Jump to content

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் ஆகிவிட்ட நிலையில், இதை நிறைத்தமாட்டார்கள், பாவம் பிள்ளைகள்.


பெற்றோரின் ஆசைக்காக பலியாடக்கப்படும் சிறுவர்கள்

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

உற்று நோக்கினால் தெரியும், மாற்றங்கள் செய்துள்ளார்கள் (DD's talks, magic ball)

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Nov26a.html

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Dec03d.html

தமிழ் நாட்டு (அறிவு, கலை, அடிக்க முடியாது. வறுமையும் எனது உறவுகளை கொல்லுகிறது ) எழுத்துக்கள்(face book jokes), பாடல்கள், படங்கள் இல்லையெனில், ஈழத்து எந்த ஊடகங்களாளும் நின்று பிடிக்க முடியாது, இழுத்து மூடவேண்டியதுதான், மன்னிக்கவும், யாழ் உற்பட

Link to comment
Share on other sites

  • 9 months later...

குழந்தையா? காட்சிப்பொருளா?

 

ஏன்டா ! நம்ம பாப்பா டிவில எந்தப்  பாட்டு போட்டாலும் ஆடுறா , பேசாம எதாவது டான்ஸ் ஆடச் சொல்லிக்கொடுக்குற எடத்துல சேத்துவிடுவமா? அவளும் டிவி நிகழ்ச்சியில போய் ஆடுவாள! என் அக்கா கேட்ட கேள்வி இது. இந்தக் கேள்வி டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாகும் அத்தனை சேனல்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ணியது. காரணம் அந்தக் குழந்தையின் வயது வெறும் இரண்டரை தான்! உங்கள் குழந்தை நன்றாக ‘’தவக்குமா?‘’, உடனே வாருங்கள் இந்தியாவின் சிறந்த தவக்கும் குழந்தைக்கான தேடல்! என்று தான் இன்னமும் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பேர்  வைக்கவில்லை. ஹலோ எங்க குழந்தைக்கு இருக்கும் திறமையை உலகத்துக்கு காட்றோம் உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கேட்க தோன்றுகிறதா? பிரச்சனை அதுவல்ல, அந்தக் குழந்தைகள் தாங்கள் காட்சிப்பொருளாகக்  காட்டப்படுகிறோம் என்று தெரிந்தா நிற்கிறார்கள் ?

maxresdefault-1-1-701x394.jpg

குழந்தைகள் நடிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று. அதுவும் மிகப்  பிரபலமான சேனலின் நிகழ்ச்சி. அதில் ஒரு 3 வயது சிறுவன்  மாடு போன்று வேடம் போட்ட மற்றொரு  நபரைப் பார்த்து பயந்து பார்வையாளர்கள் இருக்கையில் இருக்கும் அம்மாவைப்  போய் கட்டிப் பிடித்துக் கொண்டான். நெடுநேரம் கழித்து அவர் அந்த வேடத்தைக்  களைத்த  பின்தான் மேடை ஏறுகிறான் ! அதையும் நகைச்சுவை எனச் சிரிக்கிறார்கள் மக்கள். ( வீட்டிற்கு போனதும் எப்படியும் தலைவருக்கு தனி கவனிப்பு கிடைக்கும் அது வேறு கதை) பிஞ்சுக் குழந்தைகளின் மனதை நோகடிக்கும் செயலை எப்படி பொதுவெளியில் பார்க்க அனுமதிக்கிறோம் நாம்? என் நண்பன் அடிக்கடி சொல்வான், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளைக்  குழந்தைத் தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று. சோகம் என்னவென்றால் உண்மையும் அதுதான் .

சரி நகைச்சுவை நிகழ்ச்சியில்தான் இந்தக் கொடுமை என்றால், டான்ஸ் நிகழ்ச்சி என்று அவர்கள் செய்யும் கொடுமையெல்லாம் கருடபுராணம் லெவல்! கட்டிப்  பிடிப்பது முத்தம் கொடுப்பது இரட்டை அர்த்தபாடல்களுக்கு நடனமாடுவது என்று நம்ம ஊர் ஆடல், பாடல் நிகழ்சிகளையெல்லாம் ஓவர்டேக் செய்கிறார்கள். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ( குட் டச்,  பேட் டச்  ) அறியாத குழந்தைகள் இந்த நிகழ்சிகளைப் பார்க்கும்போது   தவறான நோக்குத்தொடு தம்மைத் தொடுபவர்களை எப்படித்  தவிர்ப்பார்கள் அல்லது தாங்கள் தவறான ஆட்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளோம் என்று எப்படித் தெரிந்துகொள்வார்கள்.

சரி அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குக்  கேட்கப்படும் கேள்வி எப்படி இருக்கிறது என்று கவனித்து உள்ளீர்களா ?  அவை இன்னமும் ஆபாசமாகத்தான் உள்ளது.  நிகழச்சித்  தொகுப்பாளர் ஒருவர் ஒரு  குழந்தையிடம்  உங்க அப்பா உங்க அம்மாவைத்  தவிர வேறை யாரையும் லவ் பண்ணியிருக்காரா ? உங்க அம்மா உங்க அப்பாவை அடிப்பாங்களா? , அந்தப்  பெண் அழகாக இருக்கிறாரா ? என்றெல்லாம் கேட்கிறார் . அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு இது எத்தனை தூரம் உதவும்?  ( அந்த டிவி ஷோ வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவும்) ஒரு ஹிந்தி சேனல் ஒன்றில் 9 வயது சிறுவனுக்கும் 2௦ வயது பெண்ணிற்கும் காதல் என்று ஒரு நாடகத்தை ஒளிபரப்ப அது பல்வேறு போராட்டத்திற்குபின் நிறுத்தப்பட்டது ! . இப்படி ஒரு நாடகத்தை நடத்த அவர்கள் எப்படித்  துணிந்தார்கள் ? காரணம் இங்கு நாடங்களுக்கு என்று தரச்சான்று அமைப்பு எதுவும் இல்லை, விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் நாம்தான் குழந்தைகளின் நலனைக்  குழிதோண்டிப்  புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

maxresdefault-3-701x394.jpg

என்னப்பா ! ரெம்ப பில்டப் பன்றியே !, என்ற உங்களின் மைன்ட்வாய்ஸ் கேட்கிறது . இது மிகவும் குறைந்த உதாரணங்களே . அதுவும் நாம் நேரடியாக கவனிக்கக்  கூடிய, ஆனால் கவனிக்க மறந்த நிகழ்வுகள். டிவியில் காட்டப்படும் 9௦ சதவீத பொருட்கள் குழந்தைகளை மையப்படுத்தியே வருகிறது , அது காராக  இருந்தாலும் சரி கொசுபத்திச்  சுருளாக இருந்தாலும் சரி . காரணம் குழந்தைகளைக்  காட்டி என்ன சொன்னாலும் அதை நாம் கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். 5 வயதுவரை தெருப்புழுதியில் விளையாடி பின் பள்ளியில் சேர்ந்து படிக்க பிள்ளைகளை அனுப்புவோம் அதுவும் கையால் தலையை சுற்றிக்  காதை தொட்டால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை , இல்லையேல் மீண்டும் விளையாட்டு . இன்று கர்ப்பபையில் குழந்தை இருக்கும் போதே பயிற்சிவகுப்புகள் செல்லுங்கள் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் உங்கள் குழந்தைதான் என்று விளம்பரங்களை பார்க்கமுடிகிறது.

ஏன் தம்பி நீதான் நெட்டுல நிறைய எழுதுவியே  சி.பி.எஸ் .சி, இன்டெர்நேஷனல் ஸ்கூல், இதெல்லாம் வேற வேறைய எதுல சேர்த்தா இந்த நீட் பரீட்சை எல்லாம் ஈசியா புள்ளைங்க பாஸ் ஆகுங்க ? அவ்வளவு அப்பாவியாய் கேட்டார் நண்பர் ஒருவர். அவருக்கு சென்ற வாரம்தான் குழந்தை பிறந்தது என்பதுதான் நகை முரண் . இப்பொழுது குழந்தைகளை 3 வயதுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் ஏதோ கவுரவ பிரச்னைபோல் ஆகிவிட்டது . குறைந்த பட்சம் அவர்களை ப்ளே ஸ்கூலிலாவது சேர்த்துவிட வேண்டும் என்று நம் புற சமுகம் நம்மைத்  தள்ளுவது போன்ற மாயயை இந்த தனியார் நிறுவனங்கள் உருவாக்கி விட்டனர். வெறும் கல்வியோடு முடியவில்லை குழந்தைகளைக்  காட்டி பணம் பிடுங்கும் வேலை , குழந்தைகள் பயன்படுத்தும் உடை, அவர்களின் உணவு, புதிதாக நாட்டுமாட்டுப்  பாலில் தயாரித்த பிஸ்கட்  என்றெல்லாம் வருகிறது ( ஜல்லிக்கட்டில் நாட்டுமாட்டு பாலை பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வைக் காசாக மாற்றும் உத்தி . நல்லாவருவிங்கடா!)

boy-330582_640.jpg

படம்: pixabay

பல உலக நாடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப்  பொருட்களுக்கு உச்சகட்ட தரசோதனை இருக்கிறது. இங்கு நீங்கள் எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமானாலும் விற்கலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.( தமிழ்நாட்டில் வர வேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை நம் அமைச்சர்கள் லஞ்சம் கேட்க அதும் உச்சகட்டமாக அவர்கள் ஆந்திரா பக்கம் ஓடியே விட்டார்கள் ) இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்குத் தரமானதைத்  தருவது எப்படி? , எனக்கு விவரம் தெரிஞ்சவரை குழந்தையென்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களைத்தான் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள்.  அதில்தான் நமது  வீடுகளிலும்,  சோப்பு, எண்ணெய் என்று எல்லாம் வாங்கினோம். ஆனால்அதைப்  பயன்படுத்தியதால் தனக்குப்  புற்றுநோய் வந்ததாக வழக்கு தொடர்ந்து,  அதில் வெற்றிபெற்று அந்த நிறுவனத்தை அபராதம் கட்ட வைத்துள்ளார் வெளிநாட்டில் ஒருவர் . அதைப்  பற்றி இந்திய சுகாதாரத்துறை ஏன் இன்னமும் அறிக்கைகூட விடவில்லை என்பது புரியாததல்ல                       (வரவேண்டியது வந்திருக்கும் வேறென்ன) , குழந்தைக்குப்  பயன்படுத்தும் விக்ஸ் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருட்கள். ஆனால் அவை  தொடர்ந்து நமது கடைகளில் விற்கப்படுகிறதே எப்படி ?

459452-surf.jpg

படம்: dnaindia

நமது ஏழ்மை எந்தச்  சூழலிலும் குழந்தைகளைப்  பாதித்துவிடக் கூடாது என்று கவனம் செலுத்தும் நாம் அவர்களுக்கு சரியான , பாதுகாப்பான , முக்கியமாக தேவையானதை வாங்கித்தருகிறோமா ? கண்டிப்பாய் இல்லை தானே ? . கடலைமிட்டாய், தேங்காய் மிட்டாய்     எல்லாம் அவர்களிடம் இருந்து இந்த டிவி பூதம் பிடுங்கி விட்டது. பள்ளியின் அருகில் வயதான பாட்டி, தாத்தாகளின் மூலம் கிடைத்த நாவல் பழம், கொய்யா பழம் , சீத்தா பழம் என்று சத்தான உணவை எல்லாம் கார்ப்பரெட் பள்ளிகள் ஒழித்துவிட்டன. இப்பொழுது அவர்கள் சாப்பிடும் நொறுக்குத்  தீனி முழுமையாய் அவர்களை நோயாளிகளாக மாற்றும் என்பது மட்டும் உறுதி. ஆனால் காற்று அடைத்த பையில் விற்பதை வாங்கி உண்பது கவுரவம் என்ற எண்ணத்தில் அதைத்தான் நாமும் ஆதரிக்கிறோம். 2 நிமிடத்தில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமானது என்பது எத்தனை பெரிய வியாபாரப்  பொய் ? .

இப்போது எந்தக்  குழந்தை விளையாட வெளியே போகிறேன் என்றாலும் சரி அல்லது சேட்டை செய்தாலும் சரி ஏதாவது அனிமேஷன் தொடர்களைக்  கைபேசியிலேயோ அல்லது டிவிலேயோ போட்டு அவர்களை அமைதியாக்கி விடுகிறோம். அனிமேஷன் என்னவெல்லாம் அவர்களுக்குத்  தருகிறது, எதையெல்லாம் அவர்களிடம் புகுத்துகிறது என்பதைத்  தொடர்ந்து பார்க்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் அது அவ்வாறா இருக்கிறது ?

https://roar.media/tamil/features/children-in-tv-shows/

 

Link to comment
Share on other sites

குழந்தமையைக் கொல்லு குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்

மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.

junior super star

            தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.

            இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்துவிடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.

            நடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.

            இவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.

            பெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.

            ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது  குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.

            பெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.

            உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

            இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.

            இறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடுதலான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும்  எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். 

- சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003

 

http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/33788-2017-09-05-04-32-11

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.