Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தை, தேசியத்தை, மொழியை ஆத்மார்த்தமாக நேசித்த ஆத்ம உயிரோட்டம் அனைத்தும் அடங்கி இன்றுடன் (மே17) எட்டு ஆண்டுகளாகிவிட்டன.  
 

Image may contain: 1 person
Image may contain: one or more people and text
 
1 ,05,2017
 
 
Image may contain: fire, night and candles
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
No automatic alt text available.

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கும் விடுதலை போராளிகளுக்கும் சிரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.!!!

 
Image may contain: one or more people, fire, candles, night and text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
 
 
  மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
1f449.png?பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
1f449.png?உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
1f449.png?மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
1f449.png?பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
1f449.png?பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
1f449.png?நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
1f449.png?நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
1f449.png?ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
1f449.png?தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.
1f449.png?முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.
1f449.png?தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
1f449.png?மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
1f449.png?புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.
1f449.png?நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.
1f449.png?தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
1f449.png?ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
1f449.png?துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
1f449.png?பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
1f449.png?ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
1f449.png?சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
1f449.png?ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
1f449.png?குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
1f449.png?சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
1f449.png?சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
1f449.png?பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
1f449.png?நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
1f449.png?நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
1f449.png?தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
1f449.png?காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
1f449.png?மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
1f449.png?“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
1f449.png?தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
1f449.png?இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
1f449.png?காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
1f449.png?குளிர் காலத்தில் குயில் கூவாது.
1f449.png?எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
1f449.png?லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
1f449.png?கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
1f449.png?கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
1f449.png?யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
1f449.png?கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
1f449.png?1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
1f449.png?ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
1f449.png?வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
1f449.png?ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
1f449.png?பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
1f449.png?ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
1f449.png?தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
1f449.png?சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
1f449.png?விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
1f449.png?சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
1f449.png?யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
1f449.png?நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
1f449.png?டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
1f449.png?புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
1f449.png?நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25

 

ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 
 
 
 
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25
 
ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Edited by நவீனன்
Link to comment
Share on other sites

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை மறைந்த நாள்: மே 26, 1989

பன்மொழிப்புலவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரான அப்பாதுரை தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும்

 
 
 
 
பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை மறைந்த நாள்: மே 26, 1989
 
பன்மொழிப்புலவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரான அப்பாதுரை தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடிய திறமை படைத்தவர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் ‘பன்மொழிப்புலவர்’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

இவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையானவையாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியல் பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார். 1989-ஆம் வரும் மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

* 1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.

* 1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.

* 1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

* 1917 - இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.

* 1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

* 1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

* 1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.

* 1983 - ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.

* 1991 - தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.

* 2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.

* 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,எங்கேம்மா ஆளைக் காணோம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On June 10, 2017 at 3:07 PM, ரதி said:

யாயினி,எங்கேம்மா ஆளைக் காணோம்

 

On June 16, 2017 at 3:18 PM, தமிழினி said:

யாயினி,  எங்கே உங்கள் பதிவுகளை காணும்? :rolleyes:

 

இரண்டரை மாத கால இடை லெளிக்குப் பின் இப்போ ஒரு சில நாட்களாகத் தான் வீட்டில் நிக்கிறேன்..அப்படி நின்றாலும் தொடர்ச்சியாக எனக்காக நேரம் ஒதுக்குதலோ அல்லது பிறிதான வேலைகளைச் செய்யவோ முடியாத நிலையில் இப்போ நான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, யாயினி said:

 

இரண்டரை மாத கால இடை லெளிக்குப் பின் இப்போ ஒரு சில நாட்களாகத் தான் வீட்டில் நிக்கிறேன்..அப்படி நின்றாலும் தொடர்ச்சியாக எனக்காக நேரம் ஒதுக்குதலோ அல்லது பிறிதான வேலைகளைச் செய்யவோ முடியாத நிலையில் இப்போ நான்!

அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா யாயினி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா யாயினி?

அம்மாவை
நீண்டகால போராடத்தின் பின் வீடடுக்கு கொண்டு வந்தாயிற்று..இரண்டாம் தர நில குழந்தை போல தான் இப்போ..இதற்கு மேல் என்னத்த சொல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

No automatic alt text available.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.பஞ்சி காரனமாக பதிவுகள் போடுவதில்லை.தொடர்ந்நத பதியுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமக்கோழி

 
 
eurasian%2Bcoot%2B1.JPG
 
 
 
ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறப் பறவையின் நெற்றியில் வெள்ளைநிறத்தில் நாமம் வரைந்ததைப் போன்ற தோற்றம் இருப்பதால் நாமக்கோழி என்ற காரணப்பெயர் இதற்கு. நாமக்கோழிகள் ஆசியாஐரோப்பாஆஸ்திரேலியாஆப்பிரிக்கா என உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் உயிரியல் பெயர் Fulica atra.  ஆங்கிலத்தில் Eurasian coot எனப்படுகிறது.
 
eurasian%2Bcoot%2B2.JPG
 
தரைவாழ் நீர்ப்பறவைகளான இவைஏரிஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டியும் சதுப்பு நிலங்களிலும் வாழ்கின்றன. இவற்றின் கால்கள் நீளமும் வலிமையும் கொண்டவை. இவற்றின்  விரல்களுக்கிடையில் வாத்தினைப் போல சவ்வு கிடையாது என்றாலும் அபாரமான நீச்சல்காரர்கள். 
 
eurasian%2Bcoot%2B1a.jpg
 
நாமக்கோழிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும். ஆனால் முட்டையிடும் பருவத்தில் ஆண் பெண் இரண்டும் தங்கள் கூட்டினைக் கட்ட ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்வதோடு அதைப் பாதுகாக்க மிகவும் மூர்க்கமாக செயல்படும். காய்ந்த புற்கள்இலைச்சருகுகளாலான கூட்டில் ஒரு ஈட்டுக்கு பத்து முட்டைகள் வரை இடும். பருவகாலம் ஏதுவாக இருந்தால் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஈடுகள் முட்டையிடும். 
 
eurasian%2Bcoot%2B6.JPG
 
நாரைஆலா போன்ற நீர்ப்பறவைகளுக்கு பெரும்பாலான நாமக்கோழிக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பத்து நாட்களுக்குள்ளாகவே எளிதில் இரையாகிவிடுவதால் தப்பிப் பிழைப்பவற்றின் விகிதம் குறைவே. நாமக்கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் சமயத்தில் நாமத்தோற்றம் இருப்பதில்லை.. அவற்றுக்கு முழுமையான நாமத்தோற்றம் உருவாக ஒருவருட காலம் பிடிக்கும்.
 
 
P2060959.jpg
 
நாமக்கோழிக் குஞ்சுகளின் இறப்புக்கு எதிரிகளை விடவும் தாய் தந்தையே முதற்காரணம் எனலாம். உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல். மேலும் சில நாமக்கோழிகள் தங்கள் முட்டைகளை வேறொரு நாமக்கோழியின் கூட்டில் திருட்டுத்தனமாய் இட்டு தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதும் உண்டு. அமெரிக்க நாமக்கோழிகள் தங்கள் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவை.. திருட்டு முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவையென்று பிரித்தறியும் அறிவு படைத்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.
 
eurasian%2Bcoot%2B5.JPG
நாமக்கோழிகள் அனைத்துண்ணிகள்.. நீர்த்தாவரங்கள்பழங்கள்கொட்டைகள்இலைகள்பாசி போன்றவற்றோடு பிற பறவைகளின் முட்டைகளையும்மீன்தவளைஎலி போன்ற சிற்றுயிர்களையும் தின்றுவாழும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 5-9 வருடங்கள். 
 
eurasian%2Bcoot%2B7%2Band%2Ba%2Bdusky%2Bmoorhen.JPG
 
படத்தில் நாமக்கோழிக்குப் போட்டியாக நெற்றியில் செந்தூரமிட்டிருப்பது தாழைக்கோழி.  :)))
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேப் பாரென் பெருவாத்து – ஆஸ்திரேலியாவின் அதிசயம் 

பெருவாத்தினங்களில் இப்படியொரு இனம் இருப்பதே உலகுக்குத் தெரியவராத நிலையில் ஆரம்பகாலத்தில் ஐரோப்பியர்இவற்றை கருப்பு அன்னங்களின் முதிராத இளம்பருவக் குஞ்சுகள் என்றே எண்ணியிருந்திருக்கின்றனர்பிறகுதான் இவைதனியினம் என்று அறியவரமுதன்முதலாகக் கண்டறிந்த இடத்தின் பெயரையே இப்பறவைக்குச் சூட்டி கேப் பாரென்பெருவாத்து (cape barren goose) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்பன்றி போன்ற அகன்ற வாய்ப்புறத்தைக்கொண்டிருப்பதால் பன்றிவாத்து என்ற பட்டப்பெயரும் உண்டுஆஸ்திரேலியாவின் குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமேகாணப்படும் கேப் பாரென் பெருவாத்தினம் பற்றி இப்போது பார்ப்போம்.
 
_1850943.JPG
 
அலகின் நுனியிலிருந்து வால் நுனிவரையிலான இதன் நீளம் 75 செ.மீ முதல் 1 மீவரை இருக்கலாம்எடை மூன்று முதல்ஏழு கிலோ வரையிலும் சிறகுவிரி நீளம் 1.5மீ முதல் 2மீ வரையிலும் இருக்கும்இதன் உடலோடு ஒப்பிடுகையில் தலையின்அளவு சிறியதுவெளிர்சாம்பல் நிற உடல்சிறகுப்பகுதியில் மட்டும் காணப்படும் சற்றே அடர்சாம்பல் நிறப்புள்ளிகள்இளஞ்சிவப்பு நிறக்கால்கள்கருமையான பாதங்கள் மற்றும் அலகின் மேற்புறத்தைப் போர்த்தியிருக்கும் வெளிர்பச்சை நிறதோல்சவ்வு இவற்றைக்கொண்டு இதை எளிதில் அடையாளம் காணமுடியும்பெரும்பாலான சமயம் அமைதியாகஇருந்தாலும் ஆபத்து வருவதாக உணர்ந்தால் கொம்பூதுவது போன்று கர்ணகடூரக் குரலெடுத்து எச்சரிக்கும்
 
cape%2Bbarren%2Bgoose%2B1.JPG
இவை வாத்தினம் என்றாலும் நீரை விடவும் நிலத்தையே பெரிதும் சார்ந்து வாழ்கின்றனகால்நடைகளைப் போலபுல்மேயும் இப்பெருவாத்துகளுக்கு விருப்ப உணவு கோரைப்புற்கள்புல்பூண்டுகள்,  இலைகள்விதைகள்சதைப்பற்றான தாவரங்கள் போன்றவைஇவற்றோடு உணவுப்பயிர்தீவனப்பயிர் போன்றவை கிடைத்தால் இன்னும்கொண்டாட்டம்தான். உவர்நீரையும் அருந்தக்கூடிய தன்மை இருப்பதால் இந்தப் பெருவாத்துகள் தீவுகளின்கரையோரங்களில் பெருமளவு காணப்படுகின்றனஇனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் ஊருக்குள்விளைநிலம் சார்ந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன.  
_1850954.JPG
கேப் பாரென் பெருவாத்துகள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனஇனப்பெருக்கக் காலத்தில் கோரைப்புல்வெளியின் திறந்தவெளியில் கூடுகட்டி முட்டையிடுகின்றனகூடுகட்டுவதுஆண்பறவையின் வேலைகுச்சிகளையும் கோரைப்புற்களையும் கொண்டு தரையில் கிண்ணிபோன்ற ஒரு பெரிய கூடுகட்டி அதனுள் மென்பஞ்சு இறகுகளால் மெத்தை அமைக்கும்பெண்பறவை ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள்வரை இடும்முட்டைகளை அடைகாப்பது பெண்பறவையின் வேலைகூடு கட்டும் காலத்தில் ஒவ்வொரு இணையும்தமக்கென்று எல்லை வகுத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதில் மூர்க்கமாய் செயல்படும்கூடிருக்கும் பகுதியில்நுழைய முற்படும் நாய்நரிகளை மட்டுமல்ல மனிதர்களையும் மூர்க்கமாய்த் துரத்திவெளியேற்றும்.
cape%2Bbarren%2Bgosling.jpg
படம் உதவி இணையம்
ஐந்து வாரங்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிந்து வெளிவரும்.  குஞ்சுகள் தாய்தந்தையைப் போல் இல்லாமல் கருப்புவெள்ளைக்கோடுகளுடன் காட்சியளிக்கும்தாய்தந்தை இரண்டும்  இணைந்து அவற்றை வளர்க்கும்.  கோழிக்குஞ்சுகளைப் போல முட்டையிலிருந்து பொரிந்து வந்தநாளிலிருந்தே குஞ்சுகள் தாமாகமேயக்கற்றுக்கொள்கின்றனபத்து வாரங்களில் பறக்கக் கற்றுக்கொள்கின்றன. 17-ஆவது வாரத்தில் தாய்தந்தையைப்பிரிந்து தன்னிச்சையாய் வாழத்தொடங்குகின்றனமூன்று வருடத்தில் முழுமுதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்துக்குத்தயாராகின்றனஇவற்றின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள்
 
cape%2Bbarren%2Bgoose%2B2.JPG
ஆரம்பகாலத்தில் உணவுக்காகப் பெரிதும் வேட்டையாடப்பட்டுவந்த காரணத்தால்இவற்றின் எண்ணிக்கைகுறைந்துகொண்டே வந்துஒரு கட்டத்தில் இவ்வினமே அழியும் நிலைக்கு வந்துவிட்டதுநல்லவேளையாக 1950 ஆம்ஆண்டின் பறவைக்கணக்கெடுப்புஅபாயமணி அடித்து ஆபத்தைத் தெரியப்படுத்தஅதன்பின் போதுமான  பாதுகாப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனநடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் கரையோரத்தீவுகள்பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டுஅதன் காரணமாகஇன்று ஓரளவுக்கு இவற்றின் எண்ணிக்கை பெருகியிருந்தாலும்இப்போதும் இவை அரிய உயிரினங்களின் பட்டியலில்தான் உள்ளன என்பது  கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்.
cape%2Bbarren%2Bgeese.JPG

 
Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள் சகோதரி, தொடருங்கள்....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாலிவுட்லாந்து

Image may contain: text

1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

Image may contain: mountain, sky, outdoor, nature and text
Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1900ல் பரிஸ்ல்(பிரான்ஸ்) இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.

No automatic alt text available.
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

July 14th fireworks display

On 14 July 2017, a spectacular fireworks display will take place at the Eiffel Tower.

Feu artifice 14 juillet © DR © DR
14 juillet - feu artifice © DR © DR
Feu artifice 14 juillet tour Eiffel eclats or et blanc © Mairie de Paris © Mairie de Paris
Feu artifice 14 juillet tour Eiffel © Mairie de Paris © Mairie de Paris
14 juillet - feu artifice © DR © DR
14 juillet - feu artifice © DR © DR
14 juillet - feu artifice © DR © DR
14 juillet - feu artifice © DR © DR
14 juillet - feu artifice © DR © DR
Feu artifice 14 juillet tour Eiffel © Mairie de Paris © Mairie de Paris
Feu artifice 14 juillet tour Eiffel © Mairie de Paris © Mairie de Paris
Feu artifice 14 juillet tour Eiffel © Mairie de Paris © Mairie de Paris
 
  • Feu-artifice-14-juillet-%7C-630x405-%7C-
  • 14-juillet-feu-artifice-phare-%C3%A9toil
  • Feu-artifice-14-juillet-tour-Eiffel-ecla
  • Feu-artifice-14-juillet-tour-Eiffel-cerc
  • 14-juillet-feu-artifice-toupie-blanche-%
  • 14-juillet-feu-artifice-lumi%C3%A8re-bla
  • 14-juillet-feu-artifice-tour-eiffel-jaun
  • 14-juillet-feu-artifice-tour-eiffel-jaun
  • 14-juillet-feu-artifice-tour-eiffel-mauv
  • Feu-artifice-14-juillet-tour-Eiffel-ecla
  • Feu-artifice-14-juillet-tour-Eiffel-ciel
  • Feu-artifice-14-juillet-tour-Eiffel-jaun

THEME FOR 2017: 'PARIS AND THE OLYMPIC GAMES'

The must-see show of the French National Holiday in Paris is the July 14th fireworks display. Like last year, the fireworks will be set off from the Eiffel Tower and the gardens of Trocadéro.

This year promises another dazzling spectacle with choreographed multicoloured fireworks bursting open against the backdrop of the Parisian night sky.

  • The public are invited to watch the show from the Champ de Mars
  • Starting time of the 14 July 2017 fireworks displayfrom 11pm, for a duration of 30 minutes (subject to conditions)
 

bastille day Paris July 14..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின் சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலையில் தற்பொழுது 'ஈபெல் ரவர்'

Image may contain: sky, night, screen and outdoor
Image may contain: screen and skyபடங்கள்:- அல்விற்அற்புதராணி.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(Bastille Day...
பாஸ்டில் நாள் (Bastille Day) என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் "Fête Nationale" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது "quatorze juillet" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.

No automatic alt text available.
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.