்ல நெதர்லாந்தில் உண்மைக்காக பலமுறை குரல் கொடுத்து உண்மையை நிலை நாட்டிய உத்தமர்கள் 

 

[நெதர்லாந்தில் இவர்களை பலமுறை நேரில் கண்டுள்ளேன் ].1779761_836156673095623_3778627582156348

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லதன் செய்ததை போல 1998 யுகே தடை செய்தபோது, சட்ட ரீதியில் அதை முறியடிக்க வசந்தராஜா, ஜெயதேவன் போன்றோர் முனைந்தனர் ஆனால் தலைமையை சுற்றி இருந்த புலம்பெயர் வியாபாரிகள், புலிகளை தவறாக வழி நடத்தி அதை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டனர். 2009 க்கு முன்பே இதை செய்திருந்தால், செய்யவிட்டிருந்தால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தடை செய்ததிற்கும் நீக்கியதற்கும் அவர்களுககுச் சாதகமான காரணங்களே இருக்கின்றது. இதில் தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.

 

வேண்டுமானால் தடையை மீள கொண்டுவருவார்கள் மீள நீக்கவும் செய்வார்கள்.

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது. இனியும் இருக்கும்.

 

இவை அனைத்தையும் தெரியாதவர்கள்தான் விடுதலைப்புலிகள். :lol:
 
புலிக்கொடி தூக்குவதை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள்தான் மடச்சாம்பிராணி புலம்பெயர்தமிழர்கள். :lol:
 
ஐயா சண்டமருதன்! உங்களிடம் கோவில்களில் பிரசங்கம் செய்யக்கூடிய தகுதி அத்தனையுமுள்ளது  :icon_idea:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லதன் செய்ததை போல 1998 யுகே தடை செய்தபோது, சட்ட ரீதியில் அதை முறியடிக்க வசந்தராஜா, ஜெயதேவன் போன்றோர் முனைந்தனர் ஆனால் தலைமையை சுற்றி இருந்த புலம்பெயர் வியாபாரிகள், புலிகளை தவறாக வழி நடத்தி அதை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டனர். 2009 க்கு முன்பே இதை செய்திருந்தால், செய்யவிட்டிருந்தால்?

யுகே 2001 இல் புலிகளை தடைசெய்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  மகிழ்ச்சியான செய்தி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடந்த கால வரலாறு 'கறைகள்' படிந்தது!

 

அதைக் கழுவி எடுக்க வேண்டியது எமது முதலாவது கடமை!

 

அந்த வகையில் இந்தத் தடைநீக்கல் வரவேற்கத் தக்கது!

 

இதனை மற்றைய நாடுகளும் தொடர வேண்டும் என்பதே எனது ஆவல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்தவற்கு முதல் (2000) மாவீரர் தின உரையில் ஆலோசகர் தடை செய்பவர்கள் எல்லோரும் தடைசெய்யுங்கள் பிறகு வந்து சமாதானம் பேச பாலா வீட்டு கதைவை தட்டவேண்டாம் என்றார். இராசதந்திரம்???????

Link to comment
Share on other sites

இவை அனைத்தையும் தெரியாதவர்கள்தான் விடுதலைப்புலிகள். :lol:

 

புலிக்கொடி தூக்குவதை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள்தான் மடச்சாம்பிராணி புலம்பெயர்தமிழர்கள். :lol:

 

ஐயா சண்டமருதன்! உங்களிடம் கோவில்களில் பிரசங்கம் செய்யக்கூடிய தகுதி அத்தனையுமுள்ளது  :icon_idea:  :D

எல்லாம் தெரிந்தவர்களும் யூதர்களுக்கு நிகரான புத்திசாலிகள் என்றும் தம்மைத் தாமே பீத்திக்கொள்பவர்கள் எதற்கு வன்னி மக்களை காவுகொடுத்தனர்? அதுவும் ராசதந்திரமோ?

Link to comment
Share on other sites

காலம் மாறுதோ என்று யோசித்தால்...

 

" கீழே உள்ளது இங்கு மற்றவர்களை இழுத்து துள்ளுபவர்களுக்காக மட்டும்..."

 

செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு?? இனி இதால் என்ன பிரயோசினம்?????

 

அந்த lawyerகளுக்கு நல்ல வேட்டை :)

Link to comment
Share on other sites

உண்மையில் இதில் பெரிய நன்மை இருக்கு 

 

விரும்பியோ விரும்பாமலோ புலிகளில் இணைந்தவர்கள் முள்ளிவாய்காலுக்கு பின்னரும் உலகெங்கும் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருக்கின்றார்கள்.விசாரணை சாதகமாக அமைந்தவர்கள் கூட நிரந்தர வதிவுரிமை கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் விசா புதுப்பித்திக்கொண்டு இருக்கின்றார்கள் .நேற்றைய பத்திரிகையில் கூட புலிகளின் நகைக்கடையில் கணக்காளராக இருந்தவர் தான் இன்னமும் நிரந்தர வதிவுரிமை கிடைக்காமல் மனைவியை கனடாவிற்கு கூப்பிட முடியாமல் இருப்பதாக சொல்லியிருந்தார் .கப்பலில் வந்தவர்கள் சிலருக்கும் இதே நிலைமை .

நாட்டுக்காக போராட போய் போராட்டம் முடிந்த நிலைமையிலும் இந்த அவலதிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தீர்ப்பு உதவலாம் .நாட்டில் இருக்கும் புலிகளே புனரமைப்புடன் சகஜவாழ்விற்கு திரும்பும் போது புலம்பெயர்ந்து வந்தவர்களை தொடர்ந்தும் திரிசங்கு நிலையில் வைத்திருக்க தேவையில்லை .

 

தடை எடுத்தாச்சு இனி அடியை பார் என்ற கணக்கில் சிலர் துள்ளுகின்றார்கள்.முள்ளிவாய்காலே மணி விளையாட்டு என்றவர்கள் இவர்கள் .சாயிபாபா ,நிந்தியானந்தா  பக்த கோடிகள் கணக்கு இவர்களையும் வேடிக்கை பார்த்துவிட்டு போகவேண்டியதுதான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.