Jump to content

'காவிகளின் பாசிசம்' - சிறிலங்காவை வழிநடத்தும் சிங்கள பெளத்த பேரினவாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Aluthgama-riots-1.jpg

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

இவ்வாறு CNN ஊடகத்திற்காக Tim Hume எழுதியுள்ள கட்டுரையில் குறித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

கடந்த மாதம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் அளுத்கமப் பகுதியில் பௌத்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்காக தலைமுடி வெட்டப்பட்ட, கண்ணாடி அணிந்திருந்த ஒரு மனிதன் நின்றிருந்தார். முஸ்லீம் இளைஞர்களுக்கும் பௌத்த காடையர்களுக்கும் இடையில் விவாதம் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊர்வலம் காணொலியில் பதியப்பட்டுள்ளது. 

அளுத்கம ஊர்வலத்தில் உரையாற்றிய குறித்த நபர், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினர் சிங்களவர்கள் எனவும், சிறிலங்காவின் 20 மில்லியன் மொத்த சனத்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களே எனவும் குறிப்பிட்டார். பின்னர் இவர் தனது கையை உயர்த்தி தனது குரலை உயர்த்தி முஸ்லீம்கள் எவ்வாறான ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை விபரித்தார். தனியொரு முஸ்லீம் சிங்களவர்கள் மீது கைவைத்தால் அதுவே முஸ்லீம்களுக்கான அழிவாகக் காணப்படும் எனவும் ஆவேசமாகக் கூறினார். இது காணொலியில் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு ஆவேசமாகக் கூறிய நபர் பௌத்த பிக்குகள் அணியும் காவி உடையுடன் காணப்பட்டதே இங்கு முக்கியமானதாகும். இவர் வேறு யாருமல்லர். இவர் தான் பௌத்த அதிகார சக்தி என நன்கறியப்படும் பொது பல சேனவின் பொதுச் செயலரும் பௌத்த பிக்குவுமான கலகொட அத்தே ஞானசார ஆவார். 

சிறிலங்கா காவற்துறையின் கண்காணிப்பு உள்ள பிரதேசங்களில் பொது பல சேன பல்வேறு தாக்குதல்களை மேற்கொள்வதானது தற்போது பிரச்சினைக்குரிய விடயமாகும். அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போதும் சிறிலங்கா காவற்துறையினர் பிரசன்னமாகியிருந்ததாகப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். "இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஆனால் பொது பல சேன இவ்வாறான மீறல்களில் இடம்பெறுவதானது மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும்" என அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளரும் வர்த்தகருமான மொகமட் ஹிசாம் கூறுகிறார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் தனது உரையை நிறைவு செய்து சிறிது நேரத்தின் பின்னர் அளுத்கமவில் உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பௌத்த காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் மூன்று முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 16 முஸ்லீம்கள் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். இரண்டு நாட்கள் இடம்பெற்ற வன்முறைகளில் இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அளுத்கம வன்முறை இடம்பெற்று ஒரு மாத காலம் கடந்த நிலையில், இந்த வன்முறையானது இந்நாட்டில் பல ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளாகக் காணப்படுவதாகவும், இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 135 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் இடம்பெற்ற தினமன்று உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஞானசார தேரர், காவற்துறையிடம் விளக்கமளித்த போதிலும் இதுவரையில் இவருக்கெதிராக எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை. அளுத்கம வன்முறைச் சம்பவத்துடன் ஞானசார தேரர் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அளுத்கமவில் இடம்பெற்ற ஊர்வலத்தில் உரையாற்றியதன் மூலம் ஞானசார தேரர், இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கான தூண்டுதலை வழங்கினாரா என்பதை விசாரணை செய்வதாக சிறிலங்கா காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் தலைவரால் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் ஊர்வலத்தைத் தொடர்வதற்கு அதிகாரிகள் அனுமதித்தாலேயே இவ்வாறான வன்முறைகள் தோன்றியதாக ஹிசாம் தெரிவித்தார். ஆனால் பொது பல சேனவுக்கும் அளுத்கம வன்முறைக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என ஞானசார தேரர் மறுத்துள்ளார். "இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எம்மீது தொடர்ந்தும் பழிசுமத்தப்படுவதுடன் நாங்கள் சிங்களத் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்படுகிறோம். இது நீதியற்றது. பொய்யான குற்றச்சாட்டாகும்" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

"இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற போது, முஸ்லீம் இளையோர் குழுவினால் எமது பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டபோது எழுந்த மோதல் நிலையைத் தணிப்பதற்கு பொது பல சேன முயற்சி எடுத்தது. ஆனால் நாங்கள் தான் இந்த வன்முறைகளை மேற்கொண்டதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

அளுத்கம சம்பவம் தொடர்பில் பொது பல சேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், பௌத்தமதத்தை அவமதிக்கும் விதமாக செய்திகள் வெளிவந்துள்ளதை எதிர்த்து கடந்த புதன்கிழமை அன்று வெகுசன ஊடகம் மற்றும் தகவற்துறை அமைச்சிடம் முறையீடு செய்யும் முகமாக அமைச்சு பணியகத்திற்குச் சென்ற புத்த பிக்குகளில் ஞானசார தேரரும் ஒருவராவார். 

அளுத்கம சம்பவத்தை அடுத்து ஞானசார தேரரின் அமெரிக்காவுக்கான பயணம் நிறுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட பொது பல சேனவின் இணையத்தளத்தில், இந்த வன்முறைச் சம்பவத்தை பொது பல சேன வன்மையாகக் கண்டிப்பதாகவும், பொது பல சேனவின் பிரதிநிதிகள் "சிங்கள பௌத்தர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத்தி உணர்ச்சிகரமான பேச்சுக்களை மேற்கொள்வதாகவும்" இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்படும் முஸ்லீம் எதிர்ப்பு வாதங்கள் வரவேற்கப்படத்தக்கவை அல்ல என அரசியல் விஞ்ஞானியும் சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியுமான டயான் ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். பொது பல சேனவின் அரசியல் செயற்பாடுகள் 'காவிகளின் பாசிசம்' என டயான் ஜெயதிலக விபரித்துள்ளார். 

பொது பல சேனவைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தக அமைச்சில் காவற்துறை ஒருவருடன் கடந்த ஏப்ரலில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தார். பௌத்த பிக்குகள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயற்படும் ஒரு தீவிரவாத அமைப்பே பொது பல சேன என ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார். 

"அளுத்கமவில் பொது பல சேனவால் பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இந்த நிலையானது பொது பல சேன அரசாங்கத்தின் மிகப் பலமான ஆதரவைப் பெற்ற ஒரு அமைப்பாகும் என்பதை அறியமுடிகிறது" என சிறிலங்கா மாற்றுக் கொள்கைகள் மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

பௌத்த அதிகாரிகளிடமிருந்தும் சிறிலங்கா அரசிடமிருந்தும் பொது பல சேனவின் செயற்பாடுகளைக் கண்டித்து எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டார். "பௌத்தத்தின் பெயரால் பௌத்தத்தின் நியமங்களை மீறி நிற்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவின் பொது பல சேனவைப் போன்று மியான்மாரில் முஸ்லீம் எதிர்ப்பு பௌத்த அமைப்பு ஒன்று செயற்படுகிறது. இது 969 அமைப்பு என அழைக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கைவிடுமாறு தலாய்லாமா தனது பிறந்த நாள் உரையின் மூலமாக பொது பல சேனவிடம் வேண்டுகோள் விடுத்தார். 

"பௌத்த தீவிரவாத ஆயுதக் குழு தோற்றம் பெற்றுள்ளதானது ஆச்சரியப்படத்தக்கதல்ல. பல ஆண்டுகளாக சிங்கள பௌத்தர்களின் மத்தியில் மத வெறி என்பது தீவிரம் பெற்றுள்ளது. 1959ல் அப்போதைய பிரதமராக இருந்த S.W.R.D பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்" என ஜெயதிலக சுட்டிக்காட்டுகிறார். 

பௌத்த பிக்குக்களின் சிங்கள தேசியக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து ஞானசார தேரர் வெளியேறிய பின்னர், 2012ல் சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான பிறிதொரு ஊடகமாக பொது பல சேனவைத் தோற்றுவித்தார். இதற்கு முன்னர் ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் வேட்பாளாராக இருந்தார். இக்கட்சியானது ஆளும் மகிந்த ராஜபக்சவின் கூட்டணிக்கட்சியாகும். பொது பல சேன தோற்றம் பெற்ற பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சிறிலங்கா பௌத்தர்கள் மிகமோசமாக நடாத்தப்படுவதாவும், பங்களாதேசில் இடம்பெற்ற பௌத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்தியது. 

ஆனால் பொது பல சேனவின் ஒட்டுமொத்த இலக்காக சிறிலங்கா வாழ் முஸ்லீம் சமூகத்தினராவார். முஸ்லீம்களால் பின்பற்றப்படும் ஹலால் உணவுத் தரக்கட்டுப்பாட்டு முறைமையுடன் பௌத்த எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ல் முடிவடைந்த பின்னரே முஸ்லீம் எதிர்ப்பு உணர்வானது பௌத்த பிக்குகள் மத்தியில் தோற்றம் பெற்றதாக ஜெயதிலக கூறுகிறார். 

"போர் முடிவுற்ற பின்னர், சிங்களவர்கள் தமது நிலையை சீர்தூக்கிப் பார்த்த போது, நாட்டின் இரண்டு மிகப் பெரிய சமூகங்கள் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட போது, முஸ்லீம் சமூகம் எவ்வித சேதங்களுமின்றி சமாதானமாகவும் அமைதியாகவும் நாட்டில் வாழ்வதை அவதானித்தனர். நாட்டில் பல பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற்ற முஸ்லீம் இளையோர் என முஸ்லீம்கள் வளர்ச்சியுற்றிருப்பதை சிங்களவர்கள் உணர்ந்தனர். இதனால் பௌத்தர்கள், முஸ்லீம் எதிர்ப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்" என்கிறார் ஜெயதிலக. 

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

பொது பல சேனவின் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இதனைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தவறிவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த ஆண்டு காலியில் பொது பல சேனவுடன் தொடர்புபட்ட கல்லூரி ஒன்றைத் திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவில் கோத்தபாய, ஞானசார தேரரின் அருகில் நின்றதை ஒளிப்படம் சாட்சிப்படுத்துகிறது. 

ராஜபக்சவுக்கும் பொது பல சேனவுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும், மதிப்பிற்குரிய தேரர் ஒருவரின் அழைப்பிதழைப் புறக்கணிக்க முடியாது கோத்தபாய ராஜபக்ச காலித் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருப்பர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்திக்கான பேச்சாளர் பிரிகேடியர் றுவாண் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த பல பிக்குகளின் மத்தியில் ஞானசாரவும் ஒருவராக இருந்திருப்பார் எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவானது ஒரு ஜனநாயக நாடு எனவும் இங்கு எந்தவொரு மதமும் சுதந்திரமாகச் செயற்பட முடியும் எனவும் இதனால் கோத்தபாய ராஜபக்சாவால் எதுவும் கூறமுடியாதிருந்திருக்கலாம் எனவும் வணிகசூரிய தெரிவித்தார். 

"கோத்தபாய ராஜபக்ச உட்பட எந்தவொரு அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் பொது பல சேனவுக்கு பாதுகாப்போ சிறப்புக் கவனிப்போ வழங்கப்படவில்லை. நாட்டின் சட்டத்தை மீறும் எவரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்" என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கான பேச்சாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் மீது அளுத்கம சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் விசாரணைகள் தற்போதும் தொடரப்படுவதால் இதன் தீர்வு என்ன என்பதை எதிர்வுகூறமுடியவில்லை எனவும் சமரநாயக்க தெரிவித்தார். பொது பல சேனவானது சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தோ அதிபர் மகிந்த ராஜபக்சவிடமிருந்தோ எவ்வித ஆதரவுகளையும் பெறவில்லை என ஊடகங்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச அரசாங்கத்திற்கு பொது பல சேன அமைப்பானது சில அரசியல் நலன்களை வழங்கியிருந்தாலும் தற்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக ஜெயதிலக கூறுகிறார். அளுத்கமவில் வழங்கிய உரையில் ஞானசார தேரர் சிறிலங்கா அதிபரையும் விமர்சித்திருந்தார். அதாவது சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆளுமையான தலைமை நாட்டில் காணப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொது பல சேன, இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிவருவதாக ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். 

"தண்டனை வழங்காது சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமையை வழங்குவதானது நாட்டில் மேலும் வன்முறைகளைத் தோற்றுவிக்கும். சட்ட ஆட்சிக்குக் கட்டுப்படும் எந்தவொரு நாடும் அதனை மீறுபவர் எவராயிருந்தாலும் அவர்கள் கள்வர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140720110916

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.