Jump to content

வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை

vanni.jpg

வன்னி விவசாயக்கிராமங்கள் நிரம்பியது.இங்கு குளங்களும் கோயில்களும் காடுகளும் நிரம்பியுள்ளன.வன்னிவள நாட்டின் பாரம்பரியமிக்க வாழ்வியல் வழி பாடுகள் சடங்குகள் தொழில்கள் என்பன பற்றிய நாட்டார் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பெரும்பாலும் பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் எனவும் கூத்து, கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன.

பிள்ளையார் சிந்து, விறுமன்சிந்து, வதனமார்சிந்து ஐயனார் சிந்து, முருகையன்சிந்துஎன வழிபாட்டிலும், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச்சிந்து இகொட்டுக்கிணற்றடிப்பிள்ளையார் கும்மி, கமுகஞ்சண்டை, என வகைவகையாக வழக்கிலுண்டு.

“முடியோடு தேங்காயைக் கையிலெடுத்தோம்

மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்”

என என்ன வேலை செய்யப்புகுந்தாலும் விநாயகனைத்தொழுது செய்வது தமிழர் பழக்கம். ஏர் பூட்டும் போதே

“பட்டி பெருக வேணும் தம்பிரானே

பால்பானை பொங்க வேணும் தம்பிரானே” எனத்தொடங்கி…

“மேழிபெருகவேணும் தம்பிரானே

மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே”

என்று மழை வேண்டிப்பாடித் தொடங்கும் விவசாயியின் பெரும் சொத்து மாடுகள்தான். இவைகளைக் குடும்பத்தில் ஒருவராகவே கணித்து வளர்ப்பார்கள். அப்போ அவைகளை வேலை வாங்கும் போது பாடிக்கீடி சமாளித்து வேலை வாங்குவார்கள்.

“சார்பார்த்த கள்ளனடா…

தாய்வார்த்தை கேளாண்டா..

பாரக்கலப்பையடா செல்லனுக்கு…

பாரமெத்தத் தோணுதடா…

வரம்போதலகாணிஸ செல்லனுக்கு

வாய்க்காலோ பஞ்சுமெத்தை”

இப்படியே வேலை வாங்கும் விவசாயி இன்று வெள்ளாண்மை செய்யும் வேளாண் குடிமக்களாக உள்ளனர். மாரிமழை பெய்து வெள்ளம் வர அதை தன் தேவைக்கேற்ப வழி நடத்தும் திறமைக்காக அவன் வெள்ளத்தை ஆள்பவனானான். வெள்ளத்தை ஆள்பவன் வெள்ளாளன்.

மன்னராட்சி ஒழுக்கப்பட்டகாலத்தில் மன்னனுக்குரிய நிலங்களை குடக்கூலிக்கு விட்டவர்கள் அந்த நிலங்களுக்கே சொந்தக்காரராகி விட்டனர். இந்த நிலங்களைப் பண்படுத்தி பள்ளம் பார்த்துப் பயிர்செய்தவன் பள்ளனாகினான். இவாகளை வைத்து வேலை வாங்கியவர் “ஆண்டே” எனப்படும் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். வேலை செய்வவன் அடிமை அந்த அடிமையின் மகனும் அடிமை என கொத்தடிமை முறை நடைமுறையிலிருந்தது இவர்களது குடும்பப் பிரச்சனைகளில் கூட இந்த ஆண்டானே முடிவெடுத்தார். இதற்கு எடுகோளாக உள்ள பாடலடிகள்…

“பள்ளி பள்ளி பள்ளன் எங்கடி போனான்

பள்ளம் பாத்துப் பயிர்செய்யப் போனான்

கொத்தப்போனான் குழலுதப்போனான்

கோழிக்கூட்டுக்கு மண்வெட்டபபோனான்

தெந்தனா தன தெந்தந்தினானா தெனதெனா தெந்த தினதெந்தினானா”

இந்த இறுதியடிகளைத் தருப்போடுதல் என்பார்கள். உங்களுக்கு நினை விருக்கமோ தெரியாது கிராமத்தில் யாராவது கோள் சொல்லும்போது “ஓமோம் இவன்தான்” என்று யாராவது சேர்ந்து பேசினால் “நீ என்னடா தருப்போட வாறியே” என்று கூறுவது, இந்தப்பாடல்களின் வரிகள் எல்லொருக்கும் பாடமிருக்காது, எனவே தெரிந்தவர் பாட மற்றவர்கள் தருப்போடுவார்கள்.

நாங்கள் பாடலுக்கு வருவோம்….

பள்ளன் வயலில் வேலை சய்துகொண்டிருக்கிறான். பசி வாட்டுகிறது உணவு கொணடு வரும் பள்ளி மெதுவாக வருகிறாள். பள்ளன் கோபத்தோடு போய்…

“என்னடி பள்ளி நீ ஏகாந்தக்காறி..

இந்நேரம்மட்டும் என்னடி செய்தாய்?”

ஏன்று ஏசியபடியே கஞ்சிக்கலயத்தை எட்டி உதைத்துவிடுகிறான். பள்ளிக்குப் பொறுக்க முடியவில்லை. ஆண்டையிடம் போய் முறையிடுகிறாள்,

“ஆறுபோநதங்கு தண்ணீருமள்ளி

அழுதபிள்ளைக்குப் பாலும் புகட்டி

சீறுபூறென்று சிறுநெல்லுக்குத்தி

கமுகம்பூப்போலரிசியும் தீட்டி

காலத்தாலே நான் காச்சின கஞ்சியக்

காலாலே தட்டிப் போறானெயாண்டே ஆண்டே “

பள்ளனைக்கூப்பிட்டு விசாரிக்கிறார். அவனோ பள்ளியின் மீது குற்றம் சுமததுகிறான்.

“அருககுவாள் சற்றே விழிக்குமையெழுதுவாள்

ஆழகான கூந்தலை அள்ளிமுடிப்பாள்

செருக்குவாள் சற்றே செல்லங் கொண்டாடுவாள்

தேனுடன் கொஞசம் பாலும் கலப்பாள்

உருக்குவாள் ஊரில் பெடியளெல்லோரையும்

உச்சியம் பொழுதூணுக் கழைப்பாள்

நொருக்குவேன் கையில் மண்வெட்டியாலேநான்

ஆண்டைக்காகப் பொறுத்து விட்டேனே”

என்றுகூறி சமாளித்துவிடுகிறான் இதுபோல பள்ளனின் இரு தாரங்களுக்கிடையேயான சண்டைப்பாடல்களும் உண்டு.

கமக்காரனுடைய உழவுமாடுகள். காணாமற் போய்விடும் அப் போதெல்லாம் அவற்றைத்தேடி அலைய வேண்டிவரும். காடு மேடெல்லாம் சுற்றியலையும் போது தன்னைக்காக்க உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வான். ஊர் எல்லையெங்கும் ஐயனாரைக்காவல் வைத்திருப்பார்கள். மாடு தேடிப்போகும்போது நல் கேட்டித்தடி வெட்டி காட்டெல்லைக்கோயிலுக்குச் சாத்திவைப்பார்கள்.

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில

நாங்கள் நுழைந்தொரு குறும் பொல்லு வெட்டி

பொல்லு நல்லபொல்லு வெட்டிக்கட்டிய பொல்லு

மட்டடக்கும் பொல்லு இது…”

என வதனமார் சிந்தில் வரும் பாடல்வரிகளை நினைவில் கொள்ளலாம்.

“ஆட்டதிசையெல்லாங் கவரிவீச

ஆடர்ந்து சில மனிதர்வந்தடிபணிந்தேத்த

மட்டுலவுமச்சிலாய் வாழுமையனாரை

மலரடிகளென்று மனதிலயராமே…..” என்ற வரிகளும்

“சல்லியொரு கொம்பு முழவதிர

வெள்ளையானை மேலேறிவரும்

ஆதி சடவக்குளம்வாழுமையனாரே… ” எனவரும்வரிகளும்

“தொநதத் தொகுத்தியென மத்தள முழங்க

திசை தோறுமதிகாரர் சூழவே நிற்க

பங்கப்படுத்தியே மதகரிகள் தம்மையும்

பரிசுபெறவே வைத்து அரசாள நின்றாய்

துங்கப்பிரதாபனே எங்களுடையவனே

சொல்லரிய நரசிங்கமென்னுநாயகனே…”

எனவும் மிக இனிமையான சந்தக் கட்டுகள் கொண்டபாடல்கள் வன்னியில் இன்னும் வழக்கிலுள.

அறுவடைக்காலங்களில் பாடும் அரிவி வெட்டுப்பாடல்கள் பரந்த புகழ் கொண்டவை. பள்ளு இலக்கிய வகையில் பன்றிப்பள்ளு தனக்கென ஒரு பிரபந்தச் சிறப்பைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு அடியும். படிக்கவும் ரசிக்கவும் பின்னர் நினைத்துச் சிரிக்கவும் வியக்கவும் வைக்கும் தன்மை கொண்டன. வன்னியில் மட்டுமல்ல வேளாண்மை செய்யும் எந்த மக்களாலும் இதன் ஒவ்வொரு அடிக்கும் உள்ள நகைச்சுவைப் பண்பை வியக்காமல் இருக்க முடியாது.

சாதரணப் பன்றிகள் மனிதர்களைப் போல உணவு தேடி உண்டு களைத்து உறங்கும் போது பெண்பன்றி ஒருகனவு கண்டு திடுக்கிட்டெழுகிறது ஆண்பன்றி கனவின் பலனை ஆராய்ந்து சொல்கிறது. பின் மனிதர்களுடைய விளைவையழிக்கப் போகின்றன.

“மனிதர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்……

வனத்தையறுத்து நெருப்பைக் கொழுத்தி மரத்தின் தடிகள் பொறுக்கியே

வளைத்து வேலி நிரைத்துகட்டி வளர்நெல்விதைகள் துர்வியே

புனத்தில் அடரும் கரி கண்டுடனே புள்ளிமான் பல சாதிக்கு

பிரித்துக் கொடுத்து தனக்கு மிஞ்சிய பொருள் கொண்டேகும் மனிதரே

கனக்க விளைவிங்கிருக்கும் செய்தியை நமக்கிங் கொருவர் உரைத்திடார்

கன்னிதுயிலில் கண்ட கனவை கழறக் கேளும் மனிதரே

இனத்தில் பெரிய சாதி நாங்கள் பிழைக்க வழியில்லாமலே

ஏவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல் விளைவு தறைக்குள் ஏகினோம்”

மிகப்பவ்வியமாக இன்னுமொரு வேண்டுகோள்…

“சொன்னபடிக்கு உடனே கமத்தை

சூழ்ந்து பண்டிகள் யாவரும்,

சுறுக்கு விளையும் தறைக்குள் வந்தோம்

துரத்த வேண்டாம் மனிதரே…”

ஏப்படி இருக்கிறது கதை? பன்றிதான் தன் மனைவியின் அழகை எப்படி வருணிக்கிறது! மனிதக்காதலாகவே இந்த அன்பும் குடும்பச் சண்டையும் இருக்கிறது.

“பன்னும் அடியும் நுனியும் தறித்த பனந்துண்டம் போல் அழகியே

புhவை எனது ஆசைக்கிசைந்த பருத்த உரல் போல் இடையினாய்” இதேபன்றிப்பெண்ணின் மொழியழகு வேறு.

“வுங்கண வடிவே என்கிளி மொழியே வஞ்சியரே குண ரஞ்சிதமே!

புண்புடனுனது பரு வயிறதுதான் பருகிற நினைவது தானோடி

கண்படுமெனது மைந்தரைத் தனியே கடுவழி நீவிடலாமோடி…”

பன்றிக்குட்டிகளைத் தனி வழி விட்டதற்காக தன மனைவியைக் கண்டிக்கும் போதுகூட எவ்வளவு அன்பாக விளிக்கிறது என்பது பலர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடந்தான. பன்றிப்பள்ளிலே பிள்ளைச் செலவ்ம் பற்றிய செய்தியும் உள்ளது

“நாடியே ஒரு பிள்ளையில்லாமல்

நாள்கள் தோறும் தவங்கள் புரிந்து

தேடியே எங்கள் சிவலிங்கப் பிள்ளையார்

சுpந்தை கூர்ந்தொரு மைந்தரைத ;தந்ததார்…”

பன்றி தறைக்குள் பாயும் வித்தை ஆம் அதை வித்தையென்றுதான் பாடல் வருணிக்கிறது.

“ அந்தியும் சந்தியுமறிந்தே பல விந்தைகள் சிந்தைகள் புரிந்தே”

“காலையும் மாலையும் பார்த்தே கரு மேகம் போலே கிளை சேர்த்தே”

“நாலுகால் சத்தமுமடக்கி நாய்க்குட்டி போல் மேனியை ஒடுக்கி

கூளைவால் கொள்ளியை மினுக்கிபண்டி கூட்டத்தோடோடி வந்ததுவே”

என ஒவ்வொ பாடலும் சுவைததும்பப் பண்ணியுள்ள அந்தக் கவி நாட்டார் பாடல் மரபின்படி காணாமல் போக்கடிக்கப் பட்டுள்ளார். அருவிச்சிந்துகள் பல முன்னர் குறித்தவைகூட அரிவி வெட்டுப்பாடல்கள்தான்

“மட்டுக்கருக்காலே அரிவாளைத்தீட்டி மாவிலங்கம்பிடி தன்னில் இறுக்கி

வெட்டும் பிடியைச் சிறக்கவே வெட்டி வெள்ளித்தகட்டாலே விரல்கூட்டமிட்டு…”

என்று கத்தியின் சிறப்பு கூறப்படுகிறது மட்டுஎன்பது மட்டக்களப்பின் சுருக்கம் மட்டககளப்பு தாக்கத்தி ஒன்றரை அலலது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவு; கத்தி வீசிக் கோலினால் ரெண்டு முன்று வீச்சுக்கு கைநிறையும். மூன்று கைக்கு ஒரு உப்பட்டி விழும். பாடலும் அதற்கெற்ற தொழில் சார் சந்தம் அமைந்திருப்பதை கவனிக்கலாம்.

1.மட்டுக்கருக்காலே 2. அரிவாளைத்தீட்டி 3. மாவிலங்கம்பிடி நாலாவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். ஏல்லாப் பாடலகளிலும் இந்த ஒழுங்கைக் காணலாம்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம் குளக்கட்டு நீளம் புளியமிணலாம்….

யாடா எந்தன் குளக்கட்டுத்தனிலே?

நாங்கள்தான் அந்த சிந்துகவி பாடியோர்.

நூயைப்pடித்ததன் தௌ;ளையுறந்து

நல்லதோர் ஈட்டிவாள் கையிலெடுத்து

பாசக்கயிறுருவி பண்டிக்கு நாய்விட்ட

பரமசிவனையனைப் பாடியே வாறோம்”

குருவிச்சிந்தும் குருவிகளின் அடாவடித்தனத்தைப் பற்றியதாகவே அமைந்திருக்கிறது.தேர்ந்த ஒரு விவசாயியால் உய்த்துணரப்பட்ட விடயங்களே பாடலாகவுள்ளது எதுவும் மிகையல்ல என்பதை சக விவசாயிகளால் புரிந்து கொள்ளமுடிகிறது.

“கோலமலை நீலமலை குருந்துமலை கண்டல்

கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குருந்தேர்

கன்னியங் குமரிமலை ஒதியமலையேகி

பொதியமலை நாயாறு தட்டாமலைக்குருவிமுதலாய்

தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு

சோல்லரிய பூநேரிசூழுமலையாளம் ………

குருவிக்கிளை பறந்துவருதே……

பாலர்பாடல்கள் கதைப் பாடல்கள், குருவிச்சி நாச்சியார் சலிப்பு, வன்னிச்சி நாச்சியார் மான்மியம், கொட்டுக்கிணற்றடிப் பிள்ளையார் கும்மி, அரியாத்தை ஒப்பாரிஇபோன்ற கதைப் பாடல்கள் இன்றும் வழக்கிலுள்ளன.

ஓப்பாரி என்ற அருமையான பாடல்களும் பாடும் திறமையும் இருக்கிற தலைமுறையுடன் மறைந்து போய்விடுமோ என்ற அச்சமுள்ளது. இறந்து போன ஒருவரைப்பற்றி அவரதுகுணநலங்களையும் அவருக்கும் தனக்குமுள்ள பந்தத்தை பாட்டாகப் பாடுவதே ஒப்பாரி ஒப்பு ஆரம் வன்னியில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழுமிட மெங்கும் ஒப்பாரி வழக்கிலுள்ளது. சாமானிய படிப்பறிவேயில்லாத பெண்கள் கட்டியழும் போது பாடும். இந்தப்பாடல்களில் எதுகைமோனை வருணனை ஏசல் வசை பாசம் என்ன இல்லை?

கொழும்பிலுள்ள மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு ஓடிவருகிறாள். ஆய்யோ என் அப்பன் உயிர் பிரியுமுன் வர முடியவில்லையே! ஏன்ற ஆதங்கம் பாடலில்வருகிறது

“வாடமுன்னம் வந்தனில்லே…உன்

வண்ணமுகம் பார்ப்பதற்கு….

சோரமுன்னம் வந்தனில்லே

உன்ர சோதிமுகம் பார்ப்பதற்கு

அருகிருந்தோ பாக்கயில்லை நான்

அள்ளிப்பால் வார்க்கயில்லை

கிட்டருந்தோ பாக்கயில்லை அய்யா நான்

கிள்ளிப்பால் வார்க்கயில்லை…”

என்ற ஒப்பாரியாகவே தன் சோகத்தைச்சொல்கிறாள்.

கணவனை இழந்து விட்ட்பெண்ணின் சோகம் இது…

“கோடடை வாசலய்யா…இப்ப கூகை குடிகொள்ளுதய்யா…

மாளிகைத் தோப்பையா இண்டைக்கு

மங்கலமிழந்ததையா”

மகன் இறந்து போனான் பாடலிலே பாசமழை அவள் கண்களில் மகனின் பிரிவு ஏதோ தன்னால்தான் ஏறபட்டதாக எண்ணிப்பாடுகிறாள்…

“அய்யா நான் மல்லிகைப்பூமாலையிட்டு

மடியில் வைச்சுப் பாக்காம….

எருக்கம்பூமாலையிட்டோ எடுத்தெறிஞ்சேன் பூமியிலே…”

நாட்டார் பாடல்கள் என்பது கடலளவு அதில் ஒருசிறு துளியை ரசித்தோம். தொட்டிலில் தொடங்கி சுடுகாடுமட்டும் தொடர்வது பாடல்கள் இதனாலே” “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”என்ற பழமொழி உருவானது.

“தமிழ்க்கவி”

http://www.aambal.co.uk/vanni-nattar-padal/

Link to comment
Share on other sites

கொஞ்ச நாட்களுக்கு முன் நாட்டார் பாடல்களைப் படிக்க வேண்டும் போல் ஆவல் வந்தது. மட்டக்களப்பு , வன்னி,  யாழ்ப்பாணம், மலையக நாட்டார்பாடல்கள் இருந்தால் பகிருங்கள். பத்தாம் வகுப்பில் படித்ததில் ஒரு சில வரிகள் தான் ஞாபகம்.
 
தேசிப் பழத்தழகி,
தேங்காய் ‍ ‍*** அழகி...  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெட்கம் ஈசன்?

தேசிப் பழத்தழகி

தேங்காய் முலையழகி

பாசிப் பழத்தழகி

பக்கத்தில் நான் வந்திடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மலையக நாட்டார் பாடல்கள்  சில


கட்டுச்சோறு


நம் தழிர்களின் வாழ்வில் கட்டுச்சோறும் சின்னப்பிள்ளைகளின் வாழ்வில் கூட்டாஞ்சோறும் மிகவும் பிரிக்க முடியாத ஒன்றாய் கலந்த ஒரு அம்சமாகும். கதிர்காமம்,மற்றும் பயணம் செல்லும் இடங்களுக்கு கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போவது நம்மில் பிரிக்க முடியாது....

ஒரு சோறு, கருவாட்டுக் கறி, கத்திரிக்காய் குழம்பு.. வாழைக்காய் பிரட்டல், இப்படி ரெண்டு மூன்று சாப்பாட்டு ஐட்டங்களுடன் ஒரு வாழையிலையில் சுற்றி அப்படியே எடுத்துக் கொண்டு..... அல்லது ஒவ்வொரு பானையாக அடுக்குப் பானையாக்கி... அல்லது டிபன் கெரியரில் எடுத்துச் சென்று விளையாட்டுத் திடலிலோ பயணம் செய்யும் இயற்கை இடத்திலோ உட்கார்ந்து ஆறஅமர அதனைப் பிரித்து அதிலிருந்து வரும் கமகம வாசனையோடு....... ச்சா.... என்ன அருமை........ நளபாகம் தோற்றுப் போகும்.... ஆனால்....


இந்த ஏழைகளின் கட்டுச்சோறு.......... அது வெறும் இருக்கும்............. ஆனால் இருக்காது............. கட்டுச் சோறு கட்டுவதற்கு கருவாடு.......? வீட்டில் சின்னப் பிள்ளைகள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு பயணம் செல்வோமே என்று கேட்டுவிடுவார்களோ என்று பயந்து அந்தக் காலத்தில் வானத்தில் இல்லாத வெள்ளைக் காக்கா பறக்குத புர்ர ஏனு;று சொல்லி பிள்ளையின் எண்ணத்தை திசை திருப்பும் அழகு நம் தமிழரின் கற்பனைக்கும் களவுத் தமிழுக்கும் புதிய இனிமை தான். கட்டுச்சோறு  பாடலைப் பாருங்கள்......................


காக்காயே காக்காயே
எங்கம்மாவ கண்டிங்களா!
கச்சை கருவாட்டுக்குக்
கையேந்தி நிக்கறிhங்க!
மாங்க பொளப்புக்கு
மாருமேல நிக்கிறாங்க!
தேங்காயப் பொளப்புக்கு
தேருமேல நிக்கிறாங்க!

இங்கு பாருங்கள். ஒரு கள்ளக் காதலின் வரிகளை. ஆன்மீகக் காதல்.தெய்வீகக் காதலுக்கு அப்பால் ஒரு உணர்வுபூர்வமான கள்ளக் காதலையும் நாட்டார் பாடல்கள் விடவில்லை. சுவைத்துப் பாருங்கள்!

ஏரியின்னா ஏரிதாண்டி...
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணே
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருசன் கேட்டு நின்னா-நான்
என்ன பதிலச் சொல்லுறது?

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சுதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்!

இங்கு காதலன் தன் தொழிலிடத்தில் காதலியை உவமிப்பது, அன்பை வெளிக்காட்டுவது, கால நேரங் கடந்து தேயிலைக் காடுகளிலே வேலை செய்யும் பெண் என்பதற்கபப்பால் காதலியின் அழகை சுவைபட வாய்மொழி அழகால் தந்திருக்கும் பாங்கு இன்றைய சினிமாப் பாடல் வரிகளைக் கூட ஒரு காலத்தில் மிஞ:சும் அளவிற்கு தந்திருப்பது காதலின் பால் கொண்ட வெறியா? அல்லது மக்களுடைய இயல்பு வாழ்க்கைச் சித்திரிப்பா என்பது இரசிப்பவரின் உள்ளங்களைப் பொறுத்தது தான். பாருங்கள் இந்தத் தொழிற் பாடலை.......

கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளிப் போற பெண்ணே
கொண்டு வந்தேன் மல்லிகைப் பூ
ஒன் கொண்டையிலே சுட்டிவிட

அஞ்சு மணியாச்சு
ஐயா வர நேரமாச்சு
கொஞ்சு விளையாடாதீங்க
கோளுக்காரன் கங்காணி

சவுக்கு மரம் போல
சரடா வளர்ந்த புள்ள
இன்னும் செத்த நீ வளர்ந்தா
செத்திருவேன் ஒன் மேல

அஞ்சுங் கிளியழகே
ஆடு தொடை ரெண்டழகே
கொஞ்சுங் கிளியழகே
கொந்தரப்பா வெட்டப் போற

இப் பாடல் தொழிற்பாடலாக அமைந்தாலும் காலத்தை வெல்லும் காதல் வரிகளால் அணிகளின் சிறப்பு அழகாக வாய்மொழி இலக்கியம் தருவது நமது கல்வி அறிவில்லாத காலத்தில் நம்மவரின் மொதழி ஆற்றல் சிறப்பு சிந்தை கவருகிறதல்லவா?

பல்லக்கு .......... பாடை.................. இந்த இரண்டில் ஒன்று நாம் உடலை மறக்கும் போது நாலு பேரால் தூக்கப்படும்... ஆனால் பள்ளக்கு? இது உயரிய கௌரவம் கிடைத்தாலும் தூக்கப்படும்.. ஒரு சிலருக்கு மரணத்தின் பின்னரும் தூக்கப்படும். இப்டிப்பட்ட ஒன்றான மரணப்படுக்கையாகிய பள்ளக்கை இந்த நாட்டார்பாடல்கள் வெகு அருமையாகத் தருகின்றன.

மனிதன் இறந்த பின்பு அவனை சுமந்து செல்லும் ஊர்திகள் எத்தனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும் அவருக்குப் புரியுமா என்னஃ அதுபோல இந்தப் பல்லக்கின்  அலங்காரமும் போற்றப்படுகின்றது. அதுவும் உறவுககளால்.. தங்களுடன் வாழ்ந்த ஒரு ஆன்மாவிற்கான இறுதிப் பயத்தில் எப்டியெல்லாம் அலங்காரமிடப்பட்டிருக்கும் என்பதை இந்த எழுதா இலக்கியம் உயிர்த்துடிப்புடன் சொல்கின்றது. பாருங்கள்..........

பல்லக்கு செம்புங்களாம் எங்கப்பாவுக்கு
பளபளக்கும் முத்துக்களாம்
பட்டு பளபளக்குஎங்கய்யாவுக்கு
பல்லக்கு ஆடிவரும்
ஈனாத வாழைகளும் எங்கய்யாவுக்கு
இருபுறமும் ஆடிவரும்
பல்லக்கில் குடையிருக்க
எங்கய்யாவுக்கு பட்டுபோல்
தெரையிருக்க
பல்லாக்க விலை மதிப்பார்
எங்கய்யாவுக்கு
பட்டோலை யார் தருவார்?

தேயிலைச் சாரலில்
பெரியசாமிப்பிள்ளை லோகேஸ்வரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிச் சீமை! சொந்த ஊரில் வறுமை என்பதனால் இங்கு வந்து எதை எதை இழந்தோம்? எல்லாவற்றையும் இழந்தோமே! இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் நாம் இழந்தவைகள் எத்தனை? எத்தனை?

இழந்தவைகளையெல்லாம் சொல்லி, ஏண்டி நீயும் இங்கே வந்தே? என வினா தொடுத்து தன் சோகங்களை அள்ளித் தெளிக்கும் வார்த்தைக் கவிகளின் சிறப்புகள்.....

எதையெல்லாமோ நாம் இழந்தோம்.. கடைசியில்.. பெத்த தாயையுமல்லவா நாம் இழந்தோம்? இதைவிட இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கண்டிச் சீமைக்கு வந்த பின் நம் நிலைமை தான் என்ன? இந்த பாடல் அழகாக தருகிறது. சுவைத்துப் பாருங்கள்.....

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச துளிச்சமினு
மனுச மற்க தெரியலியோ

பாதையிலே வீடிருக்க
பழனிசம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தபனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோண கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே     
ஒரு பழம் தப்பிச்சுன்னு
உதைச்சானைய்யா  சின்னத் துரை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)



நன்றி - கலை இராகலை

Link to comment
Share on other sites

ஊரான ஊரிழந்தேன்

ஒத்தபனை தோப்பிழந்தேன்

பேரான கண்டியிலே

பெத்த தாய நாமறந்தேன்

 

 

இந்த வரிகளையே தேடினேன். எத்தகைய வருத்தும் வரிகள்.
 
அந்தப் பாமரர்கள் பட்ட வேதனைகள் தான் எவ்வளவு ?
 
மலையக்த்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
 
நன்றி வாத்தியார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.