Jump to content

1,2,3,...........05 செக்கன்கள் - உண்மைக்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து

டென்மார்க்  பயணம்.

 

அத்தானின் ஒரு வருட  துவசம் என்பதால்  பொருட்களையும் வாங்கி

அவசரமாக புறப்படுகின்றோம்.

 

இரவு ஓட்டம்

பலகாரச்சூடு  சமையல் என ஆட்கள் தேவை என்பதால்

யேர்மனி  சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு

பயணம் தொடங்குகிறது.....

 

நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன்.

ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்..

வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது..

 

நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன்.

திடீரென எனது பாதை  முடிவடைவதற்கான பதாதை  ஒன்று கண்ணில் தெரிகிறது.

பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர

அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை.

முன்னால் பார்க்கின்றேன்

எனது பாதை முடிவடைந்து விட்டது தெரிகிறது

பக்கத்தில் பார்க்கின்றேன்

பெரிய ரக றக்  ஒன்று நல்ல வேகத்தில் என்னை மறைத்தபடி செல்கிறது..

 

ஒரு சில செக்கன்களே உள்ளன

பிரேக் பிடித்தாலும் நிறுத்தமுடியாது

லொறிக்குள் ஓரங்கட்டப்பட்டு குடும்பத்தடன் நசுக்கப்படுவேன்

வாகனத்தின்  வேகத்தை அதிகரிப்பதைத்தவிர வேறு வழியில்லை...

 

கால்கள் உடனடியாக செயற்பட

வாகனம் வேகம் எடுக்கிறது.......

 

1,2,3,...........05 செக்கன்கள் 

வாகனம் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்துக்கு மேலெழுகிறது...

எனது பக்கம் ஒரு இஞ்சி

லொறிப்பக்கம் ஒரு இஞ்சி இடைவெளியில் வாகனம் லொறிக்கு முன்னால்  நகர்கிறது..

லொறிக்காறன் ஒலி ஒளி பாய்ச்சி தடுமாறுகின்றான் என்பது பின்னால் தெரிகிறது...

 

ஆனாலும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியது எப்படி என நம்பமறுத்து 

ஆளையாள் நலம் விசாரிக்கின்றனர்..

 

அடுத்த சில கிலோமீற்றரில் ஒரு பார்க்கில் வாகனத்தை நிறுத்திய  நான்

வெளியில் நடந்து பார்க்கின்றேன்

காலைப்பார்க்கின்றேன்

என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்

நடமாடுவது நான் தானா என...

 

(நாடுகள் மாறும் போது பதாதைகள் சம்பந்தமாக கவனமாக இருங்கள் உறவுகளே..)

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure: உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

 

 

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

Link to comment
Share on other sites

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

Link to comment
Share on other sites

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.
வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.
மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :oவாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure:உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

 

ஒன்றில் முதலில் காட்டிய  பதாதையை  நான் கவனிக்காமல் இருந்திருக்கணும்

அல்லது அந்த முதலாவது பதாதை போன பின் இந்த பாதைக்குள் (highway)  நான் வந்திருக்கவேண்டும்..

 

பிரான்சின் பதாதைகள் பழக்கப்பட்டவை......

ஆனால் நாட்டுக்கு நாடு வித்தியாசமானவை

(வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் ஒரே மாதிரியாக இருந்தபோதும் காட்டும்,  எழுதும் முறைகள் வித்தியாசமானவை)

 

இந்த வீதியில்  இந்த வேகத்தில் ஆயிரம்  கிலோமீற்றருக்கும் அதிகமாக ஓடவேண்டியிருந்ததாலும்

அப்பொழுது தான் உள்நுழைந்து  ஓடத்தொடங்கியிருந்ததாலும்  கொஞ்சம் அசட்டையீனம் இருந்திருக்கலாம்  என்று படுகிறது.

 

 

நன்றி  தம்பி  இசை

அன்புக்கும் கருத்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

 

 

பதாதையை  நான் தான் கவனிக்கவில்லை சோழியான்....

 

லொறிக்காறன் 2வது வரிசையில்

வேகத்தில் தான் வந்தான்...

அதேநேரம் நான் தப்பியதற்கு

பக்கத்தில் வந்தது  லாறி  என்பதும் ஒரு  காரணம்

இல்லாது விட்டால் வேகமெடுத்து முந்திச்செல்லமுடியாது   போயிருக்கும்.....

ஆனால் பிரேக்  பிடித்து பின்னால் நுளைந்திருக்கலாம் (பின்னால் வாகனங்கள் இல்லாதுவிடில்)

 

பிரேமனால் தான் சென்றேன்

ஆனால் அதற்கு இன்னும் 600 கிலோமீற்றர் போகணுமே..

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

 

 

உண்மையில் இப்ப நினைத்தாலும்  தப்பியதை நம்பமுடியவில்லை..

 

மற்றும்படி

அப்ப  இல்லை

இப்பவும்  பாட்சாதான்...... :D

(எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது)

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

 

 

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

இரண்டே இரண்டு  வழிகள் தான்

வேகப்படுத்தி முன்னுக்கு உள்நுழையணும்

அல்லது பிரேக்  பண்ணி அதே இடத்தில் நிறுத்தணும்..

பிரேக் செய்து நிறுத்தக்கூட இடம் போதாது என்பதால் ஒரே தெரிவு

வேகப்படுத்துதல்

தற்கொலைக்கு ஒப்பானது

வரும் லொறி பின்னால் ஒரு சிறு தட்டு தட்டினாலும் வாகனம் வட்டமடிக்க ஆரம்பிக்கும்.... :(  :(  :(

 

எனது பிள்ளைகள் 3 பேர் புது வாகனசாரதி பத்திரக்காறர்கள்

அவர்கள் வாகனத்தை செலுத்தியிருந்தால்

மூளை உடனே பிரேக்கில்தான் கால்வைக்கச்சொல்லும்

நான் செலுத்தியதால் 30 வருடத்துக்கு மேலான எனது அனுபவம் 

சில நொடிகளில் நிதானமாக முடிவேடுத்திருக்கு என்று பின்னர் நினைத்தேன்...

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

 

 

நன்றியண்ணா...

எனது அனுபவங்கள் மற்றவர்கள் ஒருவருக்கேனும் பாடமாக அமையணும் என்பதற்காகவே பதிகின்றேன்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

 

 

உண்மை கிருபன்

நீங்கள் சொல்லும் 2  காரணங்களும் உண்மை

அந்த லொறிச்சாரதி  சிறிது பிரேக் செய்தும் மற்றப்பக்கதால் சிறிது விலகியும் இருக்கலாம்

இந்த தப்புதலில் நிச்சயம் அவரது பங்கும் உண்டு என்று தான் நானும் நினைக்கின்றேன்....

 

நன்றி  நேரத்துக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.

வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.

மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

 

 

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

 

உசுப்பேத்த எழுதவில்லை ரதி

எனது அனுபவங்களை எழுதி

கவனம் என்றே எழுதினேன்...

 

காரணம் நாடுகளுக்கு போகும் போது மிக மிக அவதானமாக இருக்கணும்

பழக்கப்பட்ட பாதைகளுக்கும் பழக்கப்பட்ட பதாதைகளுக்கும் சிரமங்கள் இருக்காது

ஆனால் புதுபாதைகளும் மொழிகளும் தடுமாற வைத்துவிடும்...

 

மற்றும்படி

கார் ஒட்டத்தில் நானொரு வெறியன்

என்னிடமுள்ள ஒரேயொரு கெட்டபழக்கமும் இதுதான்....

இதையும் மற்றவர்களின் நலனுக்காகவே சொல்கின்றேன்..

 

நன்றி சகோதரி

அன்புக்கும் வருகைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.
ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நாஷனல் வீதிகளிலும் (ஒரே வீதியில் எதிரெதிராய் வாகனங்கள் வரும் வீதி). இப்படியான  சம்பவங்கள் நேர்வதுண்டு. ஆனால் அங்கு ஒரு வாகனத்தை முந்தும்போது வலு அவதானமாய் தூரத்தில் வரும் வாகனங்களைக் கவனித்து செய்யிறது.இங்கு அவர் இதை எதிர்பார்க்கவில்லை. லொறிக்காரன் ஒரே வேகத்தில் தான் 90 ல் சென்ருகொண்டிருப்பான், குறைக்கமாட்டான். நாம் 130ல் வேகமாய் அவரைத் தான்டிவிட முடியும், தான்டவில்லையெனில் தாட்டுப்போடும்...!

Link to comment
Share on other sites

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

 

 

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

 

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

 

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

 

 

ஒரு காரில என்னென்டைய்யா ரெண்டு பேர் ரேஸ் ஓடுவது ? 
 
ஒவ்வொருவரும் தங்கட காரில ரேஸ் ஓடுவமே என்டு கேக்கிறார்.
 
 
:D  :D  :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

பரிமளத்திட்டை எல்லாத்தையும் சொல்லுறதுக்கு நான் என்ன அரிச்சந்திரன் பரம்பரையே????  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

 

 

நிச்சயமாக  தம்பி  சேரன்

ஆனால் முடியல அப்பா

ஒழுங்கா  ஓடுவம் என்று முடிவெடுத்த ஓடினாலும்

எவனாவது குறுக்கவந்து கடுப்பேத்தி என்னை மாற்றிவிடுகின்றார்கள் :(

கீழே குமாரசாமியண்ணையைப்போல.... :lol:  :D

 

பிள்ளைகள் வளர்ந்தபின் ரொம்ப மாறியிருக்கின்றேன்

அவர்களும் என்னை  பின்பற்றக்கூடாது என்பதற்காக...

அதனால் தான் மணிக்கு 160 கிலோமீற்றர்....

 

நன்றி  தம்பி  அன்புக்கும் கட்டளைக்கும்...

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.

ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

 

 

நிச்சயமாக காட்டியிருப்பார்கள்

ஒன்றில் நான் இடையில் வந்திருக்கணும்

அல்லது கவனிக்காது விட்டிருக்கணும்

 

நன்றி  வாத்தியார்

அன்புக்கும் ஆலோசனைக்கும் அறிவுறுத்தல்களுக்கும்...

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

 

இப்படியிருக்கவில்லை  பஞ்ச்

 

வீதியை  முடித்தே விட்டார்கள்

ஒன்றில் வந்தபாதையில் நிறுத்தணும்

அல்லது அடத்த பாதைக்குள் நுளையணும்

2 தெரிவு தான்..

ஒரு பத்து மீற்றர்கூட  எனது கண்ணுக்குப்படவில்லை

 

நன்றி  விளக்கத்துக்கும் நேரத்துக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1- விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
2- அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
3-அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.

 

 

1-  எனது 30க்கும் மேற்பட்ட வாகன அனுபவம் தான் என்னைக்காத்ததாக நினைக்கின்றேன் அண்ணா

இதே எனது பிள்ளைகளோ

புது சாரதிகளோ

நிச்சயம்  பிரேக்கில் தான் கால்வைத்திருப்பார்கள். :(

 

2- எனது வேக ஓட்டம்  காரணமாக எப்பொழுதும் அவதானமாக இருப்பதால்தான் இதுவரை எதுவித விபத்தக்களிலும் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் வீட்டில் சொல்லியுள்ளேன் சந்திக்கும் விபத்து மிக பயங்கரமானதாக இருக்கும் என்று. .. :(

 

3- ஓடக்கூடிய  இடங்கிளிலேயே  ஓடுவது எனது பழக்கம்

மழை பனி  காலங்களிலும் வளைவுகளிலும் வீரம் காட்டுவதில்லை...

ஆனால் இந்த சூழ்நிலைகள் தவிர்ந்த இடங்களில் எப்பொழுதுமே வேகம் அதிகமாக இருக்கும்...

முன்பெல்லாம் 850 கிலோமீற்றர் லூர்து  மாதா கோயில் எனக்கு 51/2 மணித்தியால பயணம் தான்.

காலையில் போய்க்கும்பிட்டுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்..... :(

 

நன்றியண்ணா

அன்புக்கும் நேரத்துக்கும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.