Jump to content

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24.09.2014 மாபெரும் தமிழர் பேரணி - தமிழக வாழ்வுரிமைக் கட்சி


Recommended Posts

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!

நாள்: செப்டம்பர் 24, 2014

பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை

நேரம்: மாலை சரியாக 3 மணி

பேரணி நிறைவடையும் இடம்:

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை.

மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்;

1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே!

:

2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்!

3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு!

4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு! இரட்டைக் குடியுரிமை வழங்கு!

5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து!

சாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து

தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!

தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!

அன்புடன் அழைக்கிறது

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே!

⦁ இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பன்னாட்டுப் புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

⦁ ஐ.நா.வின் இந்த குழுவை விசாரணைக்காக இலங்கைக்குள் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என்று மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது.

⦁ சர்வதேச நாடுகளின் உச்ச அமைப்பான ஐ.நாவின் அதிகாரப்பூர்வ புலனாய்வுக் குழுவையே அனுமதிக்க முடியாது என்று இறுமாப்புடன் பேசி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, அதே ஐ.நா. அவையின் பொதுச்சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.

⦁ ஐ.நா. பொதுச்சபையில் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதித்தால் ஐ.நா. மீதான நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகும்.

⦁ மேலும் ராஜபக்சேவை ஐ.நா. அவையில் உரையாற்ற அனுமதித்தால் ஈழத்தில் நடந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. புலனாய்வுக் குழுவின் செயல்பாடும் முடங்கும்.

⦁ இது தமிழ்ச் சமூகத்துக்கு சர்வதேச சமூக இழக்கும் மாபெரும் அநீதி. இதனால்தான் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்!

⦁ ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் அமைத்திருக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

⦁ இதற்கு மாற்றாக சிங்களப் பேரினவாத அரசின் போர் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழகத்தில் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்த வேண்டும்.

⦁ இலங்கையில் யுத்தம் வெடித்த காலம் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த காலம் மட்டுமின்றி. அதன் பின்னரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலமாகி உள்ளனர்.

⦁ அவர்களிடம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன.

⦁ இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான நேரடி சாட்சியங்களாக தமிழ்நாட்டு ஈழத் தமிழ் ஏதிலிகள் இருக்கின்றனர்.

⦁ இதனால் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.

⦁ இதற்காக ஐ.நா. புலனாய்வுக் குழுவுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்குவதுடன் இந்த விசாரணைக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்..

3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு!

⦁ 1974, 1976 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு, தமிழ்நாட்டு மக்களின் இசைவின்றி இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது முதல் வங்கக் கடல் தமிழக கடல் தொழிலாளர்களான மீனவர்களின் குருதியால் செங்கடலாகிப் போய்விட்டது.

⦁ 700 தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள அரசு. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

⦁ உலகத்திலேயே மீன்பிடிக்கச் சென்றதற்காக இத்தனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரே கடல் வங்கக் கடல் மட்டுமே.

⦁ இன்றும் கூட நாள்தோறும் சிங்களக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் சிறைபிடிப்பதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

⦁ மேலும் தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான படகுகளையும் தற்போது பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு அதனை விடுவிக்கவே மாட்டோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே.

⦁ சிங்களப் படையால் தமிழர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதை தட்டிக் கேட்டு நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

⦁ அத்துடன் வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி தமிழர் விரோத "கச்சத்தீவு ஒப்பந்தத்தை" ரத்து செய்து மீட்க வேண்டும் என்பது மட்டுமே. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும்.

4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு! இரட்டைக் குடியுரிமை வழங்கு!

⦁ இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அடக்குமுறைகளால் சொத்து, சுகம், வாழ்வுரிமை என அனைத்தையும் இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாய் உயிரைப் பணயம் வைத்து தாய் தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்தவர்கள்தான் நம் ஈழத் தமிழ் உறவுகள்.

⦁ இந்த தமிழர்கள் ஏதோ ஆடு மாடுகளைப் போல அகதிகள் முகாம்கள், சிறப்பு அகதிகள் முகாம்கள் என்ற பெயரிலே அடைபட்டு வதைபட்டு வருகின்றனர்.

⦁ அதுவும் கொடுஞ்சிறைகளைவிட கொடூரமானதாக இருப்பவை சிறப்பு அகதிகள் முகாம்.

⦁ இதே இந்தியாவில் திபெத்தில் இருந்து வந்த அகதிகள் ஒரு தனிநாட்டுக்கு உரித்தான அத்தனை உரிமைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கின்றனர்.

⦁ ஆனால் 8 கோடித் தமிழ் மக்களின் உறவுகள் சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர்.

⦁ திபெத் அகதிகளுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் ஏதிலிகளாக வந்த ஈழத் தமிழ் உறவுகளுக்கு உண்டு.

⦁ ஆகையால் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை இழுத்து மூடிட வேண்டும்.

⦁ ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கி இரட்டைக் குடி உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும்.

5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து!

⦁ இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசு மீது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் ' இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிப்பு".

⦁ ஆனால் தமிழ்நாடு அங்கம் வகிக்கும் இந்திய மத்திய அரசு இந்த தீர்மானத்தை உதாசீனப்படுத்திவிட்டு இலங்கையுடன் அனைத்து வகையான பொருளாதார உறவுகளையும் முன்னெடுக்கிறது.

⦁ இலங்கைக்கு ரூ500 கோடி நிதி உதவி அளிப்பதாக மத்திய நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கிறது.

⦁ இந்த மாற்றாந்தாய் போக்கை மத்திய அரசு கைவிட்டு இலங்கை மீதான பொருளாதாரத் தடை கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

⦁ - ஈழத் தமிழரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து

தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!

தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

(Facebook)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=146337

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.