Jump to content

தரக்குறைவாக திட்டியதற்காக ஸிடேனின் தங்கையிடம் மாட்டராஸி மன்ன


Recommended Posts

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தரக்குறைவாக திட்டியதற்கு பிரான்ஸ் வீரர் ஸிடேனின் சகோதரியிடம் இத்தாலி வீரர் மாட்டராஸி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜேர்மனியில் நடந்த 18 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இத்தாலி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கப்டன் ஸிடேன், இத்தாலி வீரர் மார்கோ மாட்டராஸியின் மார்பில் தலையால் ஆக்ரோஷமாக முட்டினார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்துக்குக் காரணம் ஸிடேனின் அம்மா மற்றும் சகோதரியை மாட்டராஸி தரக்குறைவாக திட்டியதாகவும், தீவிரவாதி என்று கூறியதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து ஸிடேனுக்கு 3 போட்டிகளில் ஆட தடையும் சுமார் ஐந்து இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. மாட்டராஸிக்கு 2 போட்டிகளில் ஆடத் தடையும் சுமார் 3 இலட்சம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்தாலும், மைதானத்தில் நடந்தது என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தக் கேள்விக்குறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கடந்த வாரத்தில் மாட்டராஸி தனது தவறை ஒப்புக்கொண்டார்.

"உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின்போது ஸிடேனின் `ரீசேர்ட்டை' பிடித்து இழுத்தேன். அதனைத் தொடர்ந்து அவர் `எனது ரீசேர்ட் வேண்டும் என்றால், ஆட்டம் முடிந்ததும் தருகிறேன் வாங்கிக்கொள்' என்றார். அதற்கு நான் `ரீசேர்ட்' வேண்டாம், உன் சகோதரியை கொடு என்றேன். இதனால்தான் ஆத்திரம் அடைந்த ஸிடேன் என்னை தலையால் முட்டினார்" என்று கடந்த வாரம் அளித்த பேட்டியில் மாட்டராஸி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸிடேனின் தங்கையிடம் மாட்டராஸி இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

`உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின்போது தேவையில்லாமல் ஸிடேனின் தங்கையை தரக்குறைவாக திட்டினேன். இதற்காக ஸிடேனின் தங்கையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மைதானத்தில் இந்த மாதிரி திட்டுவது சகஜமான ஒன்றுதான். என்னை இதேபோல் யாராவது மைதானத்தில் வைத்து திட்டினால், நான் ஸிடேன் போல் மோசமாக நடந்து கொள்ளமாட்டேன்.

`ஷியட்டியில் உள்ள எனது வீட்டின் முகவரியை தருகிறேன். ஸிடேன் அங்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அப்படி அவர் வந்தால் எனது `ரீசேர்ட்'டை அவருக்குக் கொடுத்து, கைகுலுக்கி நட்பை வெளிப்படுத்துவேன்' என்றார்.

http://www.thinakkural.com/news/2006/9/14/...s_page10703.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.