Jump to content

அம்மா பாசம்... அப்பா....??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில்  நடந்து செல்லணும்

மகன் வெளிக்கிட நேரமாச்சு..

 

நானும் மனைவியும்  நடக்கத்தொடங்கினோம்..

சிறிது நடந்தும் ஆளைக்காணவில்லை..

 

தொலைபேசி  எடுத்தேன்

வீட்டில் தான் நின்றிருந்தார்

போய்க்கொண்டிருக்கின்றோம் ஓடிவா என்று விட்டு தொலைபேசியை  வைத்தேன்..

 

மனைவி  பேசினார்

ஓடி வா என்கிறீர்கள்

பிள்ளை ஓடி வந்து விழுந்துவிட்டால்..

 

அடிப்பாவி

பொடிக்கு 22  வயசு

பட்டதாரி  எஞ்சினியர்

பொத்திக்கொண்டு வா  என்றேன்..

 

சத்தியமாக

ஓடி வா என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு

ஓடிவந்து விழுந்து விட்டால் என்று தான் சில செக்கனுக்கு முன் நானும் நினைத்தேன்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயதானால் என்ன? பெற்றவருக்கு பிள்ளை மழலைதான். பெற்றமனம் பித்தென்று சும்மாவா சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீச்சலை,அம்மா தரையில பழக்குவா அப்பா தண்ணீரில் பழக்குவார்.அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் எனது இரண்டாவது மகன் யுனிக்குப் போகிறார் . அது 110 கி. மீ. தூரம். வாரத்டுக்கு ஒருக்கால் வந்து போகலாம்.அவர் கிளம்பும்நாளன்று வீட்டில் மகனிடம் அந்த இடம் எனக்கு மிகவும் பழக்கமான இடமென்றபடியால் நான் அவருக்கு , உன்னுடைய இடத்தில் இருந்து அருகில் கடைகளைப் பற்றிக் கூறி.    அங்கு  நீ   பிசா போன்றவை வாங்கலாம். கன்டீனில் ஒரு நேரம் சாப்பிடு. ஒரு மைக்ரோ ஓவனும், கேத்திலும் சிறிய பிரிட்ஜும் போதும் என சொல்லிக் கொன்டிருக்க, எனது மனைவி  ஒரு கிளாசியரில் நிரையச் சாமான்களுடன் வந்து அவரிடம்,

 

இஞ்சை அப்பு, இதுக்குள்ள புட்டு இருக்கு ரண்டு நாளைக்கு காணும், இந்தக் கறியும் , பொரியலும் ஒரு கிழமைக்குப் போதும் , பழுதாகாது. நீ கடையில கோலா ஜூஸ் ஒன்றும் வாங்க வேண்டாம், எல்லாம் இதில இருக்கு. போனதும் பிரிட்ஜுல வை. ரொட்டியும் இருக்கு, பசிச்சால்  அதை சூடு பண்ணி தேத்தண்ணியோட சாப்பிடு. இடையில் ஏதாவது வேணுமென்டால் போன் பண்ணு ,அப்பாட்ட குடுத்தனுப்பிறன். நான் அவற்றைப் பார்த்தன், பொடியன் படிக்காமல் இருந்து சாப்பிட்டாலே பத்து நாளைக்குக் காணும்.

 

தலை விறைச்சுது, இதுக்குள்ள இடையில கதைத்து மூட் அவுட்டாகி பாட்டுக் கேப்பான் என்னுட்டு  போய் போர்திக் கொண்டு படுத்திட்டன். போன செவ்வாய் போனவர் , இப்ப வீட்டுக்கு வந்து நிக்கிறார். தாயும் மோனும் நேற்றே போய் இந்தக் கிழமைக்கும் சாமான் வாங்கி அடுக்கீட்டினம். :(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா போக போக எல்லாம் சரி வரும்.   பின்பு வீட்ட  வரவே மனம் வராது  . :D .. பிராக்கு கூடி விடும். டொண்ட்ட் வொர்ரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை ....

 

 

உண்மைதான் பாட்டி

 

அம்மாவிடம் போய்விட்டு

வடைபெறும் போது

கவனமாகப்போங்கள் என்பார்....

 

அவர் சொல்வதும்

நான் கேட்பதும் பலவருடப்பழக்கமாதலால்

அப்பொழுது அது பெரிதாக தெரிவதில்லை

எனது வயதுக்கே அவர் இவ்வாறு சொல்கிறாரே என...

 

ஆனால் நமக்கென்று வரும் போது

ஒரு சிறு குட்டல் விழுந்தது   போலிருந்தது

அது தான்  பதிந்தேன்

 

நன்றி

எதிலும் முதலாதவராக வந்து வரவேற்று  உபசரிக்கும் எமது பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயதானால் என்ன? பெற்றவருக்கு பிள்ளை மழலைதான். பெற்றமனம் பித்தென்று சும்மாவா சொன்னார்கள்.

 

 

நன்றி  அக்கா

நமக்கு இப்ப தானே விளங்குது...

 

 

அனுபவத்தை  எழுதினேன்

 

வரவுக்கும் நேரத்துக்கும்  கருத்துக்கும் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா அப்பாதான்.........பதிவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீச்சலை,அம்மா தரையில பழக்குவா அப்பா தண்ணீரில் பழக்குவார்.அவ்வளவுதான்

அது எப்பிடி அண்ணாச்சி ? நீச்சலை நான் எனது பிள்ளைகளுக்கு தண்ணீரில் தான் பழக்கினேன். உண்மை தெரிஞ்சாகவேணும் சாமீ. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.