Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மிகப்பழமையான கிரிக்கெட் அணிகள் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா என்றுதான் பலரும் நினைக்கக்கூடும். ஆனால், இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமானதாகவே இருக்கும்.

ஆம்…! சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், வெளிநாட்டு மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்ற முதலாவது சர்வதேச அணி என்கின்ற பெருமை கனடாவினைச் சாரும்.

1844 #செப்டம்பர் 24, 25 & 26 இல் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கனடா அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாயினும், சீரற்ற காலநிலை (செப்டம்பர் 25ம் திகதி போட்டி நடைபெறவில்லை) காரணமாக இப்போட்டி 3 நாட்களுக்கு நீடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(ஸ்கோர் சுருக்கம் ⇨ கனடா 82 & 62, ஐக்கிய அமெரிக்கா 62 & 58)

#கிரிக்கெட்….!

இன்றைய திகதிகளோடு ௬டிய செய்திகள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, people smiling
Sritharan Ganesh
16 h· 
 
இன்று யாழ் நீதிமன்றத்தில் வித்தியா வழக்கு நடைபெற்று 1ஆம் எதிரி பூபாலசிங்கம் இந்திரகுமார், 7ஆம் எதிரி பழகிவேல் ரூபநாதன் ஆகியோர் விடுதலை பெற ஏனையோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
வித்தியா புங்குடுதீவு மக்களுக்கு இங்கு எத்தனையோ பாலியல் வன்புணர்வு, கொலை, பாலியல் வல்லுறவு, கொள்ளை என்பவற்றுக்கு நீதி தேடி கொடுத்து இந்த ஊருக்கு வெளிநாட்டவர், இந்நாட்டவர் பயமில்லாமல் வந்து போக தன்னுயிரை ஆகுதியாக்கி மரணமடைந்த அந்த வீரநங்கையை எம் மண் மக்களின் விழிநீர் சொரிந்து அதனை கண்ணீர் காணிக்கையாக்குகிறோம். அவளின் ஆத்மா சாந்தியடைய அமைதியாக தூங்கம்மா. வீரவணக்கத்தை அவளுக்கு அளிக்கின்றோம் .சாந்தி.சாந்தி.சாந்தி 
 
 
 
Image may contain: flower, plant and nature
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பகிர்வு

 
உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலாநிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம்ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலாநிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கானதீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதுசுற்றுலாவின்முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலாஎப்படி மக்களின் சமூககலாச்சாரஅரசியல் மற்றும்பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைஎடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலாநிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடுஇந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தில்பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும்என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல்தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல்இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டதுஇதன்கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத்திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலக இதய நாள்  செப்டம்பர் 29, 2017 

உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்!

நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இதயத்தைக் காப்பாற்ற முடியும். நம் இதயம் எனும் இயற்கையான பேட்டரிக்கு இந்த அழகான எண்ணங்களைச் செயலாக்குவதன் மூலம் சார்ஜ் ஏற்றுவோம். இதயம் காப்போம்... உயிர் காப்போம்!

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

 

உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும் என்று பல்வேறு விஷயங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இதயநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்... அது மிகவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவராக இருந்தாலும் சரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இதய நோய்கள் தொடர்பாக இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் உண்மை என, வாங்க பார்க்கலாம்!

1. இளம் வயதுதான் ஆகிறது. இதயநோய் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.

உண்மை: இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல... இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாரடைப்பு வந்தால் நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

உண்மை: வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.

3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை எடுப்பதால், எதை வேண்டுமானலும் சாப்பிடலாம்.

உண்மை: நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.

4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதனால் பிரச்னை இல்லை.

உண்மை: நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தாலேபோதும், இதய நோய் வராது.

உண்மை: சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.

6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வராது.

உண்மை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. வானவில் நிறங்களில் உள்ள ஏழு வகை காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.

7. பல ஆண்டுளாக உள்ள சிகரெட் பழக்கத்தை திடீரென்று நிறுத்துவதால் இதயநோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியாது.

உண்மை: புகைபிடிப்பதை நிறுத்திய விநாடியில் இருந்தே அதன் பலன்கள் உடலுக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எத்தனை வருடங்கள், எத்தனை நாட்கள் புகைபிடித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.

8. இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் வரும்; பெண்களுக்கு ஏற்படாது.

உண்மை: 1984 வரை உலகில் பெண்களே இதய நோய்களால் அதிகமாக இறந்துகொண்டிருந்தார்கள் என்றால், நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். 55 வயதுக்கு மேல், 70 சதவிகித ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய ரத்தநாள பிரச்னைகள், இதய செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 80 வயதில் 83 சதவிகித ஆண்களுக்கும் 87 சதவிகிதப் பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸஸுக்குப் பிறகு, அந்த பாதுகாப்பு அவர்களைவிட்டு போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.

9. இதய நோய் இருந்தால் கொழுப்பையே சாப்பிடக் கூடாது.

உண்மை: இதய நோய் இருப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பையும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும், டிரான்ஸ் ஃபேட்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களும் எண்ணெய்களும் போதுமான அளவு சாப்பிடலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்து அல்ல.

உண்மை: அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதே முக்கியம். முதல் அட்டாக் வரும்போது சிலருக்கு மாரடைப்பு வந்ததைக்கூட உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! அடுத்த அட்டாக் உயிரைப் பறிக்கும் எமனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மைல்டு அட்டாக்தானே என்று அசட்டையாக இருப்பது, மரணத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

vikatan

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
நாம் கவிதை இதழ்

மரணம்...


நாள் கோள்
நற்பலன் பாராது
இயற்கையின்-இரக்கமற்ற
அழைப்பு.

நெடிய உயிர் துடிப்பின்
இயக்கம் நின்று விட்ட,
பொழுதுகள் மரணம்
என்ற பெயர் பெற்று
நிற்கும்..

ஜனனத்தின் போது
வாழ்த்துக்கள் கூறி
வரவேற்ற சொந்த 
பந்தங்கள் போகும் 
போது கண்ணீர்
அஞ்சலிகளோடும்
ஒப்பாரிகளோடும் 
வளி அனுப்பி
நிற்பர்...

கொடிய காலன் கோவம்
கொள்ளும் போது தன் 
பாசக்கயிற்றை வயது  
வரம்பின்றி வலையாய்
வீசி பார்க்கிறான்..

நாங்கள் என்ன 
மீனவன் வலையில்
சிக்கும் மீன்களா..
ஆனாலும் என்றோ 
ஓரு நாள் போவது
நிட்சயம்.

வாழும் மட்டும் 
புதிதாய் புலரும்
எல்லா நாளும் 
நாம் இறவா நாளே. 


ஆக்கம்:- யாயினி

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டோ
------------------------
அந்நாளிலேயே இந்திய சினிமாவைக் கலக்கிய 
முதல் தமிழ்க் கலைஞன்... 

---------------------------------------- சோழ. நாகராஜன்

தமிழ் சினிமா கலைஞர்கள் இங்கிருந்து இந்திப் பட உலகத்துக்குப் போவது என்பது பலகால வழக்கம்தான். விரிந்துபரந்த சந்தை காரணமாக பொருளும் புகழும் அள்ளித்தருவதாக துவக்கமுதலே இந்திப் படஉலகம் இருந்துவருவதும் இதற்கொரு காரணம்தான். அங்கு போனவர்களில் மிகச்சிலர் அங்கேயே தங்கிவிடுவதும், பலரும் போன சுவடு தெரியாமல் மீண்டும் இங்கே வந்துவிடுவதும்கூட எப்போதும் வாடிக்கைதான். தமிழின் பிரபலங்களான அந்நாளைய எஸ்.எஸ். வாசன் காலத்திலிருந்து நமது காலத்தின் கமல், ரஜினி வரையில், இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா என்று பலரும் இந்தி சினிமாவில் முகம்காட்டத்தவறவில்லை. 

ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, இந்தி சினிமாவில் மிகமுக்கிய உச்சத்தைத் தொட்ட ஒரு முன்னோடிக் கலைஞனை இன்று பலரும் அறியாதிருப்பது ஒரு வியப்பு கலந்த சோகம். இங்கே பிரபலமாகி, அதன் பின்னர் இந்தியில் கால் பதிக்கும் முயற்சியைத்தான் பலரும் இன்றுவரையில் செய்துவருகின்ற நிலையில் அவரோ இந்தி சினிமாவை ஒரு கலக்குக் கலக்கிவிட்டு அப்புறம் சாவகாசமாகத்தான் தமிழுக்கு வந்து தடம்பதித்திருக்கிறார். அவர்தான் இந்திய சினிமாவின் குழந்தைப் பருவத்தில் அதனைச் சீராட்டித் தாலட்டி வளர்க்கிற பெரும்பணியைச் செய்த முதல் தலைமுறை முன்னோடிகளில் ஒருவரான ராஜா சாண்டோ.

ராஜா சாண்டோவின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டைதான். அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் பி.கே. நாகலிங்கம். இளம் வயதிலேயே உடற்பயிற்சியில் நாட்டம் கொண்டவராக அவர் இருந்தார். அதனால் கட்டுமஸ்தான அழகிய தோற்றத்தோடு இருந்த அவருக்கு சினிமாவின் மீதும் ஈர்ப்பிருந்தது. அன்றைய பம்பாயில் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவுக்கு இணையாகப் போற்றப்பட்ட இன்னொரு முன்னோடி எஸ்.என். பதங்கர் நடத்திவந்த நேஷனல் பிலிம் கம்பெனியில் ஒரு சண்டைக் கலைஞராகச் சேர்ந்தார் நாகலிங்கம். அவரது உடற்கட்டையும் தோற்ற வசீகரத்தையும் பார்த்த பம்பாய் சினிமாக்காரர்கள் அவரை ராஜா சாண்டோ என்று அழைக்கத் தொடங்கினார்கள். அன்று ஜெர்மனியின் ஆய்கன் சாண்டோ என்பவர் அவரது உடற்கட்டிற்காக உலகம் முழுதும் பேசப்பட்டார். அவரைப்போலவே இருந்ததால் பி.கே. நாகலிங்கம் பி.கே. ராஜா சாண்டோ ஆனார். 

1922 ஆம் ஆண்டில் பதங்கரின் பக்த போதனா என்ற இந்திப் படத்தில் ராஜா சாண்டோ முதன்முதலாக முக்கிய வேடத்தில் நடித்தார். அதற்காக அவர் பெற்ற சம்பளம் 101 ரூபாய். அதனைத் தொடர்ந்து வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற படங்களில் நடித்துப் பெயர் வாங்கினார். இந்தி சினிமா பேசாதபோதே ராஜா சாண்டோ வடநாட்டு ரசிகர்களால் பேசப்பட்டார். பேசாப் பட யுகத்தில் 36 படங்களில் நடித்து, வடநாட்டார் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகராக உயர்ந்த சாண்டோ ரஞ்சித் ஸ்டுடியோஸில் மாத சம்பளத்திற்கு இயக்குநராகச் சேர்ந்தார். 

சிநேஹ் ஜோதி (1928) அவர் இயக்கிய முதல் பேசாப்படம். அதில் அவர் நடிக்கவும் செய்தார். அதனைத் தொடர்ந்து வடக்கே மேலும் 4 படங்களில் நடித்தவர் மெல்ல தனது தாய் மண்ணின் தமிழ் சினிமா உலகை எட்டிப்பார்த்தார். பேயும் பெண்ணும் (1930) அவர் இயக்கி, நடித்த முதல் தமிழ்ப் பேசாப் படம். அதனைத் தொடர்ந்து ராஜலட்சுமி, நந்தனார், ஸ்ரீவள்ளி திருமணம், அனாதைப் பெண், சதி உஷாசுந்தரி, ராஜேஸ்வரி, பக்தவத்சலா போன்ற படங்களில் நடித்தும், இயக்கியும் பங்காற்றினார். 1932ல் சினிமா பேசத்தொடங்கியபோது தமிழில் அவர் பாரிஜாத புஷ்பஹரணம் என்ற படத்தை இயக்கிவிட்டு மீண்டும் தனக்கு சினிமா பயிற்சியளித்த இந்திப் படஉலகம் அவiரை மறக்க இயலாமல் அழைத்தது. அதனை நோக்கிப் பயணப்பட்டார். 

அங்கே சுமார் 12 படங்கள். அவற்றில் ஒன்றின் இயக்குநர். மற்றவற்றில் நடிகர். இப்படி இந்தியில் தான் மேற்கொண்ட இரண்டாவது சுற்றுக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தார். 1935ல் அவர் இயக்கிய மேனகா படம் பலவகைகளிலும் பெருமை பெற்றது. இந்த மேனகாதான் தமிழின் முதல் சமூகப் படம். அந்நாளைய துப்பறியும் கதை எழுத்தாளர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலைத் தழுவியதுதான் இந்த மேனகா. ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் தமிழின் பழம்பெரும் நாடக சகோதரர்கள் டி.கே. சங்கரன், டி.கே. பகவதி, டி.கே. சண்முகம், டி.கே. முத்துசாமி ஆகியோருடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.விஜயாள், கே.டி. ருக்மணி போன்றோர் நடித்தார்கள். 

ஏற்கனவே இந்தப் புதினத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார்கள். 
இந்த மேனகாவில் ராஜா சாண்டோ பல அதிரடிப் புதுமைகளைப் புகுத்தினார். இந்தி சினிமாவில் பணியாற்றியதாலும், பல ஐரோப்பிய சினிமா கலைஞர்களின் தொடர்பு ஏற்படுத்திய தாக்கத்தாலும் வேறு எந்த தமிழ் சினிமா கலைஞரும் எண்ணிப்பார்த்திடாதவற்றையெல்லாம் ராஜா சாண்டோ தனது படங்களில் துணிச்சலுடன் வைத்தார். 

அப்போதெல்லாம் காதலனும் காதலியும் பேசிக்கொள்வார்களேயன்றி ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளக்கூடத் தயங்குவார்கள். காதலிப்பதுகூட போதிய இடைவெளியில் தள்ளி நின்றுதான் நடந்தது. ஆனால் ராஜா சாண்டோ தனது படத்தில் காதலன் காதலியைத் தொடுவது மட்டுமன்றித் தொட்டுத் தூக்கிக்கொண்டுகூடப் போனான். அதைவிடத் துணிச்சலாக கதையின் தேவைக்கேற்ப முத்தக்காட்சியைக்கூட சாண்டோ தன் படங்களில் வைக்க அஞ்சவில்லை. அது அப்போது சர்ச்சையையும் உண்டுபண்ணத் தவறவில்லை. 

இந்த முத்தக் காட்சியில் நடித்ததைப் பற்றி டி.கே. சண்முகம் தனது "எனது நாடக வாழ்க்கை" - எனும் நூலில் இப்படி எழுதினார்:

"நானும் ருக்மிணியும் நடிக்கவேண்டிய காதல் காட்சி வந்தபோது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி? அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புதுமுறையாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிட்டியது. நான் ருக்மிணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையில் முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள்வரையில் முத்தமழை பொழிந்துகொண்டே போக வேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள். கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார்."

இந்த முத்தப் பிரச்சனை பல்வேறு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டது. அன்றைய பத்திரிகைகளில் ஆதரவும் கண்டனங்களும் சுடச்சுட எழுந்தன. "பொருத்தமான சமயங்களில் சிற்சில சூழ்நிலைகளில் காதலர்கள் முத்தம் கொடுப்பதை நாடகங்களில், திரைப்படங்களில் இயற்கைக்கு ஏற்பக் காட்டுவது தவறல்ல என்று நான் கருதுகிறேன்..." - என்று ஆங்கில ஏடான மதராஸ் மெயில் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர்களுடன் தொடர்புகொண்டிருந்த அன்றைய சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி.

இயக்குநர் ராஜா சாண்டோ தனது மேனகா படத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னொரு காரியத்தையும் செய்திருந்தார். அதுதான் மகாகவி பாரதியின் பாடலை படத்தில் ஒலிக்கச் செய்த செயல். "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!" என்ற பாரதியின் வைரவரிகள் தமிழ்த் திரைப்படத்தில் முதன்முதலில் ஒலித்தது இந்த மேனகாவில்தான். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. 

கலைவாணருக்கும் டி.ஏ. மதுரத்துக்கும் திருமணம் செய்துவைத்த பெருமையுடைய ராஜா சாண்டோ ஒரு இயக்குநருக்கு வேண்டிய முழு ஆளுமைத் தகுதியையும் தன் கையில் வைத்திருந்தவர். அந்நாளைய இந்தி - தமிழ்ப் படவுலக முன்னணிக் கலைஞர்கள் பெரும்பாலோர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள். 

ராஜா சாண்டோவின் இன்னொரு முக்கிய சாதனையென இந்திய - தமிழ் சினிமா குறித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அதுவரையில் படங்களின் துவக்கத்தில் படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் பெயர்களை மட்டுமே போடுவது வழக்கமாக இருந்த நிலையில், வடநாட்டுப் பட முதலாளிகளோடு சண்டையிட்டு, படத்தில் நடிக்கிற நடிகர்கள், நடிகைகள் முதல் படத்தில் பங்கேற்றவர்கள் எல்லோரின் பெயர்களையும் காட்டும்படி செய்தவர் அவர்தான். 

அரைத்த மாவையே அரைப்பதுபோல பக்திப் புராண - இதிகாசக் கதைகளையே இந்திய சினிமா கையாண்டுகொண்டிருந்த நிலையை மாற்றி, சமூக உள்ளடக்கங்களைக் கையிலெடுக்க அவரொரு முன்மாதிரியாக, உந்துசக்தியாக இருந்தார். அதற்கு அந்நாளில் மிகப்பெரிய துணிச்சல் தேவைப்பட்டது. அது அவரிடம் நிரம்ப இருந்தது. அவர் பம்பாயில் வசித்தபோது தனது சொந்த முயற்சியால் இந்தி, உருது, பஞ்சாபி போன்ற மொழிகளில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். இருந்தபோதிலும் அவருள் தானொரு தமிழன் என்கிற பெருமிதம் எப்போதும் இருந்தது. 

மேனகாவிற்குப் பின் வசந்த சேனா, சந்திரகாந்தா, மைனர் ராஜாமணி, நந்தகுமார், ஆராய்ச்சிமணி போன்ற தமிழ்ப்படங்களும், சூடாமணி என்ற தெலுங்குப் படமும், மேலும் சில இந்திப் படங்களும் அவர் பெயரைத் திரைப்பட உலகில் தொடர்ந்து நிலைநாட்டியவை. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் "சிவகவி" படத்தை இயக்கத் தொடங்கிய சமயம் அதன் தயாரிப்பாளர் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடுவுடன் அவருக்கேற்பட்ட முரண்பாட்டால் பாதியிலேயே அந்தப் படத்தைக் கைவிட்டு விலகிய ராஜா சாண்டோ அந்தப் படம் வெளிவந்தபின் ஏழு மாதங்கள் சும்மா இருந்தார். 

திடீரென ஒருநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது அவரது செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்தி மரணத்தைப் பரிசளித்தது. அவர் இறந்து 74 ஆண்டுகள் ஓடிவிட்டன. 49 வருடங்களே அவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்புகள் வெறும் 20 ஆண்டுகளே என்பதும் சொற்பமான காலம்தான். ஆனாலும், தனக்குக் கிடைத்த அந்தக் குறுகிய காலத்திலும் மிக அழுத்தமாகத் தடம் பதித்தவர் அந்த மகத்தான கலைஞர் ராஜா சாண்டோ என்பதில் என்ன ஐயம் இருந்துவிட இயலும்?

Image may contain: 1 person, closeup
Image may contain: 2 people, people sitting
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெரிவித்தல் நாள்:
9,10.2017.

இது ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு.

இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்று கனேடிய மக்களால் விடுமுறையோடு கொண்டாப்பட்டு வருகிறது.இந்த நன் நாளில் உறவினர்,நண்பர்கள் என ஒன்று கூடி விருந்துகள் உண்டு மகிழ்வதும் வளமை.

 

 

No automatic alt text available.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

October 10, 2017

 

தமிழீழ தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் நினைவு நாள் இன்றாகும்.
Image may contain: one or more people and text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்.அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

No automatic alt text available.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

??இந்தப் பக்கத்தையும் புரட்டிச் செல்லும் அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்.1f339.png?1f339.png? 1f339.png?1f339.png?1f343.png?1f33c.png?HAPPY DEEPAWALI 1f339.png?1f339.png? 1f339.png?1f339.png?1f343.png?

Image may contain: night
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாக அவதானியுங்கள், குறைவாகப் பேசுங்கள். - வில்லியம் சேக்ஸ்பியர்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

???cca cc

Lindt · Discover the world of Lindt Chocolate today! Enjoy 55% off* on 150 Lindor Truffles at a Lindt Chocolate Shop near you!
17948856_6064180104289_15622549218252554
Enjoy 55% off* 150 Lindor Truffles and other great deals on various Lindt chocolate. Click here for store locations.
LINDT.CA
 
 

Ca?

நேற்றைய தினம் இந்த நிறுவனத்தின் அவுட்லெற் ஒன்றிற்கு போனேன்..தேர் திருவிழா மாதிரித் தான் மக்கள் ௬ட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MISSING VULNERABLE WOMAN FROM NEWMARKTsubnav iconMore

Posted on Sunday October 29, 2017 
Missing - Yogaswary YOHALINGAM
MISSING - Yogaswary YOHALINGAM

York Regional Police is seeking public assistance in locating a missing vulnerable 88-year-old woman from the Town of Newmarket

Yogaswary YOHALINGAM was last seen on Saturday, October 28, 2017, at approximately 6 a.m., when she left her residence, which is located in the area of Leslie Street and St. John’s Sideroad, for a walk. She never returned home. Her family and police are concerned for her wellbeing. Ms. YOHALINGAM is familiar with the area but may appear confused.

Aground search was conducted in the area of the residence yesterday and into the night. The search will resume this morning. A command post will be set up in the area of Memorial Circle and Veterans Way.

York Regional Police are asking residents in the area to check their properties, in particular sheds or other structures where Ms. YOHALINGAM may have taken shelter. Anyone with information that may assist in the investigation is asked to contact police.

Description:

  • Female, brown
  • 88 years
  • 5’, 100 lbs.
  • White hair in a bun
  • Possibly wearing a black rain jacket, white running shoes with black stripes
  • Also known to wear long skirts
 

Anyone with information is asked to contact the York Regional Police #1 District Criminal Investigations Bureau at 1-866-876-5423, ext.7141, or call Crime Stoppers at 1-800-222-tips, or leave an anonymous tip online at www.1800222tips.com or text your tip to CRIMES (274637) starting with the word YORK.

 
NEWMARKET நகரில் காணாமல் போயுள்ள தமிழ் வயோதிபர் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடி
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Police say missing woman, 88, found dead in Newmarket

York Regional Police logo file photo

A York Regional Police badge in seen in this file photo. (Mathew Reid/CP24)

  facebook-icon.png  
  twitter-icon.png  
  google-icon.png  
  reddit-icon.png  
  share-icon.png  
  print-icon.png  
  email-icon.png  

The Canadian Press 
Published Sunday, October 29, 2017 4:29PM EDT 

NEWMARKET, Ont. - Police in Newmarket, Ont., say they've found the body of a an elderly woman who went missing on Saturday morning.

York Regional Police say Yogaswary Yohalingam, 88, was last seen alive at 6 a.m. on Saturday.

Police say she left her residence to take a walk and never returned home.Her death is not considered suspicious.Officers did not release her cause of death.

http://www.cp24.com/news/police-say-missing-woman-88-found-dead-in-newmarket-1.3654219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கினார்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தார்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்கள் உலகம் அவற்றை பார்த்து "உச்" மட்டும் கொட்டிய அந்நாள்.. 

22 வருடங்களுக்கு முன்னொருநாள். 
அன்று #கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். 
இன்று போலவே அன்றும் #மழை பெய்து கொண்டு இருந்தது. 

விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. #பலாலி #இராணுவ முகாமிலிருந்து #யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற #இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க #புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரப்பு செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ #நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். #குண்டு வீச்சு #விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். #ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

அன்று. பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய #இனவழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான #தென்மராட்சி #வடமராட்சி #வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண #குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். #யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் உலகம் என்ற ஒன்று பார்த்து உச் மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

அந்த நாள் 1995 ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி.
இன்றுடன் 22 வருடங்கள் கடந்து விட்டன :'1f642.png(:'( 1f622.png:'(

நன்றி.
- சாரல் இணையம் -

Image may contain: one or more people and crowd
 
LikeShow more reactions
CommentShare
  • Like 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறகு முளைக்கும் முன்னரே...,

இறக்கை விரித்த காலம் அது..!

 

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்,

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம் அப்பு...!

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போடவாவது வந்து விடு...!

இது மட்டும் தான்....,

அந்தப் பெற்றவர்களின் வேண்டுகோள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

 

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சிறகு முளைக்கும் முன்னரே...,

இறக்கை விரித்த காலம் அது..!

 

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்,

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம் அப்பு...!

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போடவாவது வந்து விடு...!

இது மட்டும் தான்....,

அந்தப் பெற்றவர்களின் வேண்டுகோள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

 

 

உங்களைப் போன்ற ஒரு சில உறவுகளின் வருகையும் பதிவுகளுமே சற்றேனும் சந்தோசத்தை தருகிறது புங்கையண்ணா..மிக்க நன்றி உங்களுக்கு!?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, யாயினி said:

உங்களைப் போன்ற ஒரு சில உறவுகளின் வருகையும் பதிவுகளுமே சற்றேனும் சந்தோசத்தை தருகிறது புங்கையண்ணா..மிக்க நன்றி உங்களுக்கு!?

அப்படியில்லை...யாயினி..!

எல்லோரும் எட்டிப் பார்ப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்!

நான் முக்கியமாக வருவதன் காரணம்...சில முக்கியமான மனிதர்களைப் பற்றியும்...முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தான்..!

உங்கள் பதிவுகள் தொடரும் வரை....எனது தேடலும் தொடரும்!

மேலேயுள்ள கவிதையைத் தூக்கி...கவிதைப் பூங்காவிலும் போட்டிருக்கு!

பாப்பம்..எத்தனை பேர் எட்டிப் பாக்கினம் என்று..!

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.