Jump to content

எம்முள் வாழ்ந்த பெரியார்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை

யாழ் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு ஆணிமாதம் 27ம் திகதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது.

மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அதன் பின்னர் தனது 17ஆவது வயதில் நம்பிக்கை, தெய்வமயம் இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற மட்டுவில் க.வேற்பிள்ளையிடம் பாடம் கற்று வந்த பொழுது நாவலர் காவியப் பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று கல்விபயின்றார். வண்ணார்பண்ணை காவியப்பாடசாலை பெரிதும் அவரை விருப்பத்தோடு கல்வி கற்க வைத்தது. சுண்ணாகம் அ.குமாரசுவாமிபுலவர்,

த.கைலாசப்பிள்ளை, வித்துவான் ந.சுப்பையாபிள்ளை, ஆகியோரிடம் இலக்கண, இலங்கியங்களை குருசீட முறையில் கற்றார். பழமையில் பற்று வைக்கும் பணிகளை இவர் காவியப் பாடசாலையில் கற்றுக் கொண்டார். மதுரைச் தமிழ்ச் சங்க பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றார்.

தனது 3 ஆவது வயதில் தாயை இழந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் சிறந்த கல்வி மானாக வளர வேண்டும் என்பதில் பண்டிதமனியின் தந்தை சின்னத்தம்பி ஆர்வமுடன் செயற்பட்டார்.

திருநெல்வேலி சிவன் கோயிலுக்கு அருகில் கல்வியில் துறைபோன பலரும் ஒன்று கூடி நாட்டு நடப்புகள் பற்றி அலசுவார்கள் ஆங்கிய இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி விவாதிப்பார்கள். அந்த கலந்துரையாடல்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் கலந்து கொள்வார். இதனால் பண்டித மணிக்கு ஆங்கில இலங்கியங்களில் நாட்டம் ஏற்பட்டது.

யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியராக விளங்கிய கலைப்புலவர் நவரட்ணம் என்பவர் 1931 ஆண்டு திருநெல்வேலியில் கலா நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தார். அதில் உறுப்பினராகவும் பண்டிதமணி அவர்கள் இருந்தார். பண்டிதமணி ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு திருநெல்வேலியில் சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 1929ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராக இருந்ததனால் கலா நிலையத்திற்கு அடிக்கடி வந்து பல தொண்டுகள் புரியத்தொடங்கினார். மக்களின் பார்வைக்காக இலக்கண, இலக்கிய புத்தகங்களையும் தருவித்தார். எந்நேரமும் கலாநிலையம் மக்களால் சூழப்பட்ட ஒரு இடமாகத் திகழ வைத்தார்.

நகைச்சுவை ததும்ப உரையாற்றும் அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் இருந்து அறிஞர்களை வரவழைத்து சமய சொற் பொழிவுகள் நிகழத்தினார்.

பண்டிதமணி அவர்கள் ஆசிரிய கலாசாலையில் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் கல்வி புகட்டுவார். இதனால் மாணவர்கள் மத்தியில் விருப்புடையவராக விளங்கினார். இவரின் பாடத்தை மாணவர்கள் வாஞ்சையுடன் கற்றனர்.

இவரது நவபாரதம் என்ற உருவக்கத்தை 1938ஆம் ஆண்டு மலரில் வெளிவந்துள்ளதை அறிந்த பலரும் தேடித் தேடி படித்தார்கள். இவ்வாறு 30 வருடங்கள் சைவாசிரியப் பணியை தொடர்ந்து செய்தார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பெரும் புலவர்களாக விளங்கியதுடன் சிலர் சமய பண்பாட்டினை பரப்புவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

பணிவும் அடக்கமும் மிகுந்த பண்டிதமணி அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது படைப்புகள், மாணவர்களின் உயர்தர வகுப்பு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 'கம்பன் ஒரு வம்பன்' 'அவையடக்கம்' போன்றவை க.பொ.த சாதாரண தரம் மாணவர்களுக்கென பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர் எழுதிய கந்தபுராண தக்ஷண காண்ட உரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் யானைமேல் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்ற சிறப்பும் பெற்றது. சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகம் பண்டிதமணிக்கு 'இலக்கிய கலாநிதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தது. யாழ்ப்பாணத்து மக்களை மனிதர்களாக வாழச் செய்வது புராண படனமாகும் கந்த புராண கலாச்சாரம் தான். அந்திய நாட்டவரின் ஆசை வார்த்தையில் மயங்காது மக்களை காத்து வந்தது. தமிழ், சைவம் இரண்டையும் இரு கண்களாக போற்றிய பண்டிதமணி அவர்கள் 86 ஆண்டுகள் நைட்டிக பிரமச்சரியாக வாழ்ந்து 1986 ஆண்டு பங்குனி மாதம் 13 திகதி இறைவனடி சேர்ந்தார். அவரது பூதவுடல் திருநெல்வேலி கலா நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் நூற்றாண்டு விழா 1999 ஆம் ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

-சூரியன் இணையம்-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.