Jump to content

"நல்லாயிருக்கு...!" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்]


Recommended Posts

                            10678730_10204526957830975_5462177959173
 

    சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான்.

 

'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள்.

 

மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்கார்ந்திருந்த அவள் பக்கத்தில் போய் அமர்ந்தவன்...

 

"என்ன மேடம்... ரொம்ப சோகமா இருக்கிறமாதிரி இருக்கு... என்னாச்சு?" என குறும்புப் புன்னகையோடு வினவினான். அவள் "ஒன்றும் இல்லை" என ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட்டு "இரவுக்கு என்ன சமைக்க?" என கேட்டபடியே எழுந்தவளின் கரத்தினை எட்டிப் பற்றியவன்...

அவன் புதிதாய் வாங்கிவந்த ஒருசோடி தங்க வளையலை அவள் கையில் மாட்டியபடியே, "இது எதுக்காகத் தெரியுமா? இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் சமையலுக்கு...!" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.

 

அவள் முகம் மகிழ்ச்சியில் திளைக்கும் என எதிர்பார்த்தவனுக்கு... அவள் கண்கள் கலங்கியது ஏனென்று புரியவில்லை. "என்ன ஆச்சு?" என அவன் வினவும் முன்பே,

 

அவன் மாட்டிவிட்ட அந்தத் தங்க வளையல்களை கழற்றி அவன் கரங்களுக்குள் மீண்டும் வைத்துவிட்டு, அவள் சொன்ன வார்த்தைகள்...

 

"நீங்கள் சாப்பிட்டிவிட்டு 'நல்லாயிருக்கு' என்று சொல்லுற அந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த தங்கவளையல் என்ன... எந்தத் தங்கக் குவியலும் ஈடாகாது... ! எனக்கு இதெல்லாம் வேணாம் ! "
அவள் அதைச் சொல்லுபோதே அவள் கண்கள் கலங்கி, குரல் தளுதளுக்கத் தொடங்கியது.

 

- இப்பொழுதுதான் அவனுக்கு எல்லாமே புரிந்தது... தான் இதுவரை நாளும் விட்ட தவறும் கூட-
கலங்கியவளின் கரங்களை காதலோடு பற்றி... தன் அருகே இழுத்து அணைத்தவன்,

 

" மன்னிச்சுக்கோம்மா ....உண்மையிலேயே நல்லா இருந்திச்சு...! இனி அதை அப்பப்பவே சொல்லுறன். இப்ப ஓகேவா...?"
என சொல்லியபடியே மீண்டும் அந்த ஜோடி வளையல்களை அவள் கரங்களில் அணிவித்தான்.
இப்பொழுது மறுப்பேதும் சொல்லாத அவள்  முகத்தில் உதிர்ந்த புன்னகையும் அத்தனை அழகாய் இருந்தது.

 

 

*****************                         ******************                           ******************                       ******************

 

"நல்லாயிருக்கு..." என்ற அந்த ஒற்றைவார்த்தைதான் உங்களுக்காக பாடுபடும் மனைவி எதிர்பார்க்கும் அதியுயர் விருது. அந்த உயரிய விருதினை அவ்வப்போதே கொடுத்துவிடுங்கள். அவளின் சமையல் மட்டுமல்ல உங்கள் இல்லறவாழ்வும் சுவைக்கும்...! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலான ஆண்கள் இப்படித்தான்...

 

சிறுசிறு தவறுகளை  விட்டுவிட்டு

பெருமளவில் நட்டமடைகின்றனர்

இவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை.... :lol:  :D

தங்கத்தின் விலையை  நினைச்சா உலகமே சுற்றுது... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள்  தங்கத்துக்கும் மேலானவை :D

Link to comment
Share on other sites

அது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..

 

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

 

ஹ்ம்ம்ம்

 

இப்படிக்கு,

இப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..

 

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

 

ஹ்ம்ம்ம்

 

இப்படிக்கு,

இப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்

 

உங்களுக்கு  இன்னும் அனுபவம் காணாது என்பது தெரிகிறது

வாழ்க்கைப்பட்ட பின் மேலும் கீழுமாக மட்டுமே  தலையாட்டத்தெரிந்து கொள்ளணும்

தோல்விகள் மட்டுமே கிடைக்கும் போர்க்களத்தில்

நெஞ்சு நிமிர்த்துதல் தேவையோ....?

 

உங்களது அடுத்த பிர்ச்சினை

 

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

 

 

நீங்கள் கொடுத்துவைத்தவர்

நாங்கள் ஆமாப்போட்டும் அதைத்தான் வீட்டில் பார்க்கின்றோம் :lol:  :D

 

 

இப்படிக்கு,

இப்படிச் சொல்லாமலேயே நொந்து நூடுல்ஸாக போனவன்

(நெடுக்கின் கண்ணில் படாதிருக்கக்கடவது :lol:  :D )

Link to comment
Share on other sites

கூடுதலான ஆண்கள் இப்படித்தான்...

 

சிறுசிறு தவறுகளை  விட்டுவிட்டு

பெருமளவில் நட்டமடைகின்றனர்

இவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை.... :lol:  :D

தங்கத்தின் விலையை  நினைச்சா உலகமே சுற்றுது... :(

 

பெண்கள் எதிர்பார்க்கும் சின்னச்சின்ன விடயங்களை பெரும்பாலான ஆண்கள் கவனிக்கத் தவறுகின்றனர்!

அந்த சின்னச் சின்ன  விடயங்களுக்குள்தான்.... பென்னம்பெரிய சந்தோசங்கள் ஒளிந்திருக்கின்றதென்பதனை பலர் புரிந்துகொள்வதில்லை.

 

புரிந்துகொண்டால்....... இவ்வளவு கஷ்டம் தேவையில்லை! :)

கருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

பொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள்  தங்கத்துக்கும் மேலானவை :D

 

அதுதான் உண்மை அக்கா! உரிய காலத்தில் சொல்லப்படும் நன்றியும், மன்னிப்பும்  எல்லாவற்றிலும் மேலானவை!  அதை உணர்ந்து நடந்தாலே போதும்... !

Link to comment
Share on other sites

அது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..

 

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

 

ஹ்ம்ம்ம்

 

இப்படிக்கு,

இப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்

 

ம்ம்ம்ம்ம்.... அது என்னவோ உண்மைதான் நிழலி! :lol:

ஆனால் எந்த ஒரு எதிர்மறையான கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துச் சொல்லவும் வழியிருக்கு!

 

"என்ன இது..? உப்பும் இல்லை ஒண்ணும் இல்லை... சப்பெண்டு இருக்கு!" என்று சொல்வதற்குப் பதிலாக...  "இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு! :):icon_idea:

 

ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள்! விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு! :lol::D

 

Link to comment
Share on other sites

  "இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு! :):icon_idea:

 

ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள்! விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு! :lol::D

 

ம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு

 

 

அதுவும் தெரிஞ்சு போச்சா.... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.