Jump to content

இன்பம் - ஐம்பது


Recommended Posts

கொஞ்சம் பெரிய கவிதை தான். ஆனாலும் இதை எழுதியவரின் திறமையும், தமிழின் இனிமையையும் மெச்சித்தான் ஆக வேண்டும்..
 
இன்பம் - ஐம்பது

அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்;
     அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்;
பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்;
     பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்;
தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்;
     சந்தனக் காற்றினில் தவழுதல் இன்பம்;
வெண்மதி வானில் உலவுதல் இன்பம்;
     நிம்மதி நெஞ்சினில் நிலவுதல் இன்பம்;


இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்;
     உறவினில் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்;
அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்;
     அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்;
திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்;
     திறமையில் கடமையில் விஞ்சுதல் இன்பம்;
உரியதோர் மங்கையின் கொங்கையில் இன்பம்;
     உருகிடும் சங்கம கங்கையில் இன்பம்;

இசையுற வாழ்வினில் இலங்குதல் இன்பம்;
     இல்லறம் சிறப்புற விளங்குதல் இன்பம்;
பசையுறப் பாரினில் துலங்குதல் இன்பம்;
     பருவத்தில் திருமணம் புரிதலில் இன்பம்;
தசையுறு திடத்தினில் கலக்குதல் இன்பம்;
      தருமத்தின் உயர்வினை விளக்குதல் இன்பம்;
வசையற வாயுரை முழக்குதல் இன்பம்;
     வரவுக்குள் செலவினை அடக்குதல் இன்பம்;

அயர்வற மகிழ்வொடு களித்தல் இன்பம்;
     அருமறை உயர்வொடு செழித்தல் இன்பம்;
உயர்வுறக் கருத்தொடு நினைத்தல் இன்பம்;
     ஓய்வறப் பொறுப்பொடு நிலைத்தல் இன்பம்;
துயரற பயமறத் துலங்குதல் இன்பம்;
     சுயப்படு பொருளினை வழங்குதல் இன்பம்;
தெளிவுறு மதியினில் திளைத்தல் இன்பம்;
     திறம்படத் தமிழினில் உரைத்தல் இன்பம்;

தன்மையில் பணிந்து திகழுதல் இன்பம்;
     தவறினைத் துணிந்து விலகுதல் இன்பம்;
தொன்மையின் உண்மை துலக்குதல் இன்பம்;
     தூய்மையில் துறவறம் துலங்குதல் இன்பம்;
பன்மையில் விழித்துப் பழகுதல் இன்பம்;
     பசித்தவர் களிப்புறப் பொழியுதல் இன்பம்;
உன்னலில் உயர்வினைச் செய்தலும் இன்பம்;
     அன்னையின் மடியினில் சாய்வதும் இன்பம்;

எழுதல் இன்பம்; இரவினில் மறுகி
     விழுதல் இன்பம்; இதயம் குழைந்து
அழுதல் இன்பம்; இறையை உருகித்
     தொழுதல் இன்பம்; இளமையில் கற்றுத்
தெளிதல் இன்பம்; உயிருக்கு உயிராய்
     பழகுதல் இன்பம்; உயிரொடு உடலைத்
தழுவுதல் இன்பம்; உணர்வில் கலந்து
     ஒழுகுதல் இன்பம்; ஆளுதல் இன்பம்;

எழுதுதல் இன்பம்; அறிவிலி வாதில்
     நழுவுதல் இன்பம்; அறவழிப் பாதையில்
ஒழுகுதல் இன்பம்; அறிவுக் கடலில்
     ஆழுதல் இன்பம்; அகத்தினில் ஜோதி
மூழுதல் இன்பம்; அறிவொளிச் சுடரில்
     மூழ்குதல் இன்பம்; ஆன்மத் தூய்மை
சூழுதல் இன்பம்; அன்புடை வாழ்கை
     நீளுதல் இன்பம்; வாழுதல் இன்பம்;

உழைத்தல் இன்பம்; உழவுத் தொழிலில்
     பிழைத்தல் இன்பம்; மழையில் மரங்கள்
கிளைத்தல் இன்பம்; பயிர்கள் மண்ணில்
     முளைத்தல் இன்பம்; மணிகள் முற்றின்
விளைத்தல் இன்பம்; மனையில் சேர்ந்து
      திளைத்தல் இன்பம்; மகிழ்வுற விருந்தினை
அழைத்தல் இன்பம்; மகிழ்ச்சி பொங்கக்
     களித்தல் இன்பம்; உறவுகள் இன்பம்;

படித்தல் இன்பம்; படித்தபின் வேலை
     பிடித்தல் இன்பம்; துடிப்பொடு கடமை
முடித்தல் இன்பம்; பிடித்தவர் கண்ணை
     அடித்தல் இன்பம்; சபையினர் போற்ற
நடித்தல் இன்பம்; காதலில் திருமணம்
      முடித்தல் இன்பம்; இசையெனக் கவிதை
வடித்தல் இன்பம்; கருணையில் உடைமை
      கொடுத்தல் இன்பம்; படைத்தல் இன்பம்;

விருத்தம் இன்பம்; நாட்டிய மங்கையர்
     நிருத்தம் இன்பம்; நல்லிசைப் பாட்டில்
திருத்தம் இன்பம்; நாயகன் நாயகி
     பொருத்தம் இன்பம்; நலமாய்த் திகழும்
கருத்தும் இன்பம்; ஆசையை அறவே
     அறுத்தல் இன்பம்; அறவழிப் பெருமை
சிறத்தல் இன்பம்; அழிவின் வழியை
     நிறுத்தல் இன்பம்; மறுத்தல் இன்பம்;

துயிலுதல் இன்பம்; தொடர்ந்து மகிழ்வைப்
      பயிலுதல் இன்பம்; துவளாது வாழ்வில்
முயலுதல் இன்பம்; தொடுகை உணர்வில்
      மயங்குதல் இன்பம்; துணையைப் பொருந்தி
முயங்குதல் இன்பம்; தொடரும் கலையில்
      தயங்குதல் இன்பம்; துவங்கிய பின்னே
இயங்குதல் இன்பம்; மெய்யெனும் பொய்யில்
     மகிழ்வதும் இன்பம்; நெகிழ்வதும் இன்பம்;

அணைத்தல் இன்பம்; அதரச் சுவையில்
      பிணைத்தல் இன்பம்; அன்பொடு நெஞ்சினை
இணைத்தல் இன்பம்; அண்மையில் அழகினை
      மலைத்தல் இன்பம்; நன்மைகள் தருவன
நினைத்தல் இன்பம்; நயம்படு பொருளினைச்
      சுவைத்தல் இன்பம்; உளத்தொடு சுகத்தினில்
திளைத்தல் இன்பம்; உதவியில் மனிதரை
      முகிழ்த்தல் இன்பம்; பகிர்தல் இன்பம்;

உணருதல் இன்பம்; ஊடலில் கசிந்து
     புணருதல் இன்பம்; காதலில் கூடி
மலருதல் இன்பம்; காவியம் பாடித்
     திணறுதல் இன்பம்; இரவினில் ஆடிக்
கிளருதல் இன்பம்; கனிமொழி பேசிக்
      குளறுதல் இன்பம்; கரைகளைத் தேடி
வளருதல் இன்பம்; கனவுகள் வளர்த்துப்
      புலருதல் இன்பம்; உலருதல் இன்பம்;

தேடுதல் இன்பம்; தேனிசைத் தமிழில்
     பாடுதல் இன்பம்; சுகத்தொடு கண்களை
மூடுதல் இன்பம்; தாள இலயத்தொடு
     ஆடுதல் இன்பம்; அழகின் சிரிப்பை
நாடுதல் இன்பம்; அகமும் புறமும்
     கூடுதல் இன்பம்; அன்பிற்கு ஏங்கி
வாடுதல் இன்பம்; அன்னையைத் தேடி
      ஓடுதல் இன்பம்; சாடுதல் இன்பம்;


தானம் இன்பம்; வானம் இன்பம்;
      தன்னிலை மறக்கும் கானம் இன்பம்;
மோகம் இன்பம்; போகம் இன்பம்;
     மோதலில் பிறக்கும் காதல் இன்பம்;
நாணம் இன்பம்; பாசம் இன்பம்;
     நட்பினில் வருகிற நேசம் இன்பம்;
பானம் இன்பம்; பதவியும் இன்பம்;
      பணிவில் தெரிகிற துணிவும் இன்பம்;


தகிப்பது இன்பம்; சுகிப்பது இன்பம்;
     கொடுப்பது இன்பம்; எடுப்பது இன்பம்;
நகைப்பது இன்பம்; புகைப்பது இன்பம்;
     இசைப்பது இன்பம்; இசைவது இன்பம்;
பசிப்பது இன்பம்; புசிப்பது இன்பம்;
      ரசிப்பது இன்பம்; ருசிப்பது இன்பம்;
சகிப்பது இன்பம்; வசிப்பது இன்பம்;
      நுகர்வது இன்பம்; பகர்வது இன்பம்;


உதயம் இன்பம்; இரவும் இன்பம்;
     மதியம் இன்பம்; மாலை இன்பம்;
கதிரும் இன்பம்; நிழலும் இன்பம்;
     அனலும் இன்பம்; புனலும் இன்பம்
உறவும் இன்பம்; பிரிவும் இன்பம்;
     வரவும் இன்பம்; செலவும் இன்பம்;
பரிவும் இன்பம்; உரிமை இன்பம்;
     அறிவும் இன்பம்; தெளிவும் இன்பம்;


கவனம் இன்பம்; புவனம் இன்பம்;
     காட்சி இன்பம்; தேர்ச்சி இன்பம்;
அகமும் இன்பம்; புறமும் இன்பம்;
     ஆட்சி இன்பம்; மாட்சி இன்பம்;
மவுனம் இன்பம்; தவமும் இன்பம்;
     மீட்சி இன்பம்; நீட்சி இன்பம்;
வரமும் இன்பம்; திறமும் இன்பம்;
     சாட்சி இன்பம்; தீட்சை இன்பம்;

பார்வை இன்பம்; தேர்வை இன்பம்;
     தண்மை இன்பம்; மென்மை இன்பம்;
வாய்மை இன்பம்; நேர்மை இன்பம்;
     கண்மை இன்பம்; நன்மை இன்பம்;
தாய்மை இன்பம்; சேய்மை இன்பம்;
     அண்மை இன்பம்; அன்னை அன்பாய்
காய்தல் இன்பம்; உவத்தல் இன்பம்;
     தந்தை காட்டும் சிரத்தை இன்பம்;

பிள்ளை இன்பம்; கிள்ளை மழலையை
     உள்ளல் இன்பம்; அமுத மழையினை
அள்ளல் இன்பம்; கன்னம் கொஞ்சிக்
     கிள்ளல் இன்பம்; கைகளில் வாரிக்
கொள்ளல் இன்பம்; கவலையை ஒருங்கே
      தள்ளல் இன்பம்; துடிப்போடு ஆடித்
துள்ளல் இன்பம்; பாடலைக் கூடி
      விள்ளல் இன்பம்; பள்ளி இன்பம்;

பிறத்தல் இன்பம்; நல்லவை சொல்லி
      வளர்த்தல் இன்பம்; நல்வினை பெருக்கி
சிறத்தல் இன்பம்; நல்லவர் தம்முடன்
     உரத்தல் இன்பம்; அல்லவை தன்னைத்
துறத்தல் இன்பம்; தீமையை நெஞ்சினில்
      அறுத்தல் இன்பம்; தீயவர் தொடர்பை
மறுத்தல் இன்பம்; நிலமகள் போலும்
      பொறுத்தல் இன்பம்; திருத்தல் இன்பம்;

சமைத்தல் இன்பம்; சபையினர் கூடிச்
     சுவைத்தல் இன்பம்; சத்திய தத்துவம்
படைத்தல் இன்பம்; பைத்திய வழக்கம்
     உடைத்தல் இன்பம்; நம்பிக்கை தருவன
விதைத்தல் இன்பம்; வையகம் செழிக்க
     விளைத்தல் இன்பம்; கையறு நிலையினைச்
சிதைத்தல் இன்பம்; கனவுகள் மெய்ப்பட
     விழித்தல் இன்பம்; அமைத்தல் இன்பம்;

ஆக்கம் இன்பம்; ஆயும் மனதின்
     ஏக்கம் இன்பம்; அரங்கம் தருகிற
ஊக்கம் இன்பம்; அதனால் வருகிற
     தாக்கம் இன்பம்; அறிவால் துணிந்த
நோக்கம் இன்பம்; ஆழ்ந்து நுணுகும்
     நோக்கும் இன்பம்; விரிந்து காணும்
போக்கும் இன்பம்; வேலும் ஆலும்
     பாக்கும் இன்பம்; தேக்கும் இன்பம்;

யாகம் இன்பம்; யோகம் இன்பம்;
     தாரம் இன்பம்; பாரம் இன்பம்;
ஆய்வு இன்பம்; ஓய்வு இன்பம்;
     அன்பு இன்பம்; பண்பு இன்பம்;
தியானம் இன்பம்; தியாகம் இன்பம்;
      திரைக்கடல் இன்பம்; திரவியம் இன்பம்;
நாயாய் உழன்று நடப்பதும் இன்பம்;
     கடற்கரை மணலில் கிடப்பதும் இன்பம்;

கோடை இன்பம்; குளிர் இன்பம்;
      குருவிக் கூட்டில் மழை இன்பம்;
வாடை இன்பம்; அலை இன்பம்;
     அருவிப் பாட்டில் இசை இன்பம்;
ஆடை இன்பம்; அவை இன்பம்;
      அழகிய தமிழில் சுவை இன்பம்;
மேடை இன்பம்; கலை இன்பம்;
      தினமொரு குறளின் உரை இன்பம்;

தாயகம் காக்கும் படை இன்பம்;
      தண்ணீர் தேக்கும் மடை இன்பம்;
தியாகம் வேள்விக்குக் கொடை இன்பம்;
      தெரியும் கேள்விக்கு விடை இன்பம்;
வாயில் புன்னகைக் கடை இன்பம்;
      வைகறைக் காற்றில் நடை இன்பம்;
தூய்மை துலங்கும் உடை இன்பம்;
     வெயிலோ மழையோ குடை இன்பம்;

அரும்புகள் மலரும் வனம் இன்பம்;
     அறுசுவை பகரும் உணவு இன்பம்;
குறும்புகள் காட்டும் மகவு இன்பம்;
     குறுநகை தீட்டும் மொழி இன்பம்;
உறவினர் கூடும் நாள் இன்பம்;
     ஊரார் சேரும் தேர் இன்பம்;
விருந்தினர் நிறையும் இல் இன்பம்;
     மருந்தையும் பகிரும் சொல் இன்பம்;

காற்றில் ஒலிக்கும் இசை இன்பம்;
     கண்கள் உரைக்கும் மொழி இன்பம்;
ஏற்றம் இரைக்கும் ஒலி இன்பம்;
     இரவில் கலங்கரை ஒளி இன்பம்;
ஆற்றும் உரையில் இதம் இன்பம்;
     ஆற்று மணலில் நடை இன்பம்;
தேற்றும் மனிதரின் உளம் இன்பம்;
     தேக பலத்தில் நலம் இன்பம்;

பறவைகள் வாழும் சோலை இன்பம்;
     நறுமணம் சூழும் மாலை இன்பம்;
நிறைமகள் இடுகிற கோலம் இன்பம்;
     வயல்வெளி மகளிரின் குலவை இன்பம்;
அறுபது அகவை நிறைதல் இன்பம்;
     அதனினும் எண்பதும் நூறும் இன்பம்;
முறையொடு ஆற்றும் வினையும் இன்பம்;
      முதுமொழிக் கூற்றில் நிறையும் இன்பம்;

அச்சம் அற்ற ஆண்மை இன்பம்;
     அழுகை அற்ற பெண்மை இன்பம்;
குற்றம் அற்ற கற்பு இன்பம்;
     குறைகள் அற்ற வெற்றி இன்பம்;
சஞ்சலம் அற்ற கல்வி இன்பம்;
     சுயநலம் அற்ற தொண்டு இன்பம்;
வஞ்சகம் அற்ற நெஞ்சம் இன்பம்;
     வருத்தம் அற்ற அண்மை இன்பம்;


அரசியல் அற்ற பணிமனை இன்பம்;
     ரகசியம் அற்ற துணையும் இன்பம்;
துரோகம் அற்ற தோழமை இன்பம்;
     ரோகம் அற்ற தேகம் இன்பம்;
விரோதம் அற்ற சுற்றம் இன்பம்;
      விரசம் அற்ற சொற்கள் இன்பம்;
உரசல் அற்ற நட்பும் இன்பம்;
     விரிசல் அற்ற மனையும் இன்பம்;

தழுவல் அற்ற படைப்பும் இன்பம்;
     தளைகள் அற்ற நடையும் இன்பம்;
நழுவல் அற்ற நண்பர் இன்பம்;
     களங்கம் அற்ற நல்லோர் இன்பம்;
வழுவல் அற்ற ஒழுக்கம் இன்பம்;
     பிழைகள் அற்ற பழக்கம் இன்பம்;
அழுகல் அற்ற கனிகள் இன்பம்;
     பழுதுகள் அற்ற விருதுகள் இன்பம்;

படுத்தல் அற்ற பாடம் இன்பம்;
     பகைத்தல் அற்ற வீடும் இன்பம்;
தடுத்தல் அற்ற காடும் இன்பம்;
     தடைகள் அற்ற நாடும் இன்பம்;
விடுத்தல் அற்ற பிடிப்பும் இன்பம்;
     கடுத்தல் அற்ற மொழியும் இன்பம்;
தொடுத்தல் அற்ற துணையும் இன்பம்;
     முடித்தல் அற்ற தொடரும் இன்பம்;

மறைத்தல் அற்ற இனிமை இன்பம்;
      சிதைத்தல் அற்ற தொன்மை இன்பம்;
குறைத்தல் அற்ற வாயில் இன்பம்;
      குழைத்தல் அற்ற பணிவும் இன்பம்;
வறுமைகள் அற்ற இளமை இன்பம்;
     களைத்தல் அற்ற பணியும் இன்பம்;
சிறுமைகள் அற்ற வளமை இன்பம்;
     வளைத்தல் அற்ற வாய்மை இன்பம்;

விலங்கு அற்ற விடுதலை இன்பம்;
     விளம்பரம் அற்ற உபயம் இன்பம்;
சிலந்தி அற்ற மூலை இன்பம்;
     சிக்கல் அற்ற வேலை இன்பம்;
சலனம் அற்ற வேளை இன்பம்;
     குழப்பம் அற்ற மூளை இன்பம்;
கலக்கம் அற்ற இதயம் இன்பம்;
      கவலை அற்ற உதயம் இன்பம்;

 

சோதனை அற்ற சாலை இன்பம்;
     சோகம் அற்ற பயணம் இன்பம்;
வேதனை அற்ற மனமும் இன்பம்;
     வேகம் அற்ற மாலை இன்பம்;
போதனை அற்ற காதல் இன்பம்;
     வரம்பும் அற்ற உரிமை இன்பம்;
ரோதனை அற்ற சூழல் இன்பம்;
     தொல்லை அற்ற செல்வம் இன்பம்;


மெல்வதை மட்டும் கடிப்பது இன்பம்;
     மெத்தையில் நித்திரை கொள்வது இன்பம்;
வெல்வதைச் சொல்லிச் செய்வது இன்பம்;
     வித்தையில் யாவையும் கற்பது இன்பம்;
சொல்லில் நிலையாய் நிற்பது இன்பம்;
     சுத்தத்தைப் பேணிக் காப்பது இன்பம்;
வல்லவை செய்து முடிப்பது இன்பம்;
     வளம்பெற ஆவணம் வடிப்பது இன்பம்;

உயிரினை மேம்படப் போற்றுதல் இன்பம்;
     உண்மையை மெய்ம்படச் சாற்றுதல் இன்பம்;
பயிரினைச் செழிப்புறத் தேற்றுதல் இன்பம்;
      பார்வையை விழிப்புற மாற்றுதல் இன்பம்;
இயற்கையைக் களிப்புறச் சேர்குதல் இன்பம்;
      இன்மையை முழுவறத் தீர்க்குதல் இன்பம்;
செயற்கையை நலம்பெறத் தீட்டுதல் இன்பம்;
      செய்வினை வளம்பெறக் கூட்டுதல் இன்பம்;

கலையினை அழகொடு புதுக்குதல் இன்பம்;
     கந்தலை இழிவினை ஒதுக்குதல் இன்பம்;
சிலையினை உயிரெனச் செதுக்குதல் இன்பம்;
     சிந்தனைச் சிறகினை விரிக்குதல் இன்பம்;
கவிதையின் நயத்தினைக் கதைத்தல் இன்பம்;
     காவியம் இலக்கியம் படைத்தல் இன்பம்;
மழைமுகில் வருகையில் மயிலுக்கும் இன்பம்;
     ஓவியம் வரைகையில் மனதுக்கும் இன்பம்;

நினைவினைக் கிளறும் புகைப்படம் இன்பம்;
     நெடுநாள் நினைக்கும் திரைப்படம் இன்பம்;
நினைத்தவை வாழ்கையில் நடக்கையில் இன்பம்;
     நெஞ்சினில் நினைவுகள் படர்கையில் இன்பம்;
தொலைந்தவை கிட்டின் தொடர்ந்திடும் இன்பம்;
     கலைந்தவை கூடின் நிறைந்திடும் இன்பம்;
விளைந்தவை நன்றெனின் பெருகிடும் இன்பம்;
     இனியவை காண்கையில் மலர்ந்திடும் இன்பம்;

தேர்வை வென்ற தகவல் இன்பம்;
     திடத்தைத் தருகிற அஞ்சல் இன்பம்;
யாரையும் வெல்லும் கனியுரை இன்பம்;
     வாய்மொழி சொல்லும் தேன்மொழி இன்பம்;
தூர தேசத்துத் தொடர்பும் இன்பம்;
     தொடரால் வருகிற அழைப்பும் இன்பம்;
வரவைப் பெருக்கும் தொழிலும் இன்பம்;
     வாய்ப்பைக் குவிக்கும் வர்த்தகம் இன்பம்;

கடன்களை அடைக்கும் உளம் இன்பம்;
     காய்மையைக் கலைக்கும் மனம் இன்பம்;
உடமையில் மாண்பே உயர் இன்பம்;
     உலகினில் நீரே நிறை இன்பம்;
கடமையயில் நடுநிலைச் செயல் இன்பம்;
     கலகத்தைத் தீர்க்கும் தரகு இன்பம்;
படையினைத் தேற்றும் தலை இன்பம்;
     பணிவினைப் பேணும் நிலை இன்பம்;

அழகினைக் காட்டிலும் அறிவு இன்பம்;
      அலையினைக் காட்டிலும் கடல் இன்பம்;
உழைப்பினைக் காட்டிலும் முனைப்பு இன்பம்;
      உலகினைக் காட்டிலும் உயிர் இன்பம்;
மழையினைக் காட்டிலும் பயிர் இன்பம்;
     மலரினைக் காட்டிலும் மணம் இன்பம்;
நிழலினைக் காட்டிலும் நீர் இன்பம்;
     நிலவினைக் காட்டிலும் வான் இன்பம்;

மலையினைக் காட்டிலும் சிலை இன்பம்;
     மணலினைக் காட்டிலும் வீடு இன்பம்;
விலையினைக் காட்டிலும் பயன் இன்பம்;
     நினைவினைக் காட்டிலும் நனவு இன்பம்;
செலவினைக் காட்டிலும் வரவு இன்பம்;
     கனவினைக் காட்டிலும் கதை இன்பம்;
பகலினைக் காட்டிலும் இரவு இன்பம்;
     அனலினைக் காட்டிலும் குளிர் இன்பம்;

பிரிவினைக் காட்டிலும் உறவு இன்பம்;
     பெறுவதைக் காட்டிலும் தரல் இன்பம்;
ஊரினைக் காட்டிலும் பேர் இன்பம்;
     உறவினைக் காட்டிலும் உணர்வு இன்பம்;
நீரினைக் காட்டிலும் மோர் இன்பம்;
     நிறத்தினைக் காட்டிலும் அறிவு இன்பம்;
பாரினைக் காட்டிலும் பரிவு இன்பம்;
     பசுவினைக் காட்டிலும் பால் இன்பம்;

கருக்கலில் மழையின் வரவு இன்பம்;
     மழையில் மணலின் மணம் இன்பம்;
அறுவடை நாளின் உணவு இன்பம்;
     அனுபவம் பேசும் மொழி இன்பம்;
வறுமையை அழிக்கும் வழி இன்பம்;
      திறமையை வளர்க்கும் கலை இன்பம்;
பொறுமையைக் காட்டும் குணம் இன்பம்;
     புதுமையை ஏற்கும் மனம் இன்பம்;

வித்தில் விளையும் விந்தையே இன்பம்;
     யுத்தம் களையும் சிந்தையே இன்பம்;
பக்தியில் தேடும் முக்தியே இன்பம்;
     முக்தியை நாடும் பக்தியே இன்பம்;
சித்தியில் தெளியும் புத்தியே இன்பம்;
     புத்தியில் அறியும் உணர்வே இன்பம்;
சக்தியில் மலரும் சாதனை இன்பம்;
     சத்தியம் ஒளிரும் சோதனை இன்பம்;

காலம் முழுதும் கடமையில் ஒன்றாய்
     ஆலயம் தொழுதல் சாலவும் இன்பம்;
நாளும் பொழுதும் நல்லதை எண்ணி
      வாழும் நாளில் வளருதல் இன்பம்;
ஆழும் மனதில் அடக்கம் பேணி
      அறிவில் ஞானம் பெருகுதல் இன்பம்;
புலனை ஒன்றி இறையை உணர்ந்தே
      மீளாத் துயிலில் மாளுதல் இன்பம்;

இயற்கையைக் காத்தலே இன்பம்; - நெஞ்சில்
      இனிமையைச் சேர்த்தலே இன்பம்; - உளத்தில்
உயிர்களை மதித்தலே இன்பம்; - உலகில்
     பிணிகளை அழித்தலே இன்பம்; - நிலத்தில்
பயிர்களை வளர்த்தலே இன்பம்; - வளத்தில்
     மக்களைப் பெறுதலே இன்பம்; - நலத்தில்
வயிற்றுக்குப் புசித்தலே இன்பம்; - களிப்பில்
      யாக்கை சுகித்திடத் துய்த்தலே இன்பம்;

பயத்தினை வெல்வதே இன்பம்; - மனத்தில்
      மரணத்தை வெல்வதே இன்பம்; - கல்வியில்
முயன்றதை அறிவதே இன்பம்; - கடமையில்
      தாயகம் காப்பதே இன்பம்; - களத்தில்
உயர்வினை அடைவதே இன்பம்; - நடப்பில்
      இன்னலைச் சகித்தலே இன்பம்; - நிறைவில்
உய்த்திடும் ஞானமே இன்பம்; - இறுதியில்
     இரணமே இல்லாத மரணமே இன்பம்;
     \

உறுதியாய்
     மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;
 
- எழுதியவர் பெயர் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் ஐம்பதா ஐநூறா...! அவ்வளவும் அருமை...!!

 

எழுதியவர்  இன்பத்தை எழுதி முடித்து விட்டார் , இப்ப துன்பத்தை எழுதிக் கொண்டிருக்கின்றார் , இப்போதைக்கு முடிக்க மாட்டார்...!

 

நன்றி நன்பரே...!!!  :)

Link to comment
Share on other sites

வரவுக்கும் நட்புறவு பாராட்டும் மனதுக்கும் நன்றி சுவி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத்தில்.... இத்தனை வகைகளா?
நாம்... தான் அதனை உணரத் தெரியாமல் இருக்கிறோம் போலுள்ளது. :)

Link to comment
Share on other sites

இன்பத்தில்.... இத்தனை வகைகளா?

நாம்... தான் அதனை உணரத் தெரியாமல் இருக்கிறோம் போலுள்ளது. :)

 

இவ்வளவு இன்பம் இருக்கிறதோ? இல்லையோ தெரியாது ?? ஆனால் இத்தமிழை வாசிக்கையில் எல்லாம் இன்பமயமாக இருக்கிறது ...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.