Jump to content

றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம்


Recommended Posts

றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம்
2014-05-25 20:30:54

அத்­லெட்­டிகோ மட்றிட் கழ­கத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்டு பத்­தா­வது தட­வை­யாக ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் சம்­பியன் பட்­டத்தை சூடிக்­கொண்­டது.


லிஸ்பன், டாலுஸ் விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் 90ஆவது நிமிடம் வரை  அத்­லெட்­டிக்கோ மட்றிட் கழகம் முதல் தட­வை­யாக ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் சம்­பியன் பட்­டத்தை சூடு­வ­தற்­கான வாயிலில் நின்­று­கொண்­டி­ருந்­தது.

 


கடு­மை­யா­கவும் சரி­ச­ம­மா­கவும் மோதிக் கொள்­ளப்ட்ட இப் போட்­டியின் 36ஆவது நிமி­டத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரி­மாற்­றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்­லெட்­டிக்கோ மட்றிட் கழ­கத்தை முன்­னி­லையில் இட்டார்.

போட்டி முழு நேரத்தை எட்­டி­ய­போது, கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டாமல் போன­துபோல் அத்­லெட்­டிக்கோ மட்­றிட்டின் வெற்றிக் கனவு கலைந்­து­போ­னது.


சரி­யாக 90ஆவது நிமி­டத்தில் லூக்கா மொட்றிக் பரி­மாற்­றிய பந்தை தனது தலையால் தட்டி கோல் போட்ட சேர்­ஜியோ ரமோஸ் கோல் நிலையை சமப்­ப­டுத்த ஆட்டம் மேல­திக நேரத்தை நோக்கி நகர்ந்­தது.
109ஆவது நிமி­டத்தில் றியல் மட்றிட் கழகம் காரெத் பேல் மூல­மா­கவும் 117ஆவது நிமி­டத்தில் மார்­செலோ மூல­மா­கவும் இரண்டு கோல்­களைப் போட்­டது.

தொடர்ந்து 120ஆவது நிமி­டத்தில் கிடைக்­கப்­பெற்ற பெனல்­டியை கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, இலக்கு தவ­றாமல் உதைத்து கோலாக்கியதால், றியல் மட்றிட் கழகம் 4 : 1 எனவென்று சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5585#sthash.wcjcR2Nt.dpuf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ரியல் மாட்ரிட் சாம்பியன்
மே 25, 2014.

 

லிஸ்பான்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் அணி 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில், அத்லெட்டிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோர் கோல் அடித்து கைகொடுத்தனர்.

 

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற, 59வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனல், போர்ச்சுகலில் உள்ள லிஸ்பான் நகரில் நடந்தது. இதில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரை சேர்ந்த, ரியல் மாட்ரிட், அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், ஒரே நகரை சேர்ந்த இரு அணிகள் பைனலில் முதன்முறையாக மோதின.

 

காடின் கலக்கல்:

விறுவிறுப்பான பைனலில், 36வது நிமிடத்தில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணியின் டியாகோ காடின் ஒரு கோல் அடித்தார். இதற்கு ரியல் மாட்ரிட் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில், அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 1–0 என முன்னிலை வகித்தது.

 

ரமோஸ் அபாரம்:

இரண்டாவது பாதியில் போராடிய இரு அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. பின், ‘ஸ்டாபேஜ்’ நிமிடத்தில் எழுச்சி கண்ட ரியல் மாட்ரிட் அணிக்கு 93வது (90+3) நிமிடத்தில் செர்ஜியோ ரமோஸ் ஒரு கோல் அடிக்க, ரசிகர்களின் கரவோசையால் மைதானமே அதிர்ந்தது. ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலை வகித்தது.

 

கூடுதல் நேரம்:

பின், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட  ரியல் மாட்ரிட் அணிக்கு, 110வது நிமிடத்தில் கரேத் பாலே தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். அடுத்த எட்டாவது நிமிடத்தில் (118வது) ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோ ஒரு கோல் அடிக்க, 3–1 என வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 120வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்ற, ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி உறுதியானது.

 

பத்தாவது முறை:

கூடுதல் நேரத்தின் முடிவில், ரியல் மாட்ரிட் அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 12 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. இதுவரை 13 முறை சாம்பியன்ஸ் லீக் பைனலுக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் அணி, பத்தாவது முறையாக (1956–60, 66, 98, 2000, 2002, 2014) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மூன்று முறை (1962, 64, 81) இரண்டாவது இடம் பிடித்தது. இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் 7 முறை வென்ற இத்தாலியின் மிலன் அணி உள்ளது.

 

மீண்டும் ஏமாற்றம்:

40 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக (1974, 2014) பைனலுக்கு முன்னேறிய அத்லெட்டிகோ மாட்ரிட் அணி, மீண்டும் இரண்டாவது இடம் பிடித்து ஏமாற்றியது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணி, அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வி அடைந்தது.

 

ரொனால்டோ அபாரம்:

இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில், ரியல் மாட்ரிட் அணியின் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்தார். இவர், மொத்தம் 17 கோல் அடித்தார்.

பரிசு எவ்வளவு:

சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு கோப்பையுடன் ரூ 84 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அத்லெட்டிகோ மாட்ரிட் அணிக்கு ரூ. 51 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/05/1401038456/ronaldosocceruefacup.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.