Jump to content

யாருக்காவது தெரியுமா?


Recommended Posts

  • Replies 53
  • Created
  • Last Reply

பிள்ளைளளளளளளயாண்டா எல்லாம் இருக்கட்டும் களுத்தை நீட்டுறது எண்டு முடிவாச்சு பிறகு என்ன விசாரனை

ஓய் நீர் விசாரிக்கிறது மாப்பிள்ளை டம்பீ வீட்டுக்கு தெரியுமே (அதாவது நெட் இல விசாரனை நடக்கிது எண்டு

:? :? :? :? :? :? :? )

அது சரி அவனவன் நெட் இல என்ன எல்லாம் செய்யிறான் நீங்கள் விசாரனை மட்டும் தானே

ஏன் நம்மட யமுனா தம்பியை கேட்டா வளக்கமா சொல்லுவாவே :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :oops: :oops: :oops: :oops:

என்ன சின்னா நான் தம்பி இல்லை தங்கை எனக்கு இதை பற்றி எல்லாம் தெறியாது சரியோ

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

சின்னப்பு என்ன வேலை? அண்டர்கிரவுண்ட்?? சொவ்ட்வெயார்? ஹார்ட்வெயார்? :roll:

சின்னா றோயல் பமிலி அங்கத்தவர் அவர்கள் எல்லாம் வேலை செய்ய மாட்டார்கள் நான் சொல்வது சரிதானே சின்னா

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஆமா கறுப்பி எனக்கு இது என்ன வேலை இன்னு தான் புரியல நானும் தெரிந்து தானே போகனும் .

மிக இலகு, வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் , இடம் ,மற்றும் பதவி இவற்றை கூகிளில் அடித்தால் எல்ல்ல விபரமும் வரும்.

இந்தாங்கோ கூகிள் இணைப்பு.http://www.google.com

இப்ப வெளி நாட்டில யாராவது வெள்ளயள் யாருடனாவது டேடிங்க் போகினம் எண்டா அவை பற்றி அறிய வேணும் எண்டா , முதலில அவயின்ர பேரை கூகிளில் அடிச்சுப் பாப்பினமாம், அவை பற்றி மேலும் தகவல் திரட்ட.ஆனால் எஙகட பெயருகள் இன்னும் அந்தளவுக்கு பிரசித்தமாகேல்லத் தானே.எதுக்கும் தமிழிலையும் அடிச்சுப்பாருங்கோ சில வேளை வந்தாலும் வரும்.மேலும் விளக்கம் வேணும் எண்டா தனிமடலில தொடர்பு கொள்ளவும்.ஒரு பதிலுக்கு பத்து பவுண் கட்டணம் அறவிடப்படும்.

Link to comment
Share on other sites

கொளசி,

நாரதர் சொன்னமாதிரி அவர் வேலை செய்யும் நிறுவனம் படித்த பல்கலைக்கழகம் போன்றவற்றை பற்றிய தகவல்கள் பெற்று அவர் உள்ள நாட்டில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் மூலம் உறுதி செய்ய முயற்சியுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் அவரை சென்று சந்தித்து கதைப்பதை தவறாக பார்க்க மாட்டார்கள் முடியாது. இது தற்பொழுது ஒரு நடமுறையாகிவிட்டது.

மேலதிகமா எத்தினவருடம் வேலை அனுபவம் இருக்கு எந்த நாட்டில இருக்கிறார் என்பதை பொறுத்து எவ்வளவு சம்பளம் எண்டும் மதிக்கலாம். என்ன கார் ஓடுறார் எண்டதுகளையும் சூட்சமமாக அறிஞ்சா பிடிக்கலாம்.

அவர் எவ்வளவு சீதணம் கேக்கிறார்? ஒரு சொப்ற்வெயர் எஞ்சினியரின்ரை இப்பத்தே சந்தை விலைக்கு கிட்டவா கேக்கிறாரோ இல்லாட்டி மாறி கேட்டா அதுவும் சந்தேகத்தை தூண்ட வேணும் உவர் உண்மையோ எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கட்டும் நடக்கட்டும் கௌசிக்கு நான் குடித்த விளக்கம் காணாது போல. உதுக்கு மேல் நான் தலையிடேல்லயப்பா, பொல்லடி வாங்கக்கட்டாது. இத்திங் அப்பி கிகில என்னங் ஹரித.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாக்கீக்கு தான் யாரெண்டே தெரியாது இதில உது வேறை

:shock: :shock: :shock: :shock: :shock:

இப்போ என்ன சொல்ல வாரிய்ள் சின்னப்பு சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ என்ன சொல்ல வாரிய்ள் சின்னப்பு சார்

அதொண்டுமில்லக் கறுப்பி , அவருக்கு வேளைக்கு மேலுக்குப்போக ஆசையாம். அதுதான் உங்களோட தனகுறார். இறக்குங்கோ உங்கட "ஹரோ காங்கை". உதவி தேவையெண்டால் சொல்லுங்கோ நானும் வந்திறங்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சிது போாா என்ன யாழ்கள உறுப்பினர்கள் நல்லவர்கள் அட்ரா அட்ரா

ஓய் ஒரு உதாரணம் மட்டும் சொல்லறன் பிறகு மற்றவர்களைப்பற்றி நீரே யோசியும்

அதாவது பிள்ளை நம்மட சாட்றீ ஐ தெரியுமோ உலகத்து சுத்துமாத்து எனக்கு கலியாணம் பேசினது சாட்றீயும் முகத்தானும் சொன்னாங்கள் பாவியள்

முத்தவெளியை என்ர பேருக்கு எழுதிறம் எண்டு ம்

74 வயசாச்சு !!!

:P :P :P :P :P :P

:shock: ஆ 74 வயசா சொல்லவே முடியவில்லையே எழுத்தில் எல்லாம் இளமையும் ஜொள்ளூம் இருக்கே.

சும்மா சொல்லக்கூடாது இத்தனை வயசாகியும் காணி ஆசை விட்டபாடில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டுமில்லக் கறுப்பி , அவருக்கு வேளைக்கு மேலுக்குப்போக ஆசையாம். அதுதான் உங்களோட தனகுறார். இறக்குங்கோ உங்கட "ஹரோ காங்கை". உதவி தேவையெண்டால் சொல்லுங்கோ நானும் வந்திறங்கிறன்.

அடடா உங்க உதவியும் கிடைக்கிறதை நினைத்து சந்தோசம் எனக்கு.

Link to comment
Share on other sites

அடடா உங்க உதவியும் கிடைக்கிறதை நினைத்து சந்தோசம் எனக்கு.

கறுப்பி நானும் உதவிக்கு வாறேன், என்ன மினிகாப் சலாரையும் ( Minicab fare) என்ரை சில்லுக்கதிரையை ( Wheelchair) தள்ளுற பெடியன்டை கூலியையும் குடுத்தால் காணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கார் ஓடுறார் எண்டதுகளையும் சூட்சமமாக அறிஞ்சா பிடிக்கலாம்.

Toronto இல ஒரு வேலை வெட்டியும் இல்லாதவை தான் நல்ல நல்ல கார் எல்லாம் ஓடுகினம். நீங்கள் வேற....

Link to comment
Share on other sites

அடடா கெளசி சொfவ்ட்வெயர் எஞ்ஜினீர் என்றால் என்ன என்று தானே கேட்டார். :P :P அதற்கு ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளில் உங்களுக்கிருக்கும் புலமையை காட்டுவது போல் தெரிகிறது. என்ன றீ - அப்பிளிக்கேசனா?

Link to comment
Share on other sites

Toronto இல ஒரு வேலை வெட்டியும் இல்லாதவை தான் நல்ல நல்ல கார் எல்லாம் ஓடுகினம். நீங்கள் வேற....

டொரான்டோவில ஐய்யர் மாரும், மேளக்காறரும் தான் பிஎம்டபுலு பென்ஸ் எண்டு ஓடுகினம்.அதுவும் காசு குடுத்து வாங்குகினமாம்.உழைப்பு அப்படி.சில ஐய்யர் மார் கோல்ட் கோலிங்க் எண்டு தொலை பேசியில அழைத்து பூசை செய்ய வாங்கோ எண்டு கூப்புடிகினாம்.தோல் கொஞ்சம் வெள்ளையா இருந்திச்சு எண்டா பூனூலை மாட்டிக்கொண்டு பேசாம ஒரு டக்ஸும் கட்டாம கோவில் ஒண்டு திறக்கலாம்.சொfட் வெயார் கார்ட் வெயார் எண்டு கஸ்ட்டப்பட்டு படிச்சு ஒரு பிரயோசனமுமில்லை. :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல ரொம்ப சீதனம் தான் கேக்கினம் 20 லட்சம் .அதான் கம்புயூட்டர் இன்சினியர் ஆயிட்டே.

Link to comment
Share on other sites

கேக்கிறவன் கேணையன் எண்டா எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும் 20 லட்சமா ???

நம்மட வசியின்ர ரேட் 10 லட்சம் தானே மதன் 9 லட்சம்

அது சரி மாப்பிள்ளை பெடி றோயல் பமிலியா :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

20 லட்சம் எண்டா உது டுப்புளிக்கேற் சப்ற்பெயர் எஞ்சினியர். ஒறிஜினல் சப்ற்பெயர் எஞ்சினியரின்ரை சந்தை விலை 40லட்சத்துக்கு மேலை. சோடிக்கிறதுக்கு பெயருக்கு முன்னுக்கும் பின்னுக்கும் கொழுவிக் கொள்ளிற சுற்றெழுத்துகளுக்கு மேலதிகமா படிச்சா அதுக்கும் பட்டியல் போட்டு மேலதிகமா கேப்பினம்.

மருத்துவ கலாநிதி; எண்டா அதை விட கூட.

எதுக்கும் வடிவா விசாரியுங்கோ ஏன் உப்படி 50வீத தள்ளுபடி விலையில மலிவா போறார் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொரான்டோவில ஐய்யர் மாரும், மேளக்காறரும் தான் பிஎம்டபுலு பென்ஸ் எண்டு ஓடுகினம்.அதுவும் காசு குடுத்து வாங்குகினமாம்.உழைப்பு அப்படி.சில ஐய்யர் மார் கோல்ட் கோலிங்க் எண்டு தொலை பேசியில அழைத்து பூசை செய்ய வாங்கோ எண்டு கூப்புடிகினாம்.தோல் கொஞ்சம் வெள்ளையா இருந்திச்சு எண்டா பூனூலை மாட்டிக்கொண்டு பேசாம ஒரு டக்ஸும் கட்டாம கோவில் ஒண்டு திறக்கலாம்.சொfட் வெயார் கார்ட் வெயார் எண்டு கஸ்ட்டப்பட்டு படிச்சு ஒரு பிரயோசனமுமில்லை. :lol::D:lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேக்கிறவன் கேணையன் எண்டா எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும் 20 லட்சமா ???

நம்மட வசியின்ர ரேட் 10 லட்சம் தானே மதன் 9 லட்சம்

அது சரி மாப்பிள்ளை பெடி றோயல் பமிலியா

ஏன் சீதனத்தில கொமிஷன் கேக்கவோ :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஜய்யர் மார் முழுவிலையையும் காசா குடுத்து வேண்டி ஓடுவினம் சப்ற்வெயர் எஞ்சினியர் கடனில வேண்டி ஓடுவினம். பிறகு கலியாணம் கட்டினா பிறகு கடனை அடைப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜய்யர் மார் முழுவிலையையும் காசா குடுத்து வேண்டி ஓடுவினம் சப்ற்வெயர் எஞ்சினியர் கடனில வேண்டி ஓடுவினம். பிறகு கலியாணம் கட்டினா பிறகு கடனை அடைப்பினம்.

:lol::D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல ரொம்ப சீதனம் தான் கேக்கினம் 20 லட்சம் .அதான் கம்புயூட்டர் இன்சினியர் ஆயிட்டே.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Toronto இல ஒரு வேலை வெட்டியும் இல்லாதவை தான் நல்ல நல்ல கார் எல்லாம் ஓடுகினம். நீங்கள் வேற....

:lol::D:lol::lol::lol::lol::lol::lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Toronto இல ஒரு வேலை வெட்டியும் இல்லாதவை தான் நல்ல நல்ல கார் எல்லாம் ஓடுகினம். நீங்கள் வேற....

வேலை வெட்டி இல்லாதவையளுக்குத்தான் கிராக்கியும் அதிகமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.