Jump to content

மைதிலி


Recommended Posts

1_zpsf44beddc.jpg

 

 

உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது.

பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல.

 

நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை.

 

கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை.

நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றையும் மீறிய ஒரு உணர்ச்சி என்னை அவளை நோக்கி பார்க்க வைத்தது.அவளும் பார்த்தாள் . அந்த பார்வையை இன்றும் மறக்க ஆயிரம் கண்களை தேடி அலைகிறேன், தருமன் வீட்டில் யாகத்துக்கு வைத்த மாவில் புரண்ட எலியை போல.

மைதிலி, இந்த பெயரை அவளின் தோப்பனார் அவளுக்கு ஏன் வைத்தார் என்று தெரியவில்லை இருந்தாலும், அந்த பெயர் அவளை தவிர வேறு யாருக்கும் அவ்வளவு பொருந்தாது.

திடீர் என்று அவளின் முற்றத்தில், கோயில் வளாகத்தில் தோன்றிய வேற்று ஆளை பார்த்த பயம் கொஞ்சம் கூட அவளின் கண்களில் தெரியவில்லை.

உங்களைத்தான் எத்தனை தரம் கேட்கிறது, யார் நீங்கள் எதுக்கு கோயிலுக்குள்ளே வந்திருக்கிறீர்கள் என்ன வேணும் உங்களுக்கு.?

என்னையா கேட்கிறீங்கள்.? திடுக்கிட்டு சுதாரித்த எனக்கு அவள் எட்டாம் தரம் கேட்ட கேள்வி காதிலே ஏறியது.

பதில் சொல்ல மூளை அவ்வளவு நேரம் எடுத்து நான் என்றைக்குமே பார்த்ததில்லை.

கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா.?

ஊரிலே வேற இடம் கிடைக்காமல் இங்கே வந்து தான் தண்ணி கேட்கணுமா .?

இல்லை கோயில் கிணத்திலே குடிப்பம் என்று தான் வந்தேன். வாளியை காணவில்லை. அது தான் ... இழுத்த என்னை..

அவள் தான் உடுப்புடன் வாளியை கொண்டு வந்த குற்ற உணர்வு தாக்க, கீழ் சொண்டை பல்லால் கடித்த படி, உடுப்பிலே இருந்து சொட்டிய நீரில் கோலம் போட்டாள்.

அது எனக்கு பொறுப்பாளர் ஆறுமாதமாக வேவு எடுத்து அளவு பார்த்து கீறி தந்த மன்னார் வரைபடைத்தை ஒத்திருந்தது.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவப் பகிர்வோடு வந்திருக்கிறீர்கள்.தொடருங்கள்.போட்ட படம் நன்றாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ........அபிராம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே ஊர் நினைவுகளுக்கு எம்மை அழைத்துச் செல்கின்றது!

 

ம்ம்ம்...கோலம்... மன்னார் வரைபடம்...தொடருங்கள் அபிராம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ........அபிராம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மைதிலி என்ற பெயரே வில்லங்கமான ஒரு பெயர்தான்.
மைதிலியாகவே பருவ வயதில் மாறிவிடுவர் போலிருக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மைதிலி என்ற பெயரே வில்லங்கமான ஒரு பெயர்தான்.
மைதிலியாகவே பருவ வயதில் மாறிவிடுவர் போலிருக்கு.

 

 

 

அப்படித்தெரியவில்லையே

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக

வீட்டில் இருக்கே....... :wub:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கடைகள் வைத்திருப்பவர்கள் ....... பிசினஸ் அது இது என்று கூறிக்கொண்டு .....
மலேசிய தாய்லாந்து சிங்கபூர் இந்தியா என்று ஐரோப்பாவில் இருந்து அடிக்கடி போய் வருவார்கள்.
 என்ன பிசினெஸ் என்று எமக்கு தெரியும்.
 
நீங்கள் இப்பவும் பரிசில்தானே நிற்கிறீர்கள் ?
அதெல்லாம் அந்த பெயரின் தாக்கம்தான். 
 
பெயர் மட்டும் மாறியிருந்தால் .............. உங்கள் பிசினெசும் மாறியிருக்கும்.  
Link to comment
Share on other sites

mannar.jpg

 

மன்னார் தீவை மாந்தையுடன் இணைக்கும் பாலம் தான் மன்னார் நகரப்பகுதிகான ஒரே தரைவழி தொடர்பு.

தொண்ணூறுகளின் கடைசி காலங்களில் மன்னார் நகரபகுதியை சென்றடைய வேண்டுமானால் ஏழு இராணுவ தடை முகாம்களின் சோதனைகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். அதில் செட்டிக்குளம் சோதனை முகாமும், மாந்தை முகாமும் கடுமையானவை.

இவற்றை தாண்டி உள்ளே சென்றாலும், நகர பேரூந்து தரிப்பிடத்தில் விசேட அதிரடிப்படையினர் புகைப்படங்கள் எடுத்து தான் மன்னாரினுள்ளே நுழைய அனுமதிப்பர்.

நானும் அறிவும் மன்னாருக்குள்ளே வந்து ஏழு நாட்கள் தான் ஆகி இருந்தன. படையினருடன் சேர்ந்து இயங்கும் "காக்கை வன்னியனை" அழித்தொழிக்கும் நடவடிக்கை.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் அதன் சுற்றுப்புறத்துக்கு உள்ள அழகும் பசுமையும் நகரப்பகுதிக்கு இல்லை. கழுதைகளும் புழுதியும் தான் நகரத்தை நிறைத்து இருக்கும். பெரும்பாலான வியாபார நிறுவனங்களை இஸ்லாமிய சகோதரர்கள் வைத்திருந்தார்கள். நகரப்பகுதி எப்பவுமே சனமும் சத்தமுமாக இருக்கும்.

சின்னக்கடையில் வைத்து ஒரு முறையும், வைத்தியசாலை சந்தியில் வைத்து ஒரு முறையும் "காக்கை வன்னியனை" படையினருடன் சந்தித்த போதும் அது சமருக்கான சூழலாக அமையவில்லை.

இரண்டு மைகிரோ ரக கைத்துப்பாக்களும், இரண்டு கைஎறி குண்டுகளும் மட்டுமே இருக்கும் நாங்கள் ஏகே எல்எம்ஜி உடன் அலையும் அதிரடிபடையை எதிர்கொள்வதற்கு சரியான இடம் அமையவேண்டும். தாக்குதலுக்கு பின்னர் ராணுவத்தினர் வகுக்கும் "சக்கர வியுகத்தை" உடைக்க வேண்டும். எங்களில் யாருக்காவது காயம்பட்டால் வியுகம் உடைப்பது கூட ஒரு தனி ஆளால் செய்ய வேண்டும். இதனால் இரண்டு மூன்று தடவை தாக்குதல் பிற்போடப்பட்டது.

பகல் வேளைகளில் சந்தேகத்தை தவிர்க்க, இஸ்லாமிய இன சகோதர வியாபரிகளிடம் சாரங்களை வாங்கி வீடு வீடாக கூவி கூவி விற்போம், கிடைக்கும் வருவாயில் இனிய மாலை பொழுதுகளில் குளிர்களி வாங்கி சாப்பிடுவோம், வைத்திய சாலைக்கு முன்னால் இருக்கும், இயலாத பிச்சைகாரர்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுப்போம்.

இரவு வேளைகளில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லாமையால், ஒரு போத்தல் சாராயம் வாங்கி கொடுத்து, தொலைத்தொடர்பு கோபுர காவலாளியை மடக்கி, நானும் அறிவும் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே கயிற்றினால் எம்மை இணைத்து நகரத்துக்கு 100 மீற்றர் உயரத்தில் தூங்குவோம். ஆனந்தமான இரவுக் காற்றும், நிலவும், குசு குசு இரகசிய பேச்சுக்களும் எங்களின் நிம்மதியான தூக்கத்துக்கு துணை போயின.

இரவும் பகலும் இப்படியே கழிந்தாலும், இலக்கை நெருங்க முடியாமை எங்களை வதைத்து கொண்டு தான் இருந்தது.

ஒன்பதாம் நாள் மதியம் என்னை சைக்கிளின் முன் பாரில் இருத்தியபடி அறிவு சைக்கிளை மிதித்து வந்தான். நானும் அவனுக்கு துணைக்கு "பெடல் போட்டேன்". மதிய உணவு பொதிகளும் விற்காத மிச்ச சரங்களும் சைக்கிளில் தொங்கிய படி இருக்க, நாங்கள் இருவருமே சரம் தான் அணிந்து இருந்தோம்.

தாழ்வுபாடு போகும் பேரூந்து எங்களை கடந்து வைத்தியசாலை சந்தியில் திரும்பியது. பேரூந்து புழுதிக்கு நடுவே "காக்கை வன்னியன்" சந்தியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான். அதிரடிப்படை கொஞ்சம் தாண்டி போயிருந்தது. இருவருமே ஒரே நேரத்தில் இயங்கினோம். சைக்கிளை ஊண்டி மிதிச்சவாறே எங்கள் மைக்கிரோக்கள் முழங்கின ஏழு குண்டுகள், எப்படியும் ஐந்து இலக்கை தவறாமல் தாக்கி இருக்கும். மண்ணிலே குருதி கொப்பளிக்க விழுந்து கிடந்தான்.

அதிரப்படை கண்டபாட்டுக்கு சுட்டுக்கொண்டு அந்த இடத்துக்கு வரும்போது, நாங்கள் தாழ்வுபாடு பேரூந்தில் ஏறி இருந்தோம்.

இந்த தாக்குதலின் வெற்றியை தொடர்ந்து தான்,இரண்டு மாதங்கள் கழித்து என்னை கையிலே ஒரு வரைபடமும் கொடுத்து உயிலங்குளம் ஊடாக நானாட்டானுக்கு அனுப்பி இருந்தார் பொறுப்பாளர்.

தொடரும்.

(கருத்துகளை ஊக்கங்களையும் அளித்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 weeks later...

2vuklfp.jpg

 

அவள் தண்ணீர் கொ(மெ)ண்டுவந்து தந்த பித்தளை செம்பை வாங்கும் போது, அவளின் வெண்டைக்காய் விரல்கள் என்னை உரசியது, அதன் அதிர்வுகள் செம்பிலே இருந்த தண்ணீரில் இலகுவாய் தெரிந்தன.

அதை எங்கள் இருவரின் கண்களும் பார்க்க தவறியதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.

அவளின் கைகள் தான் செம்பை என் நோக்கி நீட்டின, கண்கள் தரையிலே புற்களை எண்ணி கொண்டிருந்தன.

உங்களின் பெயரை தெரிந்து கொள்ளலாமா.?

பெயரை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்..?

இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவள் போல பதில் வந்தது. அது நேற்று நாங்கள் உயிலங்குளத்தை கடக்கும்போது காவலரணில் இருந்த இராணுவ வீரனின் தானியங்கி துப்பாக்கி ரவையின் வேகத்தை விட அதிகமாக இருந்தது.

இல்லை... அடுத்த முறை ...வாசலிலே இருந்து கூப்பிட்டு... உள்ளே வரலாமே என்று தான்.

அம்மானுக்கு பிறகு இப்போ தான் பதில் சொல்லும் போது நாக்குழறுகிறது.

எதுக்கு வரணும்..?

பெண் உருவில் ஒரு அம்மான். பதில் சொல்ல முழிக்கும் போது தான் கஷ்டமான கேள்விகளை கேட்கிறாள்.

மைதிலி...

தலையை கூட துவட்டாமல் ஈரத்துணியோட யாரோடையடி பேசி கொண்டு இருக்கிறாய்..

அவளின் தாயின் அதட்டல் தான் அவளுக்கு சூழ்நிலையை புரியவைத்தது.

நுனி நாக்கை நான்கு பற்களால் கடித்து கொண்டு தனக்கு தானே தலையில் அடித்து கொண்டு செம்பை கூட வாங்காமல் தாயை நோக்கி ஓட்டமெடுத்தாள்.

அவளின் பின்னழகு அசைந்தாட அவள் ஓடிய ஓட்டம், நாங்கள் பாரீட்சார்த்தமாக அடிச்சு பார்த்த எறிகணையின் அசைவுகளை எனக்கு ஞாபகபடுத்தியத்தில் தவறேதும் இல்லை. (பிற்காலத்தில் அதுக்கு பெயர் "சமாதானம்")

செம்பை கிணத்து கட்டிலே வைத்துவிட்டு, படலையை சாத்திவிட்டு அவளின் வீட்டை திரும்பி பார்த்தேன். சாளரத்தின் வழியிலே அவளின் கண்கள் மின்னல் வெட்டியதை காண தவறவில்லை.

ஆனால் நடந்த எல்லாவற்றையும் நானாட்டான்-வங்காலை சந்தியில் இருந்த குறிசூட்டு காவலரணில் இருந்தபடி இராணுவ வீரனின் இரு கண்கள் அவதானித்து கொண்டிருந்தன என்று அன்றைக்கு எனக்கு தெரியவில்லை.

(தொடரும்)

என்னை தேடிய உறவுகளுக்கும், கருத்திட்ட விருப்புகளை வழங்கிய உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

இராணுவம் பார்த்திட்டானா.. இது எங்க போகப்போகுது எண்டு விளங்குது. அருமையான தொடர் அபிராம்.

Link to comment
Share on other sites

கருத்துகளை இட்ட இசை மற்றும் கண்மணி அக்காவுக்கு நன்றிகள். விருப்பளித்த நந்தனுக்கும் நன்றிகள்.

தொடரை வாசிக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

20 வரியோடை அடுத்த தொடர் தொடரும். இன்னும் கொஞ்சம் எழுதலாமில்ல ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.