Jump to content

'பழைய கோட்' வியாபாரம் மூலம் புதுவாழ்க்கையை நாடும் நபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலாபூஷணம் சிலாபம் திண்ணனூரன்

 

'நாம் எதைச் செய்தாலும் முழு விருப்பத்துடனும் முழு முயற்சியுடனும் செய்ய வேண்டும். உடலுக்கு உறுதியைத் தருவதும் உள்ளத்துக்கு உறுதியைத் தருவதும் உழைப்புத்தான் தோல்வியில் ஏமாற்றம் பிறக்கலாம். தோள் தட்டும் வெற்றியில் அதை எதிர்பார்க்க இயலாது. ஏமாற்றம் எமது நண்பனாகிவிட்டால் எழுந்திருக்கவே இயலாது'. பல்வேறு தோல்விகளை தொட்டும் தனது முயற்சியை கைவிடாது உழைத்துவரும் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்த இப்னுசலாம் முகம்மது உசைன் இதுவரை தான் கடந்து வந்த பாதையை எம்மோடு பகிர்கின்றார்.

 

98DSC05117.jpg

பழைய கோட் எனப்படும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்திவரும் இளைஞர் இவர்.

 

46 வயதைக் கொண்ட இவர் இளம் வயதிலேயே வறுமையை அனுபவித்தவர். இதனால் கல்வியை பெறும் பாக்கியம் இவருக்கு கிடைக்காமல் போனது. தனது எட்டு வயதில் கற்பூர வில்லைகளை பொதி செய்து கொழும்பு கோட்டை லக்சல பிரதேசதத்தின் நடை பாதையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். 1975ஆம் ஆண்டில் இவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபட்ட வேளையில் ஒரு நாளைக்கு இவரின் வருமானம் ஆறு ரூபாவாக இருந்துள்ளது.

 

1975ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் கோட்டை பிரதேசமே பெரும் வர்த்தக பேட்டையாக இருந்தது. எந்நேரமும் பெரும் சன நடமாட்டம் நிறைந்த வர்த்தக மையமாக திகழ்ந்த காலம் அது. இப்பிரதேசத்தில் உசைன் இரு வருடங்கள் தன் சுயதொழிலை மேற்கொண்டுள்ளார். 

 

பின்னர் இதே லக்சல் நடைபாதையில் கிளாஸ் வகைகளை விற்பனை செய்வபவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு இணைந்து ஆறு வருடங்கள் தொழில் செய்தார். 1984 ஆம் ஆண்டு நடைப்பாதை  வியாபாரங்களை அரசு கோட்டையில் ஒதுக்கியமையால் தொழிலை இழந்த உசைன் மீண்டும் ஒரு வியாபாரியிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

 

அத் தொழில் மிகவும் நுட்பமானதும் மிகவும் கஷ்டமானதுமாகும். பழைய பாவித்த உடைகளை வீடுகளின் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக பிளாஸ்டிக் அலுமினியப் பாத்திரங்களை வழங்குவது. தனது பதினாறு வயதில் இவரின்  முதலாளியுடன் இணைந்துக் கொண்டு பிளாஸ்டிக் அலுமினியப் பொருட்களை சுமந்துக் கொண்டு பழைய கோட், பழைய கோட் எனக் கூவிக்கொண்டு  பல மைல்கள் நடந்து சென்று இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

கொம்பனி வீதி, கொட்டாஞ்சேனை, பொரளை என பல  பகுதிகளுக்கும் வெயிலில் நடந்தே செல்லுவாராம். இத்தொழின் நுட்பங்களை அறிந்துக் கொண்ட உசைன் மூன்றே மாதத்தில் இத் தொழிலையும் கைவிட்டார். 

 

98DSC05205.jpg

பின்னர் ஐந்து வருடங்கள் தனியார் பஸ் வண்டியில் நடத்துனராக தொழில் செய்துள்ளார். இத்தொழிலில் ஒரு நாளுக்கு  நாற்பது ரூபாய் முதல் எழுபத்தைந்து ரூபாய் வரை சம்பளம் கிடைத்துள்ளது. வாகன விபத்தொன்றில் சிக்கியதை அடுத்து இத்தொழிலையும் கைவிட்டார். 

 

அதன்பின் மீண்டும் சுயதொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். தான் ஏற்கனவே மூன்று மாத காலம் வரை பயிற்சி பெற்றுயிருந்த பழைய கோட் வர்த்தகத்தை தனியாக செய்ய ஆரம்பித்தார். 

 

கொழும்பு மல்வத்தை ரோஹினி லேனில் பழைய கோர்ட் வர்த்தகர்கள் கொண்டுவரும் பாவித்த உடைகளை கொள்முதல் செய்யும் வர்த்தக நிலையங்கள் உள்ளன. பழைய கோர்ட் வர்த்தகர்கள் பல இடங்களிலும் திரிந்து கொண்டுவரும் பாவித்த உடைகளை இவர்கள் தரம்பிரித்து விலை கொடுத்து கொள்முதல் செய்வார். தான் இத்தொழிலை ஆரம்பித்த காலத்தில் ஒரு சேர்ட் ஐந்து ரூபாவிற்கே கொள்முதல் செய்தனர் என்கிறார் உசைன்.

 

இப்போது பாவிக்ககப்பட்டு, தரமான நிலையிலுள்ள சேர்ட், நீண்ட காற்சட்டை, சாரிகளுக்கு முப்பது ரூபாய் முதல் நாற்பது ரூபாய் வரையிலான விலைக்கு பாவித்த உடைகளை கொள் முதல் செய்வதாக உசைன் தெரிவித்தார். 

 

இவர் வீடு வீடாகச் சென்று கொள்முதல் செய்து கொண்டுவரும் உடைகளை மொத்த வியாபாரிகள் சிலர் முறையாக கழுவி நாட்டின் பல பாகங்களிலிமிருந்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். 

 

நாள் தோறும் சுமார் இருபது மைல்கள் நடப்பேன். காலை 9 மணிக்கு அலுமினியம் பிளாஸ்டிக் பாத்திரங்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் நான் பகல் மூன்று மணிக்கே வீடு திரும்புவேன். மட்டக்குளி, மோதர, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, புதுக்கடை, ஆட்டுப்பட்டித் தெரு இப்பகுதிகளிலேயே எனக்கு வாடிக்கையாளர்கள் நிறைய உள்ளனர். 

 

'எனது வாடிக்கையாளர்கள் குடும்பப் பெண்களேயாவர். இப்பெண்கள் குடும்ப உறுப்பினர்கள் பாவித்த உடைகளை சேமித்து வைத்து என்னிடம் வழங்கி வீட்டுக்குத் தேவையான அலுமினியப் பாத்திரங்களை அல்லது பிளாஸ்டிக் பொருட்களை பெற்றுக் கொள்வர்.

 

அவர்களின் விருப்பம் தெரிந்து அவர்களுக்கு தேவையான வீட்டுப் பாவனை பொருட்களை நான் கொண்டு செல்வதன் மூலமே எனது இப்பண்டம் மாற்று வியாபாரம் எனது சுயதொழிலாக பல வருடங்களாக செய்து வருகின்றேன்' என்றார் உசைன்.

 

 இத்தொழிலில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எமக்கு கூறுகையில், '2013ஆம் ஆண்டு அளுத் மாவத்தையில் லொறி ஒன்று எனது தள்ளுவண்டியில் மோதி, தள்ளுவண்டியையும் பயன்படுத்த இயலாத வகையில் பழுதாக்கியதுடன் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த எனது விற்பனை பொருட்களையும் உடைத்து தள்ளியது.  

 

98Untitled-1.jpg

வடிகானுக்குள் விழுந்துக் கிடந்த நான் எழுந்து பார்க்கையில் லொறி மாயமாய் மறைந்துவிட்டது. இவ்விபத்தினால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இவ்விபத்தின் பின்னர் மிகவும் சிரமப்பட்டு பொருட்களை சுமந்து சென்று வியாபாரத்தைச் செய்து வருகின்றேன். 

 

எனது நம்பிக்கையும் நாணயமும் எனக்கு பெரும் வாடிக்கையாளர்களை சேமித்து வைக்க உதவியுள்ளன. வீதியில் நான் வியாபாரத்திற்கு செய்கையில் பல் வேறு இன்னல்களை அனுபவித்துள்ளேன். பலர் கேலி செய்வார்கள். ஆட்டோக்காருக்கு வழி விடாத போது அதன் சாரதிகள் பலவாறு பேசுவார்கள்.

 

இவர்களை எல்லாம்விட போதைப் பொருள் பாவனையாளர்கள் பல விதத்தில் தொல்லை தருவார்கள். கொஞ்சம் அசந்து விட்டால் பொருட்களை திருடியும் விடுவார்கள். 

 

ஒரு காலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கும் பலர் இணைந்து குழுவாக சென்று வந்தோம். இப்போது நான் அவ்வாறான தூர இடங்களுக்கு சென்றதில்லை. 
தற்போது அதிக தொடர்மாடி வீடுகள் அமைக்கப்பட்டதால் இவ்வியாபாரம் பெரும் பின்னடவை அடைந்துவிட்டது. இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள  வேண்டியுள்ளது. சில தொடர்மாடி வீடுகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே செல்வதற்கும் அனுமதிப்பதில்லை. திருடர்கள் பல்வேறு கோலங்களில் நடமாடுவதால் எங்களைப் போன்ற உழைப்பாளிகள் பெரும் சிரமத்தை அடைகின்றனர். 

நான் இத் தொழிலில் பெரும் அனுபவங்களையும் கஷ்டங்களையும் பெற்றவன். இவ் உழைப்பே எனது குடும்ப வாழ்க்கையை இழுத்துச் செல்கின்றது. இன்றைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கு ஏற்ற வகையில் எமக்கு வருமானம் இல்லை.

 

பலர் சில வருடங்களுக்கு முன் இத்தொழிலை செய்து வந்தனர். இன்று போதிய வருமானம் இல்லாமையினால் பலரும் கைவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டு விட்டனர் எனத் தெரிவிக்கின்றார் தன் கால்களின் நடைமூலமே வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் உசைன். 

 
- See more at: http://www.metronews.lk/feature.php?feature=98&display=0#sthash.cua0H08d.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய.... கோட்,
பழைய.... போத்தல், பித்தளை, அலுமினியம்,
கிடாய்.... ஆடு இருக்கா..... என்று, கூவிக்கூவி வாங்குவதில், முஸ்லீம்கள் திறமைசாலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.