Jump to content

விருது அ.முத்துலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அ.முத்துலிங்கம்

 

Muthulingam%20(1).jpgவிருது

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன்பலவிதமான பரிசுகளும்விருதுகளும் வழங்கினார்கள்எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான்.

ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள்சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமேநடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர்ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார்அசுர சாதனைநிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான்இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும்பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன்உலகத்திலேயே அதிகசெல்வம் சேர்த்தவர்கள் இந்தத் தம்பதியினர்தான்அதிக கொடை வழங்கியவர்களும் இவர்களேஅவர்கள் சமீபத்தில் சொன்னார்கள்: ‘நீங்கள் ஈட்டிய பொருளைஉங்களுடன் எடுத்துப் போகமுடியாதுஉங்களுடைய அதியற்புதமான மூளை செல்வத்தைப் பெருக்கியிருக்கிறதுஅதே மூளையை ஈகையின் பின்னால்நிறுத்தினால் உலகத்தில் ‘இருப்பவர் - இல்லாதவர்’ என்ற வேறுபாடு வெகுவாக மறைந்துபோகும்.’

மேலே குறிப்பிட்ட விருது வாங்கியவர் நடப்பு வரு டத்தில் எவ்வளவு நன்கொடை வழங்கினார் என விசாரித்தேன்ஒருவருக்கும் தெரியவில்லை.

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

சில காலத்துக்கு முன்னர் படத்துடன் செய்தி வெளியாகியிருந்ததுபிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் லண்டனில் பொதுமக்களோடு பாதாளரயிலில்சாதாரணமாகப் பயணம் செய்தார்அவருக்கு அமர இருக்கை கிடைக்காததால் நின்றபடியே பயணம் செய்யவேண்டி நேர்ந்ததுஅவருக்குப் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து தூங்கினார்இன்னொருவர் பேப்பர் படித்தார்.பாவம்பிரதமரை யாருமே கவனிக்கவில்லைஒருவரும் அவருக்கு இருக்கைதர முயலவும் இல்லைஒரேயொரு இந்தியப் பெண்மணி அவரை அணுகி ‘நீங்கள் இந்த நாட்டுப் பிரதமரா?’ என்று கேட்டார்அவர்ஆமாம்’ என்றார்அவசரமான ஒரு கூட்டத்திற்கு அவர் சென் றார்காரிலே வீதியில் பயணித்தால் நேரத்துக்குப் போகமுடியாதுஅதுதான் பாதாள ரயிலை தெரிவு செய்ததாகச் சொன்னார்.

நேற்று நான் ரிம்ஹோர்ட்டன் கோப்பிக் கடையின் நீண்ட வரிசையில் நின்றேன்வெள்ளைக் கோட்டு அணிந்துஸ்டெதாஸ்கோப் மாட்டிய ஒருவர் அவசரமாக வந்து வரிசையில் சேர்ந்தார்டேவிட் கமரோனுக்குநடந்தது நினைவுக்கு வந்ததுடொக்டருக்கு என்ன அவசரமோநான் என் இடத்தைக் கொடுத்தேன்அவர் மறுத்துவிட்டார்நான் சொன்னேன். ‘எனக்குப் போதிய நேரம் இருக்கிறதுநான் வேலை இல்லாத ஆள்.உங்களுக்கு நேரம் முக்கியம்.’ அவர் சொன்னார்: ‘நாங்களும் காத்திருக்கப் பழகவேண்டும்நோயாளிகள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அல்லவா?’ நான் அவர் சொல்லைக் கேட்காமல் அவருக்குப் பின்னாலேபோய் நின்றேன்அவர் அதைத்தடுக்க முடியாதல்லவா?  அவர் என்ன துறையில் மருத்துவராக இருக்கிறார் என்று கேட்டேன். ‘பேஸ்மேக்கர் (இருதய முடுக்கிபொருத்துவது’ என்றார்காலையில் இரண்டு பேருக்குஇருதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தியிருக்கிறார்பின் மதியம் கோப்பி குடித்தபின்னர் இன்னொருவருக்கு செய்யவேண்டும் என்றும் சொன்னார்அறுவைச் சிகிச்சை செய்துதான் வழக்கத்தில் இதைப்பொருத்துவார்கள்ஆனால் சமீபத்தில் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வந்தது. ‘அமெரிக்காவில் அறுவை சிகிச்சை இல்லாமலே ஒரு நுண்ணிய பேஸ்மேக்கரை ரத்தக் குழாய் வழியாக இருதயத்துக்குள் செலுத்திவெற்றிகரமாகப் பொருத்தி விட்டார்களாம்உண்மையா?’ என்றேன். ‘அது சரிதான்அந்தத் தொழில்நுட்பம் விரைவிலேயே கனடாவுக்கும் வந்துவிடும்’ என்றார்.

உங்கள் தொழிலில் பிரச்சினைகள் உண்டா?’ அவர், ‘உயிரோடு இருப்பவர்களால் பிரச்சினை இல்லைஇறந்தவர்களினால்தான் பிரச்சினை’ என்றார்எனக்கு ஆச்சரியம். ‘அது எப்படி இறந்தவர்களினால்பிரச்சினை?’ அவர் சொன்னார்: ‘பேஸ்மேக்கர் பொருத்திய ஒருவர் இறந்ததும் அவரை அப்படியே புதைத்து விடுகிறார்கள்இருதயம் வேலைசெய்வதை நிறுத்திவிடும்ஆனால் பேஸ்மேக்கர் துடித்தபடியேஇருக்கும்மனிதரின் வாழ்நாள் முடிந்தாலும் பேஸ்மேக்கர் அதன் வாழ்நாள் முடியுமட்டும் துடிக்கும்.’

அவர் முறை வந்ததுகோப்பியை வாங்கிக்கொண்டு போனார். ‘இருதயம் கனிந்த வாழ்த்துக்கள்’ என்றேன்திரும்பாமலே கோப்பிக் குவளையை உயர்த்திக் காட்டிவிட்டு மறைந்தார்.

100 டொலர்

கண் வைத்தியரிடம் செல்வதில் சில அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றனஎன்னுடைய கண் வைத் தியர் பிரபலமானவர்யார் சொன்னதுஅவர்தான்ரொறொன்ரோவிலேயே நோயாளிகளால் அதிகம்வேண்டப்படும்உடல்நல சஞ்சிகைகளால் தொடர்ந்து போற்றப்படும் ஒரே மருத்துவர்அதில் சந்தேகமே இல்லைஅவரிடம் காலை 9 மணிக்குப் போனால் 11 மணிக்கு அவருடைய உதவியாளர் உங்களைக்கூப்பிட்டு கண்ணைப் பரிசோதிப்பார். 12 மணிக்கு இன்னொருவர் வேறுவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டு சில குறிப்புகளைப் பதிவார்ஒரு மணிக்கு இன்னொரு பெண்மணி இருட்டு அறையில்கம்ப்யூட்டரில் ஓடும் பச்சை நிற நட்சத்திரங்களை  எண்ணச் சொல்வார்அப்படியும் ஒரு சோதனைஇப்படியாக முன்னேறி 3 மணிக்கு கண்மருத்துவர் என்னைப் பரிசோதிக்கத் தயாராக இருப்பார்பலஅடுக்குகளைத் தாண்டி இப்படிக் காத்திருக்கும்போது காளமேகப் புலவருடைய பாடல் ஒன்று நினைவுக்கு வரும்அவர் சத்திரத்தில் இரவு உணவுக்காகக் காத்திருந்தபோது ஒருமுறை விடிவெள்ளிதோன்றிவிட்டதாம்அப்போது அவர் வயிறெரிந்து பாடிய பாடல் இது:

கத்துக் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

இப்படியெல்லாம் காக்கவைத்து சோதித்து எழுதித் தந்ததுதான் கடந்த 6 மாதங்களாக நான் அணிந்த கண்ணாடிஒரு வாரம் சென்ற பின்னர் கண்ணாடி கடைக்காரரிடம் சென்று ‘இரண்டு இரண்டாகத் தெரியுது.கண்ணாடி சரியில்லை’ என்று சொன்னேன்அவர் நம்பவில்லை. ‘கண்ணாடி புதிதுகண் பழையதுபழகப் பழக சரி வரும்’ என்றார் நடிகர் தனுஷ் சொல்வதுபோலஆனால் சரியாகவில்லையூட்யூப் பார்க்கும்போதுஇரண்டு இரண்டாகத்  தெரிந்ததுவிஜய் நடித்த படம் ஒன்றில் விஜய் நடனமாடினார்இரண்டு விஜய் தெரிந்தனர்நான் இரட்டை வேடம் என்று நினைத்தேன்அப்படியில்லை என்று பின்னர் தெரிந்ததுஒருமுறைமனைவி கடைக்கு சாமான் வாங்கச் சென்றபோது 200 டொலர் கொடுத்தேன்மனைவி ‘இல்லை இது 100 டொலர்’ என்று சொன்னபோதுதான் விசயம் எத்தனை சீரியஸ் என்று புரிந்தது.

மறுபடியும் கண் மருத்துவரிடம் முறைப்பாடு செய்யச் சென்றேன்அன்று அவ்வளவு சனமில்லைகாலை 9 மணிக்கு சென்று மாலை 4 மணிக்கே மருத்துவரைப் பார்த்துவிட்டேன்சிலவேளை இப்படி அதிர்ஷ்டம்அடிப்பதுண்டுமருத்துவரிடம் ‘எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறதுகண்ணாடியில் ஏதோ பிழை’ என்றேன்அவர் மீண்டும் பரிசோதனைக் குறிப்புகளைப் பார்த்தார்என் கண்களின் அளவுகளுக்கும் கண்ணாடிக்கும் சம்பந்தமே கிடையாது. ‘இது எப்படி நேர்ந்தது?’ என்று வியக்கக்கூட இல்லைபுதுவித அளவு கள் எழுதித்தந்து புதுக்கண்ணாடி பெறும்படி சொன் னார்மருத்துவர் வாயிலிருந்து ஒன்றிரண்டுவார்த்தைகள் வரும் என்று  எதிர்பார்த்தேன். ‘தவறு நேர்ந்துவிட்டதுமன்னியுங்கள்.’ அது வரவே இல்லை.

இப்பொழுது புதுக்கண்ணாடி அணிந்து இருக்கிறேன். 100 டொலர் தாள் 100 டொலர் தாளாகவே தெரிகிறதுஎத்தனை பெரிய அதிசயம்கண் மருத்துவ விஞ்ஞானத் தின் அதிவேக வளர்ச்சியை நினைக்கும்போதுபுல்லரிக்கிறது.

கடவுளுக்கு வேலைசெய்பவர்

சில மருத்துவ உப கரணங்களை வாங்குவதற்காக  நானும் மனைவியும் மருத்துவர் பரிந்துரைசெய்த அதே கடைக்குச் சென்றோம்ஆச்சரியமாயிருந்ததுஅங்கே வேலை செய்த அத்தனைபேரும் 70 வயதைத்தாண்டி யவர்களாக இருந்தார்கள்நத்தை வேகத்தில் நடந்தார்கள்ஆமை வேகத்தில் ஆட்களைக் கவனித்தார்கள்ஒருவரு டன் ஒருவர் முகத்துக்கு கிட்ட வந்து ரகஸ்யம் பேசு வதுபோல கதைத்தார்கள்.கம்ப்யூட்டரைத் திறந்து ஒவ்வொரு எழுத்தாகத் தேடி குத்திக் குத்திப் பதிந்தார்கள்சரிஇன்றைக்கு இங்கே அரைநாள் கழியும் என்று மனதுக்குள் நினைத்தபோது ஒரு மூதாட்டி தரையைத் தேய்த்தபடி எங்களிடம்வந்தார்நான் சீட்டைக் கொடுத்தேன்அதிலே எல்லா விவரமும் எழுதியிருந்ததுமூதாட்டி ஒவ்வொரு பொருளாகக் கொண்டு வந்து எங்கள் முன் வைத்தார்சில பொருட்களைப் பூட்டவேண்டும்அவற்றைஎடுத்துச் சென்று பூட்டியபின் மீண்டும் கொண்டு வந்தார்எல்லாம் நிறைவேறி விட்டது.

கடைசியில் பில் போடும் வேலைமூதாட்டி கம்ப்யூட் டரின் முன் உட்கார்ந்து பொருள்களை பதியத் தொடங் கினார்பாதியிலே நிறுத்தி சொன்னார், ‘100 டொலர் களுக்கு மேல் வாங்கினால் 20 டொலர் கழிவு.’நல்லது என்றேன். ‘மொத்தத் தொகை 235 டொலர்’ என்றார்நான் பணத்தைக் கட்டத் தயாரானேன்அவரோ என்னை உற்றுப் பார்த்தபடியே அசையாது அமர்ந்திருந் தார்மறுபடியும் சொன்னார், ‘100 டொலர்களுக்குவாங்கினால் 20 டொலர் கழிவு.’ என் மூளை பிரகாசிக்க வில்லைஅப்படியே நின்றேன்அவருக்குப் புரிந்துவிட்டதுஇந்த மக்கு மனிதருக்கு 10 தடவை சொன்னாலும் புரியாது என்றுஎன்னைப் பார்த்து வாய்க்குக்கிட்டவாக வந்து ரகஸ்யக் குரலில் சொன்னார். ‘பில்லை இரண்டாகப் பிரிக்கலாம்அப்பொழுது உங்களுக்கு இரண்டு 20 டொலர் கழிவு கிடைக்கும்மொத்தம் 40 டொலர்.’ ‘அப்படியாநன்றி’ என்றேன்.

பணத்தைக் கட்டிவிட்டு மூதாட்டியிடம் விடை பெறும்போது கேட்டேன். ‘நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்கம்பனிக்காகவாவாடிக்கையாளருக் காகவா?’

அவர் சொன்னார்! ‘கடவுளுக்காக.’  

நல்ல செய்தி

அமினாட்டா ஃபோர்னா என்பவர் இங்கிலாந்தில் வாழும் ஓர் ஆப்பிரிக்க எழுத்தாளர்இவரைப் பத்து வருடங்களுக்கு முன்னர் நேர்காணல் செய்திருக்கிறேன்இவர் எழுதிய புத்தகம் The Devil that Danced on Water.இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்ததுஅதற்குப் பல காரணங்கள்இந்த நாவலின் கதை நிகழ்ந்த இடம் சியாரா லியோன்அங்கே நான் வாழ்ந்த காலத்தில் நடந்த கதைஇந்த நாவலில் எழுதப்பட்ட ஒவ்வொருவசனமும் செதுக்கப்பட்டிருக்கும்முதல் நாவல் என்ற படியால் ஆசிரியர் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத் தார்அதன் பிறகு 3 நூல்கள் எழுதினார்அவை என் மனதை அவ்வளவாகக் கவரவில்லை.இப்பொழுது கொரேசியா நாட்டின் பின்னணியில் இவர் எழுதிய The Hired Man என்ற நாவல் வெளிவந்திருக்கிறதுஇதை மின் நூலாக வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்இன்னும் முடிக்கவில்லைஇன்றுசெய்தி படித்தேன் இவருக்கு Windham - Campbell Award அமெரிக்காவில் கிடைத் திருக்கிறதுபரிசுத் தொகை 150,000 டொலர்ஓர் எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய தொகைஅவருக்கு உடனேயே வாழ்த்துக்கடிதம் போட்டேன்பதில் கிடைத்திருக்கிறதுஎனக்கே பரிசு கிடைத்ததுபோல மகிழ்ச்சியாக உள்ளது.

நேரமில்லை

Muthulingam%20(2).jpgஒரு கவிஞரைச் சந்தித்தேன்பல வருடங்களுக்கு முன்னர் அருமையான கவிதைகள் எழுதிப் பாராட்டப் பட்டவர். ‘ஏன் இப்போழுதெல்லாம் கவிதைகள்எழுதுவதில்லை?’ என்று கேட்டேன். ‘நேரமில்லை’ என்று சொன்னார்.

சில கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கலாம்ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாக ஏதாவது மனதிலே தோன்றும்.  சமீபத்தில் வெளியான சில்வியாபிளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பை தமிழில் படித்தேன்கீதா சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ரயில் ஒரு கோடாக மூச்சு விடுகிறது’ என்றவரி ஆங்கிலவரியிலும் பார்க்க சிறப்பாக அமைந்திருப்பதாக எனக்குப் பட்டதுபலமுறை படிக்கலாம்

ஹைக்கூ ஜப்பானிய வகைக் கவிதைசொல்ல வேண்டியதை 18 அசைவில் சொல்லி முடித்துவிட வேண்டும். 300 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டகவிதை வகைப்பாடு இன்று உலகம் முழுக்கப் பரவிவிட்டதுஅந்தக் காலத்து ட்விட்டர் என்று இதைச் சொல்லலாம்ஐரோப்பிய கவுன்சில் என்பது 28 நாடுகளின்பிரதம மந்திரிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது. 28 நாட்டுத் தலைவர்களுக்கும் ஒரு தலைவர் உண்டுமுன்னாள் பெல்ஜியம் நாட்டுப் பிரதம மந்திரி ஹேர்மன்வான்ரோம்பு இந்தக் கவுன்சிலுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்இத்தனை பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தாலும் இவர் ஹைக்கூ கவிதைஎழுதுவதை நிறுத்தவில்லை. ’பிஸியாக இருக்கிறேன்’ என்று இவர் சொன்னதே கிடையாதுஇதுதான் இவர் எழுதிய கவிதை:

வேலையில் மூழ்கியுள்ளேன்

கோதுமை அதே சமயம் வளர்கிறது

இன்னும் உயரமாக.

எனக்கு நேரமில்லை’ என்று சொல்லும் தமிழ்க் கவிஞருக்கு இதைப் படிக்கக் கொடுக்கவேண்டும்.

பணக்காரன்

என்னுடைய வங்கிக்குப் போனேன்யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார்நெஞ்சு சட்டையில் ‘பயிலுநர்’ என்று குத்தியிருந்ததுவங்கி நடப்புகளைப் பயில்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்இவர்பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன்என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார்எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்றுநினைக்கிறேன்பளிச்சென்று எல்லா பற்களும் மின்னினஎன்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார்அவர் சொல்லு வார், ‘ஐயாஎல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்ய  வேண்டும் என்றஅவசியமில்லைஎதற்காக மெனக்கெட வேண்டும்எந்த எந்தப் பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.’ இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்றுபட்டது.

உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?’ ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்ச ரிப்பதுபோலகனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்திச் சொன்னார். ‘உங்கள் பெயர்தெரியவில்லையே?’ என்றேன்அவர் ‘அநுபமா’ என்றார்பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாதுநிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில்குத்தலாம்அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும்.

அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம்இந்தியாமலேசியாசிங்கப்பூர்சீஷெல்ஸ் ஆகவும் இருக் கலாம்ஆனால் அவர் புன்னகையைப் பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோதுஇலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்கவைத்தது. ‘ஒரு காசோலை வந்திருக்கிறதுஅதை வங்கியில் என் கணக்கில் கட்ட வேண்டும்’ என்றேன். ‘சரிமிக்க மகிழ்ச்சியுடன்’ என்றுசொன்னார்உடன் அட்டையை மெசினுள் நுழைத்துஎன் கடவு எண்ணையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன்அதைப் பெற்றவர் பல்வைத்தியருக்கு தலையை உயர்த்துவதுபோல உயர்த்திகாசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார்அதன் பின் பக்கத் தில் கையொப்பம் வைக்கச் சொன்னார்வைத்தேன்கம்ப்யூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார்நகங்க ளில் பொய் நகம் ஒட்டிநீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்துவைத்துப் பதிந்தார்பின்னர் எழுந்து நின்று சறுக்குவதுபோல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டார்மறுபடியும் இருக்கைக்குத் திரும்பிசாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார்.

நான் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன்என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்ததுநான் கொடுத்த காசோலை 2500 டொலர் மட்டுமேஅவர் வரவுவைத்தது 25,001 டொலர்காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டொலரைக் கணக்கில் சேர்த்திருந்தார்திரும்பவும் அவரிடம் போனேன்குனிந்த தலையை நிமிர்த்தாமல்கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். ‘இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்’ என்றேன்ரசீதைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லைபிழையை சுட்டிக் காட்டினேன்பள்ளிச் சிறுமிசெய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார்.

பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றைத் தந்தபோது ‘மன்னிக்கவும்’ என்றார். ‘நான் ஏன் மன்னிக்கவேண்டும்நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றேன்அவர் ஒன்றுமே சொல்லாமல்அழகாகச் செதுக்கப்பட்ட புருவத்தைஅதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே என்பதுபோல  உயர்த்தினார். ‘இன்று நான் பணக்காரனாகியிருந்தேன்ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன்பணக்காரன்தானே’ என்றேன்அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டொலர் பெறுமதியான புன்னகை.

ஓவியங்கள்ஞானப்பிரகாசம் ஸ்தபதி

 

leftcurve.gif

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6549

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவங்கள்.

 

இன்று காலையில் இதைப் படிக்க வந்து இடைக்கிடை அங்கே , இங்கே என்று ஓடி ஒருமாதிரி மதியத்துக்கு மேல் படித்து முடித்து விட்டேன்...! :)

 

நன்றி பெருமாள்..! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.