Jump to content

ஆப்பிள் பாயாசம்


SUNDHAL

Recommended Posts

ஆப்பிள் பாயாசம்

தேவைப்படும் பொருட்கள்:

*ஆப்பிள்- 150 கிராம்.

* சப்போட்டா- 150 கிராம்.

* காய்ந்த அத்திப்பழம்- 2

* பாதாம்-10

* பிஸ்தா- 10

* கிராம்பு- 3

* ஜாதி பத்ரி- சிறு துண்டு.

* சவ்வரிசி- 50 கிராம்.

* வெல்லம்- 200 கிராம்.

* நெய்- மூன்று மேஜைக்கரண்டி.

* தேன்- ஒரு மேஜைக்கரண்டி.

* ஏலக்காய்- 6

* தேங்காய் (சிறியது)- ஒன்று.

செய்முறை:

ஆப்பிள், சப்போட்டா போன்றவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு கரண்டி நெய்யில் தனித்தனியாக வறுத்து, பின்பு நன்றாக அரையுங்கள்.

சவ்வரிசியை வேகவையுங்கள்.

பாதாம், பிஸ்தா இரண்டையும் சிறிதாக நறுக்கி, நெய்யில் வறுத்து வைக்கவும். அதில் மீதம் இருக்கும் நெய்யில் அத்திப்பழத்தை நறுக்கி வறுத்தெடுங்கள்.

சர்க்கரையை உருக்கி, வடிகட்டி எடுங்கள்.

ஏலக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு போன்றவைகளை ஒன்றாக்கி தூளாக்குங்கள்.

தேங்காயை துருவி ஒன்றாம் பால் ஒரு கப்பும், இரண்டாம் பால் இரண்டு கப்பும் பிழிந் தெடுங்கள்.

அரைத்து வைத்திருக்கும் பழங்களில் இரண்டாம் பாலை ஊற்றி, லேசான தீயில் வேகவிடுங்கள். வெந்து வற்றிவரும்போது வெல்லப்பாகு, சவ்வரிசி சேருங்கள். பாயாசம் வெந்து பக்குவத்திற்கு வரும்போது ஒன்றாம் பாலை ஊற்றி, வறுத்துவைத்திருக்கும் பொருட்களையும் சேர்த்து கிளறுங்கள். கடைசியாக தேனையும் கலந்து பாயாசத்தை இறக்குங்கள்.

சாக்லெட் பாயாசம்

தேவைப்படும் பொருட்கள்:

* சேமியா- 100 கிராம்.

* பால்- ஒரு லிட்டர்.

* பால் பொடி- ஒரு கப்.

* சாக்லெட் தூள்- 2 மேஜைக்கரண்டி.

* ஏலக்காய்- ஐந்து.

* வேகவைத்த சவ்வரிசி- அரை கப்.

* சர்க்கரை (சீனி)- ஒரு கப்.

* பாதாம் பருப்பு- 10

* பேரீச்சம் பழம்- 6

* நெய்- 25 கிராம்.

செய்முறை:

நெய்யை சூடாக்கி அதில் பாதாம் பருப்பையும், பேரீச்சம் பழத்தையும் சிறிதாக நறுக்கிப் போட்டு வறுத்தெடுக்கவும். மீதம் இருக்கும் நெய்யில் சேமியாவை பொன்னிறத்தில் வறுத்து, அதில் கொதித்த பாலை ஊற்றி வேகவையுங்கள். பக்குவமாக வெந்து வரும் போது பால்பொடியை கெட்டியாக கலக்கி அதில் ஊற்றுங்கள். சாக்லெட் பொடியையும் தூவி, கிளறுங்கள். கெட்டியாகும் போது சர்க்கரை, ஏலக்காய் தூள், வறுத்த பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் போன்றவைகளை கலந்து இறக்குங்கள்.

Thanks:Thanthi..

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

அப்ப அப்பிளுக்கு பதிலாக வாழைபழத்தை போட்டால்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

அது சரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி கடைசியாக வரவேண்டிய இராவணன் அண்ணா படம் தொடங்கியவுடனே வாரார்....

Link to comment
Share on other sites

ஒருக்கா அவரிட்ட கேட்டு சொல்லுங்கோ அவர் யாருடைய ஆளேன்று சின்னாவின் ஆள் என்றால் அவரிடமும் தாக்குதல் தொடரும்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி கடைசியாக வரவேண்டிய இராவணன் அண்ணா படம் தொடங்கியவுடனே வாரார்....

நீங்கள் காட்டுற படம் சாப்பாடு விசயமாச்சே! ஒர தலைக்கே இப்படிப் பசிக்குது என்றால் 10 தலையை வைத்துக் கொண்டு கட்டிக் காக்க வேணாமோ! :wink: :P

Link to comment
Share on other sites

நீங்கள் காட்டுற படம் சாப்பாடு விசயமாச்சே! ஒர தலைக்கே இப்படிப் பசிக்குது என்றால் 10 தலையை வைத்துக் கொண்டு கட்டிக் காக்க வேணாமோ! :wink: :P

தூயவன் , இந்த பகுதிதான் கரைச்சல் இல்லாமல் இருக்கு. பேசாமல் இங்கே செட்டில் ஆயிடுவோம்

Link to comment
Share on other sites

நீங்கள் காட்டுற படம் சாப்பாடு விசயமாச்சே! ஒர தலைக்கே இப்படிப் பசிக்குது என்றால் 10 தலையை வைத்துக் கொண்டு கட்டிக் காக்க வேணாமோ! :wink: :P

அது சரி

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

தூயவன் , இந்த பகுதிதான் கரைச்சல் இல்லாமல் இருக்கு. பேசாமல் இங்கே செட்டில் ஆயிடுவோம்

செட்டில ஆறது சரி சின்னாவுக்கு மாமுல் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒருக்கா அவரிட்ட கேட்டு சொல்லுங்கோ அவர் யாருடைய ஆளேன்று சின்னாவின் ஆள் என்றால் அவரிடமும் தாக்குதல் தொடரும்

:evil: :evil: :evil:

அதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் , இந்த பகுதிதான் கரைச்சல் இல்லாமல் இருக்கு. பேசாமல் இங்கே செட்டில் ஆயிடுவோம்

நீர் வேற!

எங்கடா பிரச்சனை கிளப்பலாம் என்று திரிகின்றேன். விடமாட்டேன் என்கின்றீர்களே! :evil: :evil: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டலின் பணக்கார ஆப்பிள் பாயாசம் ஏழைகளுக்கு எட்டாப் பழம் தானோ?

Link to comment
Share on other sites

நீர் வேற!

எங்கடா பிரச்சனை கிளப்பலாம் என்று திரிகின்றேன். விடமாட்டேன் என்கின்றீர்களே! :evil: :evil: :wink:

இங்கு கரைச்சல் இழுப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியே கிளப்பினாலும் இங்கு நீர் வாங்கி கட்டுவீர் என்பது நிச்சயம்

:wink: :wink: :wink: :D:):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கரைச்சல் இழுப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியே கிளப்பினாலும் இங்கு நீர் வாங்கி கட்டுவீர் என்பது நிச்சயம்

:wink: :wink: :wink: :lol::):lol:

:lol::lol::D:lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் செய்து போட்டு நமக்கு அனுப்பி விடும் என்னா?;)

யாரிட்ட கேக்கிறீங்க சுண்டல் :roll: :P

Link to comment
Share on other sites

நீர் வேற!

எங்கடா பிரச்சனை கிளப்பலாம் என்று திரிகின்றேன். விடமாட்டேன் என்கின்றீர்களே! :evil: :evil: :wink:

இங்கு கரைச்சல் இழுப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியே கிளப்பினாலும் இங்கு நீர் வாங்கி கட்டுவீர் என்பது நிச்சயம்

:wink: :wink: :wink: :lol::lol::lol:[/quote

சரியாக சொன்னீங்க அண்ணா

:P :P :P

Link to comment
Share on other sites

அதே!

நான் சுண்டலிட்ட கேட்டா நீர் ஏன் பதில் சொல்லிறீர்

:?: :?: :?: :?:

:? :? :? :? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கரைச்சல் இழுப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியே கிளப்பினாலும் இங்கு நீர் வாங்கி கட்டுவீர் என்பது நிச்சயம்

:wink: :wink: :wink: :lol::lol::lol:

இது என்ன நக்கல் கதையாகக் கிடக்கு! வாங்கிக் கட்டுவது எமக்கெனவோ புதுசு மாதிரிக் கதையளக்கின்றியள்! :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்க அண்ணா

:P :P :P

அவுஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டு, அப்ப ஏதும் விருது கொடுப்பமோ! :wink: :roll:

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டு, அப்ப ஏதும் விருது கொடுப்பமோ! :wink: :roll:

கொடுத்தா போச்சு என்ன விருது கொடுக்கிறது.

:?: :?: :?:

Link to comment
Share on other sites

யாரிட்ட கேக்கிறீங்க சுண்டல் :roll: :P

சிவக்கொழுந்து என்ன ம..பே ??? நான் பாயசம் செய்து போட்டு அனுப்ப சொல்லிச் சுண்டலுக்கு சொன்னான் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

கொடுத்தா போச்சு என்ன விருது கொடுக்கிறது.

:?: :?: :?:

சட்டென்று ஒரு முடிவுக்கு வாருங்கள் ! என்ன விருது என்று, ஆர்வம் தாங்கவில்லை :wink: :wink: :roll:

Link to comment
Share on other sites

தூயவன் , இந்த பகுதிதான் கரைச்சல் இல்லாமல் இருக்கு. பேசாமல் இங்கே செட்டில் ஆயிடுவோம்

ஏன் என்னோட பக்கம் கரைச்சல் இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லையா???

ஏதோ எங்க இடம் என்பதால கரைச்சல் இல்லாம இருக்காக்கும் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.