Jump to content

சுயஇன்பம் சரியா, தவறா?...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Self+doubt.png
 
சுயஇன்பம் சரியா தவறா?...
ஆதிகாலம் தொட்டே நமது கலாச்சாரத்தில் சுய இன்பம் என்பது மிகப்பெரிய தவறு, பாவம் என்றே போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.ஆண்களின் சுய இன்பத்தையே மிகப்பெரிய அசிங்கமாக... தவறான செய்கையாக, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக...போதித்து வந்த சமூகம் பெண்களின் சுய இன்பத்தைப்பற்றி சமூகத்துக்கு தெரியாமலேயே நசுக்கியிருக்கிறது.
 
போதாத குறைக்கு இன்னும் தெருவோர லேகிய மருத்துவர்கள் வேறு பல்வேறு பத்திரிக்கைகளில் தங்களது லாட்ஜ் விஜயத்தை பரப்புவதோடு நில்லாமல், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தோன்றி சிறு வயதில் அனுபவித்த சுய இன்பப்பழக்கத்தினால்தான் பல ஆண்கள் ஆண்மைக்குறைவுவிரைவு ஸ்கலிதம், உறுப்பு சிறுத்துப்போதல் போன்ற பல குறைகளுக்கு ஆளாவதாக கதை கட்டி ‘’வாங்கடா... உங்கள காப்பாத்த உங்க அப்பன் நான் இருக்கேன்டா... வந்து என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கோங்கடா... வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்காதீங்கடா...’’ன்னு கூப்பாடு போட்டு சுய இன்பம் அனுபவிக்கும் இளவட்டங்கள் மனதில் ஒரு இனம்புரியா பயத்தையும், அது சரியா தவறா என்று ஏற்கனவே குழம்பியிருக்கும் மனதில் மேலும் குழப்பத்தையும் விதைப்பதில் நம்பர் ஒன்னாக பணியாற்றுகிறார்கள்...
 
“இறைக்கிற கிணறுதான் ஊறும்”...என்று சுய இன்பம் அனுபவிக்கும் இளவட்டங்கள் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும் இன்னமும் ஒரு பயம் அவர்கள் மனதிலிருந்து அகலவில்லைதான்...
 
6.jpg
 
கலவியறிவில் இந்த சுய இன்பத்தை பற்றிய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் விதமாக இதைப்பற்றிய உண்மைத் தகவல்களையெல்லாம் போட்டுடைக்க வேண்டியது இன்றைய தலைமுறைக்குத் தேவையான முக்கிய விஷயமெனக் கருதுவதால் இரண்டாம் பாகத்திலேயே இதைப்பற்றி எழுதவேண்டிய கட்டாயம்...
 
சுய இன்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்தகவல்கள் என்னென்ன?...
Ø  சுய இன்பம் என்பது பொதுவாக ஒருவர் தனது உடம்பின் பாகங்களை, அதுவும் குறிப்பாக செக்ஸ் உறுப்புகளை செக்ஸூவல் மகிழ்ச்சி தரும் விதத்தில் தானே தொட்டும், தடவியும் இன்னபிற வகையிலும் செயல்பட்டு இன்பம் அனுபவித்தலாகும்.
Ø  சுய இன்பம் என்பது பொதுவானதொரு பாதுகாப்பான செக்ஸ் விளையாட்டுதான்.
Ø  சுய இன்பத்தினால் பல நல்ல ஆரோக்கியப்பலன்களும் இருக்கின்றன.
நம்மில் பலருக்கு சுய இன்பத்தை பற்றி பேசுவதென்பதே ஒரு பாவப்பட்ட, அசிங்கமான செயலாகத்தெரியலாம்.
 
பழங்காலத்திலிருந்தே சுய இன்பத்தை பற்றி நிலவி வரும் பல கருத்துக்களால் இன்றளவும்கூட நமது சமூகத்தில் சுய இன்பம் என்ற சொல் மூஞ்சை சுழிக்கச்செய்வதாகத்தான் உள்ளது. இந்த பழைய கருத்துக்களால்தான் இன்னமும் சுய இன்பம் ஒரு அசிங்கமான உணர்வையும், தவறு செய்கிறோமோ என்ற உணர்வையும், ஒரு பய உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுய இன்பத்தை பற்றிய உண்மைத்தகவல்களை ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் அறிந்து தெளிதல் வேண்டும். சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு பொதுவான இயற்கையான விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
 
5.jpg
 
சுய இன்பம் சாதாரணமானதொரு செய்கைதானா?...
சுய இன்பம் மிகச்சாதாரணமான பொதுவானதொரு செய்கைதான். பெரும்பாலும் சுய இன்பம் உச்சகட்ட இன்பத்தில்தான் முடிகிறது. உலகின் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் பத்தில் ஏழு ஆண்களும், பத்தில் ஐந்து பெண்களும் சுய இன்பத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றது. இது பெரும்பாலும் டீன் ஏஜ் தலைமுறையில் பொதுவாக நிகழ்வதாகும்.
 
வழக்கமாக சுய இன்பம் அனுபவிப்பது எந்த வயதில் தொடங்குகிறது?...
சுய இன்பம் அனுபவிப்பது ஒருவரது வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். பெரும்பாலான குழந்தைகள் தாங்கள் வளரும் போது, அதாவது தங்களது உடல் உறுப்புகள் வளர்ச்சியடைந்து மாற்றம் காணத்தொடங்கும் போது சுய இன்பத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் தங்களது குறிப்பிட்ட உறுப்புகளை தொடுவது ஒருவித மகிழ்ச்சியை கொடுப்பதாக உணருவார்கள். பெரும்பாலான கட்டுரைகள் குழந்தைகள் 3 முதல் 6 வயதிலிலேயே செக்ஸீவல் உணர்வில்லாத ஒருவித இன்பத்தை தங்களது உறுப்புகளை தொடுவதன் மூலம் அனுபவிப்பதாக தெரிவிக்கின்றன.
 
இளைய தலைமுறை சுய இன்பம் ஒரு சாதாரணமான விஷயம் என்பதையும், அது எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கிய விஷயமாகும். அது போலவே அவர்கள் சுய இன்பம் என்பது தனிமையில், மறைவாக அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
 
மக்கள் ஏன் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்?...
பல்வேறு ஆய்வுகளில் சுய இன்பத்துக்கான காரணங்களாக மக்கள் தெரிவித்திருப்பது இதுதான்...
Ø  சுய இன்பம் செக்ஸீவல் டென்ஷனிலிருந்து விடுதலை அளிக்கிறது.
Ø  சுய இன்பம் செக்ஸீவல் ஆனந்தத்தை அளிக்கிறது.
Ø  துணை இல்லாதபோதும் செக்ஸ் சுகத்தை அனுபவித்துக்கொள்ள உதவுகிறது.
Ø  ரிலாக்ஸேசனை வழங்குகிறது.
 
பெரும்பாலும் செக்ஸ் பார்ட்னர் இல்லாதவர்களும், கல்யாணமாகதவர்களும்தான் சுய இன்பத்தை அனுபவிப்பதாக நினைக்கிறார்கள். இது மிகத்தவறானதொரு கூற்று. திருமணமானவர்களும், சரியான செக்ஸ் பார்ட்னர் அமைந்தவர்களும்கூட ரெகுலராக சுய இன்பத்தையும் அனுபவிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
சுய இன்பம் அனுபவிப்பதன் பலன்கள் என்னென்ன?...
சுய இன்பம் மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதில் எவ்வித குற்றவுணர்ச்சியும், குழப்பமுமில்லாமல் சுய இன்பத்தை அனுபவிப்பது பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது. சுய இன்பம் மட்டுமே அனுபவிப்பதனால் பால்வினை நோய் மற்றும் தேவையற்ற கர்ப்பம் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
 
அது மட்டுமின்றி சுய இன்பம்தான் ஒருவரது செக்ஸீவாலிட்டி குறித்து அறிந்து கொள்ள உதவுவது. அதாவது எந்த உறுப்பு, எந்தவிதமான செய்கைகள் உச்சகட்ட செக்ஸீவல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவக்கூடியது. இது செக்ஸ் பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸ் உறவிலும் உச்சகட்ட மகிழ்ச்சியை பெறுவதற்கான முன்னோட்ட வழிகளை தெரிவிக்கக்கூடியது.
 
சுய இன்பமானது...
  Ø  ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்
  Ø  பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸை, உடல் மற்றும் மனரீதியாக மேம்படுத்தும்
  Ø  ஒரு உடல் உச்சகட்ட செக்ஸ் இன்பத்தைப்பெறுவதற்கு எவ்வாறு மீட்டப்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ள உதவும்.
  Ø  உச்சகட்ட மகிழ்ச்சியை அடையும் வழிமுறைகளை மேம்படுத்த உதவும்.
  Ø  செக்ஸூவல் திருப்தியை அளிக்க உதவும்.
  Ø  தூக்கத்தை மேம்படுத்தும்.
  Ø  இதயத்துக்கும், நுரையீரலுக்கும் ஒரு சரியான உடற்பயிற்சியாய் அமையும்.
  Ø  செக்ஸூவல் துணை இல்லாதவர்களுக்கும் செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும்.
  Ø  தூக்கத்தில் வரும் செக்ஸ் கனவுகளினால் ஆடைகளும், பெட்ஷூட்டும் நனையும் வண்ணம் தானே வெளியேறும் விந்துவைக்கட்டுப்படுத்தும்.
  Ø  செக்ஸ் குறைபாடுகளுக்கான ட்ரீட்மெண்ட்டாக அமையும்.
  Ø  மன அழுத்தத்தை குறைக்கும்.
  Ø  செக்ஸூவல் டென்ஷனிலிருந்து விடுபட உதவும்
  Ø  எதிர்காலத்தில் ஆண்களுக்கு வரவிருக்கும் ப்ராஸ்டேட் கேன்சருக்கான வாய்ப்புகளைக்குறைக்கும்.
  Ø  மாதவிடாய் குறைபாடுகளையும், தசை வலிகளையும் நீக்கும்.
  Ø  பெண்களை கட்டுப்பாடில்லாமல் யூரின் கசியும் பிரச்சினை, கருப்பை இடம் மாறுதல்(Prolapse) பிரச்சினை போன்றவற்றிலிருந்து காக்கும்.
 
மியூச்சுவல் சுயஇன்பம் என்றால் என்ன?...
பெரும்பாலும் சுய இன்பம் என்பது ஒருவர் தனியாக தனக்குத்தானே அனுபவித்துக்கொள்வதுதான் என்றாலும், இதில் ஒருவர் தானும் தனது செக்ஸ் பார்ட்னரும் ஒருவர் முன்னிலையில் மற்றவருமாய் சுய இன்பத்தை அனுவிப்பதும், ஒருவருக்கு மற்றவருமாய் சுய இன்பத்தை அனுபவிக்கச்செய்வதும்தான் மியூச்சுவல் சுய இன்பம் என்பது...
 
ஒருவர் தனது செக்ஸ் பார்ட்னருடன் மியூச்சுவல் சுய இன்பத்தை அனுபவிக்கும்போது கர்ப்பம் மற்றும் தேவையற்ற பால்வினை நோய்களிலிருந்து காத்துக்கொள்வதோடு வழக்கத்தைவிட அதிகமான செக்ஸூவல் மகிழ்ச்சியையும் பெறலாம்.
 
மியூச்சவல் சுய இன்பத்தினால் ஒருவர் தனது செக்ஸ் துணையின் உணர்வுகளையும், அவர்களுக்கு உச்சபட்ச செக்ஸூவல் மகிழ்ச்சியைக்கொடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
 
சுய இன்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?...
சுய இன்பத்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதுதான் உண்மை.
 
சுய இன்பத்தினால் ஏற்பட வாய்ப்புள்ள ஒரே பாதிப்பு ஸ்கின் எரிச்சல் மட்டும்தான்...ஆனால் அதற்கும் மார்க்கெட்டில் ஏகப்பட்ட லூப்ரிகண்ட்ஸ் குவிந்து கிடக்கின்றன.
 
சுய இன்பத்தின் அளவுகோலும், அளவுக்கதிகமான சுய இன்பமும்...
சுய இன்பம் அனுபவிக்கும் பெரும்பாலானவர்களின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வி ‘’நாம் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கிறோமோ?... நாம் சுய இன்பத்துக்கு அடிமையாகி விட்டோமோ?...’’ என்பதுதான்.
3.jpg
சுய இன்பம் என்பது போதைப்பழக்கம் போன்று ஒருவரை அடிக்ட் ஆகச்செய்யும் வாய்ப்புகளேயில்லை என்பதையும், அதுவொரு நார்மலான விஷயம்தான் என்பதையும் எந்தச்சூழ்நிலையிலும் மனதிலிருந்து அழிக்கவேண்டாம்.
 
சுய இன்பத்துக்கு எவ்வித அளவுகோலும் கிடையாது. ஒரு சிலர் ஒரு நாளுக்கு ஒரு முறை என்றும், ஒரு சிலர் ஒரே நாளில் நாலைந்து முறை வரையிலும்கூட சுய இன்பத்தை அனுபவிப்பார்கள். அது அவரவரது செக்ஸூவல் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் பொருத்தது. தனது உடலுக்கு காயத்தை ஏற்படுத்தாதவரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஒரே நாளில் சுய இன்பத்தை அனுபவிக்கலாம்.
 
அதிக முறை அனுபவிக்கும் சுய இன்பத்தினால் ஒருவரது அன்றாட வாழ்க்கைமுறை பாதிக்கப்படாதவரையிலும் அது நிச்சயம் அளவுக்கதிகமானது இல்லை...
 
பெரும்பாலும் சுய இன்பம் அனுபவிப்பவர்களில் 50%க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் இன்னமும் அதைவொரு குற்றவுணர்வுடனே அணுகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுய இன்பம் அனுபவிக்கும் எவரும் அதைவொரு தவறான செய்கையாக நினைத்து எவ்வித குற்ற உணர்விற்கும் ஆளாகத்தேவையில்லை என்பது அவசியமானதொரு செய்திதான்.
 
சுய இன்பம் அனுபவிக்கும் சரியான வழிமுறைகள் என்னென்ன?...
சுய இன்பம் அனுபவிக்க பலவிதமான வழிமுறைகளும், செக்ஸ் டாய்ஸ்களும் கொட்டிக்கிடந்தாலும் இதுதான் சரியான வழிமுறை என்று எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதுதான் உண்மை.
 
ஒருவர் தனது உடலுக்கு காயம் ஏற்படுத்தாமல் உச்சபட்ச செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும் எவ்வித வழிமுறையையும் தனது சுய இன்பத்துக்கு கையாளலாம்.
 
(பொது இடங்களில் பலர் முன்னிலையில் சுய இன்பம் அனுபவிப்பது பலரையும் முகத்தை சுழிக்கச்செய்யும் தவறான செய்கை என்பதை மட்டும் கட்டாயம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.)
 
சுயஇன்பம் - கட்டுக்கதைகளும்... உண்மையும்...
காலகாலமாக சுய இன்பத்தை பற்றி நிலவும் கட்டுக்கதைகள் ஏராளம்... அவற்றின் உண்மை என்னவென்று பார்க்கலாமா?...
 
சுய இன்பமானது...
  Ø  ஒரு போதும் உள்ளங்கையிலோ இல்லை இன்னபிற வித்தியாசமான இடங்களிலோ முடி முளைக்கச்செய்யாது...
  Ø  ஒரு போதும் பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்தாது.
  Ø  ஒரு போதும் செக்ஸ் உறுப்புகளை சிறிதாக்கவோ, நிறம் மாறவோ, தோற்றம் மாறவோ செய்யாது.
  Ø  ஒரு போதும் உடல் வளர்ச்சியை தடுக்காது.
  Ø  ஒரு போதும் ஆண்மைக்குறைவையோ, மலட்டுத்தன்மையையோ ஏற்படுத்தாது.
  Ø  ஒரு போதும் ஒருவரை அடிக்ட் ஆக்கும் பழக்கமல்ல.
  Ø  ஒரு போதும் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல.
  Ø  ஒரு போதும் மனநிலையை பாதிக்காது.
  Ø  ஒரு போதும் ஒருவரை ஓரினச்சேர்க்கைவாதியாக்காது.
 
9.jpg
 
ஆகவே மக்களே சுய இன்பம் என்பது மனித உடலில் நிகழும் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்பதை புரிந்துகொண்டு இதில் யாரும் எவ்வித குற்றவுணர்விற்கும் ஆளாகவேண்டியதில்லை என்பதை தெரிந்து கொள்வதோடு, தெரியாத உங்கள் நண்பர்கள் யாராவது இருந்தால், இனி அவர்களுக்கும் விளக்கிச்சொல்லுங்கள்...

 

 
நன்றி தமிழ்மணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணிப்புக்கு நன்றிகள் ....இணைப்புக்கு நன்றிகள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இது இனிப்பான செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இது இனிப்பான செய்தியா?

 

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

ஆத்துக்காரி கொலிடே போய்விட்டதால் ,புத்தன் அப்படி தடுமாறிவிட்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துக்காரி கொலிடே போய்விட்டதால் ,புத்தன் அப்படி தடுமாறிவிட்டார்.

 

இந்த இணைப்பை வாசித்த பின்புதான் அப்படி ஒரு விசயம் இருக்கு என்று எனக்கு தெரியுமுங்கோ:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிட்டம் ,

 

இணைப்பை வெளிவிட்டதுக்கு நன்றி  சிறி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

'கை' வழுக்கி இனிப்பாக போய்விட்டது புத்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரியா தவறா ?
அப்படி என்று ஒரு முடிவை எடுத்து விட்டு சொன்னால்தான் 
நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியா தவறா ?

அப்படி என்று ஒரு முடிவை எடுத்து விட்டு சொன்னால்தான் 
நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம்.

 

“இறைக்கிற கிணறுதான் ஊறும்”... என்று சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன தயக்கம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இறைக்கிற கிணறுதான் ஊறும்”... என்று சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன தயக்கம். :D

ஆனால் அடிக்கடி ஒட்ட இறைத்தால் தண்ணீர் உவர்ப்பாக மாறிவிடும் அபாயமும் உண்டு சிறியர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இறைக்காமல் விட்டாலும் கரையை உடைத்துக்கொண்டு சுனாமியடிக்கும் தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரைக்கும் எனக்கு அவசியமே வரேல்லை....அந்தளவுக்கு ஜாலியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கு k61.gif

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.