Jump to content

மெட்ராஸ் மட்டன் சால்னா


Recommended Posts

மெட்ராஸ் மட்டன் சால்னா

தேவையானப் பொருட்கள்

 

  • ஆட்டுகறி -அரை கிலோ
  • இஞ்சி-இரண்டு அங்குலத் துண்டு
  • பூண்டு-ஆறு பற்கள்
  • பெரிய வெங்காயம்-இரண்டு
  • காய்ந்த மிளகாய்-இரண்டு
  • தேங்காப்பூ-நான்கு மேசை கரண்டி
  • தனியா-ஒரு மேசை கரண்டி
  • கசகசா-இரண்டு தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்-பத்து
  • உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • கொத்தமல்லி-ஒரு பிடி
  • எண்ணெய்-கால் கோப்பை.
  • பட்டை-இரண்டு துண்டு
  • இலவங்கம்-நான்கு
  • ஏலக்காய்-நான்கு.
செய்முறை

 

  • கறியை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு தேங்காய்,இஞ்சி பூண்டு,தனியா,கசகசா, பச்சைமிளகாய்,ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு குக்கரை அடுப்பில் வைத்து,எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வாசனை பொருட்களை போடவும்.தொடர்ந்து காய்ந்த மிளகாயை உடைத்து போட்டு வருக்கவும்.
  • பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.தொடர்ந்து அரைத்த விழுதை போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்.
  • பின்பு கறியை சேர்த்து உப்பு,சிறிது மஞ்சத்துள் போட்டு நன்கு வதக்கவும்.
  • தண்ணீர் மூன்று கோப்பை ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.கறி நன்கு வெந்தவுடன் கரம்மசாலா அரை தேக்கரண்டி போடவும்.குழம்பு சற்று நீர்த்தாற் போல் இருக்க வேண்டும்.
  • கறிவேப்பிலை,கொத்தமல்லியை தூவி சூடாக இட்லியுடன் பரிமாறவும்.

http://kilakaraimutton.wordpress.com/page/4/

Link to comment
Share on other sites

  • 4 years later...

மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா

 

 

அ-அ+

சாதம், தோசை, பரோட்டா, சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - அரை கிலோ
துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு..

தேங்காய் - 3 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு -  கால் ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
 
201808011506374536_1_madurai-mutton-salna._L_styvpf.jpg

செய்முறை :

மட்டனை கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்
 
10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா ரெடி.
 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.