Jump to content

அனுபவம் தரும் துணிச்சல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒட்டுக்குழுக்கள் சனத்தை சுட்டுத்தள்ளிட்டு.. பயங்கரவாதிகளை சிங்களவனுக்காக சுட்டு வீழ்த்தினம் என்று பீலா விடுவது போல... அமெரிக்காவில்.. மான்.. நரியை எல்லாம் அடிச்சுக் கொன்றுவிட்டு கார் சாரதிகள் தப்பிக்க முடியுமோ..?! அதுவும் வேகக் கட்டுப்பாடு வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு என்று அமுலில் உள்ள வீதிகளில். 

மனித உயிர்களுக்கு மதிப்பளிச்சுப் பழக்கம் இருந்தால்.. எல்லா உயிரினங்களின் உயிர் மீது ஒரு கவனம் இருக்கும். இது எல்லாம் அழிவுச் சிந்தனையின் வெளிப்பாடு.. அடிச்சம் கடந்தம் போனம் அழிச்சம்.. அதை என்ஜாய் பண்ணினம். என்ன ஒரு வகையான வன்மத்தனம். இவர்கள் 21ம் நூற்றாட்டுக்கான.. மனிதர்கள் தானா..?! :rolleyes:tw_angry:

வாகனச் சாரதிகளே.. நீங்கள் வாகனத்தில் பயணிப்பது இடம்பெயர்வுக்கே அன்றி உயிர்களை கொல்வதற்காக அல்ல. உங்கள் வாகனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்.. அதை விட்டிட்டு பொதுப் போக்குவரத்தை பாவிச்சு போங்கள். உயிரினப் பன்மையை இந்தப் பூமிப்பந்தில் அழிக்கும் செயலுக்கு துணைபோகாதீர்கள். :rolleyes:

அண்மையில் லண்டனில் நல்ல வெளியிலுக்குப் பின்..  நல்ல மழை பெய்து வீதியில்.. வெள்ளம் நின்றது. ஒரு புறா நடு வீதியில் இறங்கி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை அவதானித்த நாங்க வாகனத்தை நிறுத்தி என்ஜினையும் ஆவ் செய்திட்டு நின்றிட்டம். பின்னால வந்தவர்களுக்கு என்ன நடக்குது என்று புரியவில்லை. பின்னர் புறா பறந்து போகும் போதுதான் உண்மை தெரிந்து..  எமது வாகனத்துக்கு நேர் பின்னே நின்றவர் வாகனத்தின் முக விளக்கை எரிக்க விட்டு.. நன்றி சொன்னார். 

அப்படியும் மனிதர்கள் இருக்கினம். இங்கின.. நரியை அடிச்சம் கொன்றம் போனம் என்று சொல்லி மகிழ...  வன்மம் பிடித்த மனிதர்களும் உளர். tw_warning:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.