Jump to content

இந்தியா கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சி


Recommended Posts

இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம்.

இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற தொடர்ந்து பாடுபடுவோம்ம்.

அதிக அதிகாரம் படைத்த, ஜனநாயக ரீதியிலான அமைப்பாக ஐ.நா. உருவெடுத்தால் மட்டுமே மாறி வரும் உலக சூழ்நிலைக்கேற்ப ஐ.நாவால் திறம்பட செயல்பட முடியும் என இந்தியாவும், பிரேசிலும் நம்புகின்றன என இரு தலைவர்களும் கூறியுள்ளனர்.

பின்னர் மன்மோகன் சிங்கும், பிரேசில் அதிபரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், பிரேசில் நாட்டு சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் மீது எப்போதும் எனக்கு அன்பு உண்டு. இந்தியாவைப் போலவே பிரேசிலும் பரந்து விரிந்த மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். இந்தியாவைப் போலவே பன்முகம் கொண்ட ஜனநாயக நாடு பிரேசில். பிரேசில் அதிபர் லுலா இந்தியாவின் சகோதரர், நண்பர் மாதிரி. மிகத் திறமையுடன் பிரேசில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் லுலா.

அவரது தலைமையில் பிரேசில் வளமை பெற்று வருகிறது. மிகச் சிறந்த தலைவராக லுலா விளங்குகிறார். இந்தியாவும், பிரேசிலும் இணைந்து செயல் படவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் லுலா. இது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. நமக்கு முன்பு மிக நீண்ட பயணமும், பாதையும் காத்துள்ளது. தூரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இரு நாடுகளும் இணைந்து பயணத்தை தொடரும் என நான் நம்புகிறேன்.

பிரேசிலுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. ஆனால் இங்கு வந்த பின்னர் பிரேசில் மக்களின் அன்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. என் இதயத்தின் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்காகியுள்ளன. அதில் ஒன்றாக இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் நாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.

இது தவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்பந்தில் கோலோச்சி வரும் பிரேசில் நாட்டின் உயரிய பயிற்சியும், அனுபவமும் இந்திய கால்பந்து வீரர்களுக்குக் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெர்மனி உலகக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய அணிகளுக்கு பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பயிற்சியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ரொபர்டோ பெரைரா சமீபத்தில் தான் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் நியமிக்கப்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

நிச்சயமாக இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம் தரும் செய்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://thatstamil.oneindia.in/news/2006/09.../13/brazil.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.