Jump to content

உங்களின் பழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம்.
 
இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனியாள் கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என தெரிய வந்தது.
 
                                             
 
1. இசை/ஒளிப்பட இயக்கியாக : பழைய தனியாள் கணினியை மிகச்சிறந்த ஒளி ஒலி இயக்கியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக ஒலி அட்டை (Sound card ) விண்டோ 98, winamp அல்லது அதற்கு இணையான ஒத்தியங்கும் (compatible)மென்பொருள் (இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன) ஒலி பெருக்கி (speaker), MP3 அல்லது video கோப்புகள் ஆகியவை மட்டுமே தேவையாகும், winamp அல்லது VLC இயக்கியின் தற்போதைய பதிப்பை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவி கொள்க. பின்னர் MP3 அல்லது video ஆகிய வற்றின் கோப்புகளை பழைய கணினியில் நகலெடுத்து கொண்டு இயக்கி மிக அற்புதமான ஒளி ஒலிகளை கணினியில் பார்த்து, கேட்டு மகிழ்வதற்காக பயன்படுத்தி கொள்க.
 
2. தொலைக்காட்சியாக : சிறந்த ஒளி ஒலிகளை பார்த்து கேட்டு மகிழலாம் என்றவுடன் உங்களுக்கு தொலைகாட்சி பெட்டிதான் என்று கண்டிப்பாக ஞாபகம் வரும் ,அதனால் தொலைகாட்சி பெட்டியை வாங்குவதற்கு பதிலாக பழைய தனியாள் கணினியை தொலைக்காட்சி பெட்டியாக பயன்படுத்தி கொள்ள முடியும்என்ற செய்தியை நினைவில் வைத்து கொள்க . இதற்காக கணினியில் கூடுதலான ஒரு TV tuner card ஒன்றை மட்டும் வாங்கி பொருத்தி கொண்டால் போதும் (இதனுடைய புதிய அட்டைகள் ரூ.1300 விலையிலும், ஒருமுறை பயன்படுத்தியது எனில் ரூ.500 விலையிலும் கிடைக்கின்றன) இதன்மூலம் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்,அல்லது நிகழ்ச்சிகளை கோப்பாக பதிவுசெய்து பின்னர் தேவையானபோது பார்த்து மகிழலாம். இந்த நிகழ்ச்சிகளை DVD, VCD, VCR ஆகியவைகளில் பதிவு செய்து பின்னர் வேறு இடங்களுக்கு எடுத்து சென்றும் பயன்படுத்தலாம்.
 
3. பல் ஊடக பணியகம் : பிணையத்திற்கான அட்டையை (network card) கணினியில் பொருத்தி அமைத்திடுக. பின்னர் அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இருக்கும் கணினிகளை வளாகப்பிணையம் (LAN) அடிப்படையில் இணைத்து இணைய இணைப்பில் உங்கள் கணினியை இணைத்து mp3, video போன்றவை களின் கோப்புகளை இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க. ஒளி, ஒலி நாடாக்களிருந்து படங்கள், இசைகளை music match juke என்ற மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து கணினியை மத்திய பணியகம் போன்று பயன்படுத்துக.
 
4. இணையத்தின் வழி செலுத்தியாக (internet router) பயன்படுத்திட : அகல்கற்றை இணைய இணைப்பு (broad band internet ) அல்லது கம்பி வழி இணைய இணைப்பு பெற்றிருந்தால் கணினியை வழிச்செலுத்தி router அல்லது பதிலி(proxy )யாக மாற்றி பயன்படுத்த முடியும். இணையத்தில் உலாவுதல்(web surfing) பதிவிறக்கம் செய்தல் (downloading) , மின்னஞ்சலை கையாளுதல் (e-mail handling) , உரையாடுதல் (chatting) போன்ற பல இணைய வழி பணிகளின் மத்திய நுழைவு வாயிலாக இந்த பழைய தனியாள் கணினியை மற்றவர்களின் கணினிகளுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இணைய பணியகமாகவும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறான இணைய பணியகத்திற்காக (Server) புதியதாக கணினி எதையும் வாங்காமல் கையில் இருக்கும் பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும். இதற்காக கூடுதல் வாளாக பிணைய அட்டை(LAN card)யும் அதற்கான மென்பொருட்களுமான wingate, win proxy, analog proxy போன்றவைகள் மட்டுமே தேவையாகும், இவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது லினக்ஸ் பகிர்ந்தளிப்பானும் அடிப்படை IP வழிச் செலுத்தியும் ஆகியவற்றிற்கான இலவசமென்பொருளை நிறுவி இணையத்தின் வழிசெலுத்தி router அல்லது பதிலிproxy யாகபயன்படுத்தி கொள்ளமுடியும்.
 
5. தகவல் பணியகமாக (data server) : பிணைய வழியில் அனைத்து கணினிகளையும் பழைய கணினியுடன் இணைத்து, தேவையான அனைத்து தரவுகளையும் சேகரித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளும் பணியகமாக மாற்றி கொள்ள முடியும். இந்த வகையில் சிறிய நிறுவனங்களின் கணக்கு பதிவியில் மென்பொருட்களான TallyERP, Ex போன்றவைகளின் மத்திய தரவு பணியகம் போன்று பராமரித்து மற்ற கணினிகளின் மூலம் அணுகி தேவையான தரவுகளை கையாளுமாறு பயன்படுத்தி கொள்ள முடியும். அன்றாடம் பணிபுரியும்போது உருவாகும் கோப்புகளை அவ்வப்போது காப்பு நகலகமாக (backup) பாதுகாத்து கொள்ளலாம். இதற்காக backup) மென்பொருளை நிறுவி கொண்டு தானாகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் காப்பு நகல் செய்து கொள்ளும்படி அமைத்திட முடியும்.
 
6. சொற்செயலி(Word Processor ) : புதிய கணினியில் பயனுள்ள வேறு ஏதேனும் பணிகளை செய்து வரும்நேரத்தில் மிக நீண்ட கடிதம் அல்லது கட்டுரை போன்றவைகளை அன்றாடம் தயார் செய்யும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்குறைஞர்கள் போன்றவர்கள் இவைகளை உள்ளீடு செய்வதற்கு பழைய கணினியை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் போன்ற இலவச மென் பொருளை பயன்படுத்தி கொள்ளலாம்.
 
7. இணைய உலாவியாக பயன்படுத்துதல்(web browser) : ஓப்ரா அல்லதுஃபயர் ஃபாக்ஸ் போன்ற மென் பொருட்களை பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் உலாவுதல்(browsing) , உரையாடுதல் (chatting) போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இலவச பதிவிறக்க மேலாளரை (free download manager) பயன்படுத்தி இசைகள், மென்பொருட்கள்ஆகியவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். Antivirus தடுப்பானை பயன்படுத்தி இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் கோப்புகளை வடிகட்டி கொள்ளலாம். நேரடி வங்கி பணிகள் (online banking) நேரடி பொருள் கொள்முதல் (online shopping) போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு பழைய தனியாள் கணினியை இணைய இணைப்பிற்கு பயன்படுத்தும்போது நம்முடைய தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் முக்கிய தகவல்களை நமக்கு தெரியாமல் திருடி செல்ல முடியாது என்பதை கவணத்தில் கொள்க.
 
8. கணக்கு பதவியில் மேலாளராக (Accounts manager ): பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தும் கணக்கு பதிவிய லுக்கான மென்பொருட்கள் புதியதாக வரும் இயக்க முறைமை யுடன் (operating system) ஒத்தியங்க மறுத்துவிடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கணக்கு பதிவியலுக்கான மென்பொருளை மேம்படுத்த வேண்டுமெனில் செலவு மிக்கதும் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் செயலாக ஆகின்றது. DOS, ஆரம்பநிலை விண்டோபதிப்பு ஆகியவற்றில் இயங்கிய கணக்கு பதிவியலுக்கான மென்பொருள் இப்போது வருகின்ற புதிய மேம்பட்ட இயக்கமுறைமைக்கு தகுந்தவாறு இவை ஒத்தியங்க மறுக்கும் நிலையில் இவ்வாறு புதிய இயக்கமுறைமையுடன் எதற்காக போராடுவது என்ற நிலையை தவிர்த்து கணக்கு பதிவியல் செயல்களுக்கு மட்டும் பழைய தனியாள் கணினியையே பயன்படுத்தி கொள்ள முடியும்.
 
9. அச்சிடும் மேலாளர் (printer manager) : அதிக அளவு அச்சிடும் பணிக்காக ஏராளமான அச்சுப்பொறிகளை பயன்படுத்தும்போது அன்றாட மற்ற பணிகள் எதுவும் பாதிக்காமல் இருப்பதற்காக பழைய கணினியுடன் அனைத்து அச்சுப்பொறிகளையும் இணைத்து அச்சுப்பணிக்கு மட்டும் தனிபணியகம் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக window 98/xp அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை இருந்தால் போதும். மேலும் parallel port இணைப்பில் செயல்படும் அச்சுப்பொறிகள் புதிய இயக்க முறைமையில் ஒத்தியங்காமல் தகராறு செய்வதைஇதன்மூலம் தவிர்க்கலாம்.
 
10. தகவல் மையம் (knowledge center): Adobe acrobat reader, Encanta Encyclopedia போன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் செய்திகள்,இணையபக்கங்கள், மின்செய்தி தாட்கள், மின் ஆவணங்கள் ஆகியவற்றை படித்தறிவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஏன் நம்முடைய பிள்ளைகளை Encyclopedia மூலம் தகவல் சேகரிக்கும் செயலுக்கு பயன்படுத்துமாறும் செய்ய முடியும். மேலும் ஆய்வு மாணவர்களுக்கு தகவல்களை, செய்திகளை தேக்கி வைத்து கொள்ளும் களமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
 
11. மென்பொருட்களின் பரிசோதனை மையம்(Software test bed ): மென்பொருள் வடிவமைப்பாளர், ஆலோசகர்போன்றவர்கள் உருவாக்கும் புதிய மென்பொருட்களை நடைமுறைப்படுத்தும் முன்பு வெவ்வேறான அமைவுகளில் இவைகள் எவ்வாறு இயங்குகின்றன.என்றும் அதன் இறுதி விளைவு எவ்வாறு இருக்கும் எனவும் பரிசோதித்து பார்க்கின்ற களமாக நம்முடைய பழைய கணினியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் மென்பொருட்களை நடைமுறைப் படுத்தும்போது என்ன ஆகுமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக இந்த செயலுக்கு உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
 
12. மின்னஞ்சல் பணியகம் : Mail gate, mail daemon அல்லது ability main serverபோன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு வளாக பிணையத்தின் மூலம் (LAN) மற்ற கணினிகளை இணைத்து மின்னஞ்சல்களை அனுப்பி வைக்கவும் பெறவுமான பணியகம் போன்று பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் நேரடியாக இணையத்தில் சென்று மின்னஞ்சல்கள் பெறுவது அனுப்புவது ஆகிய செயல்களின் நெருக்கடிகளை தவிர்த்து கொள்ள முடிகிறது. scanning செய்தல்,, spyware ஐ கட்டுப்படுத்துதல் என்பன போன்றபல முன்னெச்சரிக்கை செயல்களை பழைய தனியாள் கணினியில் செயல்படுத்தி அதன்பிறகு மற்ற கணினியில் கோப்புகளை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
 
13. இணைய இணைப்பு கட்டுப்பாட்டகம்: நம்முடைய பிள்ளைகள் இணையத்தில் தவறான வழிகளில் உலாவுதலை கட்டுப்படுத்த பழைய கணினியின் வழியாக அனைத்து வகையான வடிகட்டுதலையும், கட்டுப்பாடுகளையும் பயன்படுத்தி இணையத்தில் பாதுகாப்பாக பயமின்றி உலாவும்படி செய்ய முடியும்.
 
14. CD/DVD யில் நகலெடுக்கும் பணியகமாக : ஒரே மாதிரியான கோப்புகள் மென்பொருட்களை ஆயிரக்கணக்கான CD/DVD களில் நகலெடுக்கும் பணிக்காக CD/DVD Writer பணியகமாக உங்கள் பழைய கணினியை மாற்றியமைத்து கொள்ளலாம். இதற்காக CD/DVD Writerஐ மட்டும் வாங்கி கணினியில் பொருத்தி கொண்டால் போதும்.
 
15. தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்த : நம்முடைய அலுவலகத்தில் தொலை நகல் இயந்திரம் பழுதுபட்டுவிட்டநிலையில் புதியதாக அதனை கொள்முதல் செய்ய வேண்டாம். நம்முடைய பழைய கணினியையே தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்காக Fax/voice/modem ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் மென்பொருட்களை bitware of super voice பயன்படுத்தி தொலைபேசி இணைப்பை கணினியுடன் மோடத்தின் மூலம் ஏற்படுத்தி கொண்டு கணினியை எப்போதும்போல் வைத்து கொண்டால் போதும்.தொலை நகல் இயந்திரம் போன்று இந்த பழைய தனியாள் கணினியே மிகச்சிறப்பாக பணிபுரியும்.
 
16. கண்காணிப்பு பாதுகாப்பு சாதனமாக : கடைகளில் அல்லது நம்முடைய நிறுவனத்தில் விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவ்வப்போது கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய நிலைஏற்படும் இதற்கான அட்டைகளை பழைய கணினியில் யுஎஸ்பி பொருத்துவாய் மூலம் பொருத்தி ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து இதனுடன் இணைத்து இந்த அமைப்பை பயன்படுத்தி நம்முடைய விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக இருந்திடுவதற்காக கண்காணிக்கலாம். இதற்காக capturing video spy என்ற மென்பொருள் பயன்படுகிறது.
 
17. பயிற்சி மையம் (Traning center) இளைய தலைமுறை மாணவர்கள் கணினியை ஒருங்கிணைத்தல் (assembly) பிரச்சனையை சரிசெய்தல் (trouble shooting) போன்ற செயல்களுக்கான பயிற்சியகமாக பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
 
இதுவரை எவ்வாறு பழைய கணினியை பயனுள்ளதாக செய்ய முடியும் என எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை மட்டும் கூறியுள்ளேன். மேலும் பயனுள்ள பல பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என நம்புகிறேன். நீங்களும் பழைய கணினியை குப்பையில்தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

www.anbuthil.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.