Jump to content

இந்திரா நூயி - PEPSI CEO


Recommended Posts

 

PepsCoIndraNooyi2010-222x300.jpg

 

‘இந்திரா நூயி’ பெயரை கேட்டால் எதோ வேறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் ‘B.Sc’ படிப்பும், ‘IIM’- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் ‘Public & Private Management’ முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் ‘Beardsell’ டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnsn’ என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.
பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development’ ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் ‘Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் ‘இந்தியா’ முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஜனவரி 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார், இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது. நூயி USIBC இன் போர்டு இயக்குநர்களை வழிநடத்துகின்றார், இது அமெரிக்க தொழில்துறையைப் பிரதிபலிக்கும் 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டமைப்பு ஆகும்.

2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில், இந்திரா நூயி $14,917,701 ஐ மொத்த சம்பளமாகப் பெற்றார், அதில் அடிப்படைச் சம்பளமான $1,300,000, போனஸ் $2,600,000, வழங்கப்பட்ட பங்குகள் $6,428,538 மற்றும் விருப்பமாக வழங்கப்பட்டவை $4,382,569 ஆகியவை உள்ளடங்கும்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு

http://sathiyam.tv/tamil/wp-content/uploads/2013/12/PepsCoIndraNooyi2010.jpg

 

ரிசப்ஷனிஸ்டாக வேலை செய்தேன்!' இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி!!
 
images.jpg
உலகின் சக்தி மிகுந்த 100 பெண்களில், 4வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பெப்சி முதன்மை நிர்வாக அலுவலர் மற்றும் தலைவருமான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி: என் சொந்த ஊர் சென்னை. டிகிரி முடிச்சதும், படிப்பு இதோட முடியலன்னு தோணிச்சு. சேலஞ்சிங்கா ஏதாவது படிக்கலாம்னு நினைச்சேன். மாஸ்டர் டிகிரி பிசினஸ்ல பண்ணலாம்ன்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா என் படிப்புக்கு உறுதுணையாக இருந்தார். கோல்கட்டா ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அப்ளை பண்ணினேன். அந்த நேரத்தில் இந்தியாவிலேயே இரண்டு பிசினஸ் ஸ்கூல் தான் இருந்தது. எம்.பி.ஏ., முடிக்கறப்போ தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரிஞ்சுது. எம்.பி.ஏ., முடித்ததும், சிறிது காலம் ஏ.பி.பி., நிறுவனத்தில் பணியாற்றினேன்; பின், "ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில், புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தேன். அங்கே வெற்றிகரமாக பணியாற்றினாலும், கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள வெறும் எம்.பி.ஏ., படிப்பு போதாது என்று முடிவு செய்து, "பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மென்ட்' படிப்பிற்காக அமெரிக்காவின், "யேல்' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். படிக்கும் காலத்தில், படிப்பு செலவுக்காக, "பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்ட்' வேலை செய்தேன். படிப்பு முடிந்த பிறகு, பெப்சி நிறுவனத்தில், 1994ல் நுழைந்த போது, என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. நான் மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால், இந்த இடத்தை அடைய என் உழைப்பில் பாதியை செலவிட்டிருந்தாலே போதும். பெண்ணாக இருந்ததால் இரு மடங்கு அதிகமாக உழைத்திருக்கிறேன். இந்த உழைப்புக்காக, இந்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.

 

Link to comment
Share on other sites

  • 4 years later...

பெப்சி நிறுவனத்தை வழி நடத்திய இந்திரா நூயி அளிக்கும் தலைமைப் பதவி பாடங்கள்! 

இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓவாக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்த பிறகு அந்த பதவியில் இருந்து விலகியிருக்கிறார். அவரது இடத்தில் ரமோன் லகுவார்ட்டா அக்டோபர் 3 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். பெப்சி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் 2019 வரை இருப்பார். 

இந்திரா நூயி பெப்சி நிறுவனத்தில் 1994 ல் பணிக்கு சேர்ந்தார் 2006 ல் அவட் சி.இ.ஓவாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பெப்சி நிறுவனம், 2006 ல் 35 பில்லியன் டாலரில் இருந்து 2017 ல் 63.5 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது.

 
jhmnlywf-Indra-Nooyi.jpg
 
 

இந்திரா நூயி நிறுவனத்தின் தலைவராக 2019 வரை பதவியை தொடர்வார். 61 வயதான நூயி, பதவி விலகல் முடிவை அறிவித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

"பெப்சி நிறுவனத்தை தலமையேற்று நடத்தியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். கடந்த 12 ஆண்டுகளில், எங்கள் செயல்பாடுகள் குறித்து, பங்குதாரர்கள் மட்டும் அல்லாமல் நாங்கள் செயல்படும் சமூகங்களில் உள்ள அனைத்து தொடர்புடையவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய அசாதரனமான நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துவேன் என கனவிலும் நினைக்கவில்லை.”

அவரது இடத்தில் பொறுப்பேற்க உள்ள ரெமோன், பெப்சி நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2017 முதல் பெப்சி தலைவராக அவர் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை கவனித்து வந்தார்.

இந்திரா நூயி டிவிட்டரில் ரமோன் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

"@PepsiCo நிறுவனத்தின் வெற்றி மற்றும் வலுவான நிலையை மேம்படுத்த ரெமோன் லகுவார்ட்ட பொருத்தமானவர். அவர் முக்கிய பங்குதாரராக மற்றும் நண்பராக இருந்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறுவனத்தை அவர் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறேன்.”

இதனிடையே, நிறுவனத்தின் இயக்குனரான ஐயான் குக், நிறுவன வளர்ச்சியில் இந்திரா நூயியின் பங்களிப்பை பாராட்டினார். குறுகிய கால நோக்கில் அல்லாமல் நீண்ட கால நோக்கிலான பார்வையுடன் நிர்வகித்து, வலுவான மற்றும் சீரான நிதி செயல்பாடுகளை அளித்தார்,” என அவர் பாராட்டியிருந்தார்.

’இன்றைய தினம் எனக்கு கலைவையான உணர்வுகளை கொண்டது. @PepsiCo24 ஆண்டுகளாக என் வாழ்க்கையாக இருந்தது. என் இதயத்தின் ஒரு பகுதி இங்கு தான் இருக்கும். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளேன். பெப்சி நிறுவனத்தின் சிறந்த காலம் வர இருப்பதாக நம்புகிறேன்” என்றும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

 

ஒரு பெண்ணாக தலைமை வகித்தது பற்றி இந்திரா நூயியின் ஊக்கம் தரும் மேற்கோள்கள் இவை:

”நான் செய்யாத எதையும் மற்ற எவரையும் செய்யுமாறு கூற மாட்டேன்.”

“சி.இ.ஓ’வாக நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் தலைமை பதவி என்பது ஒவ்வொரு கட்டத்திலும் வேறுபட்டதாக இருக்கும். நிறுவனத்தில் உயர் பதவி பெறும் போது, பொறுப்புகள் அதற்கேற்ப அதிகரிக்காமல், பன்மடங்கு உயர்கின்றன.”

”நான் நேர்மையாக, மிக நேர்மையாக இருக்கிறேன். நான் எப்போதுமே, எல்லாவற்றையும் அவர்கள் கோணத்திலும், என் கோணத்திலும் பார்த்திருக்கிறேன். எப்போது விலகிக் கொள்ள வேண்டும் என எனக்குத்தெரியும்.”
”தலைமைப் பண்பை வரையறை செய்வது கடினம். நல்ல தலைமைப் பண்பை வரையறுப்பது இன்னும் கடினம். ஆனால் மற்றவர்களை பூமியின் விளிம்பை நோக்கி உங்களை பின் தொடர்ந்து வரச்செய்ய முடியும் என்றால் நீங்கள் நல்ல தலைவர்.”
”நீங்கள் நீங்களாக இருப்பது தான் வெற்றிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்று. உங்களை உருவாக்கும் அம்சங்களை ஒரு போதும் மறைக்க வேண்டாம்.”
”எல்லாவற்றையும் மீறி, நீங்கள் ஒரு மனிதர் என்பதை, நீங்கள் ஒரு அம்மா என்பதை, நீங்கள் ஒரு மனைவி என்பதை, நீங்கள் ஒரு மகள் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு வெற்றி பெற்றாலும் கடைசியில் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம்பிக்கை மட்டும் தான் உங்களுடன் இருக்கும்.

https://tamil.yourstory.com/read/1ec38aba69/leadership-leadership

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.